தமிழ் வளர்க்கும் அறிஞர்கள் என்ற வரிசையில், 'முரசு' முத்து நெடுமாறனின் நேர்காணல் நிலாச்சாரலில் வந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் சிங்கையில் நடந்த அனைத்துலக அரங்கில் தமிழ் மாநாட்டில், உலகில் முதன்முதலாக தமிழில் குறுந்தகவல் சேவையை AnjalMobile மூலம் அறிமுகப்படுத்தினார். தமிழின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முத்து, காசி, சுரதா போன்றவர்கள் செய்யும் சேவை அளப்பறியாதது. வாழ்த்துக்கள்.
Thursday, September 30, 2004
Wednesday, September 29, 2004
ஓவியா - கோபி
ஆம் அது ஓவியா - என்று எழுதநினைத்தத்தான் டைப்பினேன்(உள்ளிட்டேன்). ஓவியர் கோபியை, எனக்குப்பிடித்த பெயரான ஓவியா என்றுதானே கூப்பிடவேண்டும்? நண்பர் கோபியின் கற்பனை இல்லம் என்ற தனது சுயமான முதல் ஓவியத்துக்கு நான் எழுதிய பின்னூட்டம்.
என்ன கோபி நான் எதாவது சொல்லுவேன்னு அதுக்கு முன்னாடியே ஒரு லிஸ்ட்லாம் வந்திருக்கு?
உண்மையில் நம்பமுடியவில்லை... பார்த்துவரைவதற்கும், பார்க்காமல் வரைவதற்கும் இவ்வளவு வித்தியாசமிருக்குமா என்று. இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால்... மற்ற எல்லா பாகங்களைவிடவும் - கஷ்டமான முகம் மிக அழகாக வந்திருக்கிறது. அதிலும், அந்தப்பெண் முகம் அமர்க்களம். (தங்கம் சொல்வது சரிதானோ!?:)
இது சுயமென்றால்... உங்களுக்குள்ளே ஒரு களத்தை நினைத்து, உருவங்களை உள்ளத்தில் உள்வாங்கி ஓவியத்தில் படைத்ததா?
அல்லது
ஓவியத்தைப் பார்க்காமல், மற்ற புகைப்படங்களை மாதிரியாக வைத்து வரைந்ததா?
இது முதல்வகை என்றால் - இரண்டாவவது வகைமூலம் சிறிது முயற்சி செய்துவிட்டு, முதல்வகையை முயலலாமே!?
இங்கு இந்த நிமிடம், இந்தப் பின்னூட்டத்தை எழுதும்போதுதான் உணர்கிறேன், ஓவியம் எவ்வளவு உன்னதம் என்று. பத்து பொருளை சில நிமிடம் காட்டி பிறகு மறைத்துவிட்டு, எது எங்கிருந்தது என்று கேட்டாலே ரெண்டுக்குமேல் காட்ட சிரமப்படும் எனக்கும் - நீங்களே கற்பனைசெய்து (கதா)பாத்திரங்கள் & உண்மையான பாத்திரங்கள் (கூஜா, ஊஞ்சல் இன்ன பிற...) என்று முடிவுசெய்து - அதை ஓவியமாக்குவதென்பது எவ்வளவு பெரிய திறமை? இதை யோசிக்கும்போது இன்னும் கல்சிற்பம்? எதுவும்குறையென்றால் அழித்து/அடித்து செதுக்க முடியுமா என்ன?
எது எப்படியோ கோபி - இந்த 34 வருட வாழ்க்கையில் ஒங்களோட ஒரு ஓவியத்தின் மூலம் - ஓவியத்தின் மீதும், சிற்பங்களின் மீதும் - அதை படைக்கும் உங்களைப்போன்ற ஓவிய, சிற்பக்கலைஞர்களின் மீதே பெரிய மதிப்புக் கொண்டுவந்துவிட்டீர்கள் - என் மனதில்.
மிக மிக நன்றி. தொடர்ந்து வரையுங்கள், வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
அன்பு
என்ன கோபி நான் எதாவது சொல்லுவேன்னு அதுக்கு முன்னாடியே ஒரு லிஸ்ட்லாம் வந்திருக்கு?
உண்மையில் நம்பமுடியவில்லை... பார்த்துவரைவதற்கும், பார்க்காமல் வரைவதற்கும் இவ்வளவு வித்தியாசமிருக்குமா என்று. இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால்... மற்ற எல்லா பாகங்களைவிடவும் - கஷ்டமான முகம் மிக அழகாக வந்திருக்கிறது. அதிலும், அந்தப்பெண் முகம் அமர்க்களம். (தங்கம் சொல்வது சரிதானோ!?:)
இது சுயமென்றால்... உங்களுக்குள்ளே ஒரு களத்தை நினைத்து, உருவங்களை உள்ளத்தில் உள்வாங்கி ஓவியத்தில் படைத்ததா?
அல்லது
ஓவியத்தைப் பார்க்காமல், மற்ற புகைப்படங்களை மாதிரியாக வைத்து வரைந்ததா?
இது முதல்வகை என்றால் - இரண்டாவவது வகைமூலம் சிறிது முயற்சி செய்துவிட்டு, முதல்வகையை முயலலாமே!?
இங்கு இந்த நிமிடம், இந்தப் பின்னூட்டத்தை எழுதும்போதுதான் உணர்கிறேன், ஓவியம் எவ்வளவு உன்னதம் என்று. பத்து பொருளை சில நிமிடம் காட்டி பிறகு மறைத்துவிட்டு, எது எங்கிருந்தது என்று கேட்டாலே ரெண்டுக்குமேல் காட்ட சிரமப்படும் எனக்கும் - நீங்களே கற்பனைசெய்து (கதா)பாத்திரங்கள் & உண்மையான பாத்திரங்கள் (கூஜா, ஊஞ்சல் இன்ன பிற...) என்று முடிவுசெய்து - அதை ஓவியமாக்குவதென்பது எவ்வளவு பெரிய திறமை? இதை யோசிக்கும்போது இன்னும் கல்சிற்பம்? எதுவும்குறையென்றால் அழித்து/அடித்து செதுக்க முடியுமா என்ன?
எது எப்படியோ கோபி - இந்த 34 வருட வாழ்க்கையில் ஒங்களோட ஒரு ஓவியத்தின் மூலம் - ஓவியத்தின் மீதும், சிற்பங்களின் மீதும் - அதை படைக்கும் உங்களைப்போன்ற ஓவிய, சிற்பக்கலைஞர்களின் மீதே பெரிய மதிப்புக் கொண்டுவந்துவிட்டீர்கள் - என் மனதில்.
மிக மிக நன்றி. தொடர்ந்து வரையுங்கள், வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
அன்பு
Friday, September 24, 2004
குடைக்குள் மழை
ராஜாவின் குடைக்குள் மழை பற்றிய விமர்சனத்துக்கு எழில் அவர்களின் பின்னூட்டம் இது:
ராஜா,
ரஸல் க்ரோ நடித்து வெளிவந்த ஆங்கிலப்படமான " A beautiful Mind " - பார்த்திருந்தீர்களேயானால் குடைக்குள் மழை அதன் பாதிப்பிலமைந்த கதை என்று எளிதாகப் புரிந்திருக்கும். சில்வியா நாஸர் எனும் பெண் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் அமைந்திருந்தது. இப்புத்தகம் நோபெல் பரிசு பெற்ற ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறாகும். ஜான் நாஷ் எனும் கணித மேதை - அவருக்கு இந்த மன நோய் இருந்தது. அதைக் குணமாக்கி நோபெல் பரிசு பெறும் அளவுக்கு அவர் உயர்ந்ததை விளக்கும் புத்தகம் இது. திரைப்படத்தில் சில மசாலாக் காட்சிகள் இருப்பினும் ஓரளவு இயல்பாக அமைந்த திரைப்படம். ரஸல் க்ரொ-விற்கு சிறந்த நடிகர் - ஆஸ்கர் விருது வாங்கித்தந்த படம்.
Posted by: எழில் at September 23, 2004 10:41 PM
நண்பர் எழிலுக்கு என்னுடைய பதில் இது:
(அதை அங்குசென்று படிக்காதவர்களுக்காக 'குடைக்குள் மழை'க்கு நாங்கள் செய்யும் பங்காக இங்கு ஒரு மறுபதிப்பு:)
அன்புக்குரிய எழில்,
குடைக்குள் மழை போல், ரஸல் க்ரோ நடித்திருக்கட்டும் அல்லது யாரோ நடித்திருக்கட்டும். கமலின் சுவாதி முக்தயம்(தானே!?) வந்து ஏழுவருடங்கள் கழித்துத்தான் Forest Gump வந்ததாக அண்மையில் கம்ல் கூறக் கேள்விப்பட்டேன். சண்டியரின் வித்தியாசமான கதைசொல்லும் பாணி ...'ஏதோ' ஆங்கிலப்படைத்தைப் பார்த்ததின் பாதிப்புதானே என்றதற்கு, இராமாயணம்/மகாபாரதம் காலத்துலேயே இதுபோன்ற கதைசொல்லும்பாணி இருக்குது என்றார். வித்தியாசமான, நல்ல படம் வரும்போதெல்லாம் பாராட்டுவதைவிட்டுவிட்டு இது போலதான் போனவருஷமே ஹாலிவுட்டில வந்துச்சே, அங்க வந்துச்சே, இங்க வந்துச்சேன்னு சொல்றத முதலில் விடுங்கப்பா. நீங்கள் சொல்லும் படத்தை சத்தியமாக நான் பார்க்கவோ, கேள்விப்படவோ இல்லை. அதனால், நான் கு.மழை பார்க்கும்போது வித்தியாசமாகத்தெரியப்போகிறது - ராஜாவைப் போல. நாலு பேருக்கு இது போய்சேரும்போது, இதுமாதிரி நாலு நல்லபடம் வர வாய்ப்பிருக்கிறது. தயவுசெய்து அதைக்கெடுக்க வேண்டாமே...
ராஜா சொல்வதுபோல் இது பாமரர்களுக்கான படமல்ல, உங்களைப்போன்ற புத்திசாலிகள் 'நான் இதை ஏற்கனவே' பாத்திருக்கிறனே என்பீர்கள். அதனால்தான், கமல்,பார்த்திபன்,மணி போன்ற வித்தியாசம்பண்ண நினைப்பவர்களும் - நீங்கள் கொடுக்கும்தோல்வியால் நாலு பாட்டு/நாலு பைட்டு ஃபார்முலாவுக்குப் போய்விடுகின்றனர். வேண்டாமே... பிளீஸ்!
நீங்கள் சொல்வதை தகவலாக சொல்லியிருந்தால் நன்றியோடு முடித்திருப்பேன். இதுமாதிரி ஏற்கனவே வந்திருக்கேன்னு, கால்மேலக் கால போட்டுக்கூறும் வெறும் விமர்சனமாக இருந்ததால்தான் இந்தப்பின்னூட்டம். மன்னிக்கவும், பிழையிருந்தால்! (என்ன பண்ண... எங்க பொண்ணு 'எழில்' தவறுசெய்தாலும் இதே கவனிப்புதான் :)
Posted by: அன்பு at September 24, 2004 04:07 AM
ராஜா,
ரஸல் க்ரோ நடித்து வெளிவந்த ஆங்கிலப்படமான " A beautiful Mind " - பார்த்திருந்தீர்களேயானால் குடைக்குள் மழை அதன் பாதிப்பிலமைந்த கதை என்று எளிதாகப் புரிந்திருக்கும். சில்வியா நாஸர் எனும் பெண் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் அமைந்திருந்தது. இப்புத்தகம் நோபெல் பரிசு பெற்ற ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறாகும். ஜான் நாஷ் எனும் கணித மேதை - அவருக்கு இந்த மன நோய் இருந்தது. அதைக் குணமாக்கி நோபெல் பரிசு பெறும் அளவுக்கு அவர் உயர்ந்ததை விளக்கும் புத்தகம் இது. திரைப்படத்தில் சில மசாலாக் காட்சிகள் இருப்பினும் ஓரளவு இயல்பாக அமைந்த திரைப்படம். ரஸல் க்ரொ-விற்கு சிறந்த நடிகர் - ஆஸ்கர் விருது வாங்கித்தந்த படம்.
Posted by: எழில் at September 23, 2004 10:41 PM
நண்பர் எழிலுக்கு என்னுடைய பதில் இது:
(அதை அங்குசென்று படிக்காதவர்களுக்காக 'குடைக்குள் மழை'க்கு நாங்கள் செய்யும் பங்காக இங்கு ஒரு மறுபதிப்பு:)
அன்புக்குரிய எழில்,
குடைக்குள் மழை போல், ரஸல் க்ரோ நடித்திருக்கட்டும் அல்லது யாரோ நடித்திருக்கட்டும். கமலின் சுவாதி முக்தயம்(தானே!?) வந்து ஏழுவருடங்கள் கழித்துத்தான் Forest Gump வந்ததாக அண்மையில் கம்ல் கூறக் கேள்விப்பட்டேன். சண்டியரின் வித்தியாசமான கதைசொல்லும் பாணி ...'ஏதோ' ஆங்கிலப்படைத்தைப் பார்த்ததின் பாதிப்புதானே என்றதற்கு, இராமாயணம்/மகாபாரதம் காலத்துலேயே இதுபோன்ற கதைசொல்லும்பாணி இருக்குது என்றார். வித்தியாசமான, நல்ல படம் வரும்போதெல்லாம் பாராட்டுவதைவிட்டுவிட்டு இது போலதான் போனவருஷமே ஹாலிவுட்டில வந்துச்சே, அங்க வந்துச்சே, இங்க வந்துச்சேன்னு சொல்றத முதலில் விடுங்கப்பா. நீங்கள் சொல்லும் படத்தை சத்தியமாக நான் பார்க்கவோ, கேள்விப்படவோ இல்லை. அதனால், நான் கு.மழை பார்க்கும்போது வித்தியாசமாகத்தெரியப்போகிறது - ராஜாவைப் போல. நாலு பேருக்கு இது போய்சேரும்போது, இதுமாதிரி நாலு நல்லபடம் வர வாய்ப்பிருக்கிறது. தயவுசெய்து அதைக்கெடுக்க வேண்டாமே...
ராஜா சொல்வதுபோல் இது பாமரர்களுக்கான படமல்ல, உங்களைப்போன்ற புத்திசாலிகள் 'நான் இதை ஏற்கனவே' பாத்திருக்கிறனே என்பீர்கள். அதனால்தான், கமல்,பார்த்திபன்,மணி போன்ற வித்தியாசம்பண்ண நினைப்பவர்களும் - நீங்கள் கொடுக்கும்தோல்வியால் நாலு பாட்டு/நாலு பைட்டு ஃபார்முலாவுக்குப் போய்விடுகின்றனர். வேண்டாமே... பிளீஸ்!
நீங்கள் சொல்வதை தகவலாக சொல்லியிருந்தால் நன்றியோடு முடித்திருப்பேன். இதுமாதிரி ஏற்கனவே வந்திருக்கேன்னு, கால்மேலக் கால போட்டுக்கூறும் வெறும் விமர்சனமாக இருந்ததால்தான் இந்தப்பின்னூட்டம். மன்னிக்கவும், பிழையிருந்தால்! (என்ன பண்ண... எங்க பொண்ணு 'எழில்' தவறுசெய்தாலும் இதே கவனிப்புதான் :)
Posted by: அன்பு at September 24, 2004 04:07 AM
Thursday, September 23, 2004
இரக்கமற்ற அரக்கமனம்...
நான் தினமலர் தினமும் படிப்பதில்லை. சற்றுமுன் அலுவலக நண்பரொருவர் இன்றைய தினமலரில் படித்த செய்தியை அதிர்ச்சிமாறாமல் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அதை உங்களுக்கும் இங்கே... உண்மையா? கணிணி விளையாட்டா என்று தெரியவில்லை. கணினி விளையாட்டாகவே இருக்கக் கடவது.
Tuesday, September 21, 2004
கலாச்சார சீரழிவு
நண்பர் அருண் தனது அகரதூரிகையில் சென்னையில் நடந்த, பெண்ணைக் கேலிசெய்து அவருடைய சாவுக்கே காரணமான கோரநிகழ்வு பற்றி
எழுதியிருந்தார். அந்தப்பதிவுக்கு என்னுடைய பின்னூட்டம் இது:
சம்பவத்தில் இடம்பெற்ற பெண் ஒரு ஆங்கிலோ இந்தியன். அவர்களின் கலாச்சாரம் அதுவாக இருக்கலாம். அவருடன் இன்னொரு பெண்ணும்/பையனும் வந்ததாகவும் அவர்களையும் போலிசார் தேடிவருவதாகவும் படித்தேன். அதனால் அந்தப்பெண்ணைக் குறை சொல்லி பயனில்லை.
கல்தோன்றி மண்தோன்றா... கலாசாரத்தில் வந்த நம் தமிழர்களே இப்படி கலாசாரம் சீரழியும்படி நடந்துகொள்கிறார்களே என்பதை நினைத்தால்தான் மனசு வெம்புகிறது. இங்கு சிங்கப்பூரிலியே நல்ல நிலைமையில்லை - பல பப்/டிஸ்கோத்தேக்களில் இது போன்ற வன்முறை/கொலை நடக்கிறது. அதனால், இதை சட்டம் செய்யும் என்று காத்திராமல், நமக்கு என்ன தேவையென்று ஒவ்வொரு இளையர்களும், அவர்தம் பெற்றோரும் முடிவு செய்யவேண்டும். மேற்கத்தியக் கலாசாரத்தை நாம் கண்ணைமூடிக்கொண்டு பின்பற்ற முடியாது. ஒருகாலத்தில் உடன்படிக்கும் ஆண்,பெண் தங்களுக்குள் பேச இயலாத நிலையிலிருந்து தீடீரென்று - டேட்டிங்க், பப், டிஸ்கோ, அவுட்டிங், கெர்ள்ஃரிண்ட்,
பாய்ஃப்ரண்ட், சும்மா சேந்திருந்தோம் என்பதெல்லாம் வந்ததால் வரும் விளைவுதான் இது.
இது போன்ற நடவடிக்கைக்களுக்கு துணைகிடைத்தால் அவர்களுக்கு மட்டும் நட்டம். அதுபோன்ற வாய்ப்புக் கிடைக்காதவர்களால், இதுபோல் எல்லோருக்கும் நட்டம்.
முன்னொருமுறை இந்தியாடுடேயில்- பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியரின் செக்ஸ் லீலைகள் பற்றி சிறப்பிதழ் வந்தது. சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் கல்லூரி மாணவிகள், நடுத்தரவயது பெண்களே "அழைத்தால்வரும்" தொழில் புரிபவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது.
இதெயெல்லாம் அறியவரும்போது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதுபோன்றவை நடக்காமல் இருக்க பெற்றோர்கள்தான் அதிகம் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. "...அவன் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே..." என்று வரும். இதில் அம்மாவை மட்டும் பழிசொல்லாமல், பெற்றோர், குடும்பம், சுற்றம் அதிகம் செய்யலாம். நல்லகுடும்பம், சூழ்நிலை வாழ்வை நல்வழிப்படுத்தும்.
இதுபோன்ற இளையர்கள் வருவது - நடுத்தர, தீடீர் பணக்கார வர்க்கங்களில் இருந்துதான்.
அவர்களுடைய பெற்றோர், பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் - அவர்கள் தனது தொழிலிலோ, தனது சுயசந்தோசத்திலோ மூழ்குவதால் வரும் விளைவுதான் இது.
இன்றும், பெற்றோர்/சுற்றம் கண்முன் மனைவியுடைய கையைப்பிடிப்பது, தொடுவதே - ஒரு கலாசார மாற்றமாக நமக்குத்தோணுகிறது. அதேநேரம், இங்கு பேருந்து, ரயில், பொதுவிடம், ரோடு என்று எங்குபார்த்தாலும் - நாய் போன்று நடந்துகொள்வது அவர்களுடைய கலாசாரம். நாம் அதைநோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இடையில் இதுபோன்ற பலநிகழ்வுகள் நடக்கும்!
நமது கலாச்சாரம் என்னதான் மாறினாலும் சமுதாயபயம் இருக்கவேண்டும். அது
அழியும்போது நாம் அழிந்து, நமது சந்ததியியனர் உதவாக்கரையாகிவிடும் அபாயமுண்டு.
(பி.கு: மன்னிக்கவும், HaloScan நாலுவரிக்குமேல் எழுத அனுமதிக்காகதால் நான் இங்கே பதிக்கவேண்டியிருக்கிறது. நண்பர்களே... ஏன் Haloscanஐத் தூக்கிவிட்டு பிளாக்ஸ்பாட்டுடைய கமெண்ட் பெட்டி பயன்படுத்தலாமே!?)
எழுதியிருந்தார். அந்தப்பதிவுக்கு என்னுடைய பின்னூட்டம் இது:
சம்பவத்தில் இடம்பெற்ற பெண் ஒரு ஆங்கிலோ இந்தியன். அவர்களின் கலாச்சாரம் அதுவாக இருக்கலாம். அவருடன் இன்னொரு பெண்ணும்/பையனும் வந்ததாகவும் அவர்களையும் போலிசார் தேடிவருவதாகவும் படித்தேன். அதனால் அந்தப்பெண்ணைக் குறை சொல்லி பயனில்லை.
கல்தோன்றி மண்தோன்றா... கலாசாரத்தில் வந்த நம் தமிழர்களே இப்படி கலாசாரம் சீரழியும்படி நடந்துகொள்கிறார்களே என்பதை நினைத்தால்தான் மனசு வெம்புகிறது. இங்கு சிங்கப்பூரிலியே நல்ல நிலைமையில்லை - பல பப்/டிஸ்கோத்தேக்களில் இது போன்ற வன்முறை/கொலை நடக்கிறது. அதனால், இதை சட்டம் செய்யும் என்று காத்திராமல், நமக்கு என்ன தேவையென்று ஒவ்வொரு இளையர்களும், அவர்தம் பெற்றோரும் முடிவு செய்யவேண்டும். மேற்கத்தியக் கலாசாரத்தை நாம் கண்ணைமூடிக்கொண்டு பின்பற்ற முடியாது. ஒருகாலத்தில் உடன்படிக்கும் ஆண்,பெண் தங்களுக்குள் பேச இயலாத நிலையிலிருந்து தீடீரென்று - டேட்டிங்க், பப், டிஸ்கோ, அவுட்டிங், கெர்ள்ஃரிண்ட்,
பாய்ஃப்ரண்ட், சும்மா சேந்திருந்தோம் என்பதெல்லாம் வந்ததால் வரும் விளைவுதான் இது.
இது போன்ற நடவடிக்கைக்களுக்கு துணைகிடைத்தால் அவர்களுக்கு மட்டும் நட்டம். அதுபோன்ற வாய்ப்புக் கிடைக்காதவர்களால், இதுபோல் எல்லோருக்கும் நட்டம்.
முன்னொருமுறை இந்தியாடுடேயில்- பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியரின் செக்ஸ் லீலைகள் பற்றி சிறப்பிதழ் வந்தது. சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் கல்லூரி மாணவிகள், நடுத்தரவயது பெண்களே "அழைத்தால்வரும்" தொழில் புரிபவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது.
இதெயெல்லாம் அறியவரும்போது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதுபோன்றவை நடக்காமல் இருக்க பெற்றோர்கள்தான் அதிகம் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. "...அவன் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே..." என்று வரும். இதில் அம்மாவை மட்டும் பழிசொல்லாமல், பெற்றோர், குடும்பம், சுற்றம் அதிகம் செய்யலாம். நல்லகுடும்பம், சூழ்நிலை வாழ்வை நல்வழிப்படுத்தும்.
இதுபோன்ற இளையர்கள் வருவது - நடுத்தர, தீடீர் பணக்கார வர்க்கங்களில் இருந்துதான்.
அவர்களுடைய பெற்றோர், பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் - அவர்கள் தனது தொழிலிலோ, தனது சுயசந்தோசத்திலோ மூழ்குவதால் வரும் விளைவுதான் இது.
இன்றும், பெற்றோர்/சுற்றம் கண்முன் மனைவியுடைய கையைப்பிடிப்பது, தொடுவதே - ஒரு கலாசார மாற்றமாக நமக்குத்தோணுகிறது. அதேநேரம், இங்கு பேருந்து, ரயில், பொதுவிடம், ரோடு என்று எங்குபார்த்தாலும் - நாய் போன்று நடந்துகொள்வது அவர்களுடைய கலாசாரம். நாம் அதைநோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இடையில் இதுபோன்ற பலநிகழ்வுகள் நடக்கும்!
நமது கலாச்சாரம் என்னதான் மாறினாலும் சமுதாயபயம் இருக்கவேண்டும். அது
அழியும்போது நாம் அழிந்து, நமது சந்ததியியனர் உதவாக்கரையாகிவிடும் அபாயமுண்டு.
(பி.கு: மன்னிக்கவும், HaloScan நாலுவரிக்குமேல் எழுத அனுமதிக்காகதால் நான் இங்கே பதிக்கவேண்டியிருக்கிறது. நண்பர்களே... ஏன் Haloscanஐத் தூக்கிவிட்டு பிளாக்ஸ்பாட்டுடைய கமெண்ட் பெட்டி பயன்படுத்தலாமே!?)
Subscribe to:
Posts (Atom)