Tuesday, October 12, 2004

Death of A Programmer

அனுதினமும் வரும் புதுப்புது மென்பொருள்களால் programming என்று சொல்லப்படும் கோட் எழுதும்வேலை குறைந்துகொண்டே வருகிறது. இப்பொது கிட்டத்தட்ட 75% கோடை மென்பொருள்களே எழுதிவிடுவதால்... இதே நிலை நீடிக்கும்போது இன்னும் ஒரு 5 - 10 வருடங்களில் Programmer என்ற ஒரு வேலை கேள்விக்குறியாகிவிடுமா? இப்போது படித்துவரும் கணிணித்துறை மாணவர்கள் அந்த நிலையிலிருந்து தப்பிக்க என்னவழி போன்றவற்றைப் பற்றி ஆராயும் ஒரு கட்டுரை: A Programmer's key to survival

Monday, October 11, 2004

பாதுகாப்பு (இல்லாத) பெட்டி

பாதுகாப்பு பெட்டிக்கே பாதுகாப்பு இல்லாட்டி அத எந்த பாதுகாப்புப்பெட்டிக்குள்ளார வைக்கிறது?

இந்தசேதி தெரியுமா சாமி ஒங்களுக்கு. போன வாரம் நடந்திச்சு, உங்கள்ட்ட சொல்லலாம், சொல்லாம்னு இருந்து வலைப்பூ நெருக்கடில்ல இது மறந்திருச்சு. வேறு எங்காவது படிச்சிருந்தா சரி, ஒருவேளை படிக்காட்டி இங்கே: Business Report - Hong Kong bank crushes more than customer's spirits

Sunday, October 10, 2004

என்னாலா மைக்?

சிங்கையின் தமிழ்முரசைச் சேர்ந்த லதா அவர்களின் கவிதை நூலான தீவெளியிலிருந்து ஒரு கவிதை இங்கே. கவிதைக்கும் என்னுடைய சிங்கையில் இந்தியர் நிலை பதிவுக்கும் தொடர்பேதுமில்லை.

என்னாலா மைக்?

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
யாருலா கண்டா?
நாம கூட்டாளிங்க
பீர் குடித்து
ஜாலியா இருப்போம்
வா லா மைக்
எடுத்துக்கோ 'எக்ஸ்டசி'
சும்மா
என்ஜாய் பண்ணுலா.

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
நாம மக்கள்ஸ்லா
நமக்குள்ளாற என்னாலா?
எவண்டா முறைச்சான்
காட்ரா
சொருவிடலாம்

உங்கப்பன் யாரோ
எங்கப்பன் யாரோ
யாருக்குலா தெரியும்?
இது உன் 'பசாலுலா'
நமக்கொன்னும் தெரியாது
குத்தினது யாருன்னு
கேட்டான்
சொல்லிட்டேன்லா
தமுளன்லா!

- லதா

Sunday, October 03, 2004

TMS மற்றும் KS Rajah

நண்பர் யாழ் சுதாகர் என்பார் இரு அருமையான பதிவுகளை ஆரம்பித்து, இரு அமர்க்களமான பதிவுகளை பதிந்துள்ளார். அதை படித்து, அனுபவித்துப் பாருங்கள் - மிகவும் இனிமை.

TMS பற்றிய பதிவு அமர்க்களமாக இருக்கிறது. ஒவ்வொரு பாடலையும் அருமையாக ரசித்து, உள்வாங்கி அனுபவத்திருக்கிறார் அந்த அனுபவம் இங்கே எழுத்தாக வந்துள்ளது, அருமை.

அதைவிட அருமையான பதிவு: இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே எஸ் ராஜா
பற்றியது. அந்த அமரருக்கு ஒரு கவிதாஞ்சலியாக தனது ஒலித்தொகுப்பு ஒன்றையும் இணைத்துள்ளார். அந்த "பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்..." ஓசையக்கேட்டவுடன் எனக்குள்ளேயும் இலங்கை வானொலியின் நினைவுகள் வந்துவிட்டது. அதிலும் சுதாகர் சொல்லும் 'குரு' பட உண்மை!

என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ஒவ்வொருக்குள்ளும் எப்படியெல்லாம் திறமை ஒளிந்திருக்கிறது பாருங்களேன். சத்தியமாக திரு யாழ்சுதாகர் என்பாரை இதுவரை கேள்விப்பட்டதில்லை. அவரை வெளிக்கொண்டுவரும் ஊடகமாக இந்த "வலைப்பதிவு" இருப்பதுகண்டு புளகாங்கிதமடைகிறேன். இதைப்போன்ற திறமைசாலிகள், இலங்கை அன்பர்கள்/நண்பர்கள் அனுதினமும் புதுப்புது வலைப்பதிவுடன் வருகின்றார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.

(பி.கு: மன்னிக்கவும் சுதாகர், BlogDriveல் எப்படி பின்னூட்டம் கொடுக்கவென்று தெரியவில்லை, அதனால் இங்கே.)

Friday, October 01, 2004

லல்லுவின் லொள்ளு

இந்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு லாலு அவர்கள் தான் பதவி ஏற்றதிலிருந்து பல சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். முதலில் காபி,தேனீருக்கு மண்கலையத்தைப் பயன்படுத்தவேண்டும். பின்னர் மோர், இளநீர் விற்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தார்கள். அதன் பின்னர் ரயிலில் பயன்படுத்தும் இருக்கைகளுக்கு தேங்காய் நார் பயன்படுத்தவேண்டும்.

அந்த வரிசையில் இன்றைய தினசரி ஒன்றில் படித்த ஆக அண்மைய அறிவிப்பு:
ரயில்களில் மக்கள் பல் விளக்க 'வேப்பங்குச்சி' விற்கவேண்டும்.

இது இப்படியே போனால், வேறு என்னென்ன அறிவிப்பு வருமென்று கொஞ்சம் கற்பனைக்குதிரையை ஓடவிடுங்களேன்...

(எனக்கு முதலில் தோன்றியது, கூடியவிரைவில் கோவணம் விற்கப்படும் என்பது - ஆனால் அதைப் பொதுவில் சொல்லி உங்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள விரும்பவில்லை:)