அம்மா,
பால் கொடுக்கவில்லையென
உன்பால் எனக்கில்லை கோபம்!
நீ கொடுக்கும் முத்தம்கூட
கடிகாரத்தின் துணையோடுதானே!
எந்தக் கோட்டையைப் பிடிக்க
அரைவேக்காடு அரிசியை
அள்ளிப்போட்டுக்கொண்டு
இப்படி ஓடுகிறாய்?
என்னுடைய 'டாட்டா'
காற்றில் வீணாய்ப்போகிறதே!
பள்ளிப் புத்தகத்தில்
'நிலா நிலா வா வா!', என
அம்மா சோறு ஊட்டுகிறாள்!
ஆனால்,
புறமுதுகிட்ட வீரனைப்போல்
சோர்ந்து திரும்பும் நீ,
அவசரச் சட்டம்போல்
சமையலறையில் புகும் உனக்கு,
அப்பாவின் புதுப்புது அர்ச்சனைகள்!
நீ தட்சணை கொடுத்தும்,
ஏன் இந்த அர்ச்சனைகள்?
நீ தூங்கம்மா, தூங்கு,
நான் உனக்குத்
தாலாட்டுப் பாடுகிறேன்!
- ஆர். ஆனந்தி
'தினத்தந்தி குடும்பமலர் - 25/07/2004' வந்த இந்தக் கவிதை இன்று
தினம் ஒரு கவிதையாக வெளியாகியுள்ளது.
நல்ல கவிதை கணையாழியில்தான்
வெளிவரவேண்டுமென்பதில்லை.
குடும்பமலர், வாரமலரிலும் வரலாம்.
நல்ல கவிதைகளைத் தேடி, தேடி
தினம் ஒரு கவிதை
கொணர்ந்தமெக்கு சேர்க்கும்
நண்பர் சொக்கனுக்கு
கோடானுகோடி நன்றி.
Tuesday, August 03, 2004
Monday, August 02, 2004
மஞ்சள் மகிமை
என்ன தலைப்பே ஒருமாதிரியா இருக்குதா...?
மஞ்சளோட மகிமை தெரிந்து அங்க உள்ள பசங்க patent வாங்கி வச்சாட்டுனுங்க, இங்க நம்ம ஊட்டு பொண்ணுங்க மஞ்சளைத் துறந்து Gillette பக்கம் போய்ட்டாங்க என்ன பண்றது, கலிகாலம்....மங்களகரமான மஞ்சள் - ராஜம் முரளி
மஞ்சளோட மகிமை தெரிந்து அங்க உள்ள பசங்க patent வாங்கி வச்சாட்டுனுங்க, இங்க நம்ம ஊட்டு பொண்ணுங்க மஞ்சளைத் துறந்து Gillette பக்கம் போய்ட்டாங்க என்ன பண்றது, கலிகாலம்....மங்களகரமான மஞ்சள் - ராஜம் முரளி
அழைப்பு மையம்
"வேலைக்குப் போனாதான் படிச்சதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கும்.
பணத்தைக்கொட்டி, கஷ்டப்பட்டுப் படிச்சுருக்கோம்.
வீட்டு மொட்ட மாடியில நிலாவை முறாச்சுப் பார்த்துட்டு,
ஒருநாள் கல்யாணம் பண்ணிட்டு அதே நிலவை
வேற வீட்டு மாடியிலுருந்து பாத்திட்டு இருக்க முடியாது."
என்னமா பேசுறாங்க பாருங்கப்பா...
ஒருபக்கம் 'அழகி தற்கொலை'ன்னு படிக்கறப்ப
கவலையா இருந்தாலும் - இந்த துர்கா, அகல்யா, சுஜாதா பேச்சைக் கேட்டால் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது, சந்தோஷம். கால் சென்டர் - அகல்யா
பணத்தைக்கொட்டி, கஷ்டப்பட்டுப் படிச்சுருக்கோம்.
வீட்டு மொட்ட மாடியில நிலாவை முறாச்சுப் பார்த்துட்டு,
ஒருநாள் கல்யாணம் பண்ணிட்டு அதே நிலவை
வேற வீட்டு மாடியிலுருந்து பாத்திட்டு இருக்க முடியாது."
என்னமா பேசுறாங்க பாருங்கப்பா...
ஒருபக்கம் 'அழகி தற்கொலை'ன்னு படிக்கறப்ப
கவலையா இருந்தாலும் - இந்த துர்கா, அகல்யா, சுஜாதா பேச்சைக் கேட்டால் ஒரு தன்னம்பிக்கை பிறக்கிறது, சந்தோஷம். கால் சென்டர் - அகல்யா
குப்பையைப் பற்றி...
மகா சனங்களே வணக்கம்.
இதுவரை 'குப்பை'யைப்பற்றி வலைப்பூக்களில் பிரபலங்கள் பரபரப்பாக எழுதிவந்தார்கள். இந்தவாரம் முதல் குப்பையைப்பற்றி ஒரு சிறப்புத்தொடரே வெளியிட ஆனந்தவிகடன் குழுவில் அவர்களாகவே முடிவுசெய்து (சத்தியமா நான் காசு ஏதும் கொடுக்கலிங்க, மேலும் இது ஆதரவாளர் தொடரும் அல்ல...) குப்பையென்பது இது குடும்ப சமாசாரம் (பொம்பளங்க சமாசாரம்னு எழுதி, அகில உலக மாதர் சங்கம் கொடி பிடிச்சுட்டாங்கண்ணா... - தப்பிச்சேன்) என்பதால் அவள்விகடனில் தொடர் வருகிறது. பிரபல (பெண் - அப்படின்னு சொல்லலமோ அதுக்கும் எதாவது மாதரணி திட்டுவார்களோ!?) எழுத்தாளர் அனுராதா ரமணணும், புகழ்பெற்ற சினிமா, தொலைக்காட்சி பிரபலம் நளினி ராமராசர்(சரியா தெரியல...) அவர்களும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.
அதனால... மேல படிங்க...
இதுவரை 'குப்பை'யைப்பற்றி வலைப்பூக்களில் பிரபலங்கள் பரபரப்பாக எழுதிவந்தார்கள். இந்தவாரம் முதல் குப்பையைப்பற்றி ஒரு சிறப்புத்தொடரே வெளியிட ஆனந்தவிகடன் குழுவில் அவர்களாகவே முடிவுசெய்து (சத்தியமா நான் காசு ஏதும் கொடுக்கலிங்க, மேலும் இது ஆதரவாளர் தொடரும் அல்ல...) குப்பையென்பது இது குடும்ப சமாசாரம் (பொம்பளங்க சமாசாரம்னு எழுதி, அகில உலக மாதர் சங்கம் கொடி பிடிச்சுட்டாங்கண்ணா... - தப்பிச்சேன்) என்பதால் அவள்விகடனில் தொடர் வருகிறது. பிரபல (பெண் - அப்படின்னு சொல்லலமோ அதுக்கும் எதாவது மாதரணி திட்டுவார்களோ!?) எழுத்தாளர் அனுராதா ரமணணும், புகழ்பெற்ற சினிமா, தொலைக்காட்சி பிரபலம் நளினி ராமராசர்(சரியா தெரியல...) அவர்களும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.
அதனால... மேல படிங்க...
Subscribe to:
Posts (Atom)