என்னதான் புத்திசாலித்தனமாக முதலீட்டைச் செய்தாலும், இதில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. மொத்தப் பணத்தையும் ஒரே முதலீட்டில் போடக்கூடாது என்பதுதான் அது...
ஜீனியர் விகடனில்
பணம் காய்க்கும் மரம் வேண்டுமா?
என்ற முதலீடு தொடர்பான புதியதொரு தொடர் கடந்தவாரம் முதல் வருகிறது (ஸ்பெஷல் பகுதியில்...) படித்து வருகிறீர்களா?
Monday, January 24, 2005
Monday, January 17, 2005
உலகின் முதலாவது தமிழ்க் குறுந்செய்திச் சேவை...
வணக்கம்.
நேற்றிரவு உலகின் முதல் குறுந்தகவல் சேவை அதிகாரபூர்வமாக பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் வைபவம் சிங்கையில் நடந்தேறியது. நிகழ்ச்சி பற்றி நண்பர் மூர்த்தி எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சி இது.
கூட்ட நெரிசலில் புகுந்து ஒரு வழியாக உள்ளெ சென்ற எனக்கு ஆங்காங்கே தொங்கிய பதாகைகளில் கண்ட இன்ப அதிர்ச்சி:
செல்லினம்
AnjalMobile வசதியுடைய தொலைபேசியைக்குறிப்பிட(AnjalMobile enabled mobile phones) முரசு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சொல். செல்லினம் இருக்கும் கைத்தொலைபேசியில்தான் தமிழ் குறுந்தகவல் அனுப்ப, தமிழில் பார்க்க இயலும்.
கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு சிறப்பித்தார். அவரின் தகவலை, ஒலியின் நிகழ்ச்சி அறிவிப்பாளர் கீதா, நிகழ்ச்சியை ஒலியுடன் இணைந்து நடத்திய ஆனந்தபவன் உணவக உரிமையாளருக்கும், வெளிநாட்டுக்கும் இந்ததகவல் அனுப்ப இயலும் என்று தெரியவைக்க மலேசிய எழுத்தாளர் பேரா. ரெ. கார்த்திகேசு அவர்களுக்கும், மற்றும் ஒலி-க்கும் அனுப்பப்பட்டது.
கவிஞர் அனுப்பிய உலகின் முதல் குறுந்தகவல்:
நேற்றுவரை மூன்று தமிழ் (அதாவது முத்தமிழ்)
இன்றுமுதல் நான்கு தமிழ் -
கைத்தொலைபேசியில் கணிணித் தமிழ்.
பெற்ற தகவலுடைய கைத்தொலைபேசி திரையில் காட்டப்பட்டது.
ஒலி அலுவலகத்தில் கிடைத்த செய்தி ஒலியிலிருந்த அறிவிப்பாளர் மூலம் நேரடியாக வானொலியில் வாசித்து காட்டப்பட்டது. அரங்கமே உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது. கவியரசு முத்து நெடுமாறனை தோளில் கைபோட்டு கட்டிக்கொண்டு புளகாங்கிதம் அடைந்தார். என்னுடலும் ஆனந்தத்தில் பூரித்தது உண்மை. பேரா. கார்த்திகேசு தகவலை பெற்றவுடன், ஒலியை அழைத்து பெற்ற தகவலை வாசித்ததையும் ஒலியில் நேரடியாக ஒலி பரப்பினார்கள்.
பின்னர் இளையருக்காக இன்னொரு தகவல் கேட்டபோது, பாடலாசிரியராக
காதலி...
இனிமேல்,
தமிழில் காதலி என்றார்.
திரு. முத்து நெடுமாறன் வழக்கம்போல் தன்னுடைய நகைச்சுவை கலந்த பேச்சில் விளக்கவுரை கொடுத்தார். அன்பு என்று உள்ளிட anbu என்று உள்ளிடலாம். பண்பு என்று உள்ளிட panbu என்றால் அது பண்பாக வராது... அதற்கு pan#bu அழுத்த வேண்டும்.
# கீ ன்/ண்/ந் போன்று மாற்ற பயன்படுத்த முடியும். ஒலிக்கு பாடல் கேட்டு தகவல் அனுப்பும் நீங்கள் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை, சித்தி போன்ற வித்தியாசம் தெரிய செய்திகள் அனுப்பலாம் (uncle, aunty என்று குறிப்பிடமால்...)
விழா நடைபெற்ற அரங்கு ஒரு பள்ளியின் அரங்கு என்பதால், சற்றே சிறியதாகவும், சில தொழில்நுட்ப இடையூறு கொண்டதாகவும் இருந்தாலும், செல்லினம் தொடர்பான தொழில்நுட்ப ஏற்பாடு மிகுந்த கவனத்துடன், விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பாராட்டத்தக்க முயற்சி.
இனி கொஞ்சம் தொழில்நுட்பம் தொடர்பில்...
1) செல்லினம் (AnjalMobile) MIDP 2.0 (Mobile Internet Device Profile) Java உள்ள கைத்தொலைபேசிகளில் கண்டிப்பாக இயங்கும். என்னுடையது போல (Nokia 6610) உங்கள் தொலைபேசி கொஞ்சம் பழைய வகை என்றால், அதாவது MIDP 1.0 வகை என்றால் தமிழில் மின்னஞ்சல் மட்டும் அனுப்ப இயலும். (மற்ற ஜாவா தொழில்நுட்ப வசதி இல்லாத தொலைபேசி வைத்திருப்பவரகள், தமிங்கிலீஸில் தொடரலாம் அல்லது பக்கத்தில் அனுப்புபவர்களை/பெற்றவர்களைப் பார்க்கலாம்:)
2) செல்லினம் ஜாவா தொழில்நுட்பம் உள்ள பெரும்பாலான தொலைபேசிகளில், WAP/GPRS மூலம் www.murasu.com/sms என்ற தொடர்பின் மூலம் தொலைபேசியில் இறக்கிக் கொள்ள முடியும்.
2அ) AnjalTest 8KB மற்றும் முழு AnjalMobile செயலியே 40KBதான்.
3) AnjalMobile இறக்கியபின் அதை Activate செய்ய இரண்டு சங்கேதஎண்கள் தேவைப்படும். இந்த எண்கள்தான் அவர்கள் வெளியிட்டிருக்கும் செல்லினம் என்ற அட்டையில் இருக்கும். இந்த அட்டை 15 வெள்ளி, அதுபோக வருடத்துக்கு 20 வெள்ளி கட்டணம் இருக்கும். ஆனால், அடுத்த ஒரு மாதத்துக்குள் இந்த அட்டையை பெற்றுக்கொள்பவர்கள், வருட சந்தா செலுத்த தேவையில்லை. நேற்று விழா அரங்கில் வாங்கியவர்களுக்கு 10 வெள்ளிக்கு விற்கப்பட்டது, வருட சந்தாவும் கிடையாது (ஒரு வெள்ளி சுனாமி நிதிக்கு அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது). அதனால் எதற்கும் இருக்கட்டுமே என்று எனக்கும், நண்பர்களுக்காக முதலில் மூன்றும், பின்னர் ஒன்றும் வாங்கினேன் (என்னுடைய 6610 தொலைபேசியில் பயன்படுத்த முடியாதென்பது வேற விஷயம்:)
4) Sony Ericsson-ல்தான் பெரும்பாலும் சோதனை செய்யப்பட்டது என்றாலும், மற்ற Nokia, Siemens, Motorola, Samsung நிறுவன தொலைபேசிகளிலும் வேலை செய்யும்.முழுமையான பட்டியல் இங்கே. அதுதவிர நீங்கள் உங்கள் கைத்தொலைபேசியில் முடியுமா என்று பரிசோதித்துப்பார்க்க விரும்பினால், GPRS தொடர்பு இருந்தால் Go to address மூலம் http://www.murasu.com/mobile/test.wml போய் AnjalTest இறக்குவதன் மூலம் முயற்சி செய்து பார்க்கலாம். அல்லது சும்மா படம் பார்க்க...
5) முக்கிய தகவல்: செல்லினம் இருந்தால் நீங்கள் தமிழில் உள்ளிட இயலும். அந்த தகவல் இன்னொரு செல்லின தொலைபேசிக்கு அனுப்பும்போது தமிழிலிலேயெ தெரியும், மற்ற தொலைபேசிகளில் ஆங்கிலப்படுத்திய(romanized) தமிழில் தகவல் தெரியும். கண்டிப்பாக junk-ஆக போகாது.
(ஒலி நேயர்களுக்கு கொசுறு: ஒலி 96.8க்கு சிறப்பு ஏற்பாடாக, செல்லினம் பயன்படுத்தி தமிழில் குறுந்தகவல் அனுப்பலாம், மாறாக நாம் வழக்கம்போல தமிங்கிலீஸில் அனுப்பினால் அவர்களுக்கு தமிழில் தகவலைக் காட்டவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)
6) நிகழ்ச்சிக்கு Sony Erricson ஆதரவு கொடுத்திருந்தது. அரங்கின் வெளியே, செல்லினத்துக்கு ஆதரவு கொடுக்கும் Planet Telecoms கடை போட்டிருந்தனர். செல்லினம் அட்டையை சிங்கப்பூரில் விநியோகிப்பவர்கள் Claritex, விற்பனையாளர்கள் Planet - சிங்கையின் 10 இடங்களில் இவர்களின் கிளை உண்டு.
7) SMS விலையைப் பொருத்தவரை தமிழ்குறுந்தகவலும், வழக்கமாக அனுப்பபடும் SMSல் ஒன்றாகத்தான் எடுத்தக்கொள்ளப்படும்.
நிகழ்ச்சிக்கு மாணவர்களை அதிகம் எதிர்பார்க்கிறோம் என்று ஒலி அழைப்பு விடுத்தாலும் விடுத்தது. 7 மணி நிகழ்ச்சிக்கு 7 மணி சில நிமிடங்களுக்கு செல்லும்போதே அரங்கு மாணவக்கண்மணிகளால் நிரம்பி அழகியபாண்டியன் பேச ஆரம்பித்திருந்தார். மூலையில் கிடைத்த ஓரிடத்தில் ஒற்றைக்காலில் (மறுகால் கீழேவைக்க இடமில்லை, கால்மாற்றி சமாளிக்கவேண்டியிருந்தது) நின்றிருந்தேன். விழாஆரம்பத்தில் மறைந்த திரு. உதுமான்கனி அவர்களுக்கு ஒருநிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போதுதான் தெரிந்தது - வெளியில் இன்னும் பலநூறு பேர்கள் அரங்கம் நிறைந்து, நிற்கவும் இடமில்லாததால் வெளியில் தவிக்கின்றனர் என்று...
உலகின் முதலாவது தமிழ்க் குறுந்செய்திச் சேவை.
இப்படிதான் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது, விளக்க கையேடுகளில், செல்லினம் அட்டையில் சொல்லப்பட்டிருக்கிறது.
முதல்குறுந்தகவல் இதுதானா என்ற கேள்விக்கு என்னைப்பொருத்தவரை, பொதுமக்கள் கைக்கு வருவது இதுதான் முதன்முறை.
என்னுடைய
முந்தையபதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடி இதற்கு முன்னர் குறுந்தகவல் MMS-ஆக கடந்தவருடமே அறிமுகப்படுத்தினார் முத்து.
பின்னர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூரில் (அனைத்துலக அரங்கில் தமிழ் மாநாட்டின்போது, அப்போதும் ஒலியின் கீதா உள்ளிடுவது திரையில் காட்டப்பட்டது...) குறுந்தகவல் SMS-ஆகவே கடந்தவருட இறுதிவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில்தான் பொதுமக்கள் கைக்கு வருகிறது என்று நினைக்கிறேன்.
எது எப்படியிருந்தாலும், நேற்றைய நிகழ்ச்சிக்கு கிடைத்த மக்கள் குறிப்பாக இளையர்களின் ஆதரவு மிகுந்த சந்தோசமளித்தது. கண்டிப்பாக இணையத்தில் தமிழ் புழக்கத்துக்கு ஈடாக கைத்தோலைபேசியிலும் தமிழ் தவளும் காலம் மிக அருகில். கவிஞர் கூறியபடி, இந்த புதிய தொழில்நுட்பத்தால் இரண்டு விளைவுகள்:
1. இளையர்களிடம் தமிழின் புழக்கம் அதிகமாகும் (தமிழ் மேல் காதல்).
2. தமிழில் காதல்.
நேற்றைய நிகழ்ச்சியில் கவியரசு வைரமுத்துவின் உரை தமிழைப்பற்றியதாக இல்லாமல், தமிழரைப்பற்றியதாக குறிப்பாக சிங்கை இளையர்கள், பெற்றோரைப் பற்றிய கவலைகளாக, அறிவுரைகளாக அவரே கூறியதுபோல் மனிதம் பற்றி பேசுவதாக அமைந்தது இன்னும் சிறப்பு.
நேற்றிரவு உலகின் முதல் குறுந்தகவல் சேவை அதிகாரபூர்வமாக பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் வைபவம் சிங்கையில் நடந்தேறியது. நிகழ்ச்சி பற்றி நண்பர் மூர்த்தி எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சி இது.
கூட்ட நெரிசலில் புகுந்து ஒரு வழியாக உள்ளெ சென்ற எனக்கு ஆங்காங்கே தொங்கிய பதாகைகளில் கண்ட இன்ப அதிர்ச்சி:
செல்லினம்
AnjalMobile வசதியுடைய தொலைபேசியைக்குறிப்பிட(AnjalMobile enabled mobile phones) முரசு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய சொல். செல்லினம் இருக்கும் கைத்தொலைபேசியில்தான் தமிழ் குறுந்தகவல் அனுப்ப, தமிழில் பார்க்க இயலும்.
கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு சிறப்பித்தார். அவரின் தகவலை, ஒலியின் நிகழ்ச்சி அறிவிப்பாளர் கீதா, நிகழ்ச்சியை ஒலியுடன் இணைந்து நடத்திய ஆனந்தபவன் உணவக உரிமையாளருக்கும், வெளிநாட்டுக்கும் இந்ததகவல் அனுப்ப இயலும் என்று தெரியவைக்க மலேசிய எழுத்தாளர் பேரா. ரெ. கார்த்திகேசு அவர்களுக்கும், மற்றும் ஒலி-க்கும் அனுப்பப்பட்டது.
கவிஞர் அனுப்பிய உலகின் முதல் குறுந்தகவல்:
நேற்றுவரை மூன்று தமிழ் (அதாவது முத்தமிழ்)
இன்றுமுதல் நான்கு தமிழ் -
கைத்தொலைபேசியில் கணிணித் தமிழ்.
பெற்ற தகவலுடைய கைத்தொலைபேசி திரையில் காட்டப்பட்டது.
ஒலி அலுவலகத்தில் கிடைத்த செய்தி ஒலியிலிருந்த அறிவிப்பாளர் மூலம் நேரடியாக வானொலியில் வாசித்து காட்டப்பட்டது. அரங்கமே உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது. கவியரசு முத்து நெடுமாறனை தோளில் கைபோட்டு கட்டிக்கொண்டு புளகாங்கிதம் அடைந்தார். என்னுடலும் ஆனந்தத்தில் பூரித்தது உண்மை. பேரா. கார்த்திகேசு தகவலை பெற்றவுடன், ஒலியை அழைத்து பெற்ற தகவலை வாசித்ததையும் ஒலியில் நேரடியாக ஒலி பரப்பினார்கள்.
பின்னர் இளையருக்காக இன்னொரு தகவல் கேட்டபோது, பாடலாசிரியராக
காதலி...
இனிமேல்,
தமிழில் காதலி என்றார்.
திரு. முத்து நெடுமாறன் வழக்கம்போல் தன்னுடைய நகைச்சுவை கலந்த பேச்சில் விளக்கவுரை கொடுத்தார். அன்பு என்று உள்ளிட anbu என்று உள்ளிடலாம். பண்பு என்று உள்ளிட panbu என்றால் அது பண்பாக வராது... அதற்கு pan#bu அழுத்த வேண்டும்.
# கீ ன்/ண்/ந் போன்று மாற்ற பயன்படுத்த முடியும். ஒலிக்கு பாடல் கேட்டு தகவல் அனுப்பும் நீங்கள் சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை, சித்தி போன்ற வித்தியாசம் தெரிய செய்திகள் அனுப்பலாம் (uncle, aunty என்று குறிப்பிடமால்...)
விழா நடைபெற்ற அரங்கு ஒரு பள்ளியின் அரங்கு என்பதால், சற்றே சிறியதாகவும், சில தொழில்நுட்ப இடையூறு கொண்டதாகவும் இருந்தாலும், செல்லினம் தொடர்பான தொழில்நுட்ப ஏற்பாடு மிகுந்த கவனத்துடன், விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பாராட்டத்தக்க முயற்சி.
இனி கொஞ்சம் தொழில்நுட்பம் தொடர்பில்...
1) செல்லினம் (AnjalMobile) MIDP 2.0 (Mobile Internet Device Profile) Java உள்ள கைத்தொலைபேசிகளில் கண்டிப்பாக இயங்கும். என்னுடையது போல (Nokia 6610) உங்கள் தொலைபேசி கொஞ்சம் பழைய வகை என்றால், அதாவது MIDP 1.0 வகை என்றால் தமிழில் மின்னஞ்சல் மட்டும் அனுப்ப இயலும். (மற்ற ஜாவா தொழில்நுட்ப வசதி இல்லாத தொலைபேசி வைத்திருப்பவரகள், தமிங்கிலீஸில் தொடரலாம் அல்லது பக்கத்தில் அனுப்புபவர்களை/பெற்றவர்களைப் பார்க்கலாம்:)
2) செல்லினம் ஜாவா தொழில்நுட்பம் உள்ள பெரும்பாலான தொலைபேசிகளில், WAP/GPRS மூலம் www.murasu.com/sms என்ற தொடர்பின் மூலம் தொலைபேசியில் இறக்கிக் கொள்ள முடியும்.
2அ) AnjalTest 8KB மற்றும் முழு AnjalMobile செயலியே 40KBதான்.
3) AnjalMobile இறக்கியபின் அதை Activate செய்ய இரண்டு சங்கேதஎண்கள் தேவைப்படும். இந்த எண்கள்தான் அவர்கள் வெளியிட்டிருக்கும் செல்லினம் என்ற அட்டையில் இருக்கும். இந்த அட்டை 15 வெள்ளி, அதுபோக வருடத்துக்கு 20 வெள்ளி கட்டணம் இருக்கும். ஆனால், அடுத்த ஒரு மாதத்துக்குள் இந்த அட்டையை பெற்றுக்கொள்பவர்கள், வருட சந்தா செலுத்த தேவையில்லை. நேற்று விழா அரங்கில் வாங்கியவர்களுக்கு 10 வெள்ளிக்கு விற்கப்பட்டது, வருட சந்தாவும் கிடையாது (ஒரு வெள்ளி சுனாமி நிதிக்கு அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது). அதனால் எதற்கும் இருக்கட்டுமே என்று எனக்கும், நண்பர்களுக்காக முதலில் மூன்றும், பின்னர் ஒன்றும் வாங்கினேன் (என்னுடைய 6610 தொலைபேசியில் பயன்படுத்த முடியாதென்பது வேற விஷயம்:)
4) Sony Ericsson-ல்தான் பெரும்பாலும் சோதனை செய்யப்பட்டது என்றாலும், மற்ற Nokia, Siemens, Motorola, Samsung நிறுவன தொலைபேசிகளிலும் வேலை செய்யும்.முழுமையான பட்டியல் இங்கே. அதுதவிர நீங்கள் உங்கள் கைத்தொலைபேசியில் முடியுமா என்று பரிசோதித்துப்பார்க்க விரும்பினால், GPRS தொடர்பு இருந்தால் Go to address மூலம் http://www.murasu.com/mobile/test.wml போய் AnjalTest இறக்குவதன் மூலம் முயற்சி செய்து பார்க்கலாம். அல்லது சும்மா படம் பார்க்க...
5) முக்கிய தகவல்: செல்லினம் இருந்தால் நீங்கள் தமிழில் உள்ளிட இயலும். அந்த தகவல் இன்னொரு செல்லின தொலைபேசிக்கு அனுப்பும்போது தமிழிலிலேயெ தெரியும், மற்ற தொலைபேசிகளில் ஆங்கிலப்படுத்திய(romanized) தமிழில் தகவல் தெரியும். கண்டிப்பாக junk-ஆக போகாது.
(ஒலி நேயர்களுக்கு கொசுறு: ஒலி 96.8க்கு சிறப்பு ஏற்பாடாக, செல்லினம் பயன்படுத்தி தமிழில் குறுந்தகவல் அனுப்பலாம், மாறாக நாம் வழக்கம்போல தமிங்கிலீஸில் அனுப்பினால் அவர்களுக்கு தமிழில் தகவலைக் காட்டவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)
6) நிகழ்ச்சிக்கு Sony Erricson ஆதரவு கொடுத்திருந்தது. அரங்கின் வெளியே, செல்லினத்துக்கு ஆதரவு கொடுக்கும் Planet Telecoms கடை போட்டிருந்தனர். செல்லினம் அட்டையை சிங்கப்பூரில் விநியோகிப்பவர்கள் Claritex, விற்பனையாளர்கள் Planet - சிங்கையின் 10 இடங்களில் இவர்களின் கிளை உண்டு.
7) SMS விலையைப் பொருத்தவரை தமிழ்குறுந்தகவலும், வழக்கமாக அனுப்பபடும் SMSல் ஒன்றாகத்தான் எடுத்தக்கொள்ளப்படும்.
நிகழ்ச்சிக்கு மாணவர்களை அதிகம் எதிர்பார்க்கிறோம் என்று ஒலி அழைப்பு விடுத்தாலும் விடுத்தது. 7 மணி நிகழ்ச்சிக்கு 7 மணி சில நிமிடங்களுக்கு செல்லும்போதே அரங்கு மாணவக்கண்மணிகளால் நிரம்பி அழகியபாண்டியன் பேச ஆரம்பித்திருந்தார். மூலையில் கிடைத்த ஓரிடத்தில் ஒற்றைக்காலில் (மறுகால் கீழேவைக்க இடமில்லை, கால்மாற்றி சமாளிக்கவேண்டியிருந்தது) நின்றிருந்தேன். விழாஆரம்பத்தில் மறைந்த திரு. உதுமான்கனி அவர்களுக்கு ஒருநிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போதுதான் தெரிந்தது - வெளியில் இன்னும் பலநூறு பேர்கள் அரங்கம் நிறைந்து, நிற்கவும் இடமில்லாததால் வெளியில் தவிக்கின்றனர் என்று...
உலகின் முதலாவது தமிழ்க் குறுந்செய்திச் சேவை.
இப்படிதான் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது, விளக்க கையேடுகளில், செல்லினம் அட்டையில் சொல்லப்பட்டிருக்கிறது.
முதல்குறுந்தகவல் இதுதானா என்ற கேள்விக்கு என்னைப்பொருத்தவரை, பொதுமக்கள் கைக்கு வருவது இதுதான் முதன்முறை.
என்னுடைய
முந்தையபதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடி இதற்கு முன்னர் குறுந்தகவல் MMS-ஆக கடந்தவருடமே அறிமுகப்படுத்தினார் முத்து.
பின்னர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூரில் (அனைத்துலக அரங்கில் தமிழ் மாநாட்டின்போது, அப்போதும் ஒலியின் கீதா உள்ளிடுவது திரையில் காட்டப்பட்டது...) குறுந்தகவல் SMS-ஆகவே கடந்தவருட இறுதிவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில்தான் பொதுமக்கள் கைக்கு வருகிறது என்று நினைக்கிறேன்.
எது எப்படியிருந்தாலும், நேற்றைய நிகழ்ச்சிக்கு கிடைத்த மக்கள் குறிப்பாக இளையர்களின் ஆதரவு மிகுந்த சந்தோசமளித்தது. கண்டிப்பாக இணையத்தில் தமிழ் புழக்கத்துக்கு ஈடாக கைத்தோலைபேசியிலும் தமிழ் தவளும் காலம் மிக அருகில். கவிஞர் கூறியபடி, இந்த புதிய தொழில்நுட்பத்தால் இரண்டு விளைவுகள்:
1. இளையர்களிடம் தமிழின் புழக்கம் அதிகமாகும் (தமிழ் மேல் காதல்).
2. தமிழில் காதல்.
நேற்றைய நிகழ்ச்சியில் கவியரசு வைரமுத்துவின் உரை தமிழைப்பற்றியதாக இல்லாமல், தமிழரைப்பற்றியதாக குறிப்பாக சிங்கை இளையர்கள், பெற்றோரைப் பற்றிய கவலைகளாக, அறிவுரைகளாக அவரே கூறியதுபோல் மனிதம் பற்றி பேசுவதாக அமைந்தது இன்னும் சிறப்பு.
Friday, January 14, 2005
இதோ இன்னொரு குறுந்தொகை...
வணக்கம்.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
இன்று பொங்கல் என்று தெரியாதவர்கள் - தெரிந்துகொள்வோம்,
தெரிந்தவர்கள் முடிந்தவரை கொண்டாடுவோம்,
பாரம்பரியம் போற்றுவோம், மனிதம் தழைக்கட்டும்.
(காலையிலே பொங்கல் செய்து(கொண்டாடி) சாப்பிட்டுவிட்டு, அலுவலகத்திலிருந்து எழுதுகிறேன். இங்கு சிங்கையில் தீபாவளிக்குதான் அரசு விடுமுறை, பொங்கலுக்கல்ல. அவங்கதான் லீவு விடல, நீங்களாவது லீவு போடலாம்ல என்ற மனைவி, மகளுக்கு வழக்கம்போல ஏதோ காரணம் கூறி மீண்டுவந்தேன்.)
சரி அது இருக்கட்டும், இந்த பதிவின் நோக்கம் பொங்கலைப்பற்றியது அல்ல - புதிய குறுந்தொகை பற்றியது.
முதல் குறுந்தொகையை எழுதியவர்...(யாரென்று தெரியவில்லை)
இந்த புதிய குறுந்தொகையின் காரணகர்த்தா - முரசு நெடுமாறன் அவர்கள். ஆம் குறுந்தகவல்/குறுஞ்செய்தி அதாங்க தமிழில் 'SMS'ஐத்தான் குறுந்தொகை என்று குறிப்பிடுகிறேன்(றோம்).
இந்த தமிழில் குறுந்தகவல் பற்றி கடந்த வருடத்திலிருந்து பேசிவந்தாலும், சோதனைமுறையில் சில இடங்களில் நம்மில் ஒரு சிலர் பார்த்திருந்தாலும் நடைமுறையில், தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தப்போவது நாளைதான். href="http://oli.mediacorpradio.com/tamilsms.htm">சிங்கையின் ஒலி 96.8 ஆனந்தபவன் உணவகத்தின் (கடையில் கணிணி மூலம் கொடுக்கும் ரசீதில், முழுக்க முழுக்க தமிழில்தான் இருக்கும்) ஆதரவுடன் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. கவியரசு வைரமுத்து கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கிறார்.
என்னைப்பொருத்தவரை தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது, தொழில்நுட்பத்தின் உதவியால்தான் முடியும். அந்த முயற்சிக்கு திரு. முத்து நெடுமாறன் பேருதவி செய்துள்ளார், செய்து வருகின்றார். அவருக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அதே போல், தொழில்நுட்ப தமிழை ஊக்குவிப்பதில் சிங்கை ஊடகங்களில் தலையாயது ஒலி 96.8. முதலில் ஒலியுடன் தமிழில் (தமிழில் மின்னஞ்சல்), யுனிக்கொடு தளம், இப்போது குறுந்தகவல். அதை மனமுவந்து ஆர்வத்துடன் செய்யும் அதன் தலைவர் திரு. அழகிய பாண்டியன் அவர்களுக்கும் நன்றி.
நிகழ்ச்சி சிறப்புற நடைபெறவும், தமிழ்குறுந்தகவல் சேவை எல்லாருக்கும் கைகூடவும் வாழ்த்துக்கள்.
தமிழில் குறுந்தகவல் பற்றிய மேல் விபரத்துக்கு...
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
இன்று பொங்கல் என்று தெரியாதவர்கள் - தெரிந்துகொள்வோம்,
தெரிந்தவர்கள் முடிந்தவரை கொண்டாடுவோம்,
பாரம்பரியம் போற்றுவோம், மனிதம் தழைக்கட்டும்.
(காலையிலே பொங்கல் செய்து(கொண்டாடி) சாப்பிட்டுவிட்டு, அலுவலகத்திலிருந்து எழுதுகிறேன். இங்கு சிங்கையில் தீபாவளிக்குதான் அரசு விடுமுறை, பொங்கலுக்கல்ல. அவங்கதான் லீவு விடல, நீங்களாவது லீவு போடலாம்ல என்ற மனைவி, மகளுக்கு வழக்கம்போல ஏதோ காரணம் கூறி மீண்டுவந்தேன்.)
சரி அது இருக்கட்டும், இந்த பதிவின் நோக்கம் பொங்கலைப்பற்றியது அல்ல - புதிய குறுந்தொகை பற்றியது.
முதல் குறுந்தொகையை எழுதியவர்...(யாரென்று தெரியவில்லை)
இந்த புதிய குறுந்தொகையின் காரணகர்த்தா - முரசு நெடுமாறன் அவர்கள். ஆம் குறுந்தகவல்/குறுஞ்செய்தி அதாங்க தமிழில் 'SMS'ஐத்தான் குறுந்தொகை என்று குறிப்பிடுகிறேன்(றோம்).
இந்த தமிழில் குறுந்தகவல் பற்றி கடந்த வருடத்திலிருந்து பேசிவந்தாலும், சோதனைமுறையில் சில இடங்களில் நம்மில் ஒரு சிலர் பார்த்திருந்தாலும் நடைமுறையில், தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தப்போவது நாளைதான். href="http://oli.mediacorpradio.com/tamilsms.htm">சிங்கையின் ஒலி 96.8 ஆனந்தபவன் உணவகத்தின் (கடையில் கணிணி மூலம் கொடுக்கும் ரசீதில், முழுக்க முழுக்க தமிழில்தான் இருக்கும்) ஆதரவுடன் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. கவியரசு வைரமுத்து கலந்துகொண்டு ஆரம்பித்து வைக்கிறார்.
என்னைப்பொருத்தவரை தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது, தொழில்நுட்பத்தின் உதவியால்தான் முடியும். அந்த முயற்சிக்கு திரு. முத்து நெடுமாறன் பேருதவி செய்துள்ளார், செய்து வருகின்றார். அவருக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அதே போல், தொழில்நுட்ப தமிழை ஊக்குவிப்பதில் சிங்கை ஊடகங்களில் தலையாயது ஒலி 96.8. முதலில் ஒலியுடன் தமிழில் (தமிழில் மின்னஞ்சல்), யுனிக்கொடு தளம், இப்போது குறுந்தகவல். அதை மனமுவந்து ஆர்வத்துடன் செய்யும் அதன் தலைவர் திரு. அழகிய பாண்டியன் அவர்களுக்கும் நன்றி.
நிகழ்ச்சி சிறப்புற நடைபெறவும், தமிழ்குறுந்தகவல் சேவை எல்லாருக்கும் கைகூடவும் வாழ்த்துக்கள்.
தமிழில் குறுந்தகவல் பற்றிய மேல் விபரத்துக்கு...
Friday, January 07, 2005
A TRUE TEST OF FAITH: DONATE NOTHING TO INDIA NOW!
இந்த கேவலமான பதிவை படித்தீர்களா? இப்படியும் சில அறிவாளி ஜந்துக்கள் உலவுகின்றன... A TRUE TEST OF FAITH: DONATE NOTHING TO INDIA NOW!
Monday, January 03, 2005
திரு. உதுமான் கனி
சிங்கையின் பிரபல வழக்கறிஞரும், முன்னாள் தொலைக்காட்சி படைப்பாளரும், 'அஃறினை உயர்தினை' சிறுகதை நூலின் ஆசிரியரும், சிங்கையில் பலர் தமிழ் பேச முன்னுதாரணமாய் திகழ்ந்தவரும், பழகுவதற்கினிய நண்பருமான திரு. உதுமான் கனி அவர்கள் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்கள்.
நேற்றிரவு சிங்கையின் வசந்தம் செண்ட்ரல் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பான 'சூப்பர் நண்பர்கள் 04/05' போட்டியின் இறுதிச்சுற்றில் தலைமை நீதிபதியாக பணியாற்றிக்கொண்டிருந்தார், தன் இன்முகத்துடன். நிகழ்ச்சி முடிந்தபின் அரங்கிலேயே மயக்கமுற்றநிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு - காப்பாற்றமுடியாமல் இறப்பு நேரிட்டிருக்கிறது.
கடந்த சிலவாரங்களுக்கு முன் திரு. மாலனின் புத்தகவெளியீட்டு விழாவில்தான் அவரை முதலும்/கடைசியுமாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று அவர் பேசும்போதும் சரி, பின்னர் நண்பர் வெங்கடேஷின் நூல் வெளியீட்டில் பேசும்போதும் சரி, அவர் தன்னடக்கத்துடன் குறிப்பிட்டது: "நான் இந்த நூலை பெற்றுக்கொள்வதற்குண்டான என்னிடம் உள்ள ஒரே தகுதி காலம்சென்ற நா.கோவிந்தசாமி அவர்களின் மாணவன் என்பது மட்டும்தான். அவருக்கு இந்த தருணத்தில் நன்றி" என்றார். கணிணிக்கு முதன்முதலில் தமிழ் சொல்லிக்கொடுத்தவரும், முதல் தமிழிணைய மாநாடு சிங்கையில் ஏற்பாடு செய்த திரு. நா.கோ-வையும் இதுபோன்ற ஒரு திடீர் மரணம்தான் அழைத்து சென்றது.
நேற்றிருந்தவர் இன்றில்லை, காலை வானொலியில் செய்தி கேட்டதிலிருந்து மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறது. அன்னாருடைய குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்...
நேற்றிரவு சிங்கையின் வசந்தம் செண்ட்ரல் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பான 'சூப்பர் நண்பர்கள் 04/05' போட்டியின் இறுதிச்சுற்றில் தலைமை நீதிபதியாக பணியாற்றிக்கொண்டிருந்தார், தன் இன்முகத்துடன். நிகழ்ச்சி முடிந்தபின் அரங்கிலேயே மயக்கமுற்றநிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு - காப்பாற்றமுடியாமல் இறப்பு நேரிட்டிருக்கிறது.
கடந்த சிலவாரங்களுக்கு முன் திரு. மாலனின் புத்தகவெளியீட்டு விழாவில்தான் அவரை முதலும்/கடைசியுமாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று அவர் பேசும்போதும் சரி, பின்னர் நண்பர் வெங்கடேஷின் நூல் வெளியீட்டில் பேசும்போதும் சரி, அவர் தன்னடக்கத்துடன் குறிப்பிட்டது: "நான் இந்த நூலை பெற்றுக்கொள்வதற்குண்டான என்னிடம் உள்ள ஒரே தகுதி காலம்சென்ற நா.கோவிந்தசாமி அவர்களின் மாணவன் என்பது மட்டும்தான். அவருக்கு இந்த தருணத்தில் நன்றி" என்றார். கணிணிக்கு முதன்முதலில் தமிழ் சொல்லிக்கொடுத்தவரும், முதல் தமிழிணைய மாநாடு சிங்கையில் ஏற்பாடு செய்த திரு. நா.கோ-வையும் இதுபோன்ற ஒரு திடீர் மரணம்தான் அழைத்து சென்றது.
நேற்றிருந்தவர் இன்றில்லை, காலை வானொலியில் செய்தி கேட்டதிலிருந்து மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறது. அன்னாருடைய குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்...
Subscribe to:
Posts (Atom)