ஒரு அஞ்சு வயசுக்குழந்தையின் சந்தேகங்கள்
'அப்பா, ஐ டொன்ட் வான்ட் டு பி எ கேர்ல்' என்று என்னிடம் வந்து அழுதது குழந்தை. விசாரித்தேன். என் மகளின் பள்ளித்தோழி, அவளும் ஒரு இந்தியரின் குழந்தை, அவள் வீட்டில் ஒரு தம்பி பிறக்கப்போகும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். தன் அம்மாவின் வயிற்றுக்குள் இப்போது இருக்கிறான் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். அம்மாவின் வயிற்றை கத்தியால் வெட்டித் தான் குழந்தையை எடுப்பார்கள் என்று வேறு சொல்லியிருக்கிறாள். அதிலிருந்து ரெண்டு நாளைக்கு கண்ணில் மிரட்சியுடன், இதே புராணம். பெரிதானால் தன் வயிற்றையும் வெட்டுவார்கள் எனவே நான் பெண்ணாக இருக்க விரும்பவில்லை. இது எப்படி இருக்கு?.....
.......
......
.....
தமிழும் மற்ற மொழிகளும்...
'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்பார் பாரதியார். இன்னொரு இடத்தில் 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து...' என்பார் அவரே. எது உண்மையில் சிறந்த மொழி? ஒவ்வொரு மொழியும் அதை நன்கு அறிந்து ரசிப்பவருக்கு இனிமைதான். ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் போட்டி நடத்துவது, 'என் அம்மாவின் பாசம் உயர்ந்ததா, உன் அம்மாவின் பாசம் உயர்ந்ததா' என்று கேட்பதற்கு சமம். முதலில் ஒரு மொழி இன்னொரு மொழியை விடச் சிறந்தது என்பது வீண்வாதம் என்பது என் தாழ்மையான கருத்து. 'கணினிக்கு சம்ஸ்க்ருதம் ஏற்றது, இசைக்கு தெலுங்கு ஏற்றது, இதுக்கு இந்தி ஏற்றது, அதுக்கு ஆங்கிலம் ஏற்றது' என்பதெல்லாம் சரியெனப்படவில்லை.
எது ஒருவருக்கு சமூக அடையாளம்?
என்னதான் ஆங்கில வழிக்கல்வி பயின்றாலும் சமூகம், பொழுதுபோக்கு, சமயம், அரசியல் என்ற பல விஷயங்களில் ஒருவர் தன் மொழிப் பின்புலத்துக்கேற்பத் தான் பங்கேற்கிறார். இங்கு ஒன்றை அவதானிக்கலாம்: ஒரு நாட்டில் பிறந்தவரை அடையாளப்படுத்தும்போது அவர் நாட்டையோ, மதத்தையோ, நிறத்தையோ யாரும் முன்னிறுத்துவது இல்லை. ஒரு ஆங்கிலேயரை, He is an Englishman என்கிறார்கள், He is an Englandman என்பதில்லை. அதே போல், French, Dutch, Polish, Spanish, Italian, Chinese, Japanese...என்றுதான் சொல்கிறார்கள். முறையே, Franceman, Netherlandman, Polandman, Spainman, Chinaman, Japanman.. என்று சொல்வதில்லை. இது ஏனென்றால், ஒருவர் மதம் மாறலாம், குடியுரிமை பெற்று வேற்று நாட்டு குடிமகனாகலாம், அவரால் மாற்றிக்கொள்ள முடியாத ஒரே அடையாளம் தாய்மொழி. அதன் காரணமாகவே இவ்வாறு என்றும் நிரந்தரமான அடையாளத்தால் ஒருவரை அழைப்பது. ஆக, விரும்பியோ விரும்பாமலோ, இக்கருத்துடன் ஒத்துப் போனாலோ போகாவிட்டாலோ, தமிழர் குடும்பத்தில் பிறந்து தமிழரோடு வளர்ந்தவர் அனைவரும் சாகும்வரை தமிழரே. புலம்பெயர்ந்தோருக்கும் இது பொருந்தும்.
தமிழ் வாழ ஏதும் செய்ய வேண்டுமா?
'நாம் தமிழுக்கு என்ன செய்தோம்' என்பது அவ்வளவு முக்கியமான கேள்வியல்ல. இன்றைக்கு இருக்கும் அவசர உலகத்தில் சுற்றமும் நட்புமே சுருங்கிக் கொண்டு வருகையில் இதற்கெல்லாம் யாருக்கும் நேரமும் தேவையும் இருக்கிறது? ....
..........
..........
.........
கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Networking)
அன்று ஒரு நாள் Broadband Wireless Router ஒன்றை வாங்கியதில் கிடைத்த அனுபவங்களை (லாபங்களையும்!) எழுதியிருந்தேன். ஒரு ஆர்வத்தில் அதை வாங்கப் போய் அதில் உள்ள தொழில்நுட்ப சமாச்சாரங்களில் லயித்துப் போய் நிறையத் தெரிந்தும் கொண்டேன். அதில் சிலதை இங்கு பதிக்கிறேன், இதில் புதிதாய் ஈடுபடுபவர்களுக்கு ஏதாவது பிரயோசனப்படும் என்பதால்................
...............
............
=================================
இதெல்லாம் எங்கேயோ படிச்சமாதிரி இருக்குதுன்னு உங்களுக்கு தோணுச்சுன்னா... நீங்கள் வலைப்பதிவில் பழம்தின்று எதையோ போட்டவர். அதனால் உங்களுக்கு ஒரு சலாம்... போய்ட்டு வாங்கண்ணே....
அப்படியில்லாத என்னைப்போன்றவர்களுக்காக இங்கே....
"தமிழ்மணம்" காசி இப்போதான் அத்திபூத்தார்போல் எழுதுகிறார்... அவர் அந்தக் காலத்தில் இதுபோன்ற பல பதிவுகள் எழுதியிருக்கிறார் (என்பது எனக்கும் இன்றுதான் தெரியும்:) மேலே படிக்க, அவருடைய பழைய வீட்டுக்குச் செல்லுங்கள்:
காசியின் பழைய பதிவுகள்...