Monday, April 18, 2005

உங்க ஊர்லயும் இருக்குதா!?

சிங்கையில் உள்ள இந்திய தூதரகம், தனது வழக்கமான சேவைகளுடன் ஒலி/ஒளி வட்டுக்கள், நாடாக்கள் எல்லாம் கூட இரவலுக்கு கொடுக்கிறதாமே? ஆமாவா!? யாரும் பயன்படுத்தியிருக்கிறீர்களா (தெரியும், இங்கு சிங்கையில் கூட தூதரகத்தில் அருகில் ஜாகை வைத்திருக்கும், ஒருவருக்குமட்டும்தான் பயன் என்று:) இரண்டு காரணம் - மற்றவருக்கு வேலை நேரம் ஒத்துவராது, இன்னொன்று எல்லாமே हिन्डि / हिन्दि

இது மாதிரி உங்க ஊர்லயும் உண்டா:)

Saturday, April 16, 2005

கற்றதும்... பெற்றதும்... எஸ்.பொ

நன்றி: விகடன்

============================================
கற்றதும்... பெற்றதும்...
சுஜாதா

விட்டான்... கையான்... வீர விளையாட்டு!

எப்போதாவது எஸ்.பொ. அவர்கள் தொலைபேசுவார். சமீபத்தில் பேசியபோது, ‘எங்கே இருக்கிறீர்கள்? ஆவுஸ்திரேலியாவா, லண்டனா, மட்டக்களப்பா, நைஜீரியாவா, கனடாவா?’ என்று கேட்டதில், ‘இங்கேதான் சென்னை&94&ல் இருக்கிறேன். என்னுடைய நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார்கள். மேலும், உறவுகள் என்ற என் புத்தகமும் வெளியிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள்' என்றார். என் இடுப்பு அனுமதித்தால் நாடகத்துக்கு வருவதாகச் சொன்னேன்.

இலங்கையில் இனக் கலவரத்தால் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் மீன்தொட்டிக்குள் மீன் போல அடிக்கடி இடம் மாறுவார்கள். எஸ்.பொ. அவர்களை எல்லாம் ஒருமைப்படுத்தினார். அவரின் பனியும் பனையும் என்ற ஒரு சிறப்பான தொகுப்புக்கு, சில ஆண்டுகளுக்கு முன் விரிவான முன்னுரை அளித்தேன்.

எஸ்.பொ\வின் தமிழ்நடை பழகிவிட்டால், அவரது எழுத்துக்களை ஒரு புதுமலர் வாசனைபோல் ரசிக்கலாம். எதிர்பாராத இடங்களில் சம்ஸ்கிருத வார்த்தைகளும், புதுமைப்பித்தனை நினைவு படுத்தும் வாக்கிய அமைப்பும், விநோதமான (நமக்கு) யாழ்ப்பாணத் தமிழும் கலந்திருக்கும். இந்த நடை எனக்கு தேவகாந்தனின் உதவியுடன் 'கன்னத்தில் முத்தமிட்ட'தற்குப் பிறகு பழகிவிட்டது. இந்தத் தொகுப்பு நூலில், 'போர்' என்ற கட்டுரை எனக்கு மிகவும்பிடித்திருந்து.

தளைதட்டாத ஒரு வெண்பாவில் துவங்கி, யாழ்ப்பாணக் கலாசாரம் பனைமரக் கலாசாரம் மட்டுமே என்று எண்ணுவது தப்பு என்கிறார் எஸ்.பொ. முன்னூறு தேங்காய்களை இரண்டு பிரிவினர் மாற்றி மாற்றி... ஒரு பிரிவினர் ‘விட்டான்' என்று ஒரு தேங்காயை கீழே வைக்க, அதை மற்றொரு பிரிவினர் 'கையான்' என்று வலுவான தேங்காயின் குடுமியைப் பிடித்துக்கொண்டு ஒரே போடு போட்டு உடைக்க வேண்டும். சிலகையான்கள் பதினெட்டு கூட ஸ்கோர் பண்ணுமாம். சில சமயம் விட்டான், கையான் இரண்டுமே பணால். இப்படி மாற்றி மாற்றி அடித்து உடைத்து, எந்தப் பிரிவிடம் தேங்காய்கள்அதிகம் மிச்சம் இருக்கிறதோ, அதுவெற்றி பெறும்.
என்ன சாதிக்கிறோம்..?

கொஞ்சம் யோசித்தால், இந்த விளையாட்டை எழுத்துப் போராட்டத்தின் படிமம்போல எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில்
இவ்வகையிலான தேங்காய் விளையாட்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் அன்பர்கள் எழுதலாம்.

எனக்குத் தேங்காய் உடைக்கத் தெரியாது. ஒரே போடில் தேங்காயைப் பப்பாதியாக உடைக்கும் சாகசத்தை என்னால் கற்கவே முடியவில்லை. அதேபோல், சைக்கிளில் காலைத் தூக்கிப் பின்னால் விசிறி ஸ்டைலாக ஏறும் கலையும்! அது வேறு சமாசாரம்.

எஸ்.பொ-வின் 'போர்' கட்டுரை, என்னுடைய வருங்கால சிறந்த கட்டுரைத் தொகுப்பில் நிச்சயம் இடம் பெறும்.

எஸ்.பொ. தன் மகன்களில் ஒருவரான மித்ர அருச்சுனனை ஈழப் போரில் இழந்தவர். ‘மித்தி’ என்ற மிக நீண்ட னீமீனீஷீவீக்ஷீ (நினைவலைகள்) கொஞ்சம் சுருக்கமாக இருந்தால், உருக்கமாக இருக்கும்.

"அதுதானப்பு சொல்ல வந்தனான். வறாத்துப் பளையிலை உமல் கொட்டை அடிச்சவை உப்ப ரவுண் சனமாகி யல்லோ நாட்டாமை பேசுகினம்? அவங்கடை வாயை அடைக்க உண்ரை பொடியன்கள் காணாதே..."

இதற்கு என்ன அர்த்தம் என்பதை ஒரு கார்டில் எழுதிப் போட்டால், முதல் பத்து விடைகளுக்கு வழமையாக... க.பெ.பு. பரிசுகள். நிபந்தனை: தமிழ்நாட்டுக் காரர்களுக்கு மட்டும்!

==========================================

நன்றி: சுரதா

Wednesday, April 13, 2005

Thursday, March 31, 2005

@#$%^ அப்படின்னா என்ன மம்மி...!?

குழந்தைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்...

நம்மில் பலர் தினம்தினம் நம் பிள்ளைகளின் எல்லையில்லா கேள்விகளைக்கேட்டு எரிச்சலுற்றிருப்போம், அதிர்ச்சியடைந்திருப்போம். சிலர் கேள்விகளில் ஆனந்தமும் கொண்டிருக்கலாம்.

Image hosted by Photobucket.com

யோசித்துப்பாருங்கள் குழந்தைகள் உலகத்தை எப்படி தெரிந்துகொள்வார்கள்?

குழந்தை நீலவானத்தைப் பார்த்து, அது ஏன் நீலமாக இருக்கிறது என்று வியக்கலாம். அவர்களுக்கு எப்படித்தெரியும் அவர்களுக்கருகில் இல்லாத பலவற்றைப்பற்றி?

அடிக்கடி கேள்விகள் கேட்டு நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் (அல்லது பல வேளைகளைகளில் தலையச்சொறியச்செய்யும்:) அவர்களை எப்படி சமாளிப்பது?

குழந்தைகள் நினைத்திருக்கலாம் - நமக்கு எல்லாம் தெரியுமென்று. (நமக்குத்தானே தெரியும், நம்ப வண்டவாளம்:) அம்மாக்களே தயவுசெய்து சொல்லாதீர்கள்: "அப்பாவிடம் கேள்" என்று.

உங்களுக்காகவே, உங்கள் குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ள சில உதவிக்குறிப்புகள் இங்கே:

உங்கள் பதில் சுருக்கமாக இருக்கட்டும்:

பிள்ளைகளின் கேள்விகள் அறிவார்ந்த, பிரமிப்பூட்டுபவையாக இருக்கலாம். ஆனால், உங்கள் பதில் அதேவிதமாக இருக்கவேண்டுமென்பதில்லை. உதராணத்திற்கு, உங்கள் பிள்ளை "சூரியன் ஏன் ஒளிர்கிறது?" என்று கேட்டால், "மரம், செடிகள் வளர்ந்து நம்மை வளமாக வைத்துக்கொள்ள..." எனபதுபோல சுருக்கி பதில் அளியுங்கள். கடல் ஆவியாவதில் ஆரம்பித்து, புறா ஊதா/அக ஊதா - அது இதென்று (நமக்குத் தெரிந்ததெல்லாம் அல்லது கூகிளின் உதவியுடன்) பதிலை வளர்க்கத்தேவையில்லை -அது அவர்களுக்குப் புரியவும் போவதில்லை, அந்த வயதில்.

செயல்விளக்கம் கொடுங்கள்:

ஆயிரம் சொல் சொல்ல இயலாததை, நேரடி விளக்கம் எளிதில் செய்யும். கடலில் ஏன் அலைகள் வருகிறது? என்று கேட்டால், ஒரு வாளியில் நீரைநிரப்பி அதை அவர்களையே வேகமாக ஊதச்செய்து எழும்பும் அதிர்வுகளை/அலைகளைக் காட்டுங்கள். அது புரியச்செய்யும், நீங்கள் கொடுக்க நினைக்கும் நீண்டவிளக்கத்தை விட.

உண்மையைச் சொல்லுங்கள்:

கும்மிருட்டு, புயல், பேயென்றெல்லாம் வைத்து எதாவாது தேவதைக்கதை புனையாதீர்கள். உங்கள் குழந்தை, "நான் எங்கிருந்து வந்தேன்?" என்று கேட்டால், "குப்பைத்தொட்டியில் எடுத்தேன், தத்து எடுத்தேன்" என்று தத்து பித்தென்று உளாராதீர்கள். அப்படி கூறுவதால் குழந்தையை குழப்பத்திலும், பயத்திலும் ஆழ்த்துகிறீர்கள்.

எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது, ஒரு ஆரஞ்சுவிதையை நான் குழந்தையில் விழுங்கியபோது - அம்மா உன்னுடைய மண்டையில் ஆரஞ்சுமரம் முளைக்கப்போகிறது என்று கூறி, பலகாலம், பல இரவு தலையை அழுத்திப்பிடுத்திக்கொண்டு கஷடப்பட்டிருக்கிறேன் - எங்கே செடி முளைத்துவிடுமோ என்று:)

அளவுக்கதிகமாக பதறாதீர்கள்:

உங்கள் பிள்ளைகள் - பிறப்பு/இறப்பு செக்ஸ் சம்பந்தப்பட்ட துடுக்குதனமான கேள்விகள் கேட்கும்போது தயவுசெய்து நிதானத்தை இழக்காதீர்கள், அதிகம் பதறாதீர்கள். குழந்தைகள் தீவிரவாதிகள் பற்றி கேடகும்போது, அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது - அவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளத்தான். வீணாக, அவர்களை தீவிரவாதிகள் கூட்டத்தில் இணைத்து கற்பனைசெய்து உங்கள் இதயத்துடிப்பை அதிகரித்துக்கொள்ளாதீர்கள்.

உங்கள் பதில் கேட்பவர்களுக்குத் தகுந்ததாக இருக்கட்டும்:

கேட்பவர்களின் வயதுக்குத்தகுந்தாக இருக்கட்டும் உங்கள் பதில்கள். 6 முதல் 10 வயதுள்ளபவர்களுக்கு கற்பனைக்கும், உண்மைக்கும் வித்தியாசம் புரியும். அதனால் உங்கள் 3 வயது பிள்ளைக்கு சொல்லும் பதிலையே 7 வயதுள்ள மூத்த பிள்ளைக்கும் சொல்லாதீர்கள்.

பதில்களைத் தள்ளிப்போடுங்கள்:

உங்கள் மகன், வழியில் பார்க்கும் ஒரு மனக்குறையுள்ள பையனைப் பார்த்தோ அல்லது ரயிலில் எதிரில் அமர்ந்திருக்கும் கண்பார்வையற்றவரைப் பார்த்து மிரளும்போதோ, ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகள் கேட்கும்போதோ - மிக அமைதியாக அவன்காதில் சொல்லுங்கள்: "கவலைப்படாதே, வீட்டுக்குபோன பிறகு இது பற்றி விளக்குகிறேன்" என்று. அதன்படி, பின்னர் வீட்டிலிருக்கும்போது, அவனுக்குப் புரியும்படி விளக்குங்கள்.

தேடுங்கள் கிடைக்கும்:

எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க சாத்தியமில்லை. உங்கள் குழந்தைகளை அவர்களுடைய சந்தேகங்களைக்கேட்க ஊக்குவியுங்கள். அவர்கள் குடும்பத்தில் யாரிடமோ, நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டுத்தெளிவுபெறட்டும். அந்த வகையில் இணையம் ஒரு பெரிய அறிவுக்கருவூலம், ஆனால் அதைப் பிள்ளைகள் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருங்கள்.

மொத்தத்தில், நம்மைப்போல அல்ல நம் குழந்தைகள். அவர்களுக்கு இந்த வானமே கூட இல்லை... அவர்களை புரிந்துகொள்வோம், உலகப்புரியச்செய்வோம்.

சகோதரி ஜோசஃபின் அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலை நான் இங்கு என்னுடைய மொழிப்படுத்தியிருக்கிறேன். நன்றி, லோரா.

Sunday, February 13, 2005

அன்பர்தின வாழ்த்துக்கள்

அன்புக்குரிய உங்களுக்கு என் அன்பர்தின வாழ்த்துக்கள்.

ஆம், சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் Valentine's Day என்பதை மற்றவர்கள் போல் வெறும் காதலர் தினம் என்று கொச்சைப்படுத்துவதில்லை - அன்பர்கள் தினம் என்று கொண்டாடுகிறது. வானொலியில் பாடல் விரும்பிக்கேட்பதனாலும் சரி, அன்பர்தினம் முன்னிட்டு உல்லாசப்பயணத்துக்கு ஏற்பாடு செய்தாலும் காதலர்கள், கணவன்/மனைவி என்று மட்டுறுத்தாமல், நாம் அன்பு செலுத்தும் அனைவருக்குமான ஒரு நாளாகவே இது கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனால், அன்புக்குரிய உங்களுக்கு என் அன்பர்தின வாழ்த்துக்கள்.

மேலும் Valentine's Day தொடர்பில் இந்த வாரயிறுதியில் நடந்த சில நிகழ்வுகளும், தகவல்களும்:

செய்தி 1:
ஒரு காலத்தில் நான் இங்கு சிங்கை வந்தபுதிதில் பலரும் கேட்டிருக்கின்றனர், இந்தியர்கள் பெரும்பாலும் நிச்சயக்கப்பட்ட திருமணம் செய்வீர்களாமே!? தரகர்கள் கொடுக்கும் புகைப்படம் பார்த்து துணையை முடிவுசெய்வீர்களாமே என்று. நேற்று வந்த ஒரு செய்தி சொல்வது மேட்ச்மேக்கிங்க், டேட்டிங்க் நிறுவங்களின் தேவை அதிகரித்திருக்கிறது, ஆதாயமுள்ள ஒரு வர்த்தகதுறையாக முன்னேறி வருகிறது. It's Just Lunch (இது அமெரிக நிறுவனத்தின் சிங்கைப் பிரிவாம்), Two to Tango, Lunch Actually, Hotspots.com ... என்று பல நிறுவனங்கள் அரசின் Social Development Unit (SDU)வுக்கு உறுதுணையாக இருக்கிறது. சிங்கையில் பெரும்பாலும் காதல் திருமணம்தான் என்பதால் பெரும்பாலானவர்கள் பள்ளியிலேயே கைபிடித்து திரிகின்றனர். அது திருமணத்தில் இணைந்து நல்வாழ்வுக்கும் இட்டுச் செல்கிறது, இடையிலும் பிரிகின்றனர். அதனால், திருமணத்தில் இணைய இயலாத சிலர், காதல் அரங்கேறாத பலர், இன்னும் சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போகும் பலர் என்று இருக்கும் இளையர்களுக்கு இதுபோன்ற நிறுவங்கள் பெரும் வரப்பிரசாதம். இந்த வகையில் அரசின் SDU முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு துணைசென்றிருக்கிறது. இதுபோன்ற நிறுவனங்கள் தமிழர்களுக்கென்றும் இருக்கிறதும், சில நேரம் அத்தி பூத்தார்போல் மணமகன்/ள் தேவை வரிவிளம்பரங்கள் தமிழ்முரசில் வருவதுண்டு.

செய்தி 2:
13 முதல் 18 வயதுடைய சிங்கப்பூர இளையர்களில் ஐவரில் ஒருவர் உடலுறவில் ஈடுபடுவதாலும், கருக்கலைப்பு இன்னபிற செக்ஸ் தொடர்பான நோய்கள் அதிகரிப்பதாலும் ஒரு தன்னார்வ நிறுவனம் காத்திருப்பதில் அர்த்தமுண்டு - Worth Waiting For... என்ற சொற்றொடர் பதித்த பட்டைகளை(wrist bands) இளையர்களிடையே கொடுத்து தங்களுடைய அன்புக்குரியவர்களிடம் கொடுக்கச் செய்திருக்கிறது.

செய்தி 3:
மற்றொரு நடப்பில், தாய்லாந்தில் நடந்த கருத்துக்கணிப்பில் Valentine's Day என்பது மற்றொரு சாதாரண மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உண்ணும் விருந்தாக மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 100,000 இளையர்கள் உடலுறவில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக சொல்கிறது.

இதுபோன்றவற்றில் நம் இந்திய இளையர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதும் வரும் செய்திகளில் தெரிகிறது. உலகம் போவதெங்கே...!?