Thursday, December 01, 2005

என்னாலா... தமிள் பேசுற...

தமிழை வாழும்மொழியாக தொடர சிஙகையில் தொடர்முயற்சி நடந்துவருகிறது. அதன் ஒரு முயற்சியாக கல்வி அமைச்சு அமைத்திருந்த பாடத்திட்ட மறுஆய்வுக்குழுவின் அறிக்கை சென்றவாரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி சிங்கப்பூர் பள்ளிக்கூடங்களில் அடுத்த ஆண்டு முதல் தமிழ்ப் பாட போதனையில் மாபெரும் மாற்றம் அமலாகிறது. தமிழ்ப் பாட போதனை இனிமேல் பேச்சுத் தமிழில் இருக்கும். தமிழ் மொழியில் மாணவருக்கு ஆயுள் முழுதும் நாட்டம் ஏற்படுமாறு செய்யப் பேச்சுத் தமிழில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும் எனக் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் அறிவித்தார்.

மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் பயில்வதில் இருக்கும் சிரமங்களைப் போக்குவதற்காகவும் தமிழ்ப் பேச்சுப் புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சிறிய சமூகமாய் உள்ள தமிழ்ச்சமூகத்தில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழ் மொழியை வீட்டிலும் வெளியிலும் அடிக்கடி தொடர்ந்து பேச வேண்டும். ஆங்கிலம் பேசும் சூழல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ் பேசுகின்ற சூழலை அதிக அளவில் நாம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் வருங்காலத்திலும் வாழும் என்று தெரிவித்தார் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்.

வகுப்பறைக்கு வெளியேயும் தமிழ் தழைக்க வழி

தமிழ் வாழும் மொழியாக இருக்கவேண்டுமானால் பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் அந்த மொழி வாழ வேண்டும். இது தான் நமக்குள்ள சவால் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முக ரத்னம் தெரிவித்தார்.

இந்தச் சவாலைச் சமாளிக்க இளையர் தங்களுக்குப் பிடித்தவற்றைச் சொந்தமாகச் செய்வதற் கான வாய்ப்புவசதிகளை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார் அமைச்சர்.
இளையர்கள் தங்கள் சொந்த பாணியை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அவர் களுக்கு முன் பிறந்தவர்கள் விரும்பும் பாணியில் இளையர்கள் செயல்படும் சூழல் இருக்கக் கூடாது. இளையர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். தகவல் சாதனங்களில் தங்களின் சொந்தக் கருத்துகள், எண்ணங்கள், விருப்பங்கள் எல்லாவற்றையும் தாங்கள் விரும்பும் பாணியில் வெளியிட அவர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

நம்முடைய இளையர்கள் பல தரப்பட்ட நடவடிக்கைகளிலும் நேரங்களிலும் தமிழ்மொழியைப் பயன்படுத்த வாய்ப்புகளை வழங்கும் பொறுப்பைக் குடும்பங்கள், பொதுத்தகவல் சாதனங்கள், சமூக அமைப்புகள் எல்லாம் பள்ளிக் கூடங்களுடன் சேர்ந்து நிறைவேற்றவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பள்ளிக்கூடத்தை விட்டுச் செல்லும் இளையர்கள் தங்களுடன் தமிழைக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் சிறியதாக இருப்பதால் தமிழ் மொழியை வாழும் மொழியாகக் கட்டிக் காக்கும் பணி சீன, மலாய்ச் சமூகத்தைவிட தமிழ் சமூகத்துக்குச் சிரமமிக்கது என் பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழ்ச் சமூகம் மிகவும் ஒற்றுமையாக இந்தக் காரியத்தைச் சாதிக்கவேண்டும் என்று சொன்னார்.

தமிழ்ச் சமூகம் பள்ளிக்கூடங்களுடன் ஒத்துழைத்துத் தமிழ்ப் பாடத் திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்க உதவுவதற்காகக் கல்வி அமைச்சு விரைவில் ஒரு குழுவை அமைக்கும் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நேற்று அறிவித்தார்.
அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்குத் தாங்கள் ஆதரவு அளிப்பதாகத் தமிழ்ச் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ள தாகவும் பரிந்துரைகள் தொடர்பில் பள்ளிக்கூடங்களுக்கும் மாணவருக்கும் எப்படி எப்படி எல்லாம் உதவலாம் என்பதைத் தெரிந்து கொள்ள சமூக அமைப்புகள் விரும்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இளையர்களை இணைத்துக்கொண்டு தமிழ்மொழி நிகழ்ச்சிகளை ஒளியேற்றுக!

இளையர்கள் தங்கள் கருத்துகளைக் கூறும், பகிர்ந்துகொள்ளும் தமிழ்முரசு செய்தித்தாளின் இளையர்முரசு பிற தகவல் சாதனங்களுக்கு நல்லதொரு வழிகாட்டி என்று கல்வி அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்னம் பாராட்டியிருக்கிறார். தமிழ் மொழியை வாழும் மொழியாக தொடர்ந்து கட்டிக் காப்பதில் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று குறிப்பிட்ட அமைச்சர், செய்திகளைத் தருவது மட்டுமின்றி, இளையர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். அத்தகைய வாய்ப்பை தமிழ் முரசின் இளையர் முரசு, மாணவர் முரசு ஆகியவை வழங்குவதாகவும் தொலைக்காட்சியும் இளையர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளை வழங்கலாம் என்றும் அமைச்சர் எடுத்துக் கூறினார். அத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே பேச்சுத் திறனை வளர்ப்பதாக அமையலாம் என்றும் அவர் சொன்னார்.

தமிழ்ப் பாடத்திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை மேலும் அறிய, கல்வி அமைச்சின் இணையத்தளத்திலிருந்து...

இது தொடர்பான விரிவான தகவல்களையும், பலரின் கருத்துக்களையும் கடந்த சில நாட்களாக தமிழ்முரசு வெளியிட்டிருக்கிறது அவற்றைப்படிக்க....

தகவல்களுக்கு நன்றி: தமிழ்முரசு, ஒலி மற்றும் கல்வி அமைச்சு.

பி.கு:
இந்தப்பதிவு நான் சிங்கைமுரசில் ஓரிரு வாரங்களுக்குமுன்னர் சிங்கை முரசு: என்றும் தமிழ்வாழ... என்ற தலைப்பில் இட்டது. தேவை(!?) கருதி இங்கே மறுபிரசுரம்:)

பாடத்திட்ட மறுபரிசீலனைக்குழுவின் பரிந்துரைப்படி சிங்கை போன்ற வெளிநாடுகளில் தமிழ் வாழ உரைநடைத்தமிழை விட பேச்ச்சுத்தமிழ் கண்டிப்பாக உதவி செய்யும். இது தமிழ்பேச மேலும் தூண்டும். தற்போது பெரும்பாலும் பள்ளியில் கற்கும் உரைநடைத்தமிழை அப்படியே பேசுவதைப் பார்க்கிறோம். இட்து மிகவும் செயற்கையாக இருக்கிறது. இது இங்கு வரும் தொலைக்காட்சி நாடகங்களில், நிகழ்ச்சிகளில்ல் பேசும் இளையர்களிடமும் வெகுவாகாப் பார்க்க முடிகிறது. அவ்வாறு பேச இயலாதவர்கள் தமிழ் பேசுவதையே தவிர்க்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

என்னைக்கேட்டால், மாற்றம் பள்ளியிலிருந்து வருவதைவிட வீட்டிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும், தொடர்ந்து தமிழ் வாழ நடைபெற்றுவரும் இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Monday, November 21, 2005

என்றும் தமிழ்வாழ...

என்றும் தமிழ்வாழ...

தமிழை வாழும்மொழியாக தொடர சிஙகையில் தொடர்முயற்சி நடந்துவருகிறது. அதன் ஒரு முயற்சியாக கல்வி அமைச்சு அமைத்திருந்த பாடத்திட்ட மறுஆய்வுக்குழுவின் அறிக்கை சென்றவாரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி சிங்கப்பூர் பள்ளிக்கூடங்களில் அடுத்த ஆண்டு முதல் தமிழ்ப் பாட போதனையில் மாபெரும் மாற்றம் அமலாகிறது. தமிழ்ப் பாட போதனை இனிமேல் பேச்சுத் தமிழில் இருக்கும். தமிழ் மொழியில் மாணவருக்கு ஆயுள் முழுதும் நாட்டம் ஏற்படுமாறு செய்யப் பேச்சுத் தமிழில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும் எனக் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் அறிவித்தார்.

மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் பயில்வதில் இருக்கும் சிரமங்களைப் போக்குவதற்காகவும் தமிழ்ப் பேச்சுப் புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சிறிய சமூகமாய் உள்ள தமிழ்ச்சமூகத்தில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழ் மொழியை வீட்டிலும் வெளியிலும் அடிக்கடி தொடர்ந்து பேச வேண்டும். ஆங்கிலம் பேசும் சூழல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ் பேசுகின்ற சூழலை அதிக அளவில் நாம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் வருங்காலத்திலும் வாழும் என்று தெரிவித்தார் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்.

வகுப்பறைக்கு வெளியேயும் தமிழ் தழைக்க வழி

தமிழ் வாழும் மொழியாக இருக்கவேண்டுமானால் பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் அந்த மொழி வாழ வேண்டும். இது தான் நமக்குள்ள சவால் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முக ரத்னம் தெரிவித்தார்.

இந்தச் சவாலைச் சமாளிக்க இளையர் தங்களுக்குப் பிடித்தவற்றைச் சொந்தமாகச் செய்வதற் கான வாய்ப்புவசதிகளை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார் அமைச்சர்.
இளையர்கள் தங்கள் சொந்த பாணியை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அவர் களுக்கு முன் பிறந்தவர்கள் விரும்பும் பாணியில் இளையர்கள் செயல்படும் சூழல் இருக்கக் கூடாது. இளையர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். தகவல் சாதனங்களில் தங்களின் சொந்தக் கருத்துகள், எண்ணங்கள், விருப்பங்கள் எல்லாவற்றையும் தாங்கள் விரும்பும் பாணியில் வெளியிட அவர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

நம்முடைய இளையர்கள் பல தரப்பட்ட நடவடிக்கைகளிலும் நேரங்களிலும் தமிழ்மொழியைப் பயன்படுத்த வாய்ப்புகளை வழங்கும் பொறுப்பைக் குடும்பங்கள், பொதுத்தகவல் சாதனங்கள், சமூக அமைப்புகள் எல்லாம் பள்ளிக் கூடங்களுடன் சேர்ந்து நிறைவேற்றவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பள்ளிக்கூடத்தை விட்டுச் செல்லும் இளையர்கள் தங்களுடன் தமிழைக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் சிறியதாக இருப்பதால் தமிழ் மொழியை வாழும் மொழியாகக் கட்டிக் காக்கும் பணி சீன, மலாய்ச் சமூகத்தைவிட தமிழ் சமூகத்துக்குச் சிரமமிக்கது என் பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழ்ச் சமூகம் மிகவும் ஒற்றுமையாக இந்தக் காரியத்தைச் சாதிக்கவேண்டும் என்று சொன்னார்.

தமிழ்ச் சமூகம் பள்ளிக்கூடங்களுடன் ஒத்துழைத்துத் தமிழ்ப் பாடத் திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்க உதவுவதற்காகக் கல்வி அமைச்சு விரைவில் ஒரு குழுவை அமைக்கும் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நேற்று அறிவித்தார்.
அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்குத் தாங்கள் ஆதரவு அளிப்பதாகத் தமிழ்ச் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ள தாகவும் பரிந்துரைகள் தொடர்பில் பள்ளிக்கூடங்களுக்கும் மாணவருக்கும் எப்படி எப்படி எல்லாம் உதவலாம் என்பதைத் தெரிந்து கொள்ள சமூக அமைப்புகள் விரும்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இளையர்களை இணைத்துக்கொண்டு தமிழ்மொழி நிகழ்ச்சிகளை ஒளியேற்றுக!

இளையர்கள் தங்கள் கருத்துகளைக் கூறும், பகிர்ந்துகொள்ளும் தமிழ்முரசு செய்தித்தாளின் இளையர்முரசு பிற தகவல் சாதனங்களுக்கு நல்லதொரு வழிகாட்டி என்று கல்வி அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்னம் பாராட்டியிருக்கிறார். தமிழ் மொழியை வாழும் மொழியாக தொடர்ந்து கட்டிக் காப்பதில் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று குறிப்பிட்ட அமைச்சர், செய்திகளைத் தருவது மட்டுமின்றி, இளையர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். அத்தகைய வாய்ப்பை தமிழ் முரசின் இளையர் முரசு, மாணவர் முரசு ஆகியவை வழங்குவதாகவும் தொலைக்காட்சியும் இளையர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளை வழங்கலாம் என்றும் அமைச்சர் எடுத்துக் கூறினார். அத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே பேச்சுத் திறனை வளர்ப்பதாக அமையலாம் என்றும் அவர் சொன்னார்.

தமிழ்ப் பாடத்திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை மேலும் அறிய, கல்வி அமைச்சின் இணையத்தளத்திலிருந்து...

இது தொடர்பான விரிவான தகவல்களையும், பலரின் கருத்துக்களையும் கடந்த சில நாட்களாக தமிழ்முரசு வெளியிட்டிருக்கிறது. அவற்றைப்படிக்க....

Sunday, November 20, 2005

வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் பிரகாஷ்...


இந்த வார ஆ.வி, நாணயம் விகடன் பகுதியிலிருந்து...

தகவல் விற்று என்ன பெரிதாக சம்பாத்தித்து விட முடியும்? பிரகாஷைச் சந்திக்கிற வரை நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். நம்மூரிலும் குட்டி குட்டி பில் கேட்ஸ்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது. கோயம்பேடு பகுதியில் இருக்கிற பி.எஸ்.சி படித்த பிரகாஷ், (044-24781452) ‘என் வழி... தகவல் வழி’ என்று சூப்பர் சம்பாத்தியம் பார்க்கிறார்.

தினசரி பேப்பர் படித்ததும் என்ன ஆகிறது. மாதக் கடைசி எடைக்குத் தயாராகிறது. ஆனால், பிரகாஷ§க்கோ பேப்பர் என்பது தினசரி காலை எழுந்ததும் வீட்டுக்குள் வரும் களஞ்சியம். அதுதான் அவருக்குக் காசு! பேப்பர்கள் மட்டுமல்ல, இணையம், பிரபல நிறுவனங்களின் வருடாந்திர நிதி அறிக்கைகளைச் சேகரிப்பார்.

அவர் செய்வது, தகவல் சேகரிப்பதும் அதை, வகை வகையாகப் பிரிப்பதும். இந்தியாவில் எங்கே யார் என்ன தொழில் ஆரம்பிக்கிறார்கள்... அவர் களின் தொழில்நுட்பம் என்ன... தேவைப்படும் மூலப்பொருள் என்ன? என்பதுபோன்ற எல்லாத் தகவல் களையும் திரட்டுவார்.

உதாரணமாக, ஒரு டூவீலர் நிறுவனம் இவரை அணுகினால், யார், யார் எப்போது, என்ன வகையான வண்டிகள் தயாரித்தார்கள்? என்பதில் ஆரம்பித்து, அரசாங்க திட்டங்கள், ரோடுகளின் வளர்ச்சி, போட்டியாளர்களின் செயல் பாடுகள், உலக மார்க்கெட்டில் உள்ள தேவை, உதிரி பாகத் தயாரிப்பாளர் களின் ஜாதகம்... போன்ற செய்தித் தகவல்களை புள்ளி விவரங்களோடு தொகுத்து, ஒரு ஃபைலாகத் தரும் அளவுக்கு கையில் விவரங்கள் வைத்திருக்கிறார்.

இவரிடம் தகவல் பெறுபவர்களில் சிலர்... (மத்திய அரசின்)பெல், ஆல்ஸ்தாம், கிர்லோஸ்க்கர், கோத்ரெஜ், எஸ்கார்ட்ஸ், டாடா எனர்ஜி இன்ஸ்டிடியூட், ஜெர்மன் நாட்டின் சீமென்ஸ். இப்படி 1,700 நிறுவனங்கள்!

1999ல் ஒரு டேட்டா பேஸ் நிறுவனத்தில் வேலை செய்த பிரகாஷ் தைரியமாக, தானே தனியாகக் களமிறங்கி விட்டார். இந்தியாவில் இப்படிபட்ட நிறுவனங்கள் மொத்தம் ஏழு. அதில் ஐந்து மும்பையில். ஒன்று டெல்லியில். மீதமிருக்கிற ஒன்று & பிரகாஷ் நடத்துவது!

அவ்வளவு பெரிய நிறுவனங்கள், பிரகாஷ் மாதிரி நபர்களை ஏன் நாட வேண்டும்? அவர்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. சம்பளத்துக்கு ஆள் வைத்து, அவரை முடுக்கி விட்டுக்கொண்டு இருப்பதைவிட, காண்ட் ராக்ட் முறையில் இப்படி தகவல் வாங்குவது குறைந்த செலவுதானே!

பிரகாஷைப் பொறுத்தவரை, ஒருவருக்காக மட்டும் செய்தால், அது எனர்ஜி வேஸ்ட்! பத்து, நூறு என்று க்ளையண்ட்கள் பெருகப் பெருக அவருக்கு காசு கொட்டும். அதுதான், ECONOMY OF SCALE! பார்த்தீர்களா, மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து எல்லாவற்றுக்கும் ஒரு சந்தை வந்து விட்டது. தகவலுக்கு உள்பட.

பிரகாஷ் போலவே நீங்களும் முயன்று பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த மாதிரி நிறுவனங்கள், எங்கே தொழில் தொடங்கப் போகின்றன என்பதை முன்கூட்டித் தெரிந்துகொண்டு, ஆட்களின் திறமை பற்றிய தகவல்களையும் இணைத்தால், வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருபவராக இருவழி சம்பாத்தியம் பார்க்க முடியும். முந்துகிற பறவைக்குத்தான் இரை கிடைக்கும்.

‘மாநில முதல்வர், இன்று பஸ் நிலைய அடிக்கல் நாட்டப் போகிறார்’ என்று பேப்பர் செய்தி படிக்கிறீர்கள். ‘இன்று, அங்கே டிராஃபிக் அதிகமாக இருக்கும். மாற்றுப் பாதை தேடிவைத்துக் கொள்வது நல்லது!’ என்று உஷார் பார்ட்டிகளாக ஒதுங்காமல், ‘அங்கே கிரவுண்ட் என்ன விலை?’ என்று விசாரிப்பது, ‘பஸ் ஸ்டாண்டை ஒட்டிய வியா பாரங்களில் எது சூப்பர் லாபம்?’, ‘அங்கே என்னென்ன காண்ட்ராக்ட்கள் எடுக்க முடியும்?’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பியுங்கள். பணம் உங்கள் பர்ஸைத் தேடிவரும். இந்தத் தகவல்களை, நாமேதான் பயன்படுத்த வேண்டும் என்பதுகூட இல்லை. இத்தகவல்களை யாரிடம், எப்படிக் காசாக்கலாம் என்று திட்டமிட்டால், சரியான லாபம் பார்க்க முடியுமே!

பஸ் ஸ்டாண்ட் என்றுதான் இல்லை. கோயில் கும்பாபிஷேகமாகட்டும்... புதிய கல்லூரியின் வரவாகட்டும். எல்லாவற்றிலும் உங்களுக்கான வாய்ப்பும் வருமானமும் இருக்கத்தான் இருக்கின்றன. இன்னும் எவ்வளவோ தேவைகள்! கொடுப்பதற்கு ஆளிருந்தால், வாரி எடுத்துக் கொள்ள எத்தனையோ பேர் தயாராக இருக்கிறார்கள்.

இதையே உங்கள் திறமைக்கான சவாலாக எடுத்துக்கொண்டு, யார் எதைத் தேடுகிறார்கள் என்று பாருங்கள்.

மிகப் பெரிய வியாபார வெற்றிக்கு, மூளையைவிட, ‘யாருக்கு எது தேவை... எது விலை போகும்?’ என்பதைச் சரியாக கணியுங்கள்... அதை, நேரத்தோடு செய்யுங்கள். அப்படி ஒரு திறன்தான் இந்த வேகம் நிறைந்த தகவல் காலத்தில் உங்களை செல்வபுரிக்கு அழைத்துச் செல்லும்.

வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் நண்பரே...

Thursday, November 17, 2005

இதயத்தை பாதுகாப்பது எப்படி?

இதயத்தை பாதுகாப்பது எப்படி?

சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை...

அடிக்கிற மழைக்குப் பயந்து சூரியன் ஓடிப்போய் எங்கோ ஒளிந்துகொள்ள, சென்னை நகரமே வீட்டுக்குள் முடங்கியிருந்த அந்த சோம்பலான நேரத்தில், வித்தியாசமான ஒரு நிகழ்ச்சிக்காகக் களைகட்டியிருந்தது, மியூசிக் அகாடமி அரங்கம்.

பிரபல இதயநோய் நிபுணர் டாக்டர் என்.சிவகடாட்சம் நடத்திய, ‘கார்டியாலஜி 2005’ என்னும் கருத்தரங்கம் அது. தமிழகத்தின் முன்னணி இதயநோய் நிபுணர்கள் பங்கேற்று சிறப்பித்த அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள், அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆரோக்கியம் தொடர்பான பார்வையாளர் களின் அத்தனை சந்தேகங்களுக்கும் அவர்களிடமிருந்து தெளிவான விளக்கம் கிடைத்தது ஹைலைட்!

‘‘2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு உங்களுக்கு வழிகாட்டத் தான் இந்தக் கருத்தரங்கம்!’’ என்று டாக்டர் சிவகடாட்சம் தொடக்க உரையில் குறிப்பிட்டது, நிகழ்ச்சி முழுக்கவே எதிரொலித்தது. ஒவ்வொரு நிபுணர் தந்த விளக்கமும் ‘ஆரோக்கிய புதையலாகவே விளங்கியது.

திருச்சி, ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இதயநோய் நிபுணரான டாக்டர். சென்னியப்பன், உணவுக் கட்டுப்பாடு பற்றி நிகழ்த்திய கேள்வி&பதில் நிகழ்ச்சி, அற்புதமான விருந்து! அதிலிருந்து...

எதற்காக உணவுக் கட்டுப்பாடு?

முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற... என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கட்டுப்பாடான உணவு என்றால் என்ன? அதற்கென ஏதாவது அளவுகோல் உண்டா?

கண்டிப்பாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான சக்தி 1800 - 2400 கிலோ காலரி. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்த மொத்த அளவில், 65% சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியை கொழுப்பிலிருந்தும், 15% சக்தியை புரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!

இந்த சக்திகளை எந்த மாதிரி உணவுகளில் இருந்து பெறலாம்?

அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு, உடல் எடையைக் கூட்டும். அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசி யையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு, காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள்!

பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும்.

கொழுப்புச் சத்து பற்றி?

அதைப் பற்றி விரிவாகவே கூற வேண்டும். கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்று இரண்டு வகை உண்டு. ஆடு, மாடுகளின் மாமிசம், முட்டை, பால், நெய், வெண்ணெய், வனஸ்பதி, தேங்காய், எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும்.

தாவர உணவுகள், தாவர எண்ணெய், மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு. இவற்றிலிருந்து கொழுப்புச் சக்தியை பெறுவதுதான் ஆரோக்கியம்!

மார்க்கெட்டில் ஏராளமான எண்ணெய் வகைகள் உள்ளன. எந்த எண்ணெய் இதயத்துக்கு நல்லது?

‘சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், நெய், வனஸ்பதி ஆகியன) இதயத்துக்கு எதிரானவை. அவற்றை தவிர்த்துவிட வேண்டும்.

‘அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் இதயத்துக்கு நண்பர்கள். இவற்றிலும்கூட, சூரியகாந்தி, சோயா எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ‘பாலி அன் சாச்சுரேட்டட்’ வகை எண்ணெய்களைத் தான் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கடலை எண்ணெய் போன்ற ‘மோனோ அன்சாச்சுரேட்டட்’ வகை எண்ணெயிலுள்ள சத்தும் உடலுக்கு தேவை என்பதால், இவற்றையும் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

இவற்றைவிட ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’ வகைதான் இதயத்துக்கு மிக நல்ல தோழன். இந்தச் சத்தை கம்பு, கேழ்வரகு, பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகள் மூலம் அபரிமிதமாகப் பெறலாம்.

எப்போதுமே ஒரே வகை எண்ணெயை உபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க, பொரிக்கக் கூடாது. ஒரு முறை உபயோகித்த எண்ணெயை பல முறை உபயோகிக்கக் கூடாது.

பயமில்லாமல் சாப்பிடக் கூடிய உணவு வகை எதுவுமே இல்லையா?

ஏன் இல்லாமல்? இயற்கை கொடுக்கும் காய்கறிகள் உள்ளனவே! அவை இதயத்தின் நண்பர்கள். அதிக சத்து, குறைந்த கொழுப்பு, தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின் சத்துக்கள் அடங்கியவை. குறைந்த கலோரியில் அதிக சத்து கொடுப்பவை. நாம் அதிகம் சாப்பிட்டாலும் எடையும் போடாதவை. எப்போதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். தொட்டுக்க வைப்பதை சாதமாகவும், சாதத்தைத் தொட்டுக்கவும் உபயோகப்படுத்துங்கள். ஆரோக்கியம் தேடி வரும்!

எந்தக் காய்கறிகள் என்ன சத்தெல்லாம் தருகின்றன என்று சொல்ல முடியுமா?

கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவை நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றன. காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய் ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன. அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது. சுண்டைக்காயிலும் நார்ச் சத்துதான். வெள்ளரிக்காயில் எல்லாச் சத்துக்களுமே உள்ளன. வெங்காயம், பூண்டு இரண்டுமே நல்லது.

கீரைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சத்துக்களின் தொழிற்சாலைகள் அவை. இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு. பழங்களிலும் அபரிதமான சத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை பழங்கள். இதயத் துக்கு நார்ச்சத்து மிகவும் நல்லது.

எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டியது & உயிர் வாழத்தான் உண்ண வேண்டும். உண்ணுவதற்காகவே உயிர் வாழக் கூடாது!

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த இதயநோய் நிபுணர் டாக்டர் புவனேஸ்வரன், உடல் எடையை ஒரு உவமையுடன் விளக்கினார்.

‘‘உடல் எடை என்பது பேங்க் பாலன்ஸ் மாதிரி. சாப்பிடச் சாப்பிட, ஏறிக்கொண்டேதான் போகும். பணத்தை எடுத்து செலவழித்தால்தானே பாலன்ஸ் குறையும்? அதுபோல, உடலின் சக்தியை செலவழித்தால்தான் எடை குறையும்!’’ என்றவர் தந்த ஹெல்த் டிப்ஸ்...

எடை அதிகம் இருப்பவர்களுக்கு, கழுத்து குட்டை யாக இருக்கும். அவர்கள் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். குறட்டை விடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால், எடையைக் கட்டாயம் குறைக்க வேண்டும்.

எல்லோருமே காலையில் அதிகம் சாப்பிட்டு, இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. காலையில் ஒரு மகாராஜா போலவும் (விருந்து) இரவில் ஒரு பிச்சைக்காரர் போலவும் (குறைவான உணவு) சாப்பிட வேண்டும் என்பார்கள்.

மெனோபாஸ் வரைக்கும் பெண்களுக்கு இதய நோய் ஆபத்து குறைவு. ஆனால், அதன் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், இதயம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை!

‘‘டயட்டினால் எடையைக் குறைக்கலாம். ஆனால், உடற்பயிற்சியால்தான் அதை அப்படியே பராமரிக்க முடியும்’’ என்று சொன்ன இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எம்.அசோக்குமார், சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘நாம் சாப்பிடுவதற்கு உபயோகப் படுத்தும் வாழையிலையில், குறுகி இருக்கும் இடது பக்கத்தை ராமர் பக்கம் என்பார்கள். விரிந்திருக்கும் வலது பக்கத்தை அனுமார் பக்கம் என்பார்கள். குறைத்து சாப்பிடவேண்டிய உப்பு, ஊறுகாய், சிப்ஸ், பாயசம் போன்ற வற்றை ராமர் பக்கத்திலும், அதிகம் சாப்பிடவேண்டிய பொரியல், கூட்டு, அவியல் போன்றவற்றை அனுமார் பக்கத்திலும் வைப்பார்கள். இதற்குக் காரணம் இருக்கிறது. வலது கையில் சாப்பிடும் நமக்கு, இடது பக்கத்தில்... அதாவது, ராமர் பக்கத்தில் உள்ளவற்றை அடிக்கடி எடுத்து சாப்பிடுவது சிரமமாக இருக்கும். அதனால், அவற்றை குறைவாகவே உண்ணுவோம். ஆனால், நம் கைக்கு வசதியான அனுமார் (வலது) பக்கத் திலுள்ள காய்கறிகளை அதிகமாக உண்ணுவோம். இப்படி, உணவுக் கட்டுப்பாட்டை விருந்து படைக்கும் முறையிலேயே கொண்டு வந்தவர்கள் நம் முன்னோர்!’’ என்று அவர் சொன்னபோது, பலத்த கரகோஷம்!

‘‘ஹர்ரி (அவசரம்), கறி (மாமிசம்), வொர்ரி (கவலை) மூன்றையும் நிறுத்தினால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்!’’ & ஹார்வி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நரேஷ்குமார் சொன்ன பஞ்ச் இது!

‘‘எடை குறைப்பது என்னவோ பெரிய காரியம் என்று பலரும் சலித்துக்கொள்கிறார்கள். ‘அது ரொம்ப சாதாரண விஷயம்’ என்பதற்கு இதோ ஒரு உதாரணம்!’’ என்ற டாக்டர் சிவகடாட்சம் மேடையில் அறிமுகப் படுத்தியது, நடிகை ஸ்ரீப்ரியாவை!

இரண்டு வருடங்களுக்கு முன்பு 105 கிலோ இருந்த ஸ்ரீப்ரியாவின் இப்போதைய எடை 69 கிலோ.

‘‘அதுக்கு மேல என்னால குறைக்க முடியலீங்க’’ என்று சிரித்தபடியே பேசிய ஸ்ரீப்ரியா, ‘‘எங்கப்பா சர்க்கரை நோயாளி. ஹார்ட் அட்டாக்ல இறந்தார். இந்த விஷயம்தான் என்னோட உடல்நலன்ல அக்கறை கொள்ள வெச்சது. என் எடையைக் குறைச்சே ஆகணும்கிறதுல உறுதியா இருந்தேன். வாக்கிங், டயட் இரண்டையும் டாக்டர் சொன்னபடி ஃபாலோ பண்ணி னேன். இதனால என்னோட உயர் ரத்த அழுத்தமும் குறைஞ்சிருக்கு!’’ என்றார், சந்தோஷமாக.

நெஞ்சு வரை வயிறு?

கருத்தரங்கில் கவிதை ஒன்றை வாசித்தார், டாக்டர் சிவகடாட்சத்தின் மனைவி & சாந்தகுமாரி சிவகடாட்சம்.

‘நான்கு வேளை சாப்பாடு
அளவில்லா நொறுக்குத் தீனி
நாலு காலு ஜீவன்கள்
ஆடு, மாடு, என்று உள்ளே தள்ளி,
நிலை தடுமாறி விழும்வரை
பட்டை அடித்து
நீராவி இஞ்ஜின் கணக்கா
புகை விட்டு
நெஞ்சுவரை வயிறு பெருக்கினால்
நல் இதயம் எங்கே கிட்டும்?’

என்ற அவரது வரிகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைதட்டல்! நிகழ்ச்சிக்கு வந்திருந்த அப்போலோ மருத்துவமனையின் சேர்மன் பி.சி.ரெட்டியும் தன் உரையில் இதுபற்றி குறிப்பிட்டு, பாராட்டினார்.

கொரியர் கொண்டு வந்தாலும்?

மருத்துவமனைகளின் இன்றைய யதார்த்த நிலையை ஒரு ஜோக் மூலம் சுட்டிக்காட்டினார், விழாவில் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர்.

‘‘ஆஸ்பத்திரிக்கு வந்த ஒரு ஆள், டாக்டர் கிட்ட போய் வாயைத் திறக்கறதுக்குள்ள அவன் வாயில தெர்மா மீட்டரைச் சொருகிட்டார் டாக்டர். அப்படியே பிரஷரும் பார்த்துட்டு, ‘நெக்ஸ்ட்’னு அடுத்த டெஸ்டுக்கு அனுப்பிட்டார். அங்கே அவனுக்கு எக்ஸ்ரே எடுத்தாங்க. அங்கேயும் அவனை யாரும் பேச விடலை. அடுத்ததா, பிளட் டெஸ்ட், ஸ்கேனிங்னு எல்லாம் எடுத்துட்டு, ‘போய் ரிசல்ட் வாங்கிட்டு டாக்டரைப் பாருங்க’னு க்யூவுல உக்கார வைச்சுட்டாங்க.

பக்கத்துல இருந்தவரு, ‘சும்மா காய்ச்சல்னு காட்ட வந்தேன். அதுக்கே காலையிலருந்து ஏகப் பட்ட டெஸ்ட் பண்ணி, உக்கார வச்சுட்டாங்க!’னு அலுத்துக்கவும், நம்ம ஆள் அப்பாவியா சொன்னான் & ‘நீங்களாவது காய்ச்சலுக்காக வந்தீங்க. நான் கொரியர் தபால் கொண்டு வந்தவனுங்க!’’

நன்றி: விகடன்.

Friday, October 28, 2005

இந்தியாவும் சிங்கப்பூரும், இந்தியரும் சிங்கப்பூரரும்...

சமீப காலங்களில் நான் கேள்விப்படும் சேதிகள் மூலம் இந்தியாவும் சிங்கப்பூரும் முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளியல் ஒத்துழைப்புடன் செயல்படுவதாகத் தெரிகிறது. இந்தக் கலாச்சார, பொருளியல் தொடர்புகள் பல காலமாக இருந்தாலும் சில மாதங்களுக்கு முன் கையெழுத்திடப்பட்ட (29 ஜீன் 2005) சிங்கப்பூர்-இந்தியா பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு (Comprehensive Economic Cooperation Agreement (CECA) இதற்கும் பெரும் ஆதராமாக விளங்குகிறது. இந்தியா இம்மாதிரி ஒப்பந்தம் வெளிநாட்டொன்றுடன் செய்துகொள்வது இதுதான் முதல் முறை.

இந்த ஒப்பந்தத்தின் முழுப்பிரதியும், முன்னர் நடந்த கடிதப்பரிமாற்றங்களும் இங்கே...

இந்த ஒப்பந்தத்தின் பயனாக நான் கண்கூடாக கவனித்துவரும் மாற்றங்கள் சிலவற்றை, நான் சிங்கை ஊடகங்கள் மூலம் அறிந்த அளவில், எனக்குத்தெரிந்த/புரிந்த அளவில் இங்கு பகிர்ந்துகொள்ள ஒரு முயற்சி. இது தொடர்பான மேல் விபரங்களையும், இந்தப்பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன், நன்றி.

கல்வித்துறை:

சமீபத்தில் சிங்கையின் கல்வி அமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்கள் தலைமையில் கல்வி அமைச்சின் பிரதிநிதிகளும், சில பள்ளிகளின் முதல்வர்களும், ஆசிரியர்களும் டெல்லி, சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு பயணித்து அங்குள்ள பல பள்ளிகளுக்கு வருகைதந்து அவர்களிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று தெரிந்துவந்துள்ளனர். மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றத்துக்கும் ஏற்பாடாகியுள்ளது.

சிங்கையின் திரு. கண்ணப்பன் செட்டியார் அவர்களின் ஸ்டேன்ஷ்ஃபீல்ட் சென்னையில் ஒரு வெளிநாட்டுக்கல்வி அளிக்கும் ஒரு பள்ளியையும், சிங்கையின் திரு. சந்த்ரு அவர்களின் மாடர்ன் மாண்டசோரி நிறுவனம் டெல்லி குர்காவனில் ஒரு பாலர் பள்ளியையும் அமைத்துள்ளது.

அதேபோல் இந்தியாவின் பாரதிய வித்யாபவன் பவன்'ஸ் பன்னாட்டுப்பள்ளியை
கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறது. இங்கு CBSE பாடமுறை பின்பற்றப்படுவதால் பெரும்பாலான வட, தென் இந்தியர்கள் (தமிழ் இருந்தாலும் - தமிழர்கள் குறைவு) இங்கு படிக்கின்றனர். இந்தப்பள்ளிக்கு கிடைத்த வரவேற்பினால், இந்தவருடம் இன்னொரு இடத்திலும் தனது இரண்டாவது பள்ளியை ஆரம்பிக்கிறது. டில்லி பொதுப்பள்ளியும் (Delhi Public School) ஏற்கனவே இங்கு ஒரு பள்ளி நடத்தி வருகிறது. ஐஐடி-யை இங்கு ஒரு கிளை ஆரம்பிக்கவைக்கும் முயற்சி நடந்துவருகிறது. ஏற்கனவே அணணாமலை, பாரதியார், சென்னை, இந்திரா காந்தி பல்கலைக்கழகங்க்ள் இங்குள்ள நிறுவங்கள் மூலம் பட்டக்கல்வி அளித்து வருகிறது. நீண்ட நாட்களுக்குபிறகு இந்திய தமிழ் பேராசிரியர்கள் உதவியுடன் யுனிசிம்(UniSIM) தமிழ் பட்டக்கல்வியை வழங்க இருக்கிறது. கடந்தமாதத்தில் சென்னை, டில்லியில் சுற்றுலாத்துறை & கல்விஅமைச்சு ஒத்துழைப்பில் இங்குள்ள பல்கலைக்கழகங்கள், பலதொழில்கல்லூரிகள், பள்ளிகள் கலந்துகொண்ட ஒரு கல்விக்கண்காட்சி நடந்தது.

சென்னையிலுள்ளவர்கள் சிங்கப்பூர் கல்வி பற்றி மேலும் அறிய தொடர்புகொள்ள:
http://www.singaporeedu.gov.sg/htm/stu/stu010b.htm#2

மேலும் சிங்கை கலவி/கல்விமுறை பற்றி அறிய:
http://www.singaporeedu.gov.sg/

வங்கித்துறை:

இந்த புதிய ஒப்பந்தம் இங்குள்ள DBS, OCBC மற்றும் UOB வங்கிகள் இந்தியாவில் அடுத்த 4 வருடங்களில் 15 கிளைகள் வரை ஏற்படுத்த வகைசெய்கிறது. ஏற்கனவே டிபிஎஸ் வங்கி இந்தியாவில் அதன் சேவையை வழங்கி வருகிறது. அதேபோல் இந்தியாவின் HDFC, ICICI வங்கிகள் டிபிஎஸ்/POSB வங்கிகளுடன் இணைந்து மின்னியல்முறையில் பணமாற்றும் சேவை(tracking வசதியுடன்), தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்தும் வசதி போன்றவற்றை வழங்கும். இந்தியன் வங்கி, யூகோ, ஸ்டேட் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் ஐசிஐசிஐ-யும் ஏற்கனவே ஒரு கிளை ஆரம்பித்து நிறுவனங்களுக்கான கணக்குகளை நடத்தி வருகிறது. இது மேலும் விரிவடையலாம், எளிதாக இங்குள்ள டிபிஎஸ் கணக்குகளிலிருந்து இந்தியாவில் உள்ள கணக்குக்கு இணையம் மூலம் எல்லா பரிவர்த்தனைகளையும் செய்ய இயலும்.

துறைமுகம், விமானங்கள், விமான நிலையம்:

தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்கனவே சிங்கையின் துறைமுக ஆணைக்கழகம் (Port Authority of Singapore, PSA) முதலிட்டு நடத்திவருகிறது.

புதிதாக இந்தியாவின் ஏர்சகாரா, சிங்கையின் ஜெட்*ஏசியா நிறுவனங்கள் தங்களது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். சென்னைக்குதான் வழக்கம்போல விலையே தவிர டெல்லி, கல்கத்தாவுக்கு $350க்கெல்லாம் கூட சென்று திரும்ப விமான டிக்கட் கிடைக்கிறது.

இந்தியாவில் கடந்த ஓரிருவருடங்களாக பேச்சுவார்த்தையிலும், டெண்டரிலும் இழுத்துக்கொண்டிருக்கும் பெருநகரங்களின் விமானநிலையங்களை தனியார் ஏற்று நடத்தும் முயற்சியில் சிங்கையின் சாங்கி விமானநிலயத்தை நிறுவகிக்கும் Civil Aviation Authority of Singapore (CAAS), இந்தியாவின் பார்தி (Bharti) நிறுவனத்துடன் களத்தில் இறங்கியிருந்தது. ஆனால், சமீபத்திய நிலவரப்படி CAAS சற்றே பின்வாங்கி முதலீடு செய்யாமல் ஆலோசனைச்சேவை மட்டும் செய்யப்போவதாகவும், அபுதாபி விமானநிலையத்தை நிறுவகிக்க முயற்சி செய்வதாகவும் அறிகிறேன்!

சுற்றுலாத்துறை:

சிங்கப்பூரின் சுற்றுலா வளார்ச்சித்துறை சிங்கப்பூருக்கு இந்தியரை மேலும் ஈர்க்க, திரைப்படத்துறையை தேர்ந்தெடுத்துள்ளது. இதன்மூலம் இவர்களின் (கூட்டு) முதலீட்டில், ஹிருத்திக்ரோஷன், பிரியங்கா சோப்ரா நடிக்கும் "க்ரிஷ்" (Krrish) என்றொரு ஹிந்தித் திரைப்படத்தை ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் இயக்குகிறார். படத்தின் ஆரம்பிவிழா பூஜை சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் நடைபெற்றது. படப்பிடிப்பு ஆர்ச்சர்ட் சாலை, லா பா சாட், ராபின்ஸன் சாலை போன்ற இடங்களில் நடைபெற்றுவருகிறது.

இதுமட்டுமல்லாமல், "The Film in Singapore!" சிங்கப்பூர் என்ற 10 மில்லியன் வெள்ளி திட்டத்தின்கீழ் உலகப்பிரபலங்கள் இங்கு திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எடுத்தால் ஏற்படும் செலவில் 50 சதவீதம் வரை சுற்றுலா வாரியம் அளிக்கும் என்றுதெரிகிறது. கடந்தவருடத்தில் நடிகை குஷ்பு-வின் நாடகம் ஒன்று இங்கு படப்பிடிப்பு நடத்தியதாக கேள்விப்பட்டேன் - இந்தத்திட்டத்தின் கீழ்.

மருத்துவச்சுற்றுலா, கல்விச்சுற்றுலா போன்ற சுற்றுலாக்கலுக்கும் ஏற்பாடு செய்கிறது.

மருத்துவத்துறை:

மருத்துவத்துறையிலும் ஒத்துழைக்கும், மருத்துவர் பரிமாற்ற ஏற்பாடு நடந்துவருகிறது.
சென்ற வாரம் இங்கு வருகைபுரிந்த இந்திய சுகாதரத்துறை அமைச்சர் திரு. அன்புமணி கூறும்போது, சிங்கையில் இந்திய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மருத்துவர்களை அனுமதிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடப்பதாகவும், புதுவையின் ஜிப்மர் மருத்துவமனை மூலம் மருத்துவர் பரிமாற்றம் நடக்க இருப்பதாகவும் கூறினார். மேலும், உயிரணு, பறைவைக்காய்ச்சல் ஆராய்ச்சியில் ஒத்துழைக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொழில்துறை:
தொழில்துறையில் பல முன்னேற்றம் நடந்துவருகிறது. இந்தியாவில் தயாராகி இங்கு இறக்குமதி செய்யும் அனைத்துப்பொருளுக்கும் ஒட்டுமொத்த வரிவிலக்கு அளிக்கப்பட இருக்கிறது. இதேவிதமாய் இந்தியாவிலும்.

சிங்கையின் பிரதமர் திரு. லீ இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் கூறியது: "இருபக்கமும் உள்ள வர்த்தகர்களுக்கு, பல வாய்ப்புகள் உண்டு அவற்றை பயன்படுத்தி தனது வர்த்தகத்தைப்பெருக்கலாம். வானமே எல்லை " என்று குறிப்பிட்டார். உடனிருந்த இந்தியப்பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களும் அதை வரவேற்றார்.

பல புதிய இந்திய நிறுவங்கள் இங்கு தொழில் தொடங்கிவருகின்றன. அதேபோல் சிங்கை அரசுத்துறை நிறுவனமான JTC குழுமத்தின் அசெண்டாஸ் நிறுவனம் பெங்களூரில் டாட்டா குழுமத்துடன் சேர்ந்து ஒரு தகவல்தொழில்நுட்ப பூங்காவையும், பின்னர் ஹைதரபாத்தில் தொழில் பூங்கா மற்றும் வீட்டு வசதியையும், சென்னையின் சிறுசேரியில் சமீபத்தில் ஒரு தகவல்தொழில்நுட்ப வளாகத்தையும் கட்டி நிறுவகித்து வருகிறது. மஹிந்திரா சிட்டி வடிவமைப்பிலும் முதலிட்டு, உதவி வருகிறது. இன்னொரு நிறுவனம் சிறுசேரியில் வீடுகள் கட்டுவதாக சேதி.

இங்கு சமீபத்தில் சிங்கப்பூர்-இந்திய வர்த்தக கூட்டமைப்பு டிபிஎஸ் வங்கியுடன் இணைந்து நடத்திய சிறந்த இந்திய வர்த்தகர்களுக்கான விருது வழங்கும் விழாவில் துணைப்பிரதமர் பேரா. எஸ். ஜெயகுமார் பேசும்போது, இந்தியர்கள் மேலும் சிறப்பாக வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் அதற்கு முன்னெப்போதும் விட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

பிஸ்னஸ்டைம்ஸ் நாளிதழ்- நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து கடந்த ஒருவருடத்துக்குமேலாக நடத்திய இந்தியாவின் சமூகம், பலம், பலவீனம், தொழில் வளார்ச்சி, வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களின் புள்ளி விவரங்களின் அடிப்படியிலான ஆய்வின் முடிவை வெளியிடும் கருத்தரங்கில், கடந்தவாரம் பேசிய கல்வியமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்னம்,

"இந்தியாவில் குவிந்துகிடக்கும் வர்த்தக வாய்ப்புகள் பற்றிய புரிந்துணர்வு உயர்ந்து கொண்டிருந்தாலும், அது பற்றிய சரியான தகவலை ஒரு பெரிய இடைவெளி பிரிக்கிறது. இதைக் குறைக்க,

- தகவல் சாதனங்கள்
- சிந்தனையாளர் அமைப்புகள் (தெற்காசிய ஆய்வுக்கழகம், என்.டி.யு ஆய்வுக்கழகம், லீ குவான் யூ பொதுக்கொள்கைப்பள்ளி...)
- நிதிக் கழகங்கள்
- பெரிய எண்ணிக்கையிலான இந்தியக்குடிமக்கள்
- வர்த்தக சபைகள்

என்ற ஐந்து பிரிவினரும் பெருவாரியாக உதவலாம். அவர்களிடமிருந்து வர்த்தகர்கள் இந்த நன்மைகளைப் பெறலாம். இந்தியாவைப் பற்றிய முண்ணனி தகவல் பெட்டகமாக சிங்கப்பூர் விளங்கவேண்டும்."

என்று கூறினார்.

பேச்சின் முழு விபரம்:
http://app.sprinter.gov.sg/data/pr/20051019996.htm

இந்த ஆய்வின் முடிவின்படி இந்தியாவில் முதலீடு செய்ய சிறந்த மாநிலங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பத்து இடங்கள்

1. மகராஷ்டிரா 2. டில்லி 3. தமிழ்நாடு 4. ஆந்திரா 5. கர்நாடகா
6. குஜராத் 7. சண்டிகார் 8. உ.பி 9. பஞ்சாப் 10. ராஜஸ்தான்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து சில (இளம்) பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. மிலிந்த் டியோரோ அவர்களின் தலைமையில் வந்திருந்தார்கள். அவர்களும் இங்குள்ள அமைச்சர்களுடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் மற்றும் வர்த்தகர்களுடனும் கலந்துரையாடி வர்த்தகத்தை பெருக்க வழிவகை செய்தனர். இந்தக்கருத்தரங்கில் சிங்கையின் சமூக வளர்ச்சி, இளையர் மற்றும் விளையாட்டுத்துறை அமச்சர் Dr.விவியன் பாலகிருஷ்ணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அமைச்சர்களும், அரசும் இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் மிக நல்ல அபிப்ராயமும், ஈடுபாடும் வைத்திருந்தாலும் மக்கள் அளவில் இன்னும் செய்ய நிறைய இருக்கிறது. இந்த அடிப்படைஉறவு மேலும் வளர்ந்தால் இன்னும் பல செய்யமுடியும்.

இதனை வலியுறுத்தத்தான் சமீபத்திய இந்திய சுற்றுப்பயணம் முடித்து சிங்கை திரும்பியபோது அமைச்சர் தர்மன் கூறியது:
"இங்குள்ளவர்கள் மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய, வளர்ச்சியடைய மனம்மாற்றம் மிக அவசியம்"

இந்தத்தகவல்கள் பெரும்பாலும் இங்குள்ள தமிழ் ஊடகங்கள்வழி அறிந்ததென்றாலும், ஊடகங்கள் செய்திகள் அளிப்பதன்வழி சேவையைச் செய்தாலும், சிங்கையில் 'இந்திய இந்தியர், சிங்கை இந்தியர்' உறவுக்கு மேலும் செய்யலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

கடந்தவருடம் இதே மாதம், என்னுடைய வலைப்பூ ஆசிரியர் வாரத்தில் நான் எழுதிய சிங்கையில் இந்தியர் நிலை என்ற பதிவுகள் இதற்கு தொடர்புடையதாயிருக்கும்.

அனைவருக்கும் எனது
தீபாவளி மற்றும்
ரமலான் நோன்புப்பெருநாள்
வாழ்த்துக்கள்.