Sunday, July 25, 2004

பொழப்பு - ஹரணி

பொழப்பு

நான்கு மணி அலாரம் நிறுத்தி
ஐந்து மணிவரை தவணைத் தூக்கம்!
உறங்கும் பிள்ளைகள் விடுத்து
ஆறிருபது பாயிண்ட் டு பாயிண்டில்
"வாங்க சார் வணக்கம்!"
கண்டக்டர் சிரிப்புடன் தொடங்கும்
திங்கள்!
பேச்சு - சிரிப்பு - தலையாட்டல்
தஞ்சை - கும்பகோணம்
கும்பகோணம் - மாயவரம்
மாயவரம் - சிதம்பரம்
ஓட்டமும் நடையுமாய்
வருகைப் பதிவில் மணி பத்து...!
இயந்திரப் பகற்பொழுது
எச்சில் துப்பலாய் கரையும்
மாலை பாசஞ்சர் ரயில்
அரையடிக்கு ஒரு ஸ்டேஷன்
ரயில்விட்டு பேருந்திலேறி
தளர்ந்த நடையில்
வீடேற பிள்ளைகள்
உறங்கியிருக்கும்...!
உறங்கும் முகங்கள்
பார்க்க மறந்து போகுமெல்லாம்...
நாளையேனும் எக்ஸ்பிரஸ் பிடித்து
முன்னதாக வந்தால்
ஏதேனும் பேசலாம்
பிள்ளைகளிடம் உறங்கும்முன்!

- ஹரணி

சமீபத்திய குமுதம் ஜங்ஷனில் வந்த கவிதை.
உண்மையிலேயே இங்கு சிங்கையில்தான் என்றிருந்தேன்,
ஊரிலும் நாய் பொலப்புதானா!?

No comments: