தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா வைபவம் (அவசர அவசரமாக) இனிதே நடந்து முடிந்துள்ளது. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
அதே நேரத்தில், விழா தொடர்பாக சன் டிவியில் விளம்பரம் வந்ததில் இருந்து ஆங்காங்கே புகையும் வந்துகொண்டே இருக்கிறது. இது தொடர்பில் ஞாயிறு அதிகாலையன்று என்னுள் தோன்றியதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்தேன். ஆனால், அதே வேகத்துடன் எழுதவேண்டாம் என்று விட்டு வைத்தேன்.
வெளியிடப்பட்ட வட்டில், இப்போது பெரும்பாலார்கள் பயன்படுத்தும் TSCIIயையே காணோம், தாப்/தாம்தான் என்று சில குழுமங்களில் பரபரப்பு. இன்று நண்பர் பத்ரியின் ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? பதிவைப் பார்த்தவுடன், என்னுள் தோன்றியதை இன்றே பதிவுசெய்யத் தோன்றியது.
இன்று கணிணியில் தமிழ் பயன்படுத்தும் பலருக்கும் தெரியும் தமிழ் எப்படி எப்படியெல்லாம், எந்தெந்த வழியிலெல்லாம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்று. இந்த கணிணித்தமிழுக்கு வழிவகுத்தவர்கள் எல்லாமே - 90 சதவீதத்துக்கு மேலாக அரசு சார்பற்ற, தன்னார்வமிக்க தொண்டூழியர்கள்தான். ஆனால், இன்று எல்லாத்துக்கும் நாங்கள்தான் காரணம் என்பதுபோல், ஒருபக்கம் பரபரப்பு நடக்கிறது. 30 லட்சம் குறுந்தகடு வெளியிடுவது, பத்திரிக்கைகளுக்கு உடனே கொண்டு சேர்ப்பது போன்றவை பாராட்டப்படத்தக்கது என்றாலும் - பலருடைய உழைப்பு மறைக்கப்பட்டிருக்கிறது, வீணடிக்கப்பட்டிருக்கிறது.
எனக்குத்தெரிந்தவரை தமிழ் கணிணி வளர்ச்சிக்கு வருடாவருடம் நடந்துவரும் தமிழ் இணைய மாநாடு பெரிதும் செய்து வருகிறது. ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், உலகமுழுவதும் தமிழ் கணிணிக்காக பணிசெய்வோருக்கிடையேயான ஒத்துழைப்பு, யுனிக்கோடு அமைப்புடனான தொடர்பு என்று பல வழிகளில் பாராட்டத்தக்க பணிகள் செய்து வந்திருக்கிறது. ஆனால், இந்த குறுந்தட்டு வெளியீட்டில் உத்தமம் என்றழைக்கப்படும் INFITT ன் பங்கு என்ன என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது.
பலகாலம் தமிழுக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு - அமைச்சு மூலம் C-DAC தயாரித்ததாக வட்டு வெளியாகிறது. இதில் பரம்பரை பக்கா அரசியல் ஒருபக்கமும், தமிழ் இணையத்துக்கு உழைப்பவரிடையே நிலவும் அரசியில் ஒருபக்கமும் சேர்ந்து உண்மையை குழிதோண்டிப்புதைக்க ஒத்துழைத்துள்ளது.
ஃபயர் ஃபாக்ஸைப் பொருத்தவரை தமிழாவின் முகுந்த் பிப்ரவரி 22ல் வெளியிட்டார். ஒரு சில தினங்களிலேயே நானும் இறக்கி பயன்படுத்தி வருகிறேன்.
அதன் பின்னர், ழ-கணிணியின் ஜெயராதா மார்ச் 25 அன்று ஃபயர் ஃபாக்ஸ் தமிழில் முடிந்துவிட்டது என்ற ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது என் மனதுள் தோன்றியது: ஏன் இப்படி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு இல்லாமல், செய்ததை திரும்பச்செய்து அவர்களுடைய பொன்னான காலநேரத்தை வீணாக்குகிறார்கள் என்று. இருந்தாலும் ழ(RedHat) என்பதால் தனியாக வேண்டுமோ என்று விட்டுவிட்டேன்.
இப்போது புதிதாக, C-DAC மூலம் தாங்கள்தான் (உலகில்) முதன்முதலில் வெளியிட்டோம் என்று இன்னொரு ஃபயர் ஃபாக்ஸ்.
இதற்கு என்ன செய்யலாம் என்று இணையப்பொதுமக்கள் யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, வருங்காலத்தில் என்ன செய்யலாம் என்று என்னுள் தோன்றுவது.
1) உத்தமம் ஒரு பொதுவான பதிவு நிறுவனமாய் இருந்து தமிழ் கணிணிப்படுத்ததில் யார் என்ன புதிதான திட்டம் தொடங்கினாலும் அதன் விபரத்தை பதிவு செய்யலாம். திட்டத்தின் முழுவிளக்கம் கொடுக்காமல், ஆரம்பதேதி, செயல்படுபவர்கள் போன்ற விபரத்தை முதலிலேயே தெரிவிக்கலாம். அதுபோல், முடிவு/வெளியீடு தேதி, பதிவிறக்கம் செய்யும் தொடர்பு போன்றவை.
2) தமிழ் லினக்ஸ், டிஸ்கி, போன்ற பல இணையக்குழுமங்கள் இருந்தாலும், பலரும் பல பிரிவாக (குறிப்பாக RedHat, Mandrake Linux) என்று செயல்படும்போது உத்தமம் ஊடுபாலமாக செயல்படலாம்.
3) உத்தமம் தனது மின்மிஞ்சரியை வருடாந்திர தமிழ் இணைய மாநாட்டுச் சிறப்பிதழாக மட்டும் வெளியிடாமல், மாத மின்னிதழாக மாற்றி - ஒவ்வொரு மாதமும் தமிழ் கணிணியுகத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள், புதிய அறிவுப்புகள், மென்பொருள்கள், புதிய தளங்கள், தற்போது நடந்துவரும் திட்டங்களின் நிலைகள் போன்ற பல விபரங்களைத் தொகுத்தளிக்கலாம்.
4) புதிதாக வரும் அறிவிப்புகள், வெளியீட்டுகளுக்கு - அது மாநில அரசோ, மத்திய அரசோ, வேறு தன்னார்வ நிறுவனங்களாய் இருந்தாலும், அது உத்தமம் பார்வைக்கு(காவது) குறைந்தபட்சம் சென்று திரும்பவதாய் பார்த்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற இன்னும் பல ...லாம்கள்.
மைக்ரோசாஃப்ட்
ஒரு காலத்தில் நான், ஏன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - சீன, ஜப்பானிய, கொரிய மொழிகளிலெல்லாம் இயங்குதளங்கள், ஆஃபீஸ் பொதிகள் வெளியிடுகிறது, தமிழில் இல்லை என்றேன். பலரும் சொன்ன பதில், வாங்குபவர்கள் இருந்தால்தான் வெளியிடும் என்றார்கள். ஆனால், இப்போது இயங்குதளம், ஆஃபீஸ் எல்லாம் வருகிறது ஏன்?
நமது முகுந்த் போன்றவர்களின் கைவண்ணம்தான், பில் கேட்ஸையே மறுபரிசீலனை செய்யவைத்திருக்கிறது என்பது உண்மை.
முதல் விடயம், விண்டோஸுக்கு பரம எதிரியாக எளிதில் கிடைக்கும் லினக்ஸ். அதிலும் உள்ளூர் மொழிகளில், ஒப்பன் ஆஃபீஸ் போன்ற விண்டோஸிடன் இணைந்து வராத பல மென்பொருள்களுடன்.
இந்த சிறப்புக் கருதி சிங்கையின் தற்காப்பு அமைச்சு தனது 20,000 கணிணிகளில் பயன்படுத்தும் ஆஃபிஸ் 97க்குப் பதிலாக ஒப்பன் ஆஃபிஸுக்கு மாறப்போகிறது. அதற்கு முக்கியக்காரணம் - செலவு குறைவு. தமிழ் உட்பட சிங்கையின் 4 அதிகாரத்துவ மொழிகளும் இருக்கிறது. இது மற்ற அமைச்சுகளும் இதைப் பின் தொடரும்.
மலேசியாவில் சன் நிறுவனத்தின் ஸ்டார் ஆஃபிஸ் பல அமைச்சுகளில் பயன்படுத்த ஆரம்பித்து சில வருடங்களாகிறது. இந்தியாவிலும் பல அரசு துறைகளில் லினக்ஸ் மற்றும் திறமூல மென்பொருள்கள் உட் புகுந்து விட்டது.
இதற்குப்பதிலாக ஒரு மாற்றுதான், மைக்ரோசாஃப்டின் பாஷா இந்தியா. ஆனால், அதிலும் ஒரு திருப்தி - தமிழ் திட்டத்தை பொறுப்பேற்று செய்து தரும் நிறுவனம் விஷ்வக்
செல்லினத்தின் கொ.ப.செ.
ஒரு வழியாக தலைப்புக்கு வருகிறேன்:)
நண்பர்களிடம் ஒரு இடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக, தமிழ் குறுந்தகவல் பற்றிய விடயம் வந்தது. அப்போது என்னைச் சுட்டிக்காட்டி இன்னொரு நண்பர் ஒருவர் கூறியது, "அதான் இங்க இருக்காரே, செல்லினத்தின் கொபசெ" என்றார். அப்போது சிரித்துவிட்டு விட்டுவிட்டேன்.
ஆனால், அன்று எனக்குள் தோன்றியது இதுதான்:
நான் செல்லினத்துக்கு மட்டுமல்ல. முதன்முதல் கணிணியில் தமிழ் பார்க்க உதவிய நா.கோ அய்யாவின் கணியன் முதல், பின்னர் 1996ல் வாங்கிய கம்பன் எழுத்தோலை, பின்னர் முரசு அஞ்சல் என்று தொடங்கி, டிஸ்கி, யுனிக்கோடு, இ-கலப்பை, தமிழ்மணம் என்ற பல தமிழ் கணிணி/தொழில் நுட்ப முயற்சிகளுக்கு கொ.ப.செ-வாக, பிரச்சார பீரங்கியாக இருந்து வந்தே இருக்கிறேன். அதை இப்போதும் தொடர்கிறேன். அது என்னால் இயன்ற உதவியாக நினைக்கிறேன்.
இதை நான் மட்டுமல்ல, கணிணியில் தமிழ் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் செய்திருக்க வேண்டும். நாம் பயன்படுத்துவதை, நல்ல விடயங்களை, நண்பர்களின் உழைப்பைப் பாராட்டி அடுத்தவருக்கு நம்மாள் இயன்ற நாளுபேருக்கு எடுத்து செ(சொ)ல்லாமல் இருப்பது தவறு, துரோகம் என்றே நான் நினைக்கிறேன். இதை ஒவ்வொருவரும் ஓரளவு செய்திருந்தாலே - இன்று தனியாக கூக்குரலிடும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும்.
அதனால் இதுவரை இதை செய்யாதிருந்திருந்தாலும், இன்றிலிருந்தாவது தமிழ் கணிணித்துறையில் உள்ள முன்னேற்றங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக!
இந்தப் பதிவின் நீளம்கருதிதான் எழுதுவதை தள்ளிப்போட்டு வந்தேன். இருந்தாலும், ஒருவழியாக என்னுள் தோன்றியதை சொல்லி விட்டேன். மேலும், இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ள எந்த தனி மனிதருக்கோ, நிறுவனத்துக்கோ நான் சொந்தக்காரனோ, சண்டைக்காரனோ அல்ல. இது என்னுடைய தாழ்மையான கருத்து, அவ்வளவுதான்.
என்றென்றும் அன்புடன்,
அன்பு
Tuesday, April 19, 2005
Monday, April 18, 2005
உங்க ஊர்லயும் இருக்குதா!?
சிங்கையில் உள்ள இந்திய தூதரகம், தனது வழக்கமான சேவைகளுடன் ஒலி/ஒளி வட்டுக்கள், நாடாக்கள் எல்லாம் கூட இரவலுக்கு கொடுக்கிறதாமே? ஆமாவா!? யாரும் பயன்படுத்தியிருக்கிறீர்களா (தெரியும், இங்கு சிங்கையில் கூட தூதரகத்தில் அருகில் ஜாகை வைத்திருக்கும், ஒருவருக்குமட்டும்தான் பயன் என்று:) இரண்டு காரணம் - மற்றவருக்கு வேலை நேரம் ஒத்துவராது, இன்னொன்று எல்லாமே हिन्डि / हिन्दि
இது மாதிரி உங்க ஊர்லயும் உண்டா:)
இது மாதிரி உங்க ஊர்லயும் உண்டா:)
Saturday, April 16, 2005
கற்றதும்... பெற்றதும்... எஸ்.பொ
நன்றி: விகடன்
============================================
கற்றதும்... பெற்றதும்...
சுஜாதா
விட்டான்... கையான்... வீர விளையாட்டு!
எப்போதாவது எஸ்.பொ. அவர்கள் தொலைபேசுவார். சமீபத்தில் பேசியபோது, ‘எங்கே இருக்கிறீர்கள்? ஆவுஸ்திரேலியாவா, லண்டனா, மட்டக்களப்பா, நைஜீரியாவா, கனடாவா?’ என்று கேட்டதில், ‘இங்கேதான் சென்னை&94&ல் இருக்கிறேன். என்னுடைய நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார்கள். மேலும், உறவுகள் என்ற என் புத்தகமும் வெளியிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள்' என்றார். என் இடுப்பு அனுமதித்தால் நாடகத்துக்கு வருவதாகச் சொன்னேன்.
இலங்கையில் இனக் கலவரத்தால் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் மீன்தொட்டிக்குள் மீன் போல அடிக்கடி இடம் மாறுவார்கள். எஸ்.பொ. அவர்களை எல்லாம் ஒருமைப்படுத்தினார். அவரின் பனியும் பனையும் என்ற ஒரு சிறப்பான தொகுப்புக்கு, சில ஆண்டுகளுக்கு முன் விரிவான முன்னுரை அளித்தேன்.
எஸ்.பொ\வின் தமிழ்நடை பழகிவிட்டால், அவரது எழுத்துக்களை ஒரு புதுமலர் வாசனைபோல் ரசிக்கலாம். எதிர்பாராத இடங்களில் சம்ஸ்கிருத வார்த்தைகளும், புதுமைப்பித்தனை நினைவு படுத்தும் வாக்கிய அமைப்பும், விநோதமான (நமக்கு) யாழ்ப்பாணத் தமிழும் கலந்திருக்கும். இந்த நடை எனக்கு தேவகாந்தனின் உதவியுடன் 'கன்னத்தில் முத்தமிட்ட'தற்குப் பிறகு பழகிவிட்டது. இந்தத் தொகுப்பு நூலில், 'போர்' என்ற கட்டுரை எனக்கு மிகவும்பிடித்திருந்து.
தளைதட்டாத ஒரு வெண்பாவில் துவங்கி, யாழ்ப்பாணக் கலாசாரம் பனைமரக் கலாசாரம் மட்டுமே என்று எண்ணுவது தப்பு என்கிறார் எஸ்.பொ. முன்னூறு தேங்காய்களை இரண்டு பிரிவினர் மாற்றி மாற்றி... ஒரு பிரிவினர் ‘விட்டான்' என்று ஒரு தேங்காயை கீழே வைக்க, அதை மற்றொரு பிரிவினர் 'கையான்' என்று வலுவான தேங்காயின் குடுமியைப் பிடித்துக்கொண்டு ஒரே போடு போட்டு உடைக்க வேண்டும். சிலகையான்கள் பதினெட்டு கூட ஸ்கோர் பண்ணுமாம். சில சமயம் விட்டான், கையான் இரண்டுமே பணால். இப்படி மாற்றி மாற்றி அடித்து உடைத்து, எந்தப் பிரிவிடம் தேங்காய்கள்அதிகம் மிச்சம் இருக்கிறதோ, அதுவெற்றி பெறும்.
என்ன சாதிக்கிறோம்..?
கொஞ்சம் யோசித்தால், இந்த விளையாட்டை எழுத்துப் போராட்டத்தின் படிமம்போல எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில்
இவ்வகையிலான தேங்காய் விளையாட்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் அன்பர்கள் எழுதலாம்.
எனக்குத் தேங்காய் உடைக்கத் தெரியாது. ஒரே போடில் தேங்காயைப் பப்பாதியாக உடைக்கும் சாகசத்தை என்னால் கற்கவே முடியவில்லை. அதேபோல், சைக்கிளில் காலைத் தூக்கிப் பின்னால் விசிறி ஸ்டைலாக ஏறும் கலையும்! அது வேறு சமாசாரம்.
எஸ்.பொ-வின் 'போர்' கட்டுரை, என்னுடைய வருங்கால சிறந்த கட்டுரைத் தொகுப்பில் நிச்சயம் இடம் பெறும்.
எஸ்.பொ. தன் மகன்களில் ஒருவரான மித்ர அருச்சுனனை ஈழப் போரில் இழந்தவர். ‘மித்தி’ என்ற மிக நீண்ட னீமீனீஷீவீக்ஷீ (நினைவலைகள்) கொஞ்சம் சுருக்கமாக இருந்தால், உருக்கமாக இருக்கும்.
"அதுதானப்பு சொல்ல வந்தனான். வறாத்துப் பளையிலை உமல் கொட்டை அடிச்சவை உப்ப ரவுண் சனமாகி யல்லோ நாட்டாமை பேசுகினம்? அவங்கடை வாயை அடைக்க உண்ரை பொடியன்கள் காணாதே..."
இதற்கு என்ன அர்த்தம் என்பதை ஒரு கார்டில் எழுதிப் போட்டால், முதல் பத்து விடைகளுக்கு வழமையாக... க.பெ.பு. பரிசுகள். நிபந்தனை: தமிழ்நாட்டுக் காரர்களுக்கு மட்டும்!
==========================================
நன்றி: சுரதா
============================================
கற்றதும்... பெற்றதும்...
சுஜாதா
விட்டான்... கையான்... வீர விளையாட்டு!
எப்போதாவது எஸ்.பொ. அவர்கள் தொலைபேசுவார். சமீபத்தில் பேசியபோது, ‘எங்கே இருக்கிறீர்கள்? ஆவுஸ்திரேலியாவா, லண்டனா, மட்டக்களப்பா, நைஜீரியாவா, கனடாவா?’ என்று கேட்டதில், ‘இங்கேதான் சென்னை&94&ல் இருக்கிறேன். என்னுடைய நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார்கள். மேலும், உறவுகள் என்ற என் புத்தகமும் வெளியிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள்' என்றார். என் இடுப்பு அனுமதித்தால் நாடகத்துக்கு வருவதாகச் சொன்னேன்.
இலங்கையில் இனக் கலவரத்தால் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் மீன்தொட்டிக்குள் மீன் போல அடிக்கடி இடம் மாறுவார்கள். எஸ்.பொ. அவர்களை எல்லாம் ஒருமைப்படுத்தினார். அவரின் பனியும் பனையும் என்ற ஒரு சிறப்பான தொகுப்புக்கு, சில ஆண்டுகளுக்கு முன் விரிவான முன்னுரை அளித்தேன்.
எஸ்.பொ\வின் தமிழ்நடை பழகிவிட்டால், அவரது எழுத்துக்களை ஒரு புதுமலர் வாசனைபோல் ரசிக்கலாம். எதிர்பாராத இடங்களில் சம்ஸ்கிருத வார்த்தைகளும், புதுமைப்பித்தனை நினைவு படுத்தும் வாக்கிய அமைப்பும், விநோதமான (நமக்கு) யாழ்ப்பாணத் தமிழும் கலந்திருக்கும். இந்த நடை எனக்கு தேவகாந்தனின் உதவியுடன் 'கன்னத்தில் முத்தமிட்ட'தற்குப் பிறகு பழகிவிட்டது. இந்தத் தொகுப்பு நூலில், 'போர்' என்ற கட்டுரை எனக்கு மிகவும்பிடித்திருந்து.
தளைதட்டாத ஒரு வெண்பாவில் துவங்கி, யாழ்ப்பாணக் கலாசாரம் பனைமரக் கலாசாரம் மட்டுமே என்று எண்ணுவது தப்பு என்கிறார் எஸ்.பொ. முன்னூறு தேங்காய்களை இரண்டு பிரிவினர் மாற்றி மாற்றி... ஒரு பிரிவினர் ‘விட்டான்' என்று ஒரு தேங்காயை கீழே வைக்க, அதை மற்றொரு பிரிவினர் 'கையான்' என்று வலுவான தேங்காயின் குடுமியைப் பிடித்துக்கொண்டு ஒரே போடு போட்டு உடைக்க வேண்டும். சிலகையான்கள் பதினெட்டு கூட ஸ்கோர் பண்ணுமாம். சில சமயம் விட்டான், கையான் இரண்டுமே பணால். இப்படி மாற்றி மாற்றி அடித்து உடைத்து, எந்தப் பிரிவிடம் தேங்காய்கள்அதிகம் மிச்சம் இருக்கிறதோ, அதுவெற்றி பெறும்.
என்ன சாதிக்கிறோம்..?
கொஞ்சம் யோசித்தால், இந்த விளையாட்டை எழுத்துப் போராட்டத்தின் படிமம்போல எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில்
இவ்வகையிலான தேங்காய் விளையாட்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் அன்பர்கள் எழுதலாம்.
எனக்குத் தேங்காய் உடைக்கத் தெரியாது. ஒரே போடில் தேங்காயைப் பப்பாதியாக உடைக்கும் சாகசத்தை என்னால் கற்கவே முடியவில்லை. அதேபோல், சைக்கிளில் காலைத் தூக்கிப் பின்னால் விசிறி ஸ்டைலாக ஏறும் கலையும்! அது வேறு சமாசாரம்.
எஸ்.பொ-வின் 'போர்' கட்டுரை, என்னுடைய வருங்கால சிறந்த கட்டுரைத் தொகுப்பில் நிச்சயம் இடம் பெறும்.
எஸ்.பொ. தன் மகன்களில் ஒருவரான மித்ர அருச்சுனனை ஈழப் போரில் இழந்தவர். ‘மித்தி’ என்ற மிக நீண்ட னீமீனீஷீவீக்ஷீ (நினைவலைகள்) கொஞ்சம் சுருக்கமாக இருந்தால், உருக்கமாக இருக்கும்.
"அதுதானப்பு சொல்ல வந்தனான். வறாத்துப் பளையிலை உமல் கொட்டை அடிச்சவை உப்ப ரவுண் சனமாகி யல்லோ நாட்டாமை பேசுகினம்? அவங்கடை வாயை அடைக்க உண்ரை பொடியன்கள் காணாதே..."
இதற்கு என்ன அர்த்தம் என்பதை ஒரு கார்டில் எழுதிப் போட்டால், முதல் பத்து விடைகளுக்கு வழமையாக... க.பெ.பு. பரிசுகள். நிபந்தனை: தமிழ்நாட்டுக் காரர்களுக்கு மட்டும்!
==========================================
நன்றி: சுரதா
Wednesday, April 13, 2005
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பார்த்திப வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Thursday, March 31, 2005
@#$%^ அப்படின்னா என்ன மம்மி...!?
குழந்தைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்...
நம்மில் பலர் தினம்தினம் நம் பிள்ளைகளின் எல்லையில்லா கேள்விகளைக்கேட்டு எரிச்சலுற்றிருப்போம், அதிர்ச்சியடைந்திருப்போம். சிலர் கேள்விகளில் ஆனந்தமும் கொண்டிருக்கலாம்.

யோசித்துப்பாருங்கள் குழந்தைகள் உலகத்தை எப்படி தெரிந்துகொள்வார்கள்?
குழந்தை நீலவானத்தைப் பார்த்து, அது ஏன் நீலமாக இருக்கிறது என்று வியக்கலாம். அவர்களுக்கு எப்படித்தெரியும் அவர்களுக்கருகில் இல்லாத பலவற்றைப்பற்றி?
அடிக்கடி கேள்விகள் கேட்டு நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் (அல்லது பல வேளைகளைகளில் தலையச்சொறியச்செய்யும்:) அவர்களை எப்படி சமாளிப்பது?
குழந்தைகள் நினைத்திருக்கலாம் - நமக்கு எல்லாம் தெரியுமென்று. (நமக்குத்தானே தெரியும், நம்ப வண்டவாளம்:) அம்மாக்களே தயவுசெய்து சொல்லாதீர்கள்: "அப்பாவிடம் கேள்" என்று.
உங்களுக்காகவே, உங்கள் குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ள சில உதவிக்குறிப்புகள் இங்கே:
உங்கள் பதில் சுருக்கமாக இருக்கட்டும்:
பிள்ளைகளின் கேள்விகள் அறிவார்ந்த, பிரமிப்பூட்டுபவையாக இருக்கலாம். ஆனால், உங்கள் பதில் அதேவிதமாக இருக்கவேண்டுமென்பதில்லை. உதராணத்திற்கு, உங்கள் பிள்ளை "சூரியன் ஏன் ஒளிர்கிறது?" என்று கேட்டால், "மரம், செடிகள் வளர்ந்து நம்மை வளமாக வைத்துக்கொள்ள..." எனபதுபோல சுருக்கி பதில் அளியுங்கள். கடல் ஆவியாவதில் ஆரம்பித்து, புறா ஊதா/அக ஊதா - அது இதென்று (நமக்குத் தெரிந்ததெல்லாம் அல்லது கூகிளின் உதவியுடன்) பதிலை வளர்க்கத்தேவையில்லை -அது அவர்களுக்குப் புரியவும் போவதில்லை, அந்த வயதில்.
செயல்விளக்கம் கொடுங்கள்:
ஆயிரம் சொல் சொல்ல இயலாததை, நேரடி விளக்கம் எளிதில் செய்யும். கடலில் ஏன் அலைகள் வருகிறது? என்று கேட்டால், ஒரு வாளியில் நீரைநிரப்பி அதை அவர்களையே வேகமாக ஊதச்செய்து எழும்பும் அதிர்வுகளை/அலைகளைக் காட்டுங்கள். அது புரியச்செய்யும், நீங்கள் கொடுக்க நினைக்கும் நீண்டவிளக்கத்தை விட.
உண்மையைச் சொல்லுங்கள்:
கும்மிருட்டு, புயல், பேயென்றெல்லாம் வைத்து எதாவாது தேவதைக்கதை புனையாதீர்கள். உங்கள் குழந்தை, "நான் எங்கிருந்து வந்தேன்?" என்று கேட்டால், "குப்பைத்தொட்டியில் எடுத்தேன், தத்து எடுத்தேன்" என்று தத்து பித்தென்று உளாராதீர்கள். அப்படி கூறுவதால் குழந்தையை குழப்பத்திலும், பயத்திலும் ஆழ்த்துகிறீர்கள்.
எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது, ஒரு ஆரஞ்சுவிதையை நான் குழந்தையில் விழுங்கியபோது - அம்மா உன்னுடைய மண்டையில் ஆரஞ்சுமரம் முளைக்கப்போகிறது என்று கூறி, பலகாலம், பல இரவு தலையை அழுத்திப்பிடுத்திக்கொண்டு கஷடப்பட்டிருக்கிறேன் - எங்கே செடி முளைத்துவிடுமோ என்று:)
அளவுக்கதிகமாக பதறாதீர்கள்:
உங்கள் பிள்ளைகள் - பிறப்பு/இறப்பு செக்ஸ் சம்பந்தப்பட்ட துடுக்குதனமான கேள்விகள் கேட்கும்போது தயவுசெய்து நிதானத்தை இழக்காதீர்கள், அதிகம் பதறாதீர்கள். குழந்தைகள் தீவிரவாதிகள் பற்றி கேடகும்போது, அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது - அவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளத்தான். வீணாக, அவர்களை தீவிரவாதிகள் கூட்டத்தில் இணைத்து கற்பனைசெய்து உங்கள் இதயத்துடிப்பை அதிகரித்துக்கொள்ளாதீர்கள்.
உங்கள் பதில் கேட்பவர்களுக்குத் தகுந்ததாக இருக்கட்டும்:
கேட்பவர்களின் வயதுக்குத்தகுந்தாக இருக்கட்டும் உங்கள் பதில்கள். 6 முதல் 10 வயதுள்ளபவர்களுக்கு கற்பனைக்கும், உண்மைக்கும் வித்தியாசம் புரியும். அதனால் உங்கள் 3 வயது பிள்ளைக்கு சொல்லும் பதிலையே 7 வயதுள்ள மூத்த பிள்ளைக்கும் சொல்லாதீர்கள்.
பதில்களைத் தள்ளிப்போடுங்கள்:
உங்கள் மகன், வழியில் பார்க்கும் ஒரு மனக்குறையுள்ள பையனைப் பார்த்தோ அல்லது ரயிலில் எதிரில் அமர்ந்திருக்கும் கண்பார்வையற்றவரைப் பார்த்து மிரளும்போதோ, ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகள் கேட்கும்போதோ - மிக அமைதியாக அவன்காதில் சொல்லுங்கள்: "கவலைப்படாதே, வீட்டுக்குபோன பிறகு இது பற்றி விளக்குகிறேன்" என்று. அதன்படி, பின்னர் வீட்டிலிருக்கும்போது, அவனுக்குப் புரியும்படி விளக்குங்கள்.
தேடுங்கள் கிடைக்கும்:
எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க சாத்தியமில்லை. உங்கள் குழந்தைகளை அவர்களுடைய சந்தேகங்களைக்கேட்க ஊக்குவியுங்கள். அவர்கள் குடும்பத்தில் யாரிடமோ, நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டுத்தெளிவுபெறட்டும். அந்த வகையில் இணையம் ஒரு பெரிய அறிவுக்கருவூலம், ஆனால் அதைப் பிள்ளைகள் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருங்கள்.
மொத்தத்தில், நம்மைப்போல அல்ல நம் குழந்தைகள். அவர்களுக்கு இந்த வானமே கூட இல்லை... அவர்களை புரிந்துகொள்வோம், உலகப்புரியச்செய்வோம்.
சகோதரி ஜோசஃபின் அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலை நான் இங்கு என்னுடைய மொழிப்படுத்தியிருக்கிறேன். நன்றி, லோரா.
நம்மில் பலர் தினம்தினம் நம் பிள்ளைகளின் எல்லையில்லா கேள்விகளைக்கேட்டு எரிச்சலுற்றிருப்போம், அதிர்ச்சியடைந்திருப்போம். சிலர் கேள்விகளில் ஆனந்தமும் கொண்டிருக்கலாம்.
யோசித்துப்பாருங்கள் குழந்தைகள் உலகத்தை எப்படி தெரிந்துகொள்வார்கள்?
குழந்தை நீலவானத்தைப் பார்த்து, அது ஏன் நீலமாக இருக்கிறது என்று வியக்கலாம். அவர்களுக்கு எப்படித்தெரியும் அவர்களுக்கருகில் இல்லாத பலவற்றைப்பற்றி?
அடிக்கடி கேள்விகள் கேட்டு நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் (அல்லது பல வேளைகளைகளில் தலையச்சொறியச்செய்யும்:) அவர்களை எப்படி சமாளிப்பது?
குழந்தைகள் நினைத்திருக்கலாம் - நமக்கு எல்லாம் தெரியுமென்று. (நமக்குத்தானே தெரியும், நம்ப வண்டவாளம்:) அம்மாக்களே தயவுசெய்து சொல்லாதீர்கள்: "அப்பாவிடம் கேள்" என்று.
உங்களுக்காகவே, உங்கள் குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ள சில உதவிக்குறிப்புகள் இங்கே:
உங்கள் பதில் சுருக்கமாக இருக்கட்டும்:
பிள்ளைகளின் கேள்விகள் அறிவார்ந்த, பிரமிப்பூட்டுபவையாக இருக்கலாம். ஆனால், உங்கள் பதில் அதேவிதமாக இருக்கவேண்டுமென்பதில்லை. உதராணத்திற்கு, உங்கள் பிள்ளை "சூரியன் ஏன் ஒளிர்கிறது?" என்று கேட்டால், "மரம், செடிகள் வளர்ந்து நம்மை வளமாக வைத்துக்கொள்ள..." எனபதுபோல சுருக்கி பதில் அளியுங்கள். கடல் ஆவியாவதில் ஆரம்பித்து, புறா ஊதா/அக ஊதா - அது இதென்று (நமக்குத் தெரிந்ததெல்லாம் அல்லது கூகிளின் உதவியுடன்) பதிலை வளர்க்கத்தேவையில்லை -அது அவர்களுக்குப் புரியவும் போவதில்லை, அந்த வயதில்.
செயல்விளக்கம் கொடுங்கள்:
ஆயிரம் சொல் சொல்ல இயலாததை, நேரடி விளக்கம் எளிதில் செய்யும். கடலில் ஏன் அலைகள் வருகிறது? என்று கேட்டால், ஒரு வாளியில் நீரைநிரப்பி அதை அவர்களையே வேகமாக ஊதச்செய்து எழும்பும் அதிர்வுகளை/அலைகளைக் காட்டுங்கள். அது புரியச்செய்யும், நீங்கள் கொடுக்க நினைக்கும் நீண்டவிளக்கத்தை விட.
உண்மையைச் சொல்லுங்கள்:
கும்மிருட்டு, புயல், பேயென்றெல்லாம் வைத்து எதாவாது தேவதைக்கதை புனையாதீர்கள். உங்கள் குழந்தை, "நான் எங்கிருந்து வந்தேன்?" என்று கேட்டால், "குப்பைத்தொட்டியில் எடுத்தேன், தத்து எடுத்தேன்" என்று தத்து பித்தென்று உளாராதீர்கள். அப்படி கூறுவதால் குழந்தையை குழப்பத்திலும், பயத்திலும் ஆழ்த்துகிறீர்கள்.
எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது, ஒரு ஆரஞ்சுவிதையை நான் குழந்தையில் விழுங்கியபோது - அம்மா உன்னுடைய மண்டையில் ஆரஞ்சுமரம் முளைக்கப்போகிறது என்று கூறி, பலகாலம், பல இரவு தலையை அழுத்திப்பிடுத்திக்கொண்டு கஷடப்பட்டிருக்கிறேன் - எங்கே செடி முளைத்துவிடுமோ என்று:)
அளவுக்கதிகமாக பதறாதீர்கள்:
உங்கள் பிள்ளைகள் - பிறப்பு/இறப்பு செக்ஸ் சம்பந்தப்பட்ட துடுக்குதனமான கேள்விகள் கேட்கும்போது தயவுசெய்து நிதானத்தை இழக்காதீர்கள், அதிகம் பதறாதீர்கள். குழந்தைகள் தீவிரவாதிகள் பற்றி கேடகும்போது, அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது - அவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளத்தான். வீணாக, அவர்களை தீவிரவாதிகள் கூட்டத்தில் இணைத்து கற்பனைசெய்து உங்கள் இதயத்துடிப்பை அதிகரித்துக்கொள்ளாதீர்கள்.
உங்கள் பதில் கேட்பவர்களுக்குத் தகுந்ததாக இருக்கட்டும்:
கேட்பவர்களின் வயதுக்குத்தகுந்தாக இருக்கட்டும் உங்கள் பதில்கள். 6 முதல் 10 வயதுள்ளபவர்களுக்கு கற்பனைக்கும், உண்மைக்கும் வித்தியாசம் புரியும். அதனால் உங்கள் 3 வயது பிள்ளைக்கு சொல்லும் பதிலையே 7 வயதுள்ள மூத்த பிள்ளைக்கும் சொல்லாதீர்கள்.
பதில்களைத் தள்ளிப்போடுங்கள்:
உங்கள் மகன், வழியில் பார்க்கும் ஒரு மனக்குறையுள்ள பையனைப் பார்த்தோ அல்லது ரயிலில் எதிரில் அமர்ந்திருக்கும் கண்பார்வையற்றவரைப் பார்த்து மிரளும்போதோ, ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகள் கேட்கும்போதோ - மிக அமைதியாக அவன்காதில் சொல்லுங்கள்: "கவலைப்படாதே, வீட்டுக்குபோன பிறகு இது பற்றி விளக்குகிறேன்" என்று. அதன்படி, பின்னர் வீட்டிலிருக்கும்போது, அவனுக்குப் புரியும்படி விளக்குங்கள்.
தேடுங்கள் கிடைக்கும்:
எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க சாத்தியமில்லை. உங்கள் குழந்தைகளை அவர்களுடைய சந்தேகங்களைக்கேட்க ஊக்குவியுங்கள். அவர்கள் குடும்பத்தில் யாரிடமோ, நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டுத்தெளிவுபெறட்டும். அந்த வகையில் இணையம் ஒரு பெரிய அறிவுக்கருவூலம், ஆனால் அதைப் பிள்ளைகள் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருங்கள்.
மொத்தத்தில், நம்மைப்போல அல்ல நம் குழந்தைகள். அவர்களுக்கு இந்த வானமே கூட இல்லை... அவர்களை புரிந்துகொள்வோம், உலகப்புரியச்செய்வோம்.
சகோதரி ஜோசஃபின் அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலை நான் இங்கு என்னுடைய மொழிப்படுத்தியிருக்கிறேன். நன்றி, லோரா.
Subscribe to:
Posts (Atom)