Friday, July 30, 2004

திரைகடல் ஓடியும்

ராசாஆஆஆ ரொம்ப நன்றிப்பா இந்த தொடர்பு கொடுத்ததுக்கு....கிருபா கல்க்கிட்ட போ...

Thursday, July 29, 2004

வீடு வாங்கலாம் வாங்க

வீடு வாங்கலாம் வாங்கன்னு புதுசா குமுதத்துல ஒரு தொடர் ஆரம்பிச்சுருக்காங்க... விருப்பமிருந்தால் படிக்கலாமே.வீடு வாங்கலாம் வாங்க

வயது வந்தவர்க்கு மட்டும்...

இதுவரை தமிழ்லினிக்ஸ், குவாண்டம் கணிணி எழுதி பென்குயினுக்கு தமிழ் கற்றுத்தந்த நமது ஜப்பான் டொக்டர் வெங்கட் தனது விஞ்ஞான் ஞானத்தின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிள்ளார்...ஆணுரைகள்

நல்லகாலம் பொறக்குது... நல்லகாலம் பொறக்குது...

என்னதான் அம்மாவும், லொல்லுவும், சோரனும் பொரச்சி பண்ணாலும் - இந்தியர்களாகிய நம்பளவிட, சிலர் இந்தியா மேல் நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் அதிலிரிந்து பெறப்போகும் வருமானத்தை நம்பித்தான் செய்தாலும், அந்த நம்பிக்கையே நமக்கொரு பலம்தானே... நீங்க என்ன சொல்றீக?India draws world's biggest pvt equity fund

Wednesday, July 28, 2004

The Tata Legacy

ஜெயா, சசி பூர்வீகத்தையே எத்தனை நாள் குடையறது...?rediff.com: The Tata Legacy

இதென்ன கலாட்டா...!?

ஹீம்... நாமெல்லாம் இங்க வலைல எதாவது எழுதறதோட சரி, இதுமாதிரி பெரியவங்க இதுமாதிரி ஆர்ப்பாட்டமில்லாம மிரட்டினால்தான் எதாவது முன்னேற்றம் வரும்னா - அப்படியாவது இந்தியா முன்னேறட்டும்.Wipro threatens to quit Bangalore

சுய மதிப்பீடா? தம்பட்டமா?

எனக்கு CGEY-யில் வேலைசெய்தபோது இருந்த இந்த கஷ்டம், நண்பருக்கும் உண்டு போல...பரிசல்

Sunday, July 25, 2004

பொழப்பு - ஹரணி

பொழப்பு

நான்கு மணி அலாரம் நிறுத்தி
ஐந்து மணிவரை தவணைத் தூக்கம்!
உறங்கும் பிள்ளைகள் விடுத்து
ஆறிருபது பாயிண்ட் டு பாயிண்டில்
"வாங்க சார் வணக்கம்!"
கண்டக்டர் சிரிப்புடன் தொடங்கும்
திங்கள்!
பேச்சு - சிரிப்பு - தலையாட்டல்
தஞ்சை - கும்பகோணம்
கும்பகோணம் - மாயவரம்
மாயவரம் - சிதம்பரம்
ஓட்டமும் நடையுமாய்
வருகைப் பதிவில் மணி பத்து...!
இயந்திரப் பகற்பொழுது
எச்சில் துப்பலாய் கரையும்
மாலை பாசஞ்சர் ரயில்
அரையடிக்கு ஒரு ஸ்டேஷன்
ரயில்விட்டு பேருந்திலேறி
தளர்ந்த நடையில்
வீடேற பிள்ளைகள்
உறங்கியிருக்கும்...!
உறங்கும் முகங்கள்
பார்க்க மறந்து போகுமெல்லாம்...
நாளையேனும் எக்ஸ்பிரஸ் பிடித்து
முன்னதாக வந்தால்
ஏதேனும் பேசலாம்
பிள்ளைகளிடம் உறங்கும்முன்!

- ஹரணி

சமீபத்திய குமுதம் ஜங்ஷனில் வந்த கவிதை.
உண்மையிலேயே இங்கு சிங்கையில்தான் என்றிருந்தேன்,
ஊரிலும் நாய் பொலப்புதானா!?

இதைப்படிசுட்டீங்களா மொதல்ல....

உலகின் எந்த மூலையில் பஞசம், பட்டினி, உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டாலும் சரி, ஆபத்பாந்தவனாக ஓடிச்சென்று அதிரடி திட்டங்கள் மூலமாக அப்பகுதியிலுள்ள வறட்சியை விரட்டிட்யடிக்கிறார் இந்த தமிழர்: சுரேஷ் சந்திரபாபு

Thursday, July 22, 2004

வரலாறுகாணாத மாற்றம்...

தலிவர் முதல் அடித்தட்டு, மேல், நடுத்தட்டு தொண்டர்களும், உலகத்தமிழ் மக்களும் தமிழ் வலைப்பதிவில் எதைப்படிக்க, எது எப்படி என்று கொழம்பி வந்ததால் வெண்ணிலா தொலைக்காட்சி, ஏசி நீல்'டாட்', ஓசி மார்க், லொவேலா காலேஷு, ஏண்டி டிவி இன்னும் ரொம்பப்பேரு சேந்து ஒலகத்தமிழர்கள் பலரின் அபிப்ரரயப்படி ஒருவழியா - வலைப்பதிவுகள அட்டவணைப்படுத்தினார்கள். இது தொடர்பாக, ஒட்டுமொத்த நிறுவனம் சார்பில் பொரபசர் டொக்டர் கர்த்துக்காணி பேசும்போது:

1) இது எந்த தராதரத்தின்படியும் பிரிக்கப்படவில்லையென்றும்,
2) ஒலகத்துல்ல உல்ல எள்ளா வழைப்பதிவுகளையும் தீர ஆராய்ச்சி செஞதாகவும்,
3) தனிப்பட்டவரை எந்தவிதத்திலும் பாதிக்காமல்,
4) அவர்களுடைய உள்ளடக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு
இந்த கருத்துக்கணிப்பு நடைபெற்றதாகக் கூறினார்கள்.

நிறுவனம் கொடுத்த இறுதி அட்டவணைய, செயல்குழு, பொதுக்குழுவெல்லாம் கூடி ஒருவழியாக ஏற்றுக்கொண்டு இன்றே பதிக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும், பொதுசனம் வேறு எதாச்சு, இதுல்ல மாற்றச் சொன்னாக்க - தலிவரே அதை யோசிச்சு முடிவெடுக்கும் , புல் சொதந்திரத்தையும் பொது/செயல் குழு தலிவெருக்கே அளித்துள்ளது...

அதனால, சகோதரர்களே, சகோதரர்களே, என் உயிரிழும் மேலான ....
(ட்ப்.... ட்ப்ப்... ட்ப்ப் ...பீஈஈஇ பீஇ.... ) அமைதி ... அமைதி ....
உடன்பிறப்புக்களே... என் ரத்தத்தின் ரத்தங்களே....ன ....
(ட்ப்.... ட்ப்ப்... ட்ப்ப் ...பீஈஈஇ பீஇ.... ) அமைதி ... அமைதி ....

எதவாது மாற்றமோ, யோசனைகளோ, மழித்தல், நீட்டலோ இருந்தாச் சொல்லுங்க...
ஒங்கள் காலுக்குச் செருப்பா ....
(ட்ப்.... ட்ப்ப்... ட்ப்ப் ...பீஈஈஇ பீஇ.... ) அமைதி ... அமைதி ....
இருந்து நெறெவேத்துறேன்... ஒடனே மாத்தச்சொல்றேன்.
எந்த மறுகேள்வியும் கேக்கபடாது... (சத்தியமா பதிலும் எதிர்பாக்க குடாது).

சனகன மண.....

என்ன செய்யப்போகிறேன்...

கும்பகோண தீ விபத்து தொடர்பில், நம்மில் பலரும் நம்முடைய எண்ணங்களை, யோசனைகளை வலையில் பதித்து வருகிறோம். ஒரு சிலர் அதற்கும் மேல் ஆக்ககரமான காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திரு. சுந்தரவடிவேலுடைய பாராட்டுக்குரிய முயற்சியொன்று...என்ன செய்யலாம்

Mallya, Airbus sign airline deal

இதுவரை கிங்ஃபிஷர் நம்ம உள்ளாரப் போய் நம்மள பறக்கவச்சுது,
இனிமேல் நாம கிங்ஃபிஷர் உள்ளாரப் போய் பறக்கலாம்...Mallya, Airbus sign airline deal

Wednesday, July 21, 2004

மேலும் சில கும்பகோணக் குழப்பங்கள்...

இன்று செய்தித்தாளில் படித்த மேலுமிரு குழப்பங்கள்:

1) கைது செய்யப்பட்ட பள்ளித்தாளாளர், முதல்வர் ஜெ-யை வழக்கிலிருந்த விடுவித்த நீதியரசரின் சகோதரர்

2) பள்ளியின் சத்துணவு ஆயாவின் ஆச்சரியமான கேள்வி:
"நான் அன்னிக்கு சமையலுக்கு அடுப்பே பத்தவக்கலியே... அதுக்குமுன்னால எங்கேருந்து ராசா நெருப்பு வந்துச்சு...?"

Tuesday, July 20, 2004

முரடா மிரட்டாதே...

இது எனக்கு அல்லது ஒங்களுக்குன்னு இல்ல - பெரும்பாலும் நாம எல்லாரும் படிக்கவேண்டிய ஒன்று. கொஞ்ச நேரம், இந்த கணிணியைலாம் மூடிட்டு போய் குழந்தைங்களோட விளையாடலாம், வாங்க...குழந்தையென்னும் தெயவம்...

கணவரிடம் எல்லா ரகசியங்களையும் பெண்கள் சொல்லலாமா?

உனக்குள் நானும்
எனக்குள் நீயுமாய்
கரையும் இம் மணித்துளிகள்
நம் மரணம் வரை
நம்மோடு வேண்டும்!

இதைப்படிங்க மொதல்ல...ன்னு சொல்லிட்டு என்னோட மனைவி படிக்கச் சொன்னதை நீங்களும்தான் படிங்களேன்...கணவரிடம் எல்லா ரகசியங்களையும் பெண்கள் சொல்லலாமா?

கும்பகோணத் துயரச் சம்பவம்

இந்த துயரச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குண்டாக்கியது உண்மை. அதிலிருந்து விடுபட்டு, இது ஏன் நடந்தது, திருவரங்கம், கும்பகோணம் என்று தொடராமல் இருக்கச்செய்வது எப்படி? அதற்கும் பலரும் பல வகையிலும் உதவி வருகிறார்கள், பாராட்டப்படவேண்டிய விஷயம். இதைவிடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக பல செய்திகள் வெளிவருகிறது...

1) துன்பியல் நடந்த கட்டிடத்தில் 3 பள்ளி நடந்து வந்தது. தமிழ், ஆங்கில வழி சிறுவர் பள்ளி மற்றும் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளி. சத்துணவு திட்டம் மூலம் அதிக ஆதாயமடைய, (அரசு அனுமதிக்காத) ஆங்கில வழிபடிக்கும் குழந்தைகளையும் சேர்த்து கணக்கு காட்டி பள்ளிநிர்வாகம் அரசுப்பணம் பெற்று வந்ததாகவும் - அன்றையதினம், கண்காணிப்பாளர் வருவதாக இருந்ததால் கீழ்தளங்களில் இருந்த ஆங்கிலவழி பயிலும் பாலகர்களையும் - அவர்கள் அணிந்திருக்கும் ஷீ, டை முதலியவற்றை கழட்டிவீட்டு மேல்தளத்தில் உள்ள தமிழ்வழி வகுப்பில் அடைத்தாக ஒரு தகவல். இதை தான் மேல்தளத்துக்கு செல்வதற்கு முன்னர் தீ பிடித்து விட்டதால் உயிர் தப்பிய ஒரு சிறுவன் உறுதிப்படுத்தியிருக்கிறான்.

2) ஆசிரிய/ஆசிரியைகள் குடும்பத்தோடு தலைமறைவு - இதுதான் இதுவரை அறிந்த செய்தி. இப்போது படித்த செய்தியொன்று சொல்கிறது: "யாரும் தலைமறைவாகவில்லை - அனைவரும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கேட்டுக்கொண்டபடி தெரியாத இடத்தில் உள்ளனர்."
"ஒரு ஆசிரியை நடந்த களேபர அதிர்ச்சியில் அரசியல்வாதிவலி(நெஞ்சு) வந்து மருத்துவமனையில் அனுமதி"
"காப்பாற்றப்போன கர்ப்பிணி ஆசிரியரை கூட்டத்தினர் யாரோ அடிவயிற்றில் இடித்து விட கர்ப்பம் கலைந்து இரத்தவெள்ளத்தில் மயக்கம்"

3) காப்பாற்ற சென்ற பொதுஜனம் ஒருவர் மரணம்

4) தொலைக்காட்சியில் இந்த செய்தி பார்த்து 'அய்யோ...'வென்று கதறிய மாணவி மரணம்.

இதெல்லாம் ஏன். ஏன் நாம் திருந்தக்கூடாது, தப்பு செய்பவனைத் திருத்தக்கூடாது?
திருந்துவோம், திருத்துவோம்.

Monday, July 19, 2004

புதுசு... இது புதுசு...

புதுப் படம் - அதாங்க தமில்ல நியூ திரைப்படம் இணணய உலகில் முதன் முதலாக...பல புதிய திரைப்படங்கள்... மேலும் விபரங்களுக்கு குட்டி ஜப்பான்

Friday, July 16, 2004

எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்...

நண்பர் மீனாக்ஷ் தன்னுடைய தொழில் சம்பந்தமாக, எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங் என்று ஒரு வலைப்பதிவு வைத்து தொடர்ந்து எழுதிவருக்கிறார், படித்திருக்கின்றீர்களா? மார்க்கெட்டிங் தொழில் அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லையேன்னு என்னைய மாதிரி நீங்களும் இதை கிளிக் பண்ணாம விட்டுடாதீங்க... அப்புறம் உண்மையாக you really going to miss something. மார்க்கெட்டிங் தொழில் நமக்கெதுக்குன்னு இல்ல, இந்த காலகட்டத்துள்ள ஆளாளுக்கு மீனாக்ஷ் மாதிர் கிளம்பிருக்காங்கல்ல்... அவங்களைப் புரிந்துகொள்ள, அவர்களிடமிருந்து தப்பிக்கவாவது இதை படிப்பது அவசியம்.
எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்...
 
அப்படி இல்லாட்டிக்கூட இந்த படத்தைபாருங்களேன்...
ஹோண்டாவின் புதிய அக்கார்ட் கார் விளம்பரம்
இந்த விளம்பரம்பற்றி மேலதிக விபரங்களுக்கு...

சினிமா பாட்டு...

நண்பர் கவிஞர் சேவியர்
தீடிரென்று (ஒருவேளை யுகபாரதி ஆத்மநண்பராகி வருவதாலோ!)
சினிமா பாட்டு எழுத முயற்சித்து
உயிரெழுத்துவில் இட்டிருந்தார்...
அது இங்கே:
 
 
0
காதலை யாரடி காதலாய்ப் பார்த்தது -
உயிர்க் காதலை யாரடி உயிராய்ப் பார்த்தது.
காதல் யாரைத் தீண்ட மறுத்தது -
அடி காதலை ஏன்ஊர் தீண்ட மறுக்குது ?
****
எண்ணை இல்லா விளக்கும் வீணடி
காதல் இல்லா வாழ்க்கை ஏனடி
எரியும் சுடரில் இருட்டு ஏதடி -
உயிர் காதல் சுடரை அணைப்பதேனடி ?
காதல் தானே துளியாய் விழுந்து முத்தாய் மாறும் அதிசயம் -
அந்த முத்தைச் சுமக்கும் சிப்பியை உலகம் நித்தம் வையும் நிச்சயம்
எதிர்நீச்சல் போடுவதென்றால் கால்கள் வலிக்கும் கவலை விடு.
உயிர்க்காதல் வாடுவதென்றால் வலிகளைக் கூட வாழ விடு.
****
உச்சிக் கிளையில் ஒற்றைப் பறவை சோகம் சொல்லி அழுகிறது -
அந்த அழுகைக் துளிகள் வீழும் நிலத்தில் கண்ணீர் அருவி எழுகிறது.
புல்லாங் குழலில் நுழைந்த காற்றும் இசையைச் சொல்ல மறுக்கிறது -
வெறும் மூச்சுக் காற்றை வெளியே தள்ளி உலகை அதுவும் வெறுக்கிறது.
 நேசக் கூடு எரிகிறதென்றால் தண்ணீர் ஊற்றி அணைத்து விடு
எரியும் கூட்டில் இருக்கும் உயிரை உயிருக்குள்ளே பிணைத்து விடு.
 
0
 
இந்தப்பாடலை படித்து விட்டி கவிதாயினி புதியமாதவி எழுதியது:
 
என்ன சேவியர் நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?
கண்ணதாசன் காலத்திலா?
சினிமாப் பாடல் என்றால் நடு நடுவில்
சம்மந்தா சம்மந்தமில்லாமல் ஏதாவது
"டணக்கு டணக்கு டணக்கு தான்..
உனக்கும் எனக்கும் காதல்தான்.."
என்றெல்லாம் வந்தாக வேண்டும்.
 "ஒட்டகத்தைக் கட்டிக்கோ.."னு
எதையாவது கட்டிப்பிடிக்க முடியாததை எல்லாம் சொல்லனும்.
அப்புறம் வெள்ளூடை தரித்த தேவதைகள் லாலா போடறமாதிரி
ஒரு மெட்டு போட்டாகனும்.
 
ஏதோ சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்னு..
 
நாம்ப நண்பருக்கு நம்பலால முடிஞ்சத
சொல்லணும்ல... அதான நாயம்...

ஆமாம், சேவியர்
இதெல்லாம் கண்டிப்பாக இல்லாவிட்டால்
ஹோட்டல் அறையில் அடைத்துவைத்து
"டணக்கு டணக்கு டணக்கு தான்..
உனக்கும் எனக்கும் காதல்தான்.."
வரும்வரை இயக்குநரும், இசையமப்பாளரும், தயாரிப்பாளரும்
விடமாட்டார்கள்.

ஒருமுறை சிங்கையில் வைரமுத்து பேசும்போது சொன்னார்கள்,
முதல்வனில் உச்சக்கட்டத்தில் வரும்
"உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு..."
பாடல் தோன்றிய பிண்ணனியை.
சிரிக்கச் சிரிக்க சொன்னார்கள்.

அந்தக் கதை சூழ்நிலைக்கு ஒரு இனிமையான பாடலொன்று
(வரிகள் மறந்துவிட்டது - something like
ஓலைக்குடிசை
நிலவொளி... இத்யாதி இத்யாதி).
என்று முதலி எழுதியிருந்தாராம்,
ரேஹ்மானும் இனிமையான் இசை கூட்டியிருந்தாராம்.
எல்லோரும் முதலில் கூடிப் பாராட்டினார்களாம்.
ரொம்ப அருமை என்று.

அப்புறம் வீட்டுக்கு வந்த பிறகு
நள்ளிரவு 1.30க்கு சங்கர் தொலைபேசி எழுப்பினராம்...

வைமுத்து: என்ன சங்கர் இந்த நேரத்துல்ல...
சங்கர்        : இல்ல சார் இன்னிக்கு எழுதுன பாட்டு ரொம்ப நல்லாருக்கு,
                      இனிமையா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க சார்...
வைமுத்து: ரொம்ப சந்தோசம்ப்பா, அதைச் சொல்லவா இந்நேரம் கூப்பிட்டீங்க...
சங்கர்        :இல்ல சார், எல்லாரும் இனிமையாருக்குங்கிறது - எனக்கு
                      கொஞம் பயமாருக்கு சார்.
வைமுத்து: ஏன் சங்கர்?
சங்கர்        : இல்ல சார் அந்தப் பாட்டு climax scenela வருது,
                      அப்பப்போய் இவ்ளோ சுலோவா பாட்டுப் போட்டா எடுபடாது சார்ர்ர்ர்...
வைமுத்து: இப்ப என்னப்பா பண்ணச்சொல்ற...?
சங்கர்        : எதாவது fast beataa மாத்தலாம் சார்..
வைமுத்து: ஹ்ம்ம்.... என்னப்பா மாத்தரது... கதாநாயகன்
நகரவாழ்க்கையவிட்டு விலகி கிராமத்து வாழ்க்கையைக் காட்டணும்
அங்க என்ன இருக்கும்..... குடிசை, பழைய கஞ்சி, குடிசையத்தவிர...
அப்படின்னுட்டு. இப்படி வச்சுக்கோன்னு கோபமா...

(இதை கவிஞரோட... குரல்ல படிங்க...)

உப்புக் கருவாடு.
ஊரவச்ச சோறு.
ஊட்டிவிட வேணுமடி எனக்கு....
முத்தமிட்டு நெத்தியில
மார்புக்கு மத்தியில
செத்துவிட தோணுதடி எனக்கு...

அப்படின்னு ரொம்ப கோபத்துல்ல போன்ல பல்லவியைச் சொன்னாராம்.
அதை அந்த நேரத்துலயே ரெஹ்மாண்ட போன்ல சொல்லி ட்யூன் போட்டார்களாம்.

அதேபோல அன்று வந்திருந்த இயக்குநர் K.S. ரவிக்குமார் சொல்லியது.
"இதை சென்னையில இருக்கும்போது சொல்லமுடியாது,
இப்போது சொல்றேன் - வைரமுத்து கோஞ்சம் costly கவிஞர்.
அதனாலதான் அவர என்னோட எல்லாப் படத்துலயும் use பண்ணிக்க முடியல.
சரி போங்கண்ணு எதாவது ஒரு பாட்டு மட்டும் கேட்டாலும்
அப்படியெழுத மாட்டாரு, ரொம்ப முரண்டு பிடிப்பாரு..."

(இதற்கு கவிஞர் பேசும்போது சொன்னது:
நண்பர் ரவிக்குமார் என்னைக் காஸ்ட்லி கவிஞர்னு சொன்னார்...
இப்போ அவருக்கு சொல்லிக்கிறேன்.
அவர் எந்தப்படத்துக்கு அவரோட சம்பளத்தை குறைத்துக்கொள்வாரோ
அந்தப்படத்துக்கு நான் என்னோட சம்பளத்தை குறைச்சுக்கிறேன்...

ரவிக்குமார் சிரிச்சுட்டு கீழ குனிஞ்சுண்டார்...)

அப்புறம் ரவிக்குமார் பேசும்போது
ரஜினி-நான்-வைரமுத்து-ரெஹ்மான் சேந்தாலே சில்வர் ஜுப்ளிதான்.
முத்து, படையப்பா அந்த வரிசல கண்டிப்ப ஜக்குபாயும் வரும் என்றார்.

மேலும் ரேஹ்மான் பத்தி பேசும்போது... (அன்போட...)
"அவன் ரேஹ்மான் கொஞம் வித்தியாசமான ஆளு
நைட்லதான் work பண்ணுவான்.
அது போக, அவன் அடிக்கடி மந்திரம் ஓதுறதால
மசூதில்ல ஒருமாதிரி பாடற மாதிரியே ஒரு sound உடுவான்.
அப்படித்தான் 'முத்து' படத்துக்கு பாடலுக்கு இசையமைக்கும்போது...

உல்லல்லிலே...உல்லல்லிலே...
உளுவாளிலே..உளுவாளிலே..

அப்படிங்கிற மாதிரி எதோ சவுண்ட் உட்டுட்டு
இதான் பல்லவின்னு, கவிஞர சரணம் எழுதச்சொன்னான்.

அப்புறம் நான் கவிஞரை பாத்து சிரிச்சுட்டே
ஒகே.. உளுவாளி-ன்னு ஒரு போர்டவச்சு அது ஒரு ஊர்பேருன்னு வச்சுட்டு
உளுவாளிலே...
 முத்து வந்தல்லோன்னு...
 எதாவது எழுதுங்கன்னு சொன்னாராம்...

அதனால... அண்ணே செவியர்
நெரயா அதுமாதிரி
டண்டணக்கா...டணக்குணக்கால்லாம்...
போட்டு பழகுகங்க..

ஹ..ஹா..சும்மா சொன்னேன்...
 
உண்மையிலேயே பாடல் அருமையாக இருக்குது.
வித்யாசேகரிடமோ, பரத்வாஜிடமோ
கொடுத்தால் அருமையாக வரும்.
வாழ்த்துக்கள்
கூடிய சீக்கிரம்
சினிமாவில் வலம் வருவீர்கள்
ஒரு யுகபாரதி, பா.விஜய், அறிவுமதி மாதிரி...

வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு
 

London footwear firm apologises...

ஏன் இந்த திருட்டு நாய்ங்க இது மாதிரி ஜட்டில, பிரால, செருப்புலன்னு எதாவது போடுறானுங்க அப்புறம் அதுபத்தி எதுவும் தெரியாதுன்னு சொல்லி மன்னிப்பு கேக்கிறானுங்க...?The Hindu Business Line : London footwear firm apologises for offending Hindu sentiments

75 students killed in inferno

Kumbakonam (TN), July 16. (PTI): At least 75 students, mostly girls, and some teachers were charred to death and 100 injured when a fire swept through a private middle school in this town in Tamil Nadu's Thanjavur district today.
Read More...

நடிகை அல்ல... அக்மார்க் அம்மா

மேட்டுக்குடி வாழ்க்கை, கான்வெந்த் படிப்பு... ஆனாலும் வாய்க்கு வாய் 'அம்மம... அம்மா..." நான் கண்டிப்பான அம்மா

அதிர்ச்சி தகவல்கள்...

சற்றுமுன்னர் நண்பர் பாலாஜி விகடனில் வந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

கும்பகோணம்:
தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து,
100க்கும் மேற்பட்ட மாணவிகள் பலி.

ஏதோ சத்துணவுக்கூடத்தில் தீ மூண்டுவிட்டது போலிருக்கிறது. ஸ்ரீரங்கம் திருமணமண்டப் அதிர்ச்சி, கடந்தவாரம் ஸ்பென்ஸர் பிளாசாவில் தீ.
நம்ம ஊருல என்னப்பா நடக்குது... ஏன் இதுமாதிரி அடிக்கடி நடக்குது? Welcome to Vikatan.com:

அசிங்கமான (எடத்து) குப்பை...

அண்ணே வணக்கம். இது அசிங்கமோ, உணர்வோ, மதமோ சம்பந்தப்பட்டது அல்ல, அப்படி எதாவது தப்புண்ணா மன்னிச்சுக்கோங்க. இது சும்மா நம்ம(அதாவது என்னோட) பொதுஅறிவ வளத்துகொள்ளத்தான், சரி பீடிகை போதும். நேற்றொரு வெசயம் கேளுவிப் பட்டேன் உண்மையா? ஆண்கள் 'சுன்னத்' செய்யப்படுவது போல - பெண்களுக்கும் உண்டாமே, நெசமா? (குறிப்பாக இங்க சிங்கை, மலேசியாவில்....). எனக்குத்தெரியும் அது சுத்தத்தை, சுகாதாரத்தை முன்னிறுத்தி செய்யபடுகிறது என்று.

எனக்கொரு கவிதை வேணுமடா...

நம்ப ரஜினி ராம்கியோட ரவுசப் பாருங்க...எனக்கொரு கவிதை வேணுமடா...

பஜ்ஜி தின்ன கதை...

நான் இல்லீங்க... நண்பர் 'சுவடுகள்' சங்கரோட பஜ்ஜி தின்ன கதை

Tuesday, July 13, 2004

அப்பப்பா...

ஹீம்... என்ன மாதிரி நேரம் கிடைக்கிறப்பல்லாம் எங்கயாவது மவுஸ் போனபோக்குல போய்ட்டே இருக்காம, சிலருக்கு இப்படியெல்லாம் பயனுள்ளவகையில எதாவது செய்யணும்னு தோணுது பாருங்களேன்... காதல்.காம் சிரமப்பட்டு நிறைய திரைப்பாடல்களின் வரிவடிவம் கொடுத்துள்ளார்கள். அது போல, கவிதைகளையும் - அழகிய படங்களுடன்... நம்ப உயிரெழுத்து கற்பகத்தோட கைவண்ண்ம் (அப்படின்னு நெனைக்கிறேன்!)

என்னமோ நடக்குது...

என்னமோ நடக்குது...

Techies join Pune rush, give up green card comforts

An article from Indian Express and posted the whole article here just to ensure everyone read it. Techies join Pune rush, give up green card comforts

Techies join Pune rush, give up green card comforts
Family ties, career opportunities, fat pay packets trigger reverse brain drain

SUDIPTA DATTA

Posted online: Tuesday, July 13, 2004 at 0030 hours IST

PUNE, JULY 12: • Vijay Mhaskar graduated from IIT Powai in the 80s and moved to the US in 1992. Ten years later, and after a stint at Sun Microsystems in San Diego, he moved back to India — to Pune and Veritas.

• Ram Pazhayannur, a mechanical engineer from Pune University, who went to the US in 1993, gave up a lucrative job with cGate in Minneapolis and returned home — to Pune and Persistent Systems.

• Abhay Patil, an MTech from IIT Powai, went to the US in 1993, but decided to shift base nine years later — to Pune and a startup CXO Systems

A reverse brain drain is on, and no one’s complaining. Many home-grown software professionals and engineers who went overseas in the late 80s and 90s are giving up the green card for an India posting.

‘‘India’s a fertile ground for out-of-the-box creative thinkers, reminiscent of the Silicon Valley of the 90s,” says Ram Pazhayannur, head of business development, at Persistent.

Having said that, Pazhayannur moved to personal reasons: ‘‘My parents are growing old and I wanted my daughter who’s about to enter first grade to be educated in India because education here is better than the West.” But moving back wouldn’t have been easy if he hadn’t found the right job. ‘‘It took me two years to find the right one,” he admits.

With Persistent undergoing one of the most important phases of its life cycle (read unprecedented growth), the onus is on him to take a 30-people company to a 3,000-people — and that’s a challenge he found difficult to refuse.

For Vijay Mhaskar too, the overriding reason was family, but the financial security that Veritas offered was a big draw. ‘‘By moving back I can have the best of both worlds... live at home and enjoy the good life because we are being paid so much better.” Ditto for Sharad Kamath, a manager at Veritas, who moved back from the US last October. ‘‘America is a good place to visit, look around, save some money... but I always wanted to come back to India.”

Once Abhay Patil, Director (India Operations) of CXO Systems, decided to come back to India in 2000. It took him two years to make the right career choice. As Pazhayannur knows, patience is the key. ‘‘It can never be a spur-of-the-moment decision. You have to prepare yourself mentally so that the transition is smooth.”

All agree that in the 10 years or so they were away, there have been a lot of positive changes: India has bridged the gap in the knowledge sector with the US; technology has improved; so has quality of life. But most important is the visible change in the work culture. Says Pazhayannur: ‘‘At least in the IT industry, there is no hint of red-tapism... we work to deadlines and have to deliver, which makes the job dynamic.”

Tarun Mathur, Chief Marketing Officer, Indus Software, pins it down to outsourcing. For a techie, this is where the action is because a great deal of technological work is being outsourced to India. No wonder the Americans are livid with outsourcing — they are not only losing jobs but trained personnel too.

Sunday, July 11, 2004

உயிரெழுத்து குழுமம்

மரத்திலேறி
கச்சேரிவைக்கிறது
சிறகு முளைத்த புல்லாங்குழல்
- சக்திகா

இது போன்ற பல நல்லகவிதைகளை
மரவண்டு தினம்கொண்டு சேர்ப்பார்.

என்னைப்போல்தான் அவர்களும்
கணிணியைக்கட்டியழுகிறார்கள்
என்றாலும், என்னைப்போல் படிப்பதோடல்லாமல்
பலரும் நல்ல பல கவிதைகள் எழுதுவதுண்டு.
அதனால் அவர்கள் வெறும் கணிணியர் மட்டுமல்ல
நல்ல கவிஞர்கள்

தொடர்ந்து தெரிந்துகொள்ள:
உயிரெழுத்து

Wednesday, July 07, 2004

என்னங்க Officela ரொம்ப வேலையா...

என்னங்க Officela ரொம்ப வேலையா... அதெல்லாம் எப்போதும் இருக்கிறதுதானே, அது கிடக்கட்டும், கொஞ்சம் இதப்படிங்க மொதல்ல...MSNBC - The Secret Lives of Wives: "The Secret Lives of Wives"

Saturday, July 03, 2004

கந்துவட்டித் தடைச் சட்டம்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னால் ஜெயலலிதா அரசு எக்கச்சக்கமாக கந்துவட்டிக்குக் கடன் கொடுக்கும் கூட்டத்தை வழிக்குக் கொண்டுவரும் வரையில் ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியிருந்தார். [Tamil Nadu Prohibition of Charging Exorbitant Interest Ordinance, 2003]. இது பின்னர் சட்டசபையில் சட்டமாக மாற்றப்பட்டது.

அப்பொழுது எல்லோரும் இதை வரவேற்றனர். தெருவெங்கும் 'கந்துவட்டியைத் தடை செய்த புண்ணியவதியே வாழ்க!' என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் எந்த செய்தித்தாளும், இதழும் இதன் விவரங்களைக் குறிப்பிடவில்லை. அவ்வளவு முட்டாள்தனமாக இயற்றப்பட்டுள்ளது இந்த சட்டம் என்று இப்பொழுதுதான் புரிகிறது.

இன்றைய தி பிசினஸ் லைன் செய்தியில் சென்னை உயர்நீதி மன்றம் மேற்படி சட்டத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. இந்த சட்டம் என்ன சொல்கிறது?கந்துவட்டித் தடைச் சட்டம்

Thursday, July 01, 2004

ஓடிவரும் முதுமை

ஓடிவரும் முதுமை

எ.வீ.பொங்கல்

ஊரில் அம்மா பொங்கலன்று இதுமாதிரிதான் ஒரு large scale குழம்பு வைப்பார்கள் - தெருவில் கேட்கும் அனைவருக்கும் கொடுப்பதற்கு. எனக்கு எல்லாத்தையும் விட அதுதான் பிடிக்கும்... எ.வீ.பொங்கல்