Thursday, December 01, 2005

என்னாலா... தமிள் பேசுற...

தமிழை வாழும்மொழியாக தொடர சிஙகையில் தொடர்முயற்சி நடந்துவருகிறது. அதன் ஒரு முயற்சியாக கல்வி அமைச்சு அமைத்திருந்த பாடத்திட்ட மறுஆய்வுக்குழுவின் அறிக்கை சென்றவாரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி சிங்கப்பூர் பள்ளிக்கூடங்களில் அடுத்த ஆண்டு முதல் தமிழ்ப் பாட போதனையில் மாபெரும் மாற்றம் அமலாகிறது. தமிழ்ப் பாட போதனை இனிமேல் பேச்சுத் தமிழில் இருக்கும். தமிழ் மொழியில் மாணவருக்கு ஆயுள் முழுதும் நாட்டம் ஏற்படுமாறு செய்யப் பேச்சுத் தமிழில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும் எனக் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் அறிவித்தார்.

மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் பயில்வதில் இருக்கும் சிரமங்களைப் போக்குவதற்காகவும் தமிழ்ப் பேச்சுப் புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சிறிய சமூகமாய் உள்ள தமிழ்ச்சமூகத்தில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழ் மொழியை வீட்டிலும் வெளியிலும் அடிக்கடி தொடர்ந்து பேச வேண்டும். ஆங்கிலம் பேசும் சூழல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ் பேசுகின்ற சூழலை அதிக அளவில் நாம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் வருங்காலத்திலும் வாழும் என்று தெரிவித்தார் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்.

வகுப்பறைக்கு வெளியேயும் தமிழ் தழைக்க வழி

தமிழ் வாழும் மொழியாக இருக்கவேண்டுமானால் பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் அந்த மொழி வாழ வேண்டும். இது தான் நமக்குள்ள சவால் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முக ரத்னம் தெரிவித்தார்.

இந்தச் சவாலைச் சமாளிக்க இளையர் தங்களுக்குப் பிடித்தவற்றைச் சொந்தமாகச் செய்வதற் கான வாய்ப்புவசதிகளை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார் அமைச்சர்.
இளையர்கள் தங்கள் சொந்த பாணியை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அவர் களுக்கு முன் பிறந்தவர்கள் விரும்பும் பாணியில் இளையர்கள் செயல்படும் சூழல் இருக்கக் கூடாது. இளையர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். தகவல் சாதனங்களில் தங்களின் சொந்தக் கருத்துகள், எண்ணங்கள், விருப்பங்கள் எல்லாவற்றையும் தாங்கள் விரும்பும் பாணியில் வெளியிட அவர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

நம்முடைய இளையர்கள் பல தரப்பட்ட நடவடிக்கைகளிலும் நேரங்களிலும் தமிழ்மொழியைப் பயன்படுத்த வாய்ப்புகளை வழங்கும் பொறுப்பைக் குடும்பங்கள், பொதுத்தகவல் சாதனங்கள், சமூக அமைப்புகள் எல்லாம் பள்ளிக் கூடங்களுடன் சேர்ந்து நிறைவேற்றவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பள்ளிக்கூடத்தை விட்டுச் செல்லும் இளையர்கள் தங்களுடன் தமிழைக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் சிறியதாக இருப்பதால் தமிழ் மொழியை வாழும் மொழியாகக் கட்டிக் காக்கும் பணி சீன, மலாய்ச் சமூகத்தைவிட தமிழ் சமூகத்துக்குச் சிரமமிக்கது என் பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழ்ச் சமூகம் மிகவும் ஒற்றுமையாக இந்தக் காரியத்தைச் சாதிக்கவேண்டும் என்று சொன்னார்.

தமிழ்ச் சமூகம் பள்ளிக்கூடங்களுடன் ஒத்துழைத்துத் தமிழ்ப் பாடத் திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்க உதவுவதற்காகக் கல்வி அமைச்சு விரைவில் ஒரு குழுவை அமைக்கும் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நேற்று அறிவித்தார்.
அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்குத் தாங்கள் ஆதரவு அளிப்பதாகத் தமிழ்ச் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ள தாகவும் பரிந்துரைகள் தொடர்பில் பள்ளிக்கூடங்களுக்கும் மாணவருக்கும் எப்படி எப்படி எல்லாம் உதவலாம் என்பதைத் தெரிந்து கொள்ள சமூக அமைப்புகள் விரும்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இளையர்களை இணைத்துக்கொண்டு தமிழ்மொழி நிகழ்ச்சிகளை ஒளியேற்றுக!

இளையர்கள் தங்கள் கருத்துகளைக் கூறும், பகிர்ந்துகொள்ளும் தமிழ்முரசு செய்தித்தாளின் இளையர்முரசு பிற தகவல் சாதனங்களுக்கு நல்லதொரு வழிகாட்டி என்று கல்வி அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்னம் பாராட்டியிருக்கிறார். தமிழ் மொழியை வாழும் மொழியாக தொடர்ந்து கட்டிக் காப்பதில் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று குறிப்பிட்ட அமைச்சர், செய்திகளைத் தருவது மட்டுமின்றி, இளையர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். அத்தகைய வாய்ப்பை தமிழ் முரசின் இளையர் முரசு, மாணவர் முரசு ஆகியவை வழங்குவதாகவும் தொலைக்காட்சியும் இளையர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளை வழங்கலாம் என்றும் அமைச்சர் எடுத்துக் கூறினார். அத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே பேச்சுத் திறனை வளர்ப்பதாக அமையலாம் என்றும் அவர் சொன்னார்.

தமிழ்ப் பாடத்திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை மேலும் அறிய, கல்வி அமைச்சின் இணையத்தளத்திலிருந்து...

இது தொடர்பான விரிவான தகவல்களையும், பலரின் கருத்துக்களையும் கடந்த சில நாட்களாக தமிழ்முரசு வெளியிட்டிருக்கிறது அவற்றைப்படிக்க....

தகவல்களுக்கு நன்றி: தமிழ்முரசு, ஒலி மற்றும் கல்வி அமைச்சு.

பி.கு:
இந்தப்பதிவு நான் சிங்கைமுரசில் ஓரிரு வாரங்களுக்குமுன்னர் சிங்கை முரசு: என்றும் தமிழ்வாழ... என்ற தலைப்பில் இட்டது. தேவை(!?) கருதி இங்கே மறுபிரசுரம்:)

பாடத்திட்ட மறுபரிசீலனைக்குழுவின் பரிந்துரைப்படி சிங்கை போன்ற வெளிநாடுகளில் தமிழ் வாழ உரைநடைத்தமிழை விட பேச்ச்சுத்தமிழ் கண்டிப்பாக உதவி செய்யும். இது தமிழ்பேச மேலும் தூண்டும். தற்போது பெரும்பாலும் பள்ளியில் கற்கும் உரைநடைத்தமிழை அப்படியே பேசுவதைப் பார்க்கிறோம். இட்து மிகவும் செயற்கையாக இருக்கிறது. இது இங்கு வரும் தொலைக்காட்சி நாடகங்களில், நிகழ்ச்சிகளில்ல் பேசும் இளையர்களிடமும் வெகுவாகாப் பார்க்க முடிகிறது. அவ்வாறு பேச இயலாதவர்கள் தமிழ் பேசுவதையே தவிர்க்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

என்னைக்கேட்டால், மாற்றம் பள்ளியிலிருந்து வருவதைவிட வீட்டிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும், தொடர்ந்து தமிழ் வாழ நடைபெற்றுவரும் இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Monday, November 21, 2005

என்றும் தமிழ்வாழ...

என்றும் தமிழ்வாழ...

தமிழை வாழும்மொழியாக தொடர சிஙகையில் தொடர்முயற்சி நடந்துவருகிறது. அதன் ஒரு முயற்சியாக கல்வி அமைச்சு அமைத்திருந்த பாடத்திட்ட மறுஆய்வுக்குழுவின் அறிக்கை சென்றவாரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதன்படி சிங்கப்பூர் பள்ளிக்கூடங்களில் அடுத்த ஆண்டு முதல் தமிழ்ப் பாட போதனையில் மாபெரும் மாற்றம் அமலாகிறது. தமிழ்ப் பாட போதனை இனிமேல் பேச்சுத் தமிழில் இருக்கும். தமிழ் மொழியில் மாணவருக்கு ஆயுள் முழுதும் நாட்டம் ஏற்படுமாறு செய்யப் பேச்சுத் தமிழில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும் எனக் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் அறிவித்தார்.

மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் பயில்வதில் இருக்கும் சிரமங்களைப் போக்குவதற்காகவும் தமிழ்ப் பேச்சுப் புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சிறிய சமூகமாய் உள்ள தமிழ்ச்சமூகத்தில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழ் மொழியை வீட்டிலும் வெளியிலும் அடிக்கடி தொடர்ந்து பேச வேண்டும். ஆங்கிலம் பேசும் சூழல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழ் பேசுகின்ற சூழலை அதிக அளவில் நாம் உருவாக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் வருங்காலத்திலும் வாழும் என்று தெரிவித்தார் கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம்.

வகுப்பறைக்கு வெளியேயும் தமிழ் தழைக்க வழி

தமிழ் வாழும் மொழியாக இருக்கவேண்டுமானால் பள்ளிக் கூடத்துக்கு வெளியிலும் அந்த மொழி வாழ வேண்டும். இது தான் நமக்குள்ள சவால் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முக ரத்னம் தெரிவித்தார்.

இந்தச் சவாலைச் சமாளிக்க இளையர் தங்களுக்குப் பிடித்தவற்றைச் சொந்தமாகச் செய்வதற் கான வாய்ப்புவசதிகளை நாம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார் அமைச்சர்.
இளையர்கள் தங்கள் சொந்த பாணியை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். அவர் களுக்கு முன் பிறந்தவர்கள் விரும்பும் பாணியில் இளையர்கள் செயல்படும் சூழல் இருக்கக் கூடாது. இளையர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை சொந்தமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். தகவல் சாதனங்களில் தங்களின் சொந்தக் கருத்துகள், எண்ணங்கள், விருப்பங்கள் எல்லாவற்றையும் தாங்கள் விரும்பும் பாணியில் வெளியிட அவர்களுக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

நம்முடைய இளையர்கள் பல தரப்பட்ட நடவடிக்கைகளிலும் நேரங்களிலும் தமிழ்மொழியைப் பயன்படுத்த வாய்ப்புகளை வழங்கும் பொறுப்பைக் குடும்பங்கள், பொதுத்தகவல் சாதனங்கள், சமூக அமைப்புகள் எல்லாம் பள்ளிக் கூடங்களுடன் சேர்ந்து நிறைவேற்றவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பள்ளிக்கூடத்தை விட்டுச் செல்லும் இளையர்கள் தங்களுடன் தமிழைக் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் சிறியதாக இருப்பதால் தமிழ் மொழியை வாழும் மொழியாகக் கட்டிக் காக்கும் பணி சீன, மலாய்ச் சமூகத்தைவிட தமிழ் சமூகத்துக்குச் சிரமமிக்கது என் பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தமிழ்ச் சமூகம் மிகவும் ஒற்றுமையாக இந்தக் காரியத்தைச் சாதிக்கவேண்டும் என்று சொன்னார்.

தமிழ்ச் சமூகம் பள்ளிக்கூடங்களுடன் ஒத்துழைத்துத் தமிழ்ப் பாடத் திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை அமலாக்க உதவுவதற்காகக் கல்வி அமைச்சு விரைவில் ஒரு குழுவை அமைக்கும் என்று கல்வி அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் நேற்று அறிவித்தார்.
அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்குத் தாங்கள் ஆதரவு அளிப்பதாகத் தமிழ்ச் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ள தாகவும் பரிந்துரைகள் தொடர்பில் பள்ளிக்கூடங்களுக்கும் மாணவருக்கும் எப்படி எப்படி எல்லாம் உதவலாம் என்பதைத் தெரிந்து கொள்ள சமூக அமைப்புகள் விரும்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இளையர்களை இணைத்துக்கொண்டு தமிழ்மொழி நிகழ்ச்சிகளை ஒளியேற்றுக!

இளையர்கள் தங்கள் கருத்துகளைக் கூறும், பகிர்ந்துகொள்ளும் தமிழ்முரசு செய்தித்தாளின் இளையர்முரசு பிற தகவல் சாதனங்களுக்கு நல்லதொரு வழிகாட்டி என்று கல்வி அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்னம் பாராட்டியிருக்கிறார். தமிழ் மொழியை வாழும் மொழியாக தொடர்ந்து கட்டிக் காப்பதில் தகவல் தொடர்பு சாதனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று குறிப்பிட்ட அமைச்சர், செய்திகளைத் தருவது மட்டுமின்றி, இளையர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். அத்தகைய வாய்ப்பை தமிழ் முரசின் இளையர் முரசு, மாணவர் முரசு ஆகியவை வழங்குவதாகவும் தொலைக்காட்சியும் இளையர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகளை வழங்கலாம் என்றும் அமைச்சர் எடுத்துக் கூறினார். அத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களிடையே பேச்சுத் திறனை வளர்ப்பதாக அமையலாம் என்றும் அவர் சொன்னார்.

தமிழ்ப் பாடத்திட்ட பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளை மேலும் அறிய, கல்வி அமைச்சின் இணையத்தளத்திலிருந்து...

இது தொடர்பான விரிவான தகவல்களையும், பலரின் கருத்துக்களையும் கடந்த சில நாட்களாக தமிழ்முரசு வெளியிட்டிருக்கிறது. அவற்றைப்படிக்க....

Sunday, November 20, 2005

வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் பிரகாஷ்...


இந்த வார ஆ.வி, நாணயம் விகடன் பகுதியிலிருந்து...

தகவல் விற்று என்ன பெரிதாக சம்பாத்தித்து விட முடியும்? பிரகாஷைச் சந்திக்கிற வரை நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். நம்மூரிலும் குட்டி குட்டி பில் கேட்ஸ்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது. கோயம்பேடு பகுதியில் இருக்கிற பி.எஸ்.சி படித்த பிரகாஷ், (044-24781452) ‘என் வழி... தகவல் வழி’ என்று சூப்பர் சம்பாத்தியம் பார்க்கிறார்.

தினசரி பேப்பர் படித்ததும் என்ன ஆகிறது. மாதக் கடைசி எடைக்குத் தயாராகிறது. ஆனால், பிரகாஷ§க்கோ பேப்பர் என்பது தினசரி காலை எழுந்ததும் வீட்டுக்குள் வரும் களஞ்சியம். அதுதான் அவருக்குக் காசு! பேப்பர்கள் மட்டுமல்ல, இணையம், பிரபல நிறுவனங்களின் வருடாந்திர நிதி அறிக்கைகளைச் சேகரிப்பார்.

அவர் செய்வது, தகவல் சேகரிப்பதும் அதை, வகை வகையாகப் பிரிப்பதும். இந்தியாவில் எங்கே யார் என்ன தொழில் ஆரம்பிக்கிறார்கள்... அவர் களின் தொழில்நுட்பம் என்ன... தேவைப்படும் மூலப்பொருள் என்ன? என்பதுபோன்ற எல்லாத் தகவல் களையும் திரட்டுவார்.

உதாரணமாக, ஒரு டூவீலர் நிறுவனம் இவரை அணுகினால், யார், யார் எப்போது, என்ன வகையான வண்டிகள் தயாரித்தார்கள்? என்பதில் ஆரம்பித்து, அரசாங்க திட்டங்கள், ரோடுகளின் வளர்ச்சி, போட்டியாளர்களின் செயல் பாடுகள், உலக மார்க்கெட்டில் உள்ள தேவை, உதிரி பாகத் தயாரிப்பாளர் களின் ஜாதகம்... போன்ற செய்தித் தகவல்களை புள்ளி விவரங்களோடு தொகுத்து, ஒரு ஃபைலாகத் தரும் அளவுக்கு கையில் விவரங்கள் வைத்திருக்கிறார்.

இவரிடம் தகவல் பெறுபவர்களில் சிலர்... (மத்திய அரசின்)பெல், ஆல்ஸ்தாம், கிர்லோஸ்க்கர், கோத்ரெஜ், எஸ்கார்ட்ஸ், டாடா எனர்ஜி இன்ஸ்டிடியூட், ஜெர்மன் நாட்டின் சீமென்ஸ். இப்படி 1,700 நிறுவனங்கள்!

1999ல் ஒரு டேட்டா பேஸ் நிறுவனத்தில் வேலை செய்த பிரகாஷ் தைரியமாக, தானே தனியாகக் களமிறங்கி விட்டார். இந்தியாவில் இப்படிபட்ட நிறுவனங்கள் மொத்தம் ஏழு. அதில் ஐந்து மும்பையில். ஒன்று டெல்லியில். மீதமிருக்கிற ஒன்று & பிரகாஷ் நடத்துவது!

அவ்வளவு பெரிய நிறுவனங்கள், பிரகாஷ் மாதிரி நபர்களை ஏன் நாட வேண்டும்? அவர்களுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. சம்பளத்துக்கு ஆள் வைத்து, அவரை முடுக்கி விட்டுக்கொண்டு இருப்பதைவிட, காண்ட் ராக்ட் முறையில் இப்படி தகவல் வாங்குவது குறைந்த செலவுதானே!

பிரகாஷைப் பொறுத்தவரை, ஒருவருக்காக மட்டும் செய்தால், அது எனர்ஜி வேஸ்ட்! பத்து, நூறு என்று க்ளையண்ட்கள் பெருகப் பெருக அவருக்கு காசு கொட்டும். அதுதான், ECONOMY OF SCALE! பார்த்தீர்களா, மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து எல்லாவற்றுக்கும் ஒரு சந்தை வந்து விட்டது. தகவலுக்கு உள்பட.

பிரகாஷ் போலவே நீங்களும் முயன்று பார்க்கலாம். உங்களுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. எந்த மாதிரி நிறுவனங்கள், எங்கே தொழில் தொடங்கப் போகின்றன என்பதை முன்கூட்டித் தெரிந்துகொண்டு, ஆட்களின் திறமை பற்றிய தகவல்களையும் இணைத்தால், வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருபவராக இருவழி சம்பாத்தியம் பார்க்க முடியும். முந்துகிற பறவைக்குத்தான் இரை கிடைக்கும்.

‘மாநில முதல்வர், இன்று பஸ் நிலைய அடிக்கல் நாட்டப் போகிறார்’ என்று பேப்பர் செய்தி படிக்கிறீர்கள். ‘இன்று, அங்கே டிராஃபிக் அதிகமாக இருக்கும். மாற்றுப் பாதை தேடிவைத்துக் கொள்வது நல்லது!’ என்று உஷார் பார்ட்டிகளாக ஒதுங்காமல், ‘அங்கே கிரவுண்ட் என்ன விலை?’ என்று விசாரிப்பது, ‘பஸ் ஸ்டாண்டை ஒட்டிய வியா பாரங்களில் எது சூப்பர் லாபம்?’, ‘அங்கே என்னென்ன காண்ட்ராக்ட்கள் எடுக்க முடியும்?’ என்றெல்லாம் யோசிக்க ஆரம்பியுங்கள். பணம் உங்கள் பர்ஸைத் தேடிவரும். இந்தத் தகவல்களை, நாமேதான் பயன்படுத்த வேண்டும் என்பதுகூட இல்லை. இத்தகவல்களை யாரிடம், எப்படிக் காசாக்கலாம் என்று திட்டமிட்டால், சரியான லாபம் பார்க்க முடியுமே!

பஸ் ஸ்டாண்ட் என்றுதான் இல்லை. கோயில் கும்பாபிஷேகமாகட்டும்... புதிய கல்லூரியின் வரவாகட்டும். எல்லாவற்றிலும் உங்களுக்கான வாய்ப்பும் வருமானமும் இருக்கத்தான் இருக்கின்றன. இன்னும் எவ்வளவோ தேவைகள்! கொடுப்பதற்கு ஆளிருந்தால், வாரி எடுத்துக் கொள்ள எத்தனையோ பேர் தயாராக இருக்கிறார்கள்.

இதையே உங்கள் திறமைக்கான சவாலாக எடுத்துக்கொண்டு, யார் எதைத் தேடுகிறார்கள் என்று பாருங்கள்.

மிகப் பெரிய வியாபார வெற்றிக்கு, மூளையைவிட, ‘யாருக்கு எது தேவை... எது விலை போகும்?’ என்பதைச் சரியாக கணியுங்கள்... அதை, நேரத்தோடு செய்யுங்கள். அப்படி ஒரு திறன்தான் இந்த வேகம் நிறைந்த தகவல் காலத்தில் உங்களை செல்வபுரிக்கு அழைத்துச் செல்லும்.

வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் நண்பரே...

Thursday, November 17, 2005

இதயத்தை பாதுகாப்பது எப்படி?

இதயத்தை பாதுகாப்பது எப்படி?

சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை...

அடிக்கிற மழைக்குப் பயந்து சூரியன் ஓடிப்போய் எங்கோ ஒளிந்துகொள்ள, சென்னை நகரமே வீட்டுக்குள் முடங்கியிருந்த அந்த சோம்பலான நேரத்தில், வித்தியாசமான ஒரு நிகழ்ச்சிக்காகக் களைகட்டியிருந்தது, மியூசிக் அகாடமி அரங்கம்.

பிரபல இதயநோய் நிபுணர் டாக்டர் என்.சிவகடாட்சம் நடத்திய, ‘கார்டியாலஜி 2005’ என்னும் கருத்தரங்கம் அது. தமிழகத்தின் முன்னணி இதயநோய் நிபுணர்கள் பங்கேற்று சிறப்பித்த அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள், அதிர்ஷ்டம் செய்தவர்கள். ஆரோக்கியம் தொடர்பான பார்வையாளர் களின் அத்தனை சந்தேகங்களுக்கும் அவர்களிடமிருந்து தெளிவான விளக்கம் கிடைத்தது ஹைலைட்!

‘‘2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு உங்களுக்கு வழிகாட்டத் தான் இந்தக் கருத்தரங்கம்!’’ என்று டாக்டர் சிவகடாட்சம் தொடக்க உரையில் குறிப்பிட்டது, நிகழ்ச்சி முழுக்கவே எதிரொலித்தது. ஒவ்வொரு நிபுணர் தந்த விளக்கமும் ‘ஆரோக்கிய புதையலாகவே விளங்கியது.

திருச்சி, ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இதயநோய் நிபுணரான டாக்டர். சென்னியப்பன், உணவுக் கட்டுப்பாடு பற்றி நிகழ்த்திய கேள்வி&பதில் நிகழ்ச்சி, அற்புதமான விருந்து! அதிலிருந்து...

எதற்காக உணவுக் கட்டுப்பாடு?

முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற... என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கட்டுப்பாடான உணவு என்றால் என்ன? அதற்கென ஏதாவது அளவுகோல் உண்டா?

கண்டிப்பாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவையான சக்தி 1800 - 2400 கிலோ காலரி. இந்த சக்தியைப் பாதுகாப்பான உணவின் மூலம்தான் பெறவேண்டும். இந்த மொத்த அளவில், 65% சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 20% சக்தியை கொழுப்பிலிருந்தும், 15% சக்தியை புரதத்தில் இருந்தும் பெறுவதுதான் ஆரோக்கியமான உணவுமுறை!

இந்த சக்திகளை எந்த மாதிரி உணவுகளில் இருந்து பெறலாம்?

அரிசி, சர்க்கரை, கொழுப்பு, எண்ணெய் ஆகியவை உடலுக்கு சக்தி தரக்கூடிய உணவுகள். ஆனால், அதிக அரிசி உணவு, உடல் எடையைக் கூட்டும். அதிக சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அதனால், அரிசி யையும் சர்க்கரையையும் குறைத்துக் கொண்டு, காய்கறி மற்றும் கீரை வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியன பாதுகாப்பான உணவுகள்!

பருப்பு வகைகள், பால், மாமிசம் ஆகியவை உடல் வளர்ச்சிக்கு தேவையான உணவுகள். இவற்றில், புரதம் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோயாளிகள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கவேண்டும்.

கொழுப்புச் சத்து பற்றி?

அதைப் பற்றி விரிவாகவே கூற வேண்டும். கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) என்று இரண்டு வகை உண்டு. ஆடு, மாடுகளின் மாமிசம், முட்டை, பால், நெய், வெண்ணெய், வனஸ்பதி, தேங்காய், எண்ணெய் ஆகியவை கெட்ட கொழுப்பைத் தரும்.

தாவர உணவுகள், தாவர எண்ணெய், மீன், கொழுப்பு நீக்கிய பால், சோயா, பருப்பு, தானியங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைப்பது நல்ல கொழுப்பு. இவற்றிலிருந்து கொழுப்புச் சக்தியை பெறுவதுதான் ஆரோக்கியம்!

மார்க்கெட்டில் ஏராளமான எண்ணெய் வகைகள் உள்ளன. எந்த எண்ணெய் இதயத்துக்கு நல்லது?

‘சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் (தேங்காய் எண்ணெய், நெய், வனஸ்பதி ஆகியன) இதயத்துக்கு எதிரானவை. அவற்றை தவிர்த்துவிட வேண்டும்.

‘அன் சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட்’ வகையில் வரும் எண்ணெய்கள் இதயத்துக்கு நண்பர்கள். இவற்றிலும்கூட, சூரியகாந்தி, சோயா எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற ‘பாலி அன் சாச்சுரேட்டட்’ வகை எண்ணெய்களைத் தான் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது கடலை எண்ணெய் போன்ற ‘மோனோ அன்சாச்சுரேட்டட்’ வகை எண்ணெயிலுள்ள சத்தும் உடலுக்கு தேவை என்பதால், இவற்றையும் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

இவற்றைவிட ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’ வகைதான் இதயத்துக்கு மிக நல்ல தோழன். இந்தச் சத்தை கம்பு, கேழ்வரகு, பட்டாணி, வெந்தயம், கடுகு, கோதுமை போன்ற உணவுகள் மூலம் அபரிமிதமாகப் பெறலாம்.

எப்போதுமே ஒரே வகை எண்ணெயை உபயோகிப்பது நல்லதல்ல. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஆனால், இந்த நல்ல வகை எண்ணெய்களிலும்கூட வறுக்க, பொரிக்கக் கூடாது. ஒரு முறை உபயோகித்த எண்ணெயை பல முறை உபயோகிக்கக் கூடாது.

பயமில்லாமல் சாப்பிடக் கூடிய உணவு வகை எதுவுமே இல்லையா?

ஏன் இல்லாமல்? இயற்கை கொடுக்கும் காய்கறிகள் உள்ளனவே! அவை இதயத்தின் நண்பர்கள். அதிக சத்து, குறைந்த கொழுப்பு, தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின் சத்துக்கள் அடங்கியவை. குறைந்த கலோரியில் அதிக சத்து கொடுப்பவை. நாம் அதிகம் சாப்பிட்டாலும் எடையும் போடாதவை. எப்போதும் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். தொட்டுக்க வைப்பதை சாதமாகவும், சாதத்தைத் தொட்டுக்கவும் உபயோகப்படுத்துங்கள். ஆரோக்கியம் தேடி வரும்!

எந்தக் காய்கறிகள் என்ன சத்தெல்லாம் தருகின்றன என்று சொல்ல முடியுமா?

கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியவை நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் ஆகியவற்றைக் கொடுக்கின்றன. காலிஃப்ளவர், கோஸ், முருங்கைக்காய் ஆகியவை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் சத்தையும், வாழைக்காய் இரும்புச் சத்தையும், சௌசௌ கால்சியம் சத்தையும் தருகின்றன. அவரைக்காயிலிருந்து புரதம், நல்ல கொழுப்பு, நார்ச்சத்து கிடைக்கிறது. சுண்டைக்காயிலும் நார்ச் சத்துதான். வெள்ளரிக்காயில் எல்லாச் சத்துக்களுமே உள்ளன. வெங்காயம், பூண்டு இரண்டுமே நல்லது.

கீரைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சத்துக்களின் தொழிற்சாலைகள் அவை. இரும்புச் சத்து, கால்சியம், நார்ச்சத்து, தாது உப்புக்கள் எல்லாமே கீரைகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றில் கெட்ட கொழுப்பும் கலோரி யும் குறைவு. பழங்களிலும் அபரிதமான சத்துக்கள் கிடைக்கின்றன. நார்ச்சத்தை அள்ளி வழங்குபவை பழங்கள். இதயத் துக்கு நார்ச்சத்து மிகவும் நல்லது.

எல்லோருமே நினைவில் கொள்ள வேண்டியது & உயிர் வாழத்தான் உண்ண வேண்டும். உண்ணுவதற்காகவே உயிர் வாழக் கூடாது!

கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த இதயநோய் நிபுணர் டாக்டர் புவனேஸ்வரன், உடல் எடையை ஒரு உவமையுடன் விளக்கினார்.

‘‘உடல் எடை என்பது பேங்க் பாலன்ஸ் மாதிரி. சாப்பிடச் சாப்பிட, ஏறிக்கொண்டேதான் போகும். பணத்தை எடுத்து செலவழித்தால்தானே பாலன்ஸ் குறையும்? அதுபோல, உடலின் சக்தியை செலவழித்தால்தான் எடை குறையும்!’’ என்றவர் தந்த ஹெல்த் டிப்ஸ்...

எடை அதிகம் இருப்பவர்களுக்கு, கழுத்து குட்டை யாக இருக்கும். அவர்கள் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். குறட்டை விடுபவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால், எடையைக் கட்டாயம் குறைக்க வேண்டும்.

எல்லோருமே காலையில் அதிகம் சாப்பிட்டு, இரவில் குறைவாக சாப்பிடுவது நல்லது. காலையில் ஒரு மகாராஜா போலவும் (விருந்து) இரவில் ஒரு பிச்சைக்காரர் போலவும் (குறைவான உணவு) சாப்பிட வேண்டும் என்பார்கள்.

மெனோபாஸ் வரைக்கும் பெண்களுக்கு இதய நோய் ஆபத்து குறைவு. ஆனால், அதன் பிறகு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால், இதயம் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை!

‘‘டயட்டினால் எடையைக் குறைக்கலாம். ஆனால், உடற்பயிற்சியால்தான் அதை அப்படியே பராமரிக்க முடியும்’’ என்று சொன்ன இதய அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எம்.அசோக்குமார், சுவாரஸ்யமான தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘நாம் சாப்பிடுவதற்கு உபயோகப் படுத்தும் வாழையிலையில், குறுகி இருக்கும் இடது பக்கத்தை ராமர் பக்கம் என்பார்கள். விரிந்திருக்கும் வலது பக்கத்தை அனுமார் பக்கம் என்பார்கள். குறைத்து சாப்பிடவேண்டிய உப்பு, ஊறுகாய், சிப்ஸ், பாயசம் போன்ற வற்றை ராமர் பக்கத்திலும், அதிகம் சாப்பிடவேண்டிய பொரியல், கூட்டு, அவியல் போன்றவற்றை அனுமார் பக்கத்திலும் வைப்பார்கள். இதற்குக் காரணம் இருக்கிறது. வலது கையில் சாப்பிடும் நமக்கு, இடது பக்கத்தில்... அதாவது, ராமர் பக்கத்தில் உள்ளவற்றை அடிக்கடி எடுத்து சாப்பிடுவது சிரமமாக இருக்கும். அதனால், அவற்றை குறைவாகவே உண்ணுவோம். ஆனால், நம் கைக்கு வசதியான அனுமார் (வலது) பக்கத் திலுள்ள காய்கறிகளை அதிகமாக உண்ணுவோம். இப்படி, உணவுக் கட்டுப்பாட்டை விருந்து படைக்கும் முறையிலேயே கொண்டு வந்தவர்கள் நம் முன்னோர்!’’ என்று அவர் சொன்னபோது, பலத்த கரகோஷம்!

‘‘ஹர்ரி (அவசரம்), கறி (மாமிசம்), வொர்ரி (கவலை) மூன்றையும் நிறுத்தினால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்!’’ & ஹார்வி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நரேஷ்குமார் சொன்ன பஞ்ச் இது!

‘‘எடை குறைப்பது என்னவோ பெரிய காரியம் என்று பலரும் சலித்துக்கொள்கிறார்கள். ‘அது ரொம்ப சாதாரண விஷயம்’ என்பதற்கு இதோ ஒரு உதாரணம்!’’ என்ற டாக்டர் சிவகடாட்சம் மேடையில் அறிமுகப் படுத்தியது, நடிகை ஸ்ரீப்ரியாவை!

இரண்டு வருடங்களுக்கு முன்பு 105 கிலோ இருந்த ஸ்ரீப்ரியாவின் இப்போதைய எடை 69 கிலோ.

‘‘அதுக்கு மேல என்னால குறைக்க முடியலீங்க’’ என்று சிரித்தபடியே பேசிய ஸ்ரீப்ரியா, ‘‘எங்கப்பா சர்க்கரை நோயாளி. ஹார்ட் அட்டாக்ல இறந்தார். இந்த விஷயம்தான் என்னோட உடல்நலன்ல அக்கறை கொள்ள வெச்சது. என் எடையைக் குறைச்சே ஆகணும்கிறதுல உறுதியா இருந்தேன். வாக்கிங், டயட் இரண்டையும் டாக்டர் சொன்னபடி ஃபாலோ பண்ணி னேன். இதனால என்னோட உயர் ரத்த அழுத்தமும் குறைஞ்சிருக்கு!’’ என்றார், சந்தோஷமாக.

நெஞ்சு வரை வயிறு?

கருத்தரங்கில் கவிதை ஒன்றை வாசித்தார், டாக்டர் சிவகடாட்சத்தின் மனைவி & சாந்தகுமாரி சிவகடாட்சம்.

‘நான்கு வேளை சாப்பாடு
அளவில்லா நொறுக்குத் தீனி
நாலு காலு ஜீவன்கள்
ஆடு, மாடு, என்று உள்ளே தள்ளி,
நிலை தடுமாறி விழும்வரை
பட்டை அடித்து
நீராவி இஞ்ஜின் கணக்கா
புகை விட்டு
நெஞ்சுவரை வயிறு பெருக்கினால்
நல் இதயம் எங்கே கிட்டும்?’

என்ற அவரது வரிகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைதட்டல்! நிகழ்ச்சிக்கு வந்திருந்த அப்போலோ மருத்துவமனையின் சேர்மன் பி.சி.ரெட்டியும் தன் உரையில் இதுபற்றி குறிப்பிட்டு, பாராட்டினார்.

கொரியர் கொண்டு வந்தாலும்?

மருத்துவமனைகளின் இன்றைய யதார்த்த நிலையை ஒரு ஜோக் மூலம் சுட்டிக்காட்டினார், விழாவில் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர்.

‘‘ஆஸ்பத்திரிக்கு வந்த ஒரு ஆள், டாக்டர் கிட்ட போய் வாயைத் திறக்கறதுக்குள்ள அவன் வாயில தெர்மா மீட்டரைச் சொருகிட்டார் டாக்டர். அப்படியே பிரஷரும் பார்த்துட்டு, ‘நெக்ஸ்ட்’னு அடுத்த டெஸ்டுக்கு அனுப்பிட்டார். அங்கே அவனுக்கு எக்ஸ்ரே எடுத்தாங்க. அங்கேயும் அவனை யாரும் பேச விடலை. அடுத்ததா, பிளட் டெஸ்ட், ஸ்கேனிங்னு எல்லாம் எடுத்துட்டு, ‘போய் ரிசல்ட் வாங்கிட்டு டாக்டரைப் பாருங்க’னு க்யூவுல உக்கார வைச்சுட்டாங்க.

பக்கத்துல இருந்தவரு, ‘சும்மா காய்ச்சல்னு காட்ட வந்தேன். அதுக்கே காலையிலருந்து ஏகப் பட்ட டெஸ்ட் பண்ணி, உக்கார வச்சுட்டாங்க!’னு அலுத்துக்கவும், நம்ம ஆள் அப்பாவியா சொன்னான் & ‘நீங்களாவது காய்ச்சலுக்காக வந்தீங்க. நான் கொரியர் தபால் கொண்டு வந்தவனுங்க!’’

நன்றி: விகடன்.

Friday, October 28, 2005

இந்தியாவும் சிங்கப்பூரும், இந்தியரும் சிங்கப்பூரரும்...

சமீப காலங்களில் நான் கேள்விப்படும் சேதிகள் மூலம் இந்தியாவும் சிங்கப்பூரும் முன்னெப்போதும் இல்லாத அளவு பொருளியல் ஒத்துழைப்புடன் செயல்படுவதாகத் தெரிகிறது. இந்தக் கலாச்சார, பொருளியல் தொடர்புகள் பல காலமாக இருந்தாலும் சில மாதங்களுக்கு முன் கையெழுத்திடப்பட்ட (29 ஜீன் 2005) சிங்கப்பூர்-இந்தியா பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு (Comprehensive Economic Cooperation Agreement (CECA) இதற்கும் பெரும் ஆதராமாக விளங்குகிறது. இந்தியா இம்மாதிரி ஒப்பந்தம் வெளிநாட்டொன்றுடன் செய்துகொள்வது இதுதான் முதல் முறை.

இந்த ஒப்பந்தத்தின் முழுப்பிரதியும், முன்னர் நடந்த கடிதப்பரிமாற்றங்களும் இங்கே...

இந்த ஒப்பந்தத்தின் பயனாக நான் கண்கூடாக கவனித்துவரும் மாற்றங்கள் சிலவற்றை, நான் சிங்கை ஊடகங்கள் மூலம் அறிந்த அளவில், எனக்குத்தெரிந்த/புரிந்த அளவில் இங்கு பகிர்ந்துகொள்ள ஒரு முயற்சி. இது தொடர்பான மேல் விபரங்களையும், இந்தப்பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன், நன்றி.

கல்வித்துறை:

சமீபத்தில் சிங்கையின் கல்வி அமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்கள் தலைமையில் கல்வி அமைச்சின் பிரதிநிதிகளும், சில பள்ளிகளின் முதல்வர்களும், ஆசிரியர்களும் டெல்லி, சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு பயணித்து அங்குள்ள பல பள்ளிகளுக்கு வருகைதந்து அவர்களிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று தெரிந்துவந்துள்ளனர். மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்றத்துக்கும் ஏற்பாடாகியுள்ளது.

சிங்கையின் திரு. கண்ணப்பன் செட்டியார் அவர்களின் ஸ்டேன்ஷ்ஃபீல்ட் சென்னையில் ஒரு வெளிநாட்டுக்கல்வி அளிக்கும் ஒரு பள்ளியையும், சிங்கையின் திரு. சந்த்ரு அவர்களின் மாடர்ன் மாண்டசோரி நிறுவனம் டெல்லி குர்காவனில் ஒரு பாலர் பள்ளியையும் அமைத்துள்ளது.

அதேபோல் இந்தியாவின் பாரதிய வித்யாபவன் பவன்'ஸ் பன்னாட்டுப்பள்ளியை
கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறது. இங்கு CBSE பாடமுறை பின்பற்றப்படுவதால் பெரும்பாலான வட, தென் இந்தியர்கள் (தமிழ் இருந்தாலும் - தமிழர்கள் குறைவு) இங்கு படிக்கின்றனர். இந்தப்பள்ளிக்கு கிடைத்த வரவேற்பினால், இந்தவருடம் இன்னொரு இடத்திலும் தனது இரண்டாவது பள்ளியை ஆரம்பிக்கிறது. டில்லி பொதுப்பள்ளியும் (Delhi Public School) ஏற்கனவே இங்கு ஒரு பள்ளி நடத்தி வருகிறது. ஐஐடி-யை இங்கு ஒரு கிளை ஆரம்பிக்கவைக்கும் முயற்சி நடந்துவருகிறது. ஏற்கனவே அணணாமலை, பாரதியார், சென்னை, இந்திரா காந்தி பல்கலைக்கழகங்க்ள் இங்குள்ள நிறுவங்கள் மூலம் பட்டக்கல்வி அளித்து வருகிறது. நீண்ட நாட்களுக்குபிறகு இந்திய தமிழ் பேராசிரியர்கள் உதவியுடன் யுனிசிம்(UniSIM) தமிழ் பட்டக்கல்வியை வழங்க இருக்கிறது. கடந்தமாதத்தில் சென்னை, டில்லியில் சுற்றுலாத்துறை & கல்விஅமைச்சு ஒத்துழைப்பில் இங்குள்ள பல்கலைக்கழகங்கள், பலதொழில்கல்லூரிகள், பள்ளிகள் கலந்துகொண்ட ஒரு கல்விக்கண்காட்சி நடந்தது.

சென்னையிலுள்ளவர்கள் சிங்கப்பூர் கல்வி பற்றி மேலும் அறிய தொடர்புகொள்ள:
http://www.singaporeedu.gov.sg/htm/stu/stu010b.htm#2

மேலும் சிங்கை கலவி/கல்விமுறை பற்றி அறிய:
http://www.singaporeedu.gov.sg/

வங்கித்துறை:

இந்த புதிய ஒப்பந்தம் இங்குள்ள DBS, OCBC மற்றும் UOB வங்கிகள் இந்தியாவில் அடுத்த 4 வருடங்களில் 15 கிளைகள் வரை ஏற்படுத்த வகைசெய்கிறது. ஏற்கனவே டிபிஎஸ் வங்கி இந்தியாவில் அதன் சேவையை வழங்கி வருகிறது. அதேபோல் இந்தியாவின் HDFC, ICICI வங்கிகள் டிபிஎஸ்/POSB வங்கிகளுடன் இணைந்து மின்னியல்முறையில் பணமாற்றும் சேவை(tracking வசதியுடன்), தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்தும் வசதி போன்றவற்றை வழங்கும். இந்தியன் வங்கி, யூகோ, ஸ்டேட் பாங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் ஐசிஐசிஐ-யும் ஏற்கனவே ஒரு கிளை ஆரம்பித்து நிறுவனங்களுக்கான கணக்குகளை நடத்தி வருகிறது. இது மேலும் விரிவடையலாம், எளிதாக இங்குள்ள டிபிஎஸ் கணக்குகளிலிருந்து இந்தியாவில் உள்ள கணக்குக்கு இணையம் மூலம் எல்லா பரிவர்த்தனைகளையும் செய்ய இயலும்.

துறைமுகம், விமானங்கள், விமான நிலையம்:

தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்கனவே சிங்கையின் துறைமுக ஆணைக்கழகம் (Port Authority of Singapore, PSA) முதலிட்டு நடத்திவருகிறது.

புதிதாக இந்தியாவின் ஏர்சகாரா, சிங்கையின் ஜெட்*ஏசியா நிறுவனங்கள் தங்களது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். சென்னைக்குதான் வழக்கம்போல விலையே தவிர டெல்லி, கல்கத்தாவுக்கு $350க்கெல்லாம் கூட சென்று திரும்ப விமான டிக்கட் கிடைக்கிறது.

இந்தியாவில் கடந்த ஓரிருவருடங்களாக பேச்சுவார்த்தையிலும், டெண்டரிலும் இழுத்துக்கொண்டிருக்கும் பெருநகரங்களின் விமானநிலையங்களை தனியார் ஏற்று நடத்தும் முயற்சியில் சிங்கையின் சாங்கி விமானநிலயத்தை நிறுவகிக்கும் Civil Aviation Authority of Singapore (CAAS), இந்தியாவின் பார்தி (Bharti) நிறுவனத்துடன் களத்தில் இறங்கியிருந்தது. ஆனால், சமீபத்திய நிலவரப்படி CAAS சற்றே பின்வாங்கி முதலீடு செய்யாமல் ஆலோசனைச்சேவை மட்டும் செய்யப்போவதாகவும், அபுதாபி விமானநிலையத்தை நிறுவகிக்க முயற்சி செய்வதாகவும் அறிகிறேன்!

சுற்றுலாத்துறை:

சிங்கப்பூரின் சுற்றுலா வளார்ச்சித்துறை சிங்கப்பூருக்கு இந்தியரை மேலும் ஈர்க்க, திரைப்படத்துறையை தேர்ந்தெடுத்துள்ளது. இதன்மூலம் இவர்களின் (கூட்டு) முதலீட்டில், ஹிருத்திக்ரோஷன், பிரியங்கா சோப்ரா நடிக்கும் "க்ரிஷ்" (Krrish) என்றொரு ஹிந்தித் திரைப்படத்தை ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் இயக்குகிறார். படத்தின் ஆரம்பிவிழா பூஜை சிங்கப்பூர் விலங்கியல் பூங்காவில் நடைபெற்றது. படப்பிடிப்பு ஆர்ச்சர்ட் சாலை, லா பா சாட், ராபின்ஸன் சாலை போன்ற இடங்களில் நடைபெற்றுவருகிறது.

இதுமட்டுமல்லாமல், "The Film in Singapore!" சிங்கப்பூர் என்ற 10 மில்லியன் வெள்ளி திட்டத்தின்கீழ் உலகப்பிரபலங்கள் இங்கு திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எடுத்தால் ஏற்படும் செலவில் 50 சதவீதம் வரை சுற்றுலா வாரியம் அளிக்கும் என்றுதெரிகிறது. கடந்தவருடத்தில் நடிகை குஷ்பு-வின் நாடகம் ஒன்று இங்கு படப்பிடிப்பு நடத்தியதாக கேள்விப்பட்டேன் - இந்தத்திட்டத்தின் கீழ்.

மருத்துவச்சுற்றுலா, கல்விச்சுற்றுலா போன்ற சுற்றுலாக்கலுக்கும் ஏற்பாடு செய்கிறது.

மருத்துவத்துறை:

மருத்துவத்துறையிலும் ஒத்துழைக்கும், மருத்துவர் பரிமாற்ற ஏற்பாடு நடந்துவருகிறது.
சென்ற வாரம் இங்கு வருகைபுரிந்த இந்திய சுகாதரத்துறை அமைச்சர் திரு. அன்புமணி கூறும்போது, சிங்கையில் இந்திய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மருத்துவர்களை அனுமதிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடப்பதாகவும், புதுவையின் ஜிப்மர் மருத்துவமனை மூலம் மருத்துவர் பரிமாற்றம் நடக்க இருப்பதாகவும் கூறினார். மேலும், உயிரணு, பறைவைக்காய்ச்சல் ஆராய்ச்சியில் ஒத்துழைக்கவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொழில்துறை:
தொழில்துறையில் பல முன்னேற்றம் நடந்துவருகிறது. இந்தியாவில் தயாராகி இங்கு இறக்குமதி செய்யும் அனைத்துப்பொருளுக்கும் ஒட்டுமொத்த வரிவிலக்கு அளிக்கப்பட இருக்கிறது. இதேவிதமாய் இந்தியாவிலும்.

சிங்கையின் பிரதமர் திரு. லீ இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் கூறியது: "இருபக்கமும் உள்ள வர்த்தகர்களுக்கு, பல வாய்ப்புகள் உண்டு அவற்றை பயன்படுத்தி தனது வர்த்தகத்தைப்பெருக்கலாம். வானமே எல்லை " என்று குறிப்பிட்டார். உடனிருந்த இந்தியப்பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களும் அதை வரவேற்றார்.

பல புதிய இந்திய நிறுவங்கள் இங்கு தொழில் தொடங்கிவருகின்றன. அதேபோல் சிங்கை அரசுத்துறை நிறுவனமான JTC குழுமத்தின் அசெண்டாஸ் நிறுவனம் பெங்களூரில் டாட்டா குழுமத்துடன் சேர்ந்து ஒரு தகவல்தொழில்நுட்ப பூங்காவையும், பின்னர் ஹைதரபாத்தில் தொழில் பூங்கா மற்றும் வீட்டு வசதியையும், சென்னையின் சிறுசேரியில் சமீபத்தில் ஒரு தகவல்தொழில்நுட்ப வளாகத்தையும் கட்டி நிறுவகித்து வருகிறது. மஹிந்திரா சிட்டி வடிவமைப்பிலும் முதலிட்டு, உதவி வருகிறது. இன்னொரு நிறுவனம் சிறுசேரியில் வீடுகள் கட்டுவதாக சேதி.

இங்கு சமீபத்தில் சிங்கப்பூர்-இந்திய வர்த்தக கூட்டமைப்பு டிபிஎஸ் வங்கியுடன் இணைந்து நடத்திய சிறந்த இந்திய வர்த்தகர்களுக்கான விருது வழங்கும் விழாவில் துணைப்பிரதமர் பேரா. எஸ். ஜெயகுமார் பேசும்போது, இந்தியர்கள் மேலும் சிறப்பாக வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும் அதற்கு முன்னெப்போதும் விட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

பிஸ்னஸ்டைம்ஸ் நாளிதழ்- நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து கடந்த ஒருவருடத்துக்குமேலாக நடத்திய இந்தியாவின் சமூகம், பலம், பலவீனம், தொழில் வளார்ச்சி, வர்த்தகம் போன்ற பல்வேறு அம்சங்களின் புள்ளி விவரங்களின் அடிப்படியிலான ஆய்வின் முடிவை வெளியிடும் கருத்தரங்கில், கடந்தவாரம் பேசிய கல்வியமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்னம்,

"இந்தியாவில் குவிந்துகிடக்கும் வர்த்தக வாய்ப்புகள் பற்றிய புரிந்துணர்வு உயர்ந்து கொண்டிருந்தாலும், அது பற்றிய சரியான தகவலை ஒரு பெரிய இடைவெளி பிரிக்கிறது. இதைக் குறைக்க,

- தகவல் சாதனங்கள்
- சிந்தனையாளர் அமைப்புகள் (தெற்காசிய ஆய்வுக்கழகம், என்.டி.யு ஆய்வுக்கழகம், லீ குவான் யூ பொதுக்கொள்கைப்பள்ளி...)
- நிதிக் கழகங்கள்
- பெரிய எண்ணிக்கையிலான இந்தியக்குடிமக்கள்
- வர்த்தக சபைகள்

என்ற ஐந்து பிரிவினரும் பெருவாரியாக உதவலாம். அவர்களிடமிருந்து வர்த்தகர்கள் இந்த நன்மைகளைப் பெறலாம். இந்தியாவைப் பற்றிய முண்ணனி தகவல் பெட்டகமாக சிங்கப்பூர் விளங்கவேண்டும்."

என்று கூறினார்.

பேச்சின் முழு விபரம்:
http://app.sprinter.gov.sg/data/pr/20051019996.htm

இந்த ஆய்வின் முடிவின்படி இந்தியாவில் முதலீடு செய்ய சிறந்த மாநிலங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பத்து இடங்கள்

1. மகராஷ்டிரா 2. டில்லி 3. தமிழ்நாடு 4. ஆந்திரா 5. கர்நாடகா
6. குஜராத் 7. சண்டிகார் 8. உ.பி 9. பஞ்சாப் 10. ராஜஸ்தான்.

ஓரிரு வாரங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து சில (இளம்) பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. மிலிந்த் டியோரோ அவர்களின் தலைமையில் வந்திருந்தார்கள். அவர்களும் இங்குள்ள அமைச்சர்களுடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் மற்றும் வர்த்தகர்களுடனும் கலந்துரையாடி வர்த்தகத்தை பெருக்க வழிவகை செய்தனர். இந்தக்கருத்தரங்கில் சிங்கையின் சமூக வளர்ச்சி, இளையர் மற்றும் விளையாட்டுத்துறை அமச்சர் Dr.விவியன் பாலகிருஷ்ணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அமைச்சர்களும், அரசும் இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் மிக நல்ல அபிப்ராயமும், ஈடுபாடும் வைத்திருந்தாலும் மக்கள் அளவில் இன்னும் செய்ய நிறைய இருக்கிறது. இந்த அடிப்படைஉறவு மேலும் வளர்ந்தால் இன்னும் பல செய்யமுடியும்.

இதனை வலியுறுத்தத்தான் சமீபத்திய இந்திய சுற்றுப்பயணம் முடித்து சிங்கை திரும்பியபோது அமைச்சர் தர்மன் கூறியது:
"இங்குள்ளவர்கள் மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய, வளர்ச்சியடைய மனம்மாற்றம் மிக அவசியம்"

இந்தத்தகவல்கள் பெரும்பாலும் இங்குள்ள தமிழ் ஊடகங்கள்வழி அறிந்ததென்றாலும், ஊடகங்கள் செய்திகள் அளிப்பதன்வழி சேவையைச் செய்தாலும், சிங்கையில் 'இந்திய இந்தியர், சிங்கை இந்தியர்' உறவுக்கு மேலும் செய்யலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

கடந்தவருடம் இதே மாதம், என்னுடைய வலைப்பூ ஆசிரியர் வாரத்தில் நான் எழுதிய சிங்கையில் இந்தியர் நிலை என்ற பதிவுகள் இதற்கு தொடர்புடையதாயிருக்கும்.

அனைவருக்கும் எனது
தீபாவளி மற்றும்
ரமலான் நோன்புப்பெருநாள்
வாழ்த்துக்கள்.

Saturday, October 15, 2005

புதிய தமிழ் யுனிக்கோடு - தமிழக அரசு அறிவிப்பு

புதிய தமிழ் யுனிக்கோடு பற்றிய உங்கள் கருத்தை தமிழக அரசுக்கு சொல்ல..
என்ற இந்தப்பதிவின் முதல் பதிப்பை ப்ளாக்கர் பகவான் ஸ்வாகா செய்துவிட்டதால், மீண்டும் இங்கே...
(தலைப்பு நீளமாக வைக்கும்போதே நினைத்தேன். கபளீகரம் செய்த தகவல் தந்த பரி-க்கு நன்றி!)

வணக்கம்.

தமிழக அரசு புதிய தமிழ் யுனிக்கோடு பற்றிய நமது கருத்துக்களை வரவேற்கிறது. இது பற்றிய அறிவிப்பு இங்கு வெளியாகியிருக்கிறது.
http://www.tunerfc.tn.gov.in/

உங்கள் கருத்துக்களை comments-tune@tamilvu.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ
http://www.tamilvu.org/slet/tune_comments/html/tufeedbk.htm என்ற இணையப்பக்கம் மூலமாகவோ தெரியப்படுத்தலாம்.

அதனால், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து யுனிக்கோடை அதிகாரபூர்வ எழுத்துமுறையக்க முயற்சிசெய்வோம். அரசு சட்டத்தின் மூலம் தமிழ் ஊடகங்களையும் யுனிக்கோடுக்கு மாற்ற கோரிக்கை வைப்போம்.

மேலும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களுக்கான (ITES) புதிய கொள்கைகளும் (2005) வெளியிடப்பட்டிருக்கிறது.

Thursday, October 13, 2005

அப்படி ஒரு பாடலே.... இல்லையா!?

வணக்கம்.

"ஔ" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஏதாவது ஒரு (திரைப்படப்)பாடல் உங்களுக்குத் தெரியுமா!?
அல்லது அப்படி ஒரு பாடலே இல்லையா!?
அதோடு "ஃ"ல் ஏதாவது பாடல் சொன்னால்கூட இன்னும் வசதி.

அது சரி... ஏன் இப்படி ஒரு ஆராய்ச்சி என்று யாராவது கேட்பவர்களுக்கு:

இங்கு சிங்கையின் ஒலி 96.8 பண்பலையை வானொலியிலும், இணையம் மூலமாகவும் பலரும் கேட்டிருப்பீர்கள். காலைநேர நிகழ்ச்சி படைப்பாளர் கீதா தன்னுடைய ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும் அவருக்கேயுரிய தனித்தன்மையுடன், கலகலப்பாக, சுறுசுறுப்பாக, நேயர்களும் கலந்துகொள்ளும் வகையில் ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு புதிய சிறப்புடன் படைப்பார்.

அதுபோன்று இனறைய நிகழ்ச்சியில் உயிரெழுத்துக்களில் ஆரம்பிக்கும் பாடல்களை வரிசையாக ஒலிபரப்பினார். ஆனால் "ஔ" என்ற எழுத்துக்கே பாடலே கிடைக்கவில்லை. நேயர்களுக்கும் பெரும்பாலும் தெரியவில்லை - சிலர் அதே ஒலி கொண்ட
'ஹவ் ஆர் யூ'... போன்ற பாடல்களை அனுப்பியிருந்தனர். இறுதியில் அவர், கூலி படத்திலிருந்து 'அவ்வோரா...' (அல்லது அது போன்ற - கையில் குறித்து வைத்திருந்ததைமதியம் கை கழுவிவிட்டேன்:) என்றொரு பாடலை ஒலிபரப்பினார்.

சரி இப்ப மீண்டும் கேள்வி:

"ஔ" என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் ஏதாவது ஒரு (திரைப்படப்)பாடல் உங்களுக்குத் தெரியுமா!?
அல்லது அப்படி ஒரு பாடலே இல்லையா!?
அதோடு "ஃ"ல் ஏதாவது பாடல் சொன்னால்கூட இன்னும் வசதி.

Saturday, October 01, 2005

்வ்வ்வ சக வலைப்பதிவர்களின் கவனத்துக்கு...

என் இனிய நண்பர்களுக்கு,

வணக்கம்.

நாமும் வலைப்பதிகிறோம் என்ற வகையில் ஒரு விடயத்தை இங்கு பகிர்ந்துகொள்ளவே நீண்ட நாள்களுக்குப்பிறகு இந்த ஒரு பதிவு.

இரு வாரங்களுக்கு முன் இங்கு இரு இளையர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாற்றப்பட்டனர். அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டு மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தங்களது வலைப்பதிவில் எழுதியதுதான் காரணம். அவர்கள் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

இந்த வழக்கு தொடர்பான செய்திக்கு...

இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் இங்கு சிங்கையில் இணையத்தில் எழுதும் சக நண்பர்களிடம் இது தொடர்பாக பகிர்ந்து கொண்டேன்.

ஆனால் அதன் பின்னர் கடந்த வாரத்தில் இங்குள்ள பள்ளி மாணவ/மாணவிகள் தங்களது ஆசிரியர்கள் மீது பழிகூறி தரக்குறைவாக தங்களது வலைப்பதிவில் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டு - அவர்களுடைய பதிவுகளை முடக்கி அவர்களையும் 3 நாளைக்கு பள்ளியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் மலேசியாவிலும், சில மாணவர்கள் இதுபோல் அத்துமீற - அவர்களை மாணவர்களுக்கு முன்னால் பொதுவில் தண்டணையளிக்கப்பட்டுள்ளது.

இப்படி அடிக்கடி செய்தி வந்து பரபரப்பாக இருப்பதால் இங்கு வானொலியிலும் இது பற்றி செய்திகள், சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. நமது தமிழ் வானொலி ஒலி 96.8 லும் சிறப்புக்கண்ணோட்டம் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது, சட்ட தகவல்களுடன்.

இன்று Straits Times ஆங்கில ்ன் நாளிதழின் ST PodCastல் இது தொடர்பில் இன்று சிறப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

்ப் பாடொலிபரப்பு (PodCast:) பயன்படுத்தாதவர்களுக்காக அந்த ஒலிபரப்பின் எம்பி3 வடிவம் இங்கே:

பிரபலாகும் வலைப்பதிவுகள்...

வலைப்பதிவுகளைப் பற்றி வலைப்பதிவாளர்கள்

இது தொடர்பான ஒரு நேர்காணல்/கருத்துப் பரிமாற்றம்

அதனால், நாம் எழுதும் ஒவ்வொன்றும் பொதுவில் வைக்கிறோம் என்ற உள்ளுணர்வோடும், எச்சரிக்கையோடும், மனச்சாட்சியோடும் நமது படைப்புக்களை தொடர்வோம் - அது பதிவாக இருந்தாலும், பின்னூட்டமாக இருந்தாலும்.

Friday, July 22, 2005

சிங்கப்பூரின் புதிய சுற்றுலா தளம்...

வணக்கம்.

இன்று சிங்கப்பூரில் புதியதொரு சுற்றுலா தளம் திறப்புவிழா காணுகிறது. இது மற்ற சுற்றுலா தளங்கள் போலல்லாமல், பெரும்பாலும் சிங்கப்பூரில் உள்ள மக்களுக்கானது - சுற்றுலாப் பயணிகளும் இங்கு செல்ல தடையேதுமில்லை. இந்த புதிய இடம், இதுபோன்ற பழைய இடத்தை விட பல மடங்கு பெரியது. இது ஒரு கண்ணாடி மாளிகை. 16 தளங்களுண்டு, இடையிடையே கண்ணுக்கும், மனதுக்கும் ஆறுதலளிக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் மூலிகைகள். 16-வது தளத்தில் இருந்து சிங்கப்பூரை கண்களில் கொள்ளை கொள்ள வசதி. எல்லாவற்றுக்கும் மேலாக இங்கு செல்ல அனுமதி இலவசம்



இன்று திறப்புவிழாகாணும்
புதிய தேசிய நூலகத்துக்கு
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...

புதிய மேம்படுத்தப்பட்ட இணையத்தளம்...

புதிய நூலகம் பல வசதிகளைக்கொண்டுள்ளது. தேசிய கலைகள் மன்றத்தின் நாடக அரங்கும் இங்கு ஒருங்கமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. மற்ற சிறப்புக்களை இங்கு பட்டியலிடுவதை விட, வாருங்கள் அங்கு சென்று கண்டு கேட்டு படித்து உண்டு வருவோம்...



மேலும் விபரங்களுக்கு...

தமிழ்த் தொகுப்பு பற்றிய விபரங்கள் நூலகத்தின் இணையத்தளத்தில் இருந்து....
( நன்றி: தேசிய நூலக வாரியம்)

லீ கொங் சியன் மேற்கோள் நூலகத்தின் தமிழ்ப் பிரிவில் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் அடங்கியத் தொகுப்புகளைக் காணலாம். தமிழ்ப்பிரிவில் அனைத்து நூல்பிரிவுகளிலும் புத் தகங்கள், தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு, மெய்யியல், சமயம், சமூகவியல், மொழியியல், அறிவியல், கலைகள், இலக்கியம், புவி யியல், வரலாறு என்று எல்லாப்பிரிவுகளிலும் புத்தகங்களைக் காணலாம். உயர்நிலை, தொடக்கக் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று பலருக்கும் ஏற்றவாறு புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

19 ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களான பாரதியார், பாரதிதாசனார், கல்கி, அறிஞர் அண்ணா, அக லன் இன்னும் பலரின் சிறந்த படைப்புக்களும், தற்போதைய எழுத்தாளர்களின் படைப்புக்களும் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் துறையின் சிறப்பம்சம்

இத்துறையின் சிறப்பம்சமாக சமயம், மொழியியல், கலை, இலக்கியம் ஆகிய நான்குப் பிரிவுகளைக் கூறலாம்.

சமயம்
குறிப்பாக, சைவ, வைணவத் திருத்தலங்கள் பற்றிய புத்தகங்கள், இந்துக்கலாச்சாரம், குலதெய்வ வழிபாடு கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், யோகம், போதனைகள், இராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம், தி ருவிளையாடற்புராணம் இஸ்லாமியப் புத்தகங்கள் மற்றும் பல சைவ வைணவ நூல்கள் அடங்கும்.

மொழியியல்
தமிழ் மொழி வரலாறு, சுவடி மொழிபெயர்ப்புகள், இலக்கண நூல்கள், அகராதிகள் போன்றவை அடங்கும்.

கலை
நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்துகள், நாடக வரலாறு, மேடை நாடகம், கர்னாடக இசை வரலாறு, கீர்த்தனைகள், திரைப்பட வரலாறு, திரைப்படத்துரையினரின் நினைவுகள், திரையிசை க் கலைஞர்களின் வரலாறு என்று பல தகவல்கள் அடங்கிய அரிய புத்தகங்கள் உள்ளன.

இலக்கியம்
தமிழ்த் துறையின் முக்கிய அம்சமாக இப்பகுதி விளங்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அக்கால இல க்கியத்திலிருந்து இக்காலம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் சேகரிக்கப்ப்ட்டுள்ளன. சங்க கால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங் கள், இலக்கிய வரலாறுகள், இலக்கிய ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள், சைவ வைணவ இலக்கி யங்கள், பாரதியார், பாரதிதாசனார், அரிஞர் அண்ணா மற்றும் பலரின் இலக்கியப்படைப்புகள், மலேசி ய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள், பிறமொழிக்கதைகள், என்று பரந்த அளவில் படைப்புகள் சேக ரிக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் ஒரு சிறந் த கருவூலமாக விளங்கும்.

சஞ்சிகைகள்
மொத்தம் 45 சஞ்சிகைகள் இந்தியா, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தருவிக்கப்படுகின்ற து. இயல், இசை, சினிமா, அரசியல், சமூகம், இலக்கியம், சமயம், சிறுவர் மலர், வர்த்தகம், கணினி, மருத்து வம் என்று அனைத்துப் பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான பத்திரிகைகள் வாங்கப்படுகின்றன.

Tuesday, July 05, 2005

No more kuppai.com - இனியெல்லாம் குப்பை.வணி (வாணி!?)

வணக்கம்.

வழக்கம்போல சிங்கை தகவல்தொழிநுட்பததின் மூலம் தமிழுக்கு மேலும் ஒரு சிறப்பு செய்திருக்கிறது. தகவல் மேம்பாட்டு ஆணையம் (Infocomm Development Authority - IDA) வெளியிட்ட நேற்றைய அறிவிப்பின் படி இனி தமிழிலேயே வலைத்தளமுகவரி (URL - உரல்) வைத்துக்கொள்ள இயலும். அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இங்கே...
இந்த திட்டம் முதல் ஆறுமாதத்துக்கு பரீட்சாத்தமுறையில் அமையும்.

இதைப்பற்றிய மேல் விபரத்திற்கு:http://www.idn.sg/

அது எப்படி செயல்படப்போகிறது?

பி.கு:
கடந்த நான்கைந்து வருடங்களாகவே இந்த முயற்சியில் i-dns.net என்ற நிறுவனம் இருந்தது தெரியும். அவர்களுடைய தளத்தில் இதுதொடர்பில் மேல்விபரம் உள்ளது. அந்நிறுவனத்தின் திரு. மணியம் சில தமிழ் இணைய மாநாடுகளில் இதுதொடர்பில் உரைநிகழ்த்தியதாக நினைவு.

Friday, June 10, 2005

புத்தக சங்கிலி... என்னோட பங்குக்கு...

வணக்கம்.

இந்த ஒரு சில வாரங்களாக வேலைப்பளு அழுத்துவதால் தமிழ்மணத்துக்குக் கூட அடிக்கடி வர இயலாத நிலை. இதற்கிடையில் இந்த புத்தகவிளையாட்டுத் தொடர் வேற ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது - அப்புறம் வேலை ஓடுமா... கொஞ்ச நேரத்துக்கொருதடவை இப்ப யாரு எழுதியிருக்கிறாங்க, என்னென்ன புத்தகங்கள், அவங்களோட அனுபவங்கள்னு ரொம்ப சந்தோசமா படிச்சிட்டிருந்தேன். அதிலும்
சிங்கை நூலகத்தின், வாசிப்போம் சிங்கப்பூர்! நிகழ்வின்போது இந்த புத்தகச்சங்கிலி அமைந்தது இன்னும் சிறப்பு. இந்தப் பதிவுகளைத் தொகுத்து ஒரே இடத்தில் இட்டால் பயனுல்லதாயிருக்கும், பார்க்கலாம்.

ஒருபக்கம் நம்பள யாரும் கூப்பிடல்லையேன்னு ஒரு யோசனை.... அதே நேரம் குமார், விஜய்னு புயல் நம்ப இடத்துக்கு நெருங்கிய உடனே அய்யய்யோ யாராவது நம்பளைக் கைகாட்டிட்டா என்னை எழுதுறதுன்னு ஒரு பயம்வேற... அப்படியே நேற்றைக்கு வேலையில், விட்டுட்டேன்.

இன்னிக்கு காலைல வந்துபார்த்தா நண்பர்கள் கோபி, பாலா, நவன் ஆகியோர் என்னோட பேரை தெரியாத்தனமா சொல்லிருக்கிறாங்க... அவங்களுக்கு என் நன்றி.

இப்போ என் பங்குக்கு... :

எல்லாரும் தன்னுடைய முதல் வாசிப்பாக குறிப்பிடுவது அம்புலிமாமா, பாலமித்ரா, முத்து காமிக்ஸ் வகையறாதான். ஆனால் எனக்கு அறிமுகமான முதல் புத்தகமே குமுதந்தேன்... தேன் குடித்தவண்டாய் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை!?
(இத வச்சுட்டு இந்தப்பதிவ மேல படிக்கணுமா வேணாமான்னு நீங்க முடிவு பண்ணிக்கோங்க:)

அதுக்கு முன்னாலல்லாம் கிராமத்துல மடத்துல வர தினத்த்ந்தி, தினகரன், தினமலரை பெரிசுங்க இல்லாதநேரம் சண்டை போட்டுட்டு படம் பார்ப்போம். வாரயிறுதியில் ஊருக்குவரும் அப்பா வீட்டுக்குள் நுழைஞ்சவுடன் பையத்தொறந்து புது குமுதத்துக்கு அக்காவோடு ஒரு சண்டை நடக்கும். கொஞ்சநேரம் படம் பார்த்து, ஆறுவித்தியாசம் பார்த்து தூக்கிப்போட்டுட்டு பையுள் இருக்கும் மக்ரூன், மிக்ஸர் பக்கம் கவனம் போய்டும்...

இப்படியே போய்க்கிட்டிருந்த வாழ்க்கை, பக்கத்துவீட்டில் விடுமுறைக்கு கிராமத்துக்குவரும் ரேவதி குடும்பத்தார் ஊரிலிருந்து கொண்டுவரும் ராஜேஷ்குமார், பிகேபி, சுபா புத்தகங்களால் நாவல் படிக்கும் அளவுக்கு வளர்ந்து...(ரொம்ப முக்கியம்... :) பள்ளியிறுதிவரை இவர்கள் மட்டும்தான் பரிச்சயம். பின்னர் கல்லூரிக்கு சென்றபின் வயதுக்கேத்த எல்லா புத்தகங்களின் பரிச்சயமும் வந்தது.

இதற்கிடையில் சுஜாதா அறிமுகமாக, தினமணிக்கதிர் போன்றவற்றுல் வரும் கட்டுரைகளை புரியாமல் படித்துவைப்பேன். பின்னர் பாலகுமாரன் அறிமுகமானாலும் ஆனார்... பாலகுமாரன் என்று ஒரு பேப்பரில் எழுதியிருந்தால்கூட அதையும் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். அப்படியே கவிதைகள் கொஞ்சம் ஈர்த்தது. வைரமுத்து வசப்பட்டார். பாலகுமாரன்/வைரமுத்து கூட்டணி நண்பர்கள் மத்தியில் என்னை பிரபலப்படுத்தியதாலும், என்னைக்கொஞ்சம் வித்தியாசமாக பார்க்க வைத்ததாலும் முதன்முதலாக புத்தகங்கள் காசுகொடுத்து வாங்கி சேகரிக்க ஆரம்பித்தேன். ஒருமுறை ஏதோ படித்தவேகத்தில் கவிதைநடையில் ஒரு கடிதம் எழுது கவிஞருக்கு அனுப்பி, உங்களை சந்திக்க விழைகிறேன் என்று சொல்ல - ஈரோட்டில் வானமே எல்லை படவிழாவுக்கு வருகிறேன், முடிந்தால் வந்து சந்தியுங்கள் நண்பரேன்னு பதில் எழுதியது நண்பர்களிடம் மாட்ட - வைரமுத்துவின் பாஸ்கரன் லெவலுக்கு இந்த பாஸ்கர் பந்தா உட்ட காலமுண்டு.

அப்போதெல்லாம் வரும் நாவல் டைம், பாக்கெட் நாவல் அது இதுவென ஜி.அசோகன் (சார் இப்ப எப்படி இருக்காருன்னு தெர்ல) என்ன புத்தகம் போட்டாலும் வாங்கியகாலமுண்டு. சுஜாதா சார் வேற அப்ப, நான் மாதாந்திர நாவல்ல எழுதமாட்டேன் - அத பயணத்தின் போது படிச்சிட்டு இறங்கும்போது தூக்கிப்போட்டிருவாங்கன்னு சொல்லி - எண்ட்ட வாங்கி கட்டிண்டார்:)

அப்படியே போய்க்கொண்டிருந்த வாழ்க்கை அப்புறம் நான் கவிதை படிப்பேன்னு நாலுபேரு ஏத்தி விட்டதால கவிக்கோ, மீரா, மு. மேத்தா போன்றவர்கள் பக்கம் விரிவடைந்து அப்படியே போய்க்கொண்டிருந்த பயணம் இங்கு சிங்கப்பூரில் 96ல் வந்ததில் இருந்து கொஞ்சம் காசு கொடுத்து வாங்குவது அடங்கியது.

அப்புறம் இங்கு சிங்கை நூலகம் வாசிப்புக்கு பெரிய தீனி போட்டது... எனக்கு வேணும்னு நேரந்தவறாமல் சென்று நம்ப பங்குக்கு வாங்கினாலும் (முட்டியிலே பசித்ததால்) அதிகம் சாப்பிடுவதில்லை. இருந்தாலும் எனக்கு பிடித்த இடம் - புத்தகமும், புத்தகம் சார்ந்த இடங்களும்தான். அதிலும் சிங்கை நூலகங்களுக்கு மட்டுமல்லாமல் அங்குள்ள வசதிகளுக்காகவே நேரம்கிடைக்கும்போதெல்லாம் சும்மா புத்தகத்தை நோண்டிண்டேயிருப்பேன்.

சிங்கை தேசிய நூலகத்தின் புதிய கட்டிடம வேறு அடுத்தமாதம் திறக்கப்பட இருக்கிறது. அதன் பிரமாண்டத்தையும், வசதிகளையும் பார்க்க...

வாரந்தவறாமல் நூலகம் போவேன் தொழில் சார்ந்த ஒரு நாலு தலையணைகள், தமிழில் சில என்று அள்ளி வருவேன். கொஞ்சநாள் கழித்து மின்னஞ்சலில் ஞாபகமுறுத்தல் வந்தால் மறுவாரம் கொண்டுசென்று போடுவேன் - பல நேரம் அபராதத்துடன். இருந்தாலும், திரும்பவும் ஒரு 8 புத்தகங்களோடு வீடு திரும்புவேன். கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு மேலாக இது வழக்கமாகிவிட்டது - இப்போது துணைக்கு மகள் எழிலும் அவள் பங்குக்கு 4.

மற்றப்படி குடியிருப்பது தமிழ்மணத்தில் என்பதால் அதிகம் வெளியில் சென்று வாசிப்பதில்லை. தவிர அனுதின ஒருமணிநேரதுக்குமேலான பயணத்தில் பெரும்பாலும் படிப்பது நாள்/வார/மாத இதழ்கள்தான்... அதையும் மீறி

சமீபத்தில் வாசித்த புத்தகங்கள்:

தமிழ்மணம்
(தினசரி பலமுறை வாசிக்கும் தினசரி)

ஒலி 96.8
(தகவல், கலைக் களஞ்சியம்)

என் சோட்டுப் பெண்: தமிழச்சி
(பேராசிரியை சுமதி இவர் அருப்புக்கோட்டை/மல்லாங்கிணறு மறைந்த வே. தங்கப்பாண்டியன் அவர்களின் மகளாம் - கிராமத்துல பார்க்கிற பாட்டி, பக்கத்து வீட்டுப் பொண்ணு, மரம், குளம், மாடு மேய்க்கும் மூக்கையா, மாமன்... என்று எங்கள் ஊரில் இருக்கும் பலரையும் பற்றி எழுதிய கவிதைகள் போன்று இருந்ததால் மனதைத்தொட்டது. அதிலும் அவருடையை தந்தை அவர்மீது வைத்திருந்த பாசம், அவரின் இழப்பு பற்றிய கவிதைகள் கண்ணீரை வரவழைத்தது. புத்தக வடிவமைப்பு, புகைப்படங்கள், தரம் அருமை)

சோம. வள்ளியப்பன் எழுதிய் அள்ள அள்ள பணம் மற்றும், நேரமேலாண்மை பற்றிய "காலம் உங்கள் காலடியில்."
(பங்கு வர்த்தகம் பற்றிய சமகால உதாராணங்களுடன் கூடிய நல்ல புத்தகம்)
அதென்னவோ சில காலமாய் நான் படிப்பது (குறைந்தபட்சம் படிக்க நினைப்பது) எல்லாம் பணத்தைச்சுற்றி, வாழ்க்கையைச் சுற்றியே இருக்கிறது. சிங்கை நூலகம் நாளிதழில் எழுதும் புத்தக மதிப்புரைகளும் பெரும்பாலும் பொருளாதரம் தொடர்பானதாகத்தான் இருக்கிறது பாருங்களேன்.

துணையெழுத்து
(ரொம்ப அனுபவித்து, இனிய, சோக, கசப்பான, சந்தோசமான எல்லா உணர்வோடும் படித்தேன். அவரை மாதிரி நம்பளுக்கு ஊர்சுத்த முடியலையேன்னு கவலை வரவைத்ததது...)

ரா.கி.ரங்கராஜனின் "நாலு மூலையிலும் சந்தோசம்" படிக்கப் படிக்க இனிமை - இன்னொரு (சுஜாதா)ரங்கராஜன் என்று உணரவைத்த புத்தகம்.

மற்றப்படி இப்போது கைப்பையில்:
இன்றைய தமிழ்முரசு, சமீபத்திய The Week, DataQuest & India Today.

மொத்தக் கையிருப்பு:
ஒரு 150 தேறும் (வயிற்றுப்பிழைப்புக்கு வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை நீங்கலாக)

சமீபத்தில் தருவித்தது:
துணையெழுத்து
அம்மா வந்தாள்
சைக்கிள் முனி
டாலர் தேசம், மெல்லினம்
அண்ணா, குஸ்வந்த்சிங்
அள்ள அள்ள பணம், காலம் உங்கள் காலடியில்
தீபாவளி மலர்கள் உட்பட ஒரு 50 புத்தகங்கள்.

நான் படித்ததில் பிடித்தது:

வைரமுத்துவின் - சிகரங்களை நோக்கி
(திருஞானமாக மாறி பலமுறை வாசித்ததுண்டு. இப்போது இதை எழுதும்போதுகூட அந்த குளிர் காதில் உணரமுடிகிறது. மலைதேசத்து கேரட்டின் இனிமை தெரிகிறது.
பூட்டு - மனிதனுக்கெதிராக போட்ட முதல் நம்பிக்கையில்லா தீர்மானம். பூட்டு காற்றில் ஆடி அதை வழிமொழிந்தது
இது போன்ற பல வரிகள்...இப்போது நினைத்தாலும் எடுத்துட்டு உட்காந்திடுவேன்).

சாவியின் - வாஷிங்கடனில் திருமணம்.
(ரசித்து சிரித்தேன், சிரித்து ரசித்தேன்)

அகிலன்(தானே!?) - சித்திரப்பாவை
(நண்பர் மகன் ஒருவருக்கு பள்ளியில் தேவைப்படுகிறது என்று இங்கு நூலகத்தில் எடுத்து, எதேச்சையாக படிக்க ஆரம்பித்து - ஒரே மூச்சில்:) படித்து முடித்துவிட்டு வைத்தபுத்தகம்)

துணையெழுத்து
(புத்தகத்தோடு வாழமுடியும்)

வைரமுத்துவின் - இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்கள்
(பிரபலங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துக்கு வித்திட்ட புத்தகம். ஆனால் அதில் பிடித்தது இப்போது ஞாபகம் வருவது: தாத்தா பொன்னையாத்தேவர், பாஸ்கரன், அந்த முடி போட்டு சமைத்த பாட்டி, நான்காவது பொன்னென்று உண்டென்றால் அதற்கு பாலு என்று பெயர்வைக்கலாம் "பாலு", யேசுதாஸ், சிவசங்கரி, ஏவி. எம். சரவணன்)

பாலகுமரான் - மெர்க்குரிப்பூக்கள்
(காரணம் ஏதும் சொல்லனுமா என்ன?
பாலகுமாரன் என்னை ஆக்ரமித்த ஒரு எழுத்தாளர். ஒரு காலத்தில் நண்பராக, தெரிந்தவராக தனது எழுத்து மூலம் பேசினார் - பின்னர் தாடி வளர்த்தபிறகு எனக்கு சாமியாகிவிட்டார்).

சுஜாதா - நகரம், ஸ்ரீரங்கத்து கதைகள், ஓரிரு எண்ணங்கள் மற்ற பல கட்டுரைகள்.

வாசிக்க நினைத்திருக்கும் புத்தகங்கள்:
உபபாண்டவம்
பாதியிலிருக்கும் "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்", "கள்ளிக்காடு இதிகாசம்", மெல்லினம், ராகாகி, அம்மா வந்தாள்...
God of Small Things (இதுவும் தமிழில் வருவதாக கேள்விப்பட்டேன், அதனால் விரைவில் வாசிக்க வாய்ப்பிருக்கிறது.

இது போன்று அவ்வப்போது வரும் எல்லாவற்றையும் எழுதிக்கொள்ளலாம்.

மற்றப்படி, என்ன... இவன் ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றி எழுதவே இல்லை என்று ஒருவேளை உங்களுக்கு உறுத்தியிருந்தால்...
தமிழிலேயே ஒழுங்கா படிக்க நிறையா இருக்குதுன்னு சமாளித்தாலும்...

ஒருநாள் மகளின் (பாலர்பள்ளி) ஆங்கில வீட்டுப்பாடம் தொடர்பில் பேசிக்கொண்டிருந்தபோது,
என்னப்பா நீங்க இப்படி இருக்கிறீங்கன்னு மகள் கேட்க,
நீ தமிழ்ல்ல எதாவது டவுட் கேளுன்னு சொல்ல,
அதான் உங்களுக்கு க ங ச-வும் ஃபுல்லா தெரியலியேன்னு முறைக்க....

வேற வழியில்லாமல்,
அ ஆ இ ஈ.... A B C D யில்லிருந்து படிக்க ஆரம்பித்திருக்கிறேன்...
அதனால அப்படி ஒரு லிஸ்ட் வேணும்னா அடுத்தபிறவில்ல ஒரு Book meme போடலாம்:)


நிற்க...

அடுத்து நான் இந்த ஆட்டத்துக்கு அழைக்க நினைப்பவர்கள்:

இகாரஸ் பிரகாஸ் (மறுபடியும் வாங்களேன், முதல் ரவுண்டில் புத்தகப் பட்டியல் மட்டும் இட்டுவிட்டீர்கள் - அனுபவத்தை பகிர்ந்துகொள்ள மறுபிரசுரம் செய்யுங்களேன் ப்ளீஸ்)

நாராயணன்
மானஸாஜென்
நா. கண்ணண்
வெங்கட்
காசி
அருணா ஸ்ரீநிவாசன்
கோவில்பட்டி கணேஷ்
டோண்டு ஐயா

இவர்களை யாராவது ஏற்கனவே சொல்லிருந்தாலும் பரவால்ல, இதுவரை எழுதலதான:)

மேலும், வலைப்பதிவு இல்லாவிட்டாலும் தமிழ்மணத்துக்கு தினம் வரும், புத்தகங்கள் படிக்கும்:
சிங்கை பிரஷாந்தன் (சாந்தன்)

மற்றப்படி புத்தகம் என்று நினைத்தால் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும்:
"தினம் ஒரு கவிதை" சொக்கன்
"ஒலி 96.8" மீனாட்சி சபாபதி

நன்றி வணக்க்க்க்க்கககம்.

Tuesday, May 24, 2005

வேணுமா... வேணாமா....

தமிழ்... தமிழ்... தமிழ்....

என்று (வலைப்பதிவு)உலகில் எங்கு சென்றாலும் ஒலிக்கிறது. அது நல்லதோ கெட்டதோ, அசிங்கமோ தமிழில் ஒலிக்கிறது. தமிழைப் பழித்தாலும் இங்கே வருகிறது, தமிழைப் பாராட்டினாலும் இங்கே வருகிறது. கடந்த சிலவருடங்களாக இணையத்தின் மூலமும், குறிப்பாக இப்போது வலைப்பதிவுகள் மூலமாகவும் முன்னெப்பேதும் இல்லாத அளவு தமிழ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் கணிணி மென்பொருட்களை தமிழ்படுத்துததல், தமிழ் வழி கல்வி, தமிழிலேயே அனைத்தையும் படிக்கவேண்டும் போன்ற பல கருத்தாடல்கள் இங்கே.

அதுக்கென்ன இப்போ...
இதான் விடயம்.... ஒரு சந்தேகம்:

சீனாவிலும் (கொரியா, தைவான், ஹாங்காங்), ஜப்பான் போன்ற நாடுகளில் எங்கும், எதிலும் சீனமொழியும், ஜப்பானிய மொழியும் இருக்கிறது. அவர்கள் படிப்பது, பேசுவது, கேட்பது, கணிணியில், கக்கூசில் எங்கும் இருக்கிறது. ஒருபக்கம், அவர்கள் அவர்களுடைய மொழியில் படிப்பதால் அவர்களால் புதியன கண்டுபிடிக்கமுடிகிறது என்ற ஒரு கூற்று ஒரு புறமும், அவர்கள் அவர்கள் மொழியிலேயே படிப்பதால் - ஆங்கிலமே தெரியாமல் சிரமப்படுகின்றனர் என்பது இன்னொருபுறமும் தெரியவருகிறது.

இங்கு சிங்கை நூலகத்துக்குச்சென்றால் மாண்டரின்(சீன) மொழியில் எல்லா வகையிலான நூல்களும் வெளிவருகிறது.

Image hosted by Photobucket.com

எங்களுடைய நிறுவனத்தின் சுசோவ் (Suzhou - China) பிரிவிலிருந்து வருபவர்கள் கணிணியிலிருந்து பார்ப்பதெல்லாம் சீன மொழியில்தான் வருகிறது. ஆனால், அவர்களால் ஆங்கிலத்தில் தொடர்புகொள்வதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. அதற்கு அவர்கள் வருத்தப்படுகின்றனர். இதே நிலை ஜப்பானியர்களுடன் தொடர்புகொள்ளும்போதும்.

மெக்ரா-ஹில் போன்ற பிரபல பதிப்பகங்களே புத்தகங்களை வெளியிடுகின்றன. என்னைப்பொருத்தவரை தனிப்பட்டமுறையில் இதுபோன்று நானும் எனக்குத்தெரிந்த தமிழில் படித்துப்புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனால் இதுபோன்ற நிலையை நோக்கித்தான் நாம் முன்னேறுகிறோமா, இதற்காகத்தான் இந்தப் போராட்டங்களா?

Image hosted by Photobucket.com

சீனா, ஜப்பான் போல் இந்தியா மன்னிக்கவும் நம் தமிழகம் (மொழியில் ) ஆவது நல்லதா, கெட்டதா - வேணுமா, வேணாமா?

Monday, May 16, 2005

(என்னுடையதல்லாத) பழைய பதிவுகள்...

ஒரு அஞ்சு வயசுக்குழந்தையின் சந்தேகங்கள்

'அப்பா, ஐ டொன்ட் வான்ட் டு பி எ கேர்ல்' என்று என்னிடம் வந்து அழுதது குழந்தை. விசாரித்தேன். என் மகளின் பள்ளித்தோழி, அவளும் ஒரு இந்தியரின் குழந்தை, அவள் வீட்டில் ஒரு தம்பி பிறக்கப்போகும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். தன் அம்மாவின் வயிற்றுக்குள் இப்போது இருக்கிறான் என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். அம்மாவின் வயிற்றை கத்தியால் வெட்டித் தான் குழந்தையை எடுப்பார்கள் என்று வேறு சொல்லியிருக்கிறாள். அதிலிருந்து ரெண்டு நாளைக்கு கண்ணில் மிரட்சியுடன், இதே புராணம். பெரிதானால் தன் வயிற்றையும் வெட்டுவார்கள் எனவே நான் பெண்ணாக இருக்க விரும்பவில்லை. இது எப்படி இருக்கு?.....
.......
......
.....

தமிழும் மற்ற மொழிகளும்...

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்பார் பாரதியார். இன்னொரு இடத்தில் 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து...' என்பார் அவரே. எது உண்மையில் சிறந்த மொழி? ஒவ்வொரு மொழியும் அதை நன்கு அறிந்து ரசிப்பவருக்கு இனிமைதான். ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் போட்டி நடத்துவது, 'என் அம்மாவின் பாசம் உயர்ந்ததா, உன் அம்மாவின் பாசம் உயர்ந்ததா' என்று கேட்பதற்கு சமம். முதலில் ஒரு மொழி இன்னொரு மொழியை விடச் சிறந்தது என்பது வீண்வாதம் என்பது என் தாழ்மையான கருத்து. 'கணினிக்கு சம்ஸ்க்ருதம் ஏற்றது, இசைக்கு தெலுங்கு ஏற்றது, இதுக்கு இந்தி ஏற்றது, அதுக்கு ஆங்கிலம் ஏற்றது' என்பதெல்லாம் சரியெனப்படவில்லை.

எது ஒருவருக்கு சமூக அடையாளம்?

என்னதான் ஆங்கில வழிக்கல்வி பயின்றாலும் சமூகம், பொழுதுபோக்கு, சமயம், அரசியல் என்ற பல விஷயங்களில் ஒருவர் தன் மொழிப் பின்புலத்துக்கேற்பத் தான் பங்கேற்கிறார். இங்கு ஒன்றை அவதானிக்கலாம்: ஒரு நாட்டில் பிறந்தவரை அடையாளப்படுத்தும்போது அவர் நாட்டையோ, மதத்தையோ, நிறத்தையோ யாரும் முன்னிறுத்துவது இல்லை. ஒரு ஆங்கிலேயரை, He is an Englishman என்கிறார்கள், He is an Englandman என்பதில்லை. அதே போல், French, Dutch, Polish, Spanish, Italian, Chinese, Japanese...என்றுதான் சொல்கிறார்கள். முறையே, Franceman, Netherlandman, Polandman, Spainman, Chinaman, Japanman.. என்று சொல்வதில்லை. இது ஏனென்றால், ஒருவர் மதம் மாறலாம், குடியுரிமை பெற்று வேற்று நாட்டு குடிமகனாகலாம், அவரால் மாற்றிக்கொள்ள முடியாத ஒரே அடையாளம் தாய்மொழி. அதன் காரணமாகவே இவ்வாறு என்றும் நிரந்தரமான அடையாளத்தால் ஒருவரை அழைப்பது. ஆக, விரும்பியோ விரும்பாமலோ, இக்கருத்துடன் ஒத்துப் போனாலோ போகாவிட்டாலோ, தமிழர் குடும்பத்தில் பிறந்து தமிழரோடு வளர்ந்தவர் அனைவரும் சாகும்வரை தமிழரே. புலம்பெயர்ந்தோருக்கும் இது பொருந்தும்.

தமிழ் வாழ ஏதும் செய்ய வேண்டுமா?

'நாம் தமிழுக்கு என்ன செய்தோம்' என்பது அவ்வளவு முக்கியமான கேள்வியல்ல. இன்றைக்கு இருக்கும் அவசர உலகத்தில் சுற்றமும் நட்புமே சுருங்கிக் கொண்டு வருகையில் இதற்கெல்லாம் யாருக்கும் நேரமும் தேவையும் இருக்கிறது? ....
..........
..........
.........

கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்பு (Wireless Networking)

அன்று ஒரு நாள் Broadband Wireless Router ஒன்றை வாங்கியதில் கிடைத்த அனுபவங்களை (லாபங்களையும்!) எழுதியிருந்தேன். ஒரு ஆர்வத்தில் அதை வாங்கப் போய் அதில் உள்ள தொழில்நுட்ப சமாச்சாரங்களில் லயித்துப் போய் நிறையத் தெரிந்தும் கொண்டேன். அதில் சிலதை இங்கு பதிக்கிறேன், இதில் புதிதாய் ஈடுபடுபவர்களுக்கு ஏதாவது பிரயோசனப்படும் என்பதால்................
...............
............

=================================

இதெல்லாம் எங்கேயோ படிச்சமாதிரி இருக்குதுன்னு உங்களுக்கு தோணுச்சுன்னா... நீங்கள் வலைப்பதிவில் பழம்தின்று எதையோ போட்டவர். அதனால் உங்களுக்கு ஒரு சலாம்... போய்ட்டு வாங்கண்ணே....

அப்படியில்லாத என்னைப்போன்றவர்களுக்காக இங்கே....

"தமிழ்மணம்" காசி இப்போதான் அத்திபூத்தார்போல் எழுதுகிறார்... அவர் அந்தக் காலத்தில் இதுபோன்ற பல பதிவுகள் எழுதியிருக்கிறார் (என்பது எனக்கும் இன்றுதான் தெரியும்:) மேலே படிக்க, அவருடைய பழைய வீட்டுக்குச் செல்லுங்கள்:
காசியின் பழைய பதிவுகள்...

Saturday, April 30, 2005

வானம் வசப்படுமே...

சிங்கையின் தமிழ் வானொலி ஒலி 96.8 FMல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி வானம் வசப்படுமே...

முயன்றால் வானம் வசப்படும்,
உழைத்தால் வானம் வசப்படும்,
துணிந்தால் வானம் வசப்படும்,
அன்பால் வானம் வசப்படும்,
கருணையால் வானம் வசப்படும்,
திறமையால் வானம் வசப்படும்,
உயரிய சிந்தனையால் வானம் வசப்படும்
என்ற உண்மைகளை வாழ்ந்து காட்டியவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்யும் முயற்சிதான் இந்த - வானம் வசப்படுமே...

வானம் வசப்படுமே... ஒலி-யின் தலைவர் திரு. அழகிய பாண்டியன் அவர்களால் படைக்கப்பட்டு வருகிறது. திரு. பாண்டியன் தனது கம்பீரமும் அதேயளவு சாந்தமும் கலந்த இனிய குரலில் படைக்கும் அறிவிப்புக்களைக் கேட்கும்போதே கேட்பவருக்கு ஒரு ஈடுபாடு வரும். அவருடைய குரலை தேர்ந்தெடுத்த அறிவிப்புகள்/நிகழ்ச்சிகளிலேயே கேட்பதால் தொடர்ந்து (என்னைபோன்ற) ஒலியுடன் குடியிருப்பவர்களுக்கும்கூட இன்னும் ஆர்வம் கூடும்.

திங்கள் முதல் வெள்ளி வரையிலாக கடந்த சில வாரங்களாக ஒலி பரப்பாகிவந்த இந்த நிகழ்ச்சி நேற்று 50-வது நிகழ்ச்சியாக ஒலி பரப்பானது. நேற்றைய அறிவிப்பின் படிஅடுத்த நான்கு வார இடைவெளிக்குப்பின் அடுத்த பகுதி மீண்டும் தொடரும்.

இதுவரை ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகளும் ஒலியின் தளத்தில் இணயமேற்றப்பட்டிருக்கிறது. இதுவரை இடம்பெற்ற வரலாற்று மாந்தர்கள் யாரென்று தெரிந்து கொள்ள, நிகழ்ச்சியைக்கேட்க...

இப்போது ஒலி, நேயர்களிடம் வைத்திருக்கும் வேண்டுகோள்:
இதுவரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறாத வரலாற்று மாந்தர்களை, கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டியவர் என்று நீங்கள் நினைப்பவர்களை - ஏன் இடம்பெறவேண்டும் என்ற காரணத்துடன் குறுந்தகவல் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இங்கு சக வலைப்பதிவாளர்களிடமும், வலைப்பதிவு வாசகர்களிடமும் நிறைய கருத்துக்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு இட்டிருக்கிறேன். அதனால் நீங்கள் ஒலிக்கோ, திரு. பாண்டியன் அவர்களுக்கோ மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்துகொண்டாலும் - ஒலிக்கு அனுப்பி வைக்கிறேன்.

மக்களுக்கு ஊட்டம்கொடுக்கும் நிகழ்ச்சிக்கு நாமும் ஊட்டம் கொடுப்போம்.

Tuesday, April 19, 2005

செல்லினத்தின் கொ.ப.செ.

தமிழ் மென்பொருள்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா வைபவம் (அவசர அவசரமாக) இனிதே நடந்து முடிந்துள்ளது. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

அதே நேரத்தில், விழா தொடர்பாக சன் டிவியில் விளம்பரம் வந்ததில் இருந்து ஆங்காங்கே புகையும் வந்துகொண்டே இருக்கிறது. இது தொடர்பில் ஞாயிறு அதிகாலையன்று என்னுள் தோன்றியதையெல்லாம் குறிப்பெடுத்து வைத்தேன். ஆனால், அதே வேகத்துடன் எழுதவேண்டாம் என்று விட்டு வைத்தேன்.

வெளியிடப்பட்ட வட்டில், இப்போது பெரும்பாலார்கள் பயன்படுத்தும் TSCIIயையே காணோம், தாப்/தாம்தான் என்று சில குழுமங்களில் பரபரப்பு. இன்று நண்பர் பத்ரியின் ஃபயர்ஃபாக்ஸைத் தமிழ்ப்படுத்தியது யார்? பதிவைப் பார்த்தவுடன், என்னுள் தோன்றியதை இன்றே பதிவுசெய்யத் தோன்றியது.

இன்று கணிணியில் தமிழ் பயன்படுத்தும் பலருக்கும் தெரியும் தமிழ் எப்படி எப்படியெல்லாம், எந்தெந்த வழியிலெல்லாம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்று. இந்த கணிணித்தமிழுக்கு வழிவகுத்தவர்கள் எல்லாமே - 90 சதவீதத்துக்கு மேலாக அரசு சார்பற்ற, தன்னார்வமிக்க தொண்டூழியர்கள்தான். ஆனால், இன்று எல்லாத்துக்கும் நாங்கள்தான் காரணம் என்பதுபோல், ஒருபக்கம் பரபரப்பு நடக்கிறது. 30 லட்சம் குறுந்தகடு வெளியிடுவது, பத்திரிக்கைகளுக்கு உடனே கொண்டு சேர்ப்பது போன்றவை பாராட்டப்படத்தக்கது என்றாலும் - பலருடைய உழைப்பு மறைக்கப்பட்டிருக்கிறது, வீணடிக்கப்பட்டிருக்கிறது.

எனக்குத்தெரிந்தவரை தமிழ் கணிணி வளர்ச்சிக்கு வருடாவருடம் நடந்துவரும் தமிழ் இணைய மாநாடு பெரிதும் செய்து வருகிறது. ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், உலகமுழுவதும் தமிழ் கணிணிக்காக பணிசெய்வோருக்கிடையேயான ஒத்துழைப்பு, யுனிக்கோடு அமைப்புடனான தொடர்பு என்று பல வழிகளில் பாராட்டத்தக்க பணிகள் செய்து வந்திருக்கிறது. ஆனால், இந்த குறுந்தட்டு வெளியீட்டில் உத்தமம் என்றழைக்கப்படும் INFITT ன் பங்கு என்ன என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது.

பலகாலம் தமிழுக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு - அமைச்சு மூலம் C-DAC தயாரித்ததாக வட்டு வெளியாகிறது. இதில் பரம்பரை பக்கா அரசியல் ஒருபக்கமும், தமிழ் இணையத்துக்கு உழைப்பவரிடையே நிலவும் அரசியில் ஒருபக்கமும் சேர்ந்து உண்மையை குழிதோண்டிப்புதைக்க ஒத்துழைத்துள்ளது.

ஃபயர் ஃபாக்ஸைப் பொருத்தவரை தமிழாவின் முகுந்த் பிப்ரவரி 22ல் வெளியிட்டார். ஒரு சில தினங்களிலேயே நானும் இறக்கி பயன்படுத்தி வருகிறேன்.

அதன் பின்னர், ழ-கணிணியின் ஜெயராதா மார்ச் 25 அன்று ஃபயர் ஃபாக்ஸ் தமிழில் முடிந்துவிட்டது என்ற ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

அப்போது என் மனதுள் தோன்றியது: ஏன் இப்படி ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு இல்லாமல், செய்ததை திரும்பச்செய்து அவர்களுடைய பொன்னான காலநேரத்தை வீணாக்குகிறார்கள் என்று. இருந்தாலும் ழ(RedHat) என்பதால் தனியாக வேண்டுமோ என்று விட்டுவிட்டேன்.

இப்போது புதிதாக, C-DAC மூலம் தாங்கள்தான் (உலகில்) முதன்முதலில் வெளியிட்டோம் என்று இன்னொரு ஃபயர் ஃபாக்ஸ்.

இதற்கு என்ன செய்யலாம் என்று இணையப்பொதுமக்கள் யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, வருங்காலத்தில் என்ன செய்யலாம் என்று என்னுள் தோன்றுவது.

1) உத்தமம் ஒரு பொதுவான பதிவு நிறுவனமாய் இருந்து தமிழ் கணிணிப்படுத்ததில் யார் என்ன புதிதான திட்டம் தொடங்கினாலும் அதன் விபரத்தை பதிவு செய்யலாம். திட்டத்தின் முழுவிளக்கம் கொடுக்காமல், ஆரம்பதேதி, செயல்படுபவர்கள் போன்ற விபரத்தை முதலிலேயே தெரிவிக்கலாம். அதுபோல், முடிவு/வெளியீடு தேதி, பதிவிறக்கம் செய்யும் தொடர்பு போன்றவை.

2) தமிழ் லினக்ஸ், டிஸ்கி, போன்ற பல இணையக்குழுமங்கள் இருந்தாலும், பலரும் பல பிரிவாக (குறிப்பாக RedHat, Mandrake Linux) என்று செயல்படும்போது உத்தமம் ஊடுபாலமாக செயல்படலாம்.

3) உத்தமம் தனது மின்மிஞ்சரியை வருடாந்திர தமிழ் இணைய மாநாட்டுச் சிறப்பிதழாக மட்டும் வெளியிடாமல், மாத மின்னிதழாக மாற்றி - ஒவ்வொரு மாதமும் தமிழ் கணிணியுகத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள், புதிய அறிவுப்புகள், மென்பொருள்கள், புதிய தளங்கள், தற்போது நடந்துவரும் திட்டங்களின் நிலைகள் போன்ற பல விபரங்களைத் தொகுத்தளிக்கலாம்.

4) புதிதாக வரும் அறிவிப்புகள், வெளியீட்டுகளுக்கு - அது மாநில அரசோ, மத்திய அரசோ, வேறு தன்னார்வ நிறுவனங்களாய் இருந்தாலும், அது உத்தமம் பார்வைக்கு(காவது) குறைந்தபட்சம் சென்று திரும்பவதாய் பார்த்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற இன்னும் பல ...லாம்கள்.

மைக்ரோசாஃப்ட்

ஒரு காலத்தில் நான், ஏன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - சீன, ஜப்பானிய, கொரிய மொழிகளிலெல்லாம் இயங்குதளங்கள், ஆஃபீஸ் பொதிகள் வெளியிடுகிறது, தமிழில் இல்லை என்றேன். பலரும் சொன்ன பதில், வாங்குபவர்கள் இருந்தால்தான் வெளியிடும் என்றார்கள். ஆனால், இப்போது இயங்குதளம், ஆஃபீஸ் எல்லாம் வருகிறது ஏன்?

நமது முகுந்த் போன்றவர்களின் கைவண்ணம்தான், பில் கேட்ஸையே மறுபரிசீலனை செய்யவைத்திருக்கிறது என்பது உண்மை.

முதல் விடயம், விண்டோஸுக்கு பரம எதிரியாக எளிதில் கிடைக்கும் லினக்ஸ். அதிலும் உள்ளூர் மொழிகளில், ஒப்பன் ஆஃபீஸ் போன்ற விண்டோஸிடன் இணைந்து வராத பல மென்பொருள்களுடன்.

இந்த சிறப்புக் கருதி சிங்கையின் தற்காப்பு அமைச்சு தனது 20,000 கணிணிகளில் பயன்படுத்தும் ஆஃபிஸ் 97க்குப் பதிலாக ஒப்பன் ஆஃபிஸுக்கு மாறப்போகிறது. அதற்கு முக்கியக்காரணம் - செலவு குறைவு. தமிழ் உட்பட சிங்கையின் 4 அதிகாரத்துவ மொழிகளும் இருக்கிறது. இது மற்ற அமைச்சுகளும் இதைப் பின் தொடரும்.

மலேசியாவில் சன் நிறுவனத்தின் ஸ்டார் ஆஃபிஸ் பல அமைச்சுகளில் பயன்படுத்த ஆரம்பித்து சில வருடங்களாகிறது. இந்தியாவிலும் பல அரசு துறைகளில் லினக்ஸ் மற்றும் திறமூல மென்பொருள்கள் உட் புகுந்து விட்டது.

இதற்குப்பதிலாக ஒரு மாற்றுதான், மைக்ரோசாஃப்டின் பாஷா இந்தியா. ஆனால், அதிலும் ஒரு திருப்தி - தமிழ் திட்டத்தை பொறுப்பேற்று செய்து தரும் நிறுவனம் விஷ்வக்

செல்லினத்தின் கொ.ப.செ.

ஒரு வழியாக தலைப்புக்கு வருகிறேன்:)
நண்பர்களிடம் ஒரு இடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக, தமிழ் குறுந்தகவல் பற்றிய விடயம் வந்தது. அப்போது என்னைச் சுட்டிக்காட்டி இன்னொரு நண்பர் ஒருவர் கூறியது, "அதான் இங்க இருக்காரே, செல்லினத்தின் கொபசெ" என்றார். அப்போது சிரித்துவிட்டு விட்டுவிட்டேன்.
ஆனால், அன்று எனக்குள் தோன்றியது இதுதான்:
நான் செல்லினத்துக்கு மட்டுமல்ல. முதன்முதல் கணிணியில் தமிழ் பார்க்க உதவிய நா.கோ அய்யாவின் கணியன் முதல், பின்னர் 1996ல் வாங்கிய கம்பன் எழுத்தோலை, பின்னர் முரசு அஞ்சல் என்று தொடங்கி, டிஸ்கி, யுனிக்கோடு, இ-கலப்பை, தமிழ்மணம் என்ற பல தமிழ் கணிணி/தொழில் நுட்ப முயற்சிகளுக்கு கொ.ப.செ-வாக, பிரச்சார பீரங்கியாக இருந்து வந்தே இருக்கிறேன். அதை இப்போதும் தொடர்கிறேன். அது என்னால் இயன்ற உதவியாக நினைக்கிறேன்.

இதை நான் மட்டுமல்ல, கணிணியில் தமிழ் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் செய்திருக்க வேண்டும். நாம் பயன்படுத்துவதை, நல்ல விடயங்களை, நண்பர்களின் உழைப்பைப் பாராட்டி அடுத்தவருக்கு நம்மாள் இயன்ற நாளுபேருக்கு எடுத்து செ(சொ)ல்லாமல் இருப்பது தவறு, துரோகம் என்றே நான் நினைக்கிறேன். இதை ஒவ்வொருவரும் ஓரளவு செய்திருந்தாலே - இன்று தனியாக கூக்குரலிடும் நிலை தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும்.

அதனால் இதுவரை இதை செய்யாதிருந்திருந்தாலும், இன்றிலிருந்தாவது தமிழ் கணிணித்துறையில் உள்ள முன்னேற்றங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோமாக!

இந்தப் பதிவின் நீளம்கருதிதான் எழுதுவதை தள்ளிப்போட்டு வந்தேன். இருந்தாலும், ஒருவழியாக என்னுள் தோன்றியதை சொல்லி விட்டேன். மேலும், இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ள எந்த தனி மனிதருக்கோ, நிறுவனத்துக்கோ நான் சொந்தக்காரனோ, சண்டைக்காரனோ அல்ல. இது என்னுடைய தாழ்மையான கருத்து, அவ்வளவுதான்.


என்றென்றும் அன்புடன்,
அன்பு

Monday, April 18, 2005

உங்க ஊர்லயும் இருக்குதா!?

சிங்கையில் உள்ள இந்திய தூதரகம், தனது வழக்கமான சேவைகளுடன் ஒலி/ஒளி வட்டுக்கள், நாடாக்கள் எல்லாம் கூட இரவலுக்கு கொடுக்கிறதாமே? ஆமாவா!? யாரும் பயன்படுத்தியிருக்கிறீர்களா (தெரியும், இங்கு சிங்கையில் கூட தூதரகத்தில் அருகில் ஜாகை வைத்திருக்கும், ஒருவருக்குமட்டும்தான் பயன் என்று:) இரண்டு காரணம் - மற்றவருக்கு வேலை நேரம் ஒத்துவராது, இன்னொன்று எல்லாமே हिन्डि / हिन्दि

இது மாதிரி உங்க ஊர்லயும் உண்டா:)

Saturday, April 16, 2005

கற்றதும்... பெற்றதும்... எஸ்.பொ

நன்றி: விகடன்

============================================
கற்றதும்... பெற்றதும்...
சுஜாதா

விட்டான்... கையான்... வீர விளையாட்டு!

எப்போதாவது எஸ்.பொ. அவர்கள் தொலைபேசுவார். சமீபத்தில் பேசியபோது, ‘எங்கே இருக்கிறீர்கள்? ஆவுஸ்திரேலியாவா, லண்டனா, மட்டக்களப்பா, நைஜீரியாவா, கனடாவா?’ என்று கேட்டதில், ‘இங்கேதான் சென்னை&94&ல் இருக்கிறேன். என்னுடைய நாடகம் ஒன்றை அரங்கேற்றுகிறார்கள். மேலும், உறவுகள் என்ற என் புத்தகமும் வெளியிட்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள்' என்றார். என் இடுப்பு அனுமதித்தால் நாடகத்துக்கு வருவதாகச் சொன்னேன்.

இலங்கையில் இனக் கலவரத்தால் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் மீன்தொட்டிக்குள் மீன் போல அடிக்கடி இடம் மாறுவார்கள். எஸ்.பொ. அவர்களை எல்லாம் ஒருமைப்படுத்தினார். அவரின் பனியும் பனையும் என்ற ஒரு சிறப்பான தொகுப்புக்கு, சில ஆண்டுகளுக்கு முன் விரிவான முன்னுரை அளித்தேன்.

எஸ்.பொ\வின் தமிழ்நடை பழகிவிட்டால், அவரது எழுத்துக்களை ஒரு புதுமலர் வாசனைபோல் ரசிக்கலாம். எதிர்பாராத இடங்களில் சம்ஸ்கிருத வார்த்தைகளும், புதுமைப்பித்தனை நினைவு படுத்தும் வாக்கிய அமைப்பும், விநோதமான (நமக்கு) யாழ்ப்பாணத் தமிழும் கலந்திருக்கும். இந்த நடை எனக்கு தேவகாந்தனின் உதவியுடன் 'கன்னத்தில் முத்தமிட்ட'தற்குப் பிறகு பழகிவிட்டது. இந்தத் தொகுப்பு நூலில், 'போர்' என்ற கட்டுரை எனக்கு மிகவும்பிடித்திருந்து.

தளைதட்டாத ஒரு வெண்பாவில் துவங்கி, யாழ்ப்பாணக் கலாசாரம் பனைமரக் கலாசாரம் மட்டுமே என்று எண்ணுவது தப்பு என்கிறார் எஸ்.பொ. முன்னூறு தேங்காய்களை இரண்டு பிரிவினர் மாற்றி மாற்றி... ஒரு பிரிவினர் ‘விட்டான்' என்று ஒரு தேங்காயை கீழே வைக்க, அதை மற்றொரு பிரிவினர் 'கையான்' என்று வலுவான தேங்காயின் குடுமியைப் பிடித்துக்கொண்டு ஒரே போடு போட்டு உடைக்க வேண்டும். சிலகையான்கள் பதினெட்டு கூட ஸ்கோர் பண்ணுமாம். சில சமயம் விட்டான், கையான் இரண்டுமே பணால். இப்படி மாற்றி மாற்றி அடித்து உடைத்து, எந்தப் பிரிவிடம் தேங்காய்கள்அதிகம் மிச்சம் இருக்கிறதோ, அதுவெற்றி பெறும்.
என்ன சாதிக்கிறோம்..?

கொஞ்சம் யோசித்தால், இந்த விளையாட்டை எழுத்துப் போராட்டத்தின் படிமம்போல எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில்
இவ்வகையிலான தேங்காய் விளையாட்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் அன்பர்கள் எழுதலாம்.

எனக்குத் தேங்காய் உடைக்கத் தெரியாது. ஒரே போடில் தேங்காயைப் பப்பாதியாக உடைக்கும் சாகசத்தை என்னால் கற்கவே முடியவில்லை. அதேபோல், சைக்கிளில் காலைத் தூக்கிப் பின்னால் விசிறி ஸ்டைலாக ஏறும் கலையும்! அது வேறு சமாசாரம்.

எஸ்.பொ-வின் 'போர்' கட்டுரை, என்னுடைய வருங்கால சிறந்த கட்டுரைத் தொகுப்பில் நிச்சயம் இடம் பெறும்.

எஸ்.பொ. தன் மகன்களில் ஒருவரான மித்ர அருச்சுனனை ஈழப் போரில் இழந்தவர். ‘மித்தி’ என்ற மிக நீண்ட னீமீனீஷீவீக்ஷீ (நினைவலைகள்) கொஞ்சம் சுருக்கமாக இருந்தால், உருக்கமாக இருக்கும்.

"அதுதானப்பு சொல்ல வந்தனான். வறாத்துப் பளையிலை உமல் கொட்டை அடிச்சவை உப்ப ரவுண் சனமாகி யல்லோ நாட்டாமை பேசுகினம்? அவங்கடை வாயை அடைக்க உண்ரை பொடியன்கள் காணாதே..."

இதற்கு என்ன அர்த்தம் என்பதை ஒரு கார்டில் எழுதிப் போட்டால், முதல் பத்து விடைகளுக்கு வழமையாக... க.பெ.பு. பரிசுகள். நிபந்தனை: தமிழ்நாட்டுக் காரர்களுக்கு மட்டும்!

==========================================

நன்றி: சுரதா

Wednesday, April 13, 2005

Thursday, March 31, 2005

@#$%^ அப்படின்னா என்ன மம்மி...!?

குழந்தைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்...

நம்மில் பலர் தினம்தினம் நம் பிள்ளைகளின் எல்லையில்லா கேள்விகளைக்கேட்டு எரிச்சலுற்றிருப்போம், அதிர்ச்சியடைந்திருப்போம். சிலர் கேள்விகளில் ஆனந்தமும் கொண்டிருக்கலாம்.

Image hosted by Photobucket.com

யோசித்துப்பாருங்கள் குழந்தைகள் உலகத்தை எப்படி தெரிந்துகொள்வார்கள்?

குழந்தை நீலவானத்தைப் பார்த்து, அது ஏன் நீலமாக இருக்கிறது என்று வியக்கலாம். அவர்களுக்கு எப்படித்தெரியும் அவர்களுக்கருகில் இல்லாத பலவற்றைப்பற்றி?

அடிக்கடி கேள்விகள் கேட்டு நம்மை அதிர்ச்சியடையச்செய்யும் (அல்லது பல வேளைகளைகளில் தலையச்சொறியச்செய்யும்:) அவர்களை எப்படி சமாளிப்பது?

குழந்தைகள் நினைத்திருக்கலாம் - நமக்கு எல்லாம் தெரியுமென்று. (நமக்குத்தானே தெரியும், நம்ப வண்டவாளம்:) அம்மாக்களே தயவுசெய்து சொல்லாதீர்கள்: "அப்பாவிடம் கேள்" என்று.

உங்களுக்காகவே, உங்கள் குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ள சில உதவிக்குறிப்புகள் இங்கே:

உங்கள் பதில் சுருக்கமாக இருக்கட்டும்:

பிள்ளைகளின் கேள்விகள் அறிவார்ந்த, பிரமிப்பூட்டுபவையாக இருக்கலாம். ஆனால், உங்கள் பதில் அதேவிதமாக இருக்கவேண்டுமென்பதில்லை. உதராணத்திற்கு, உங்கள் பிள்ளை "சூரியன் ஏன் ஒளிர்கிறது?" என்று கேட்டால், "மரம், செடிகள் வளர்ந்து நம்மை வளமாக வைத்துக்கொள்ள..." எனபதுபோல சுருக்கி பதில் அளியுங்கள். கடல் ஆவியாவதில் ஆரம்பித்து, புறா ஊதா/அக ஊதா - அது இதென்று (நமக்குத் தெரிந்ததெல்லாம் அல்லது கூகிளின் உதவியுடன்) பதிலை வளர்க்கத்தேவையில்லை -அது அவர்களுக்குப் புரியவும் போவதில்லை, அந்த வயதில்.

செயல்விளக்கம் கொடுங்கள்:

ஆயிரம் சொல் சொல்ல இயலாததை, நேரடி விளக்கம் எளிதில் செய்யும். கடலில் ஏன் அலைகள் வருகிறது? என்று கேட்டால், ஒரு வாளியில் நீரைநிரப்பி அதை அவர்களையே வேகமாக ஊதச்செய்து எழும்பும் அதிர்வுகளை/அலைகளைக் காட்டுங்கள். அது புரியச்செய்யும், நீங்கள் கொடுக்க நினைக்கும் நீண்டவிளக்கத்தை விட.

உண்மையைச் சொல்லுங்கள்:

கும்மிருட்டு, புயல், பேயென்றெல்லாம் வைத்து எதாவாது தேவதைக்கதை புனையாதீர்கள். உங்கள் குழந்தை, "நான் எங்கிருந்து வந்தேன்?" என்று கேட்டால், "குப்பைத்தொட்டியில் எடுத்தேன், தத்து எடுத்தேன்" என்று தத்து பித்தென்று உளாராதீர்கள். அப்படி கூறுவதால் குழந்தையை குழப்பத்திலும், பயத்திலும் ஆழ்த்துகிறீர்கள்.

எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது, ஒரு ஆரஞ்சுவிதையை நான் குழந்தையில் விழுங்கியபோது - அம்மா உன்னுடைய மண்டையில் ஆரஞ்சுமரம் முளைக்கப்போகிறது என்று கூறி, பலகாலம், பல இரவு தலையை அழுத்திப்பிடுத்திக்கொண்டு கஷடப்பட்டிருக்கிறேன் - எங்கே செடி முளைத்துவிடுமோ என்று:)

அளவுக்கதிகமாக பதறாதீர்கள்:

உங்கள் பிள்ளைகள் - பிறப்பு/இறப்பு செக்ஸ் சம்பந்தப்பட்ட துடுக்குதனமான கேள்விகள் கேட்கும்போது தயவுசெய்து நிதானத்தை இழக்காதீர்கள், அதிகம் பதறாதீர்கள். குழந்தைகள் தீவிரவாதிகள் பற்றி கேடகும்போது, அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது - அவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்துகொள்ளத்தான். வீணாக, அவர்களை தீவிரவாதிகள் கூட்டத்தில் இணைத்து கற்பனைசெய்து உங்கள் இதயத்துடிப்பை அதிகரித்துக்கொள்ளாதீர்கள்.

உங்கள் பதில் கேட்பவர்களுக்குத் தகுந்ததாக இருக்கட்டும்:

கேட்பவர்களின் வயதுக்குத்தகுந்தாக இருக்கட்டும் உங்கள் பதில்கள். 6 முதல் 10 வயதுள்ளபவர்களுக்கு கற்பனைக்கும், உண்மைக்கும் வித்தியாசம் புரியும். அதனால் உங்கள் 3 வயது பிள்ளைக்கு சொல்லும் பதிலையே 7 வயதுள்ள மூத்த பிள்ளைக்கும் சொல்லாதீர்கள்.

பதில்களைத் தள்ளிப்போடுங்கள்:

உங்கள் மகன், வழியில் பார்க்கும் ஒரு மனக்குறையுள்ள பையனைப் பார்த்தோ அல்லது ரயிலில் எதிரில் அமர்ந்திருக்கும் கண்பார்வையற்றவரைப் பார்த்து மிரளும்போதோ, ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகள் கேட்கும்போதோ - மிக அமைதியாக அவன்காதில் சொல்லுங்கள்: "கவலைப்படாதே, வீட்டுக்குபோன பிறகு இது பற்றி விளக்குகிறேன்" என்று. அதன்படி, பின்னர் வீட்டிலிருக்கும்போது, அவனுக்குப் புரியும்படி விளக்குங்கள்.

தேடுங்கள் கிடைக்கும்:

எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க சாத்தியமில்லை. உங்கள் குழந்தைகளை அவர்களுடைய சந்தேகங்களைக்கேட்க ஊக்குவியுங்கள். அவர்கள் குடும்பத்தில் யாரிடமோ, நண்பர்களிடமோ, ஆசிரியர்களிடமோ கேட்டுத்தெளிவுபெறட்டும். அந்த வகையில் இணையம் ஒரு பெரிய அறிவுக்கருவூலம், ஆனால் அதைப் பிள்ளைகள் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருங்கள்.

மொத்தத்தில், நம்மைப்போல அல்ல நம் குழந்தைகள். அவர்களுக்கு இந்த வானமே கூட இல்லை... அவர்களை புரிந்துகொள்வோம், உலகப்புரியச்செய்வோம்.

சகோதரி ஜோசஃபின் அனுப்பியிருந்த ஒரு மின்னஞ்சலை நான் இங்கு என்னுடைய மொழிப்படுத்தியிருக்கிறேன். நன்றி, லோரா.

Sunday, February 13, 2005

அன்பர்தின வாழ்த்துக்கள்

அன்புக்குரிய உங்களுக்கு என் அன்பர்தின வாழ்த்துக்கள்.

ஆம், சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் Valentine's Day என்பதை மற்றவர்கள் போல் வெறும் காதலர் தினம் என்று கொச்சைப்படுத்துவதில்லை - அன்பர்கள் தினம் என்று கொண்டாடுகிறது. வானொலியில் பாடல் விரும்பிக்கேட்பதனாலும் சரி, அன்பர்தினம் முன்னிட்டு உல்லாசப்பயணத்துக்கு ஏற்பாடு செய்தாலும் காதலர்கள், கணவன்/மனைவி என்று மட்டுறுத்தாமல், நாம் அன்பு செலுத்தும் அனைவருக்குமான ஒரு நாளாகவே இது கடைப்பிடிக்கப்படுகிறது.

அதனால், அன்புக்குரிய உங்களுக்கு என் அன்பர்தின வாழ்த்துக்கள்.

மேலும் Valentine's Day தொடர்பில் இந்த வாரயிறுதியில் நடந்த சில நிகழ்வுகளும், தகவல்களும்:

செய்தி 1:
ஒரு காலத்தில் நான் இங்கு சிங்கை வந்தபுதிதில் பலரும் கேட்டிருக்கின்றனர், இந்தியர்கள் பெரும்பாலும் நிச்சயக்கப்பட்ட திருமணம் செய்வீர்களாமே!? தரகர்கள் கொடுக்கும் புகைப்படம் பார்த்து துணையை முடிவுசெய்வீர்களாமே என்று. நேற்று வந்த ஒரு செய்தி சொல்வது மேட்ச்மேக்கிங்க், டேட்டிங்க் நிறுவங்களின் தேவை அதிகரித்திருக்கிறது, ஆதாயமுள்ள ஒரு வர்த்தகதுறையாக முன்னேறி வருகிறது. It's Just Lunch (இது அமெரிக நிறுவனத்தின் சிங்கைப் பிரிவாம்), Two to Tango, Lunch Actually, Hotspots.com ... என்று பல நிறுவனங்கள் அரசின் Social Development Unit (SDU)வுக்கு உறுதுணையாக இருக்கிறது. சிங்கையில் பெரும்பாலும் காதல் திருமணம்தான் என்பதால் பெரும்பாலானவர்கள் பள்ளியிலேயே கைபிடித்து திரிகின்றனர். அது திருமணத்தில் இணைந்து நல்வாழ்வுக்கும் இட்டுச் செல்கிறது, இடையிலும் பிரிகின்றனர். அதனால், திருமணத்தில் இணைய இயலாத சிலர், காதல் அரங்கேறாத பலர், இன்னும் சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போகும் பலர் என்று இருக்கும் இளையர்களுக்கு இதுபோன்ற நிறுவங்கள் பெரும் வரப்பிரசாதம். இந்த வகையில் அரசின் SDU முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு துணைசென்றிருக்கிறது. இதுபோன்ற நிறுவனங்கள் தமிழர்களுக்கென்றும் இருக்கிறதும், சில நேரம் அத்தி பூத்தார்போல் மணமகன்/ள் தேவை வரிவிளம்பரங்கள் தமிழ்முரசில் வருவதுண்டு.

செய்தி 2:
13 முதல் 18 வயதுடைய சிங்கப்பூர இளையர்களில் ஐவரில் ஒருவர் உடலுறவில் ஈடுபடுவதாலும், கருக்கலைப்பு இன்னபிற செக்ஸ் தொடர்பான நோய்கள் அதிகரிப்பதாலும் ஒரு தன்னார்வ நிறுவனம் காத்திருப்பதில் அர்த்தமுண்டு - Worth Waiting For... என்ற சொற்றொடர் பதித்த பட்டைகளை(wrist bands) இளையர்களிடையே கொடுத்து தங்களுடைய அன்புக்குரியவர்களிடம் கொடுக்கச் செய்திருக்கிறது.

செய்தி 3:
மற்றொரு நடப்பில், தாய்லாந்தில் நடந்த கருத்துக்கணிப்பில் Valentine's Day என்பது மற்றொரு சாதாரண மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உண்ணும் விருந்தாக மட்டும் இல்லாமல் கிட்டத்தட்ட 100,000 இளையர்கள் உடலுறவில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக சொல்கிறது.

இதுபோன்றவற்றில் நம் இந்திய இளையர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதும் வரும் செய்திகளில் தெரிகிறது. உலகம் போவதெங்கே...!?

Friday, February 11, 2005

சிங்கை இணையுலக சந்திப்பு - ஒரு சீரியஸ் பார்வை

நேற்று (10/02/05 - வியாழன்) சிங்கையில் நடந்த வலைப்பதிவு, இணைய உலக நண்பர்கள் சந்திப்பு பற்றிய நண்பர் மூர்த்தியின் பதிவின் தொடர்ச்சி இது.

நான் ஒரு 5 மணி சுமாருக்கு செல்லும்போது அங்கு நண்பர்கள் பலர் ஏற்கனவே சங்கமித்து பேசிக்கொண்டிருந்தனர். குறிப்பாக முனைவர் நா. கண்ணன் வட்டார வழக்கு பற்றி. நான் சென்றவுடன் அனைவரும் வரவேற்று உபசரித்து... இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். நீங்களே அன்பாய் தன்னடக்கமில்லாமல் அறிமுகம் செய்துகொள்ளுங்கள், பின் ஒவ்வொருவராய் என்றனர். எனக்கு வழக்கம்போல தொடைநடுக்கம், அதனால் நான் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன் வேறொருவர் ஆரம்பியுங்கள் என்று சொல்லிவைத்தேன்:)

என்னுடைய முந்தைய பதிவில் சிவப்பெழுத்தில் எழுதியிருந்தது தவிரவும் அல்லது அதையும் மீறி காதிலும்/மனதிலும் விழுந்த விஷயங்கள் சில:

கூட்டத்தில் பரவலாகப் பேசியது... வலைப்பதிவுக்கு பின்னூட்டம் மிக மிக அவசியம். அந்த வேளையை மூர்த்தி சிறப்பாக செய்கிறார். ஆனால் பலரும் அதைச் செய்வதில்லை. ஒரு பதிவு படித்தபின் தங்களுடைய அபிப்ராயத்தைத் தெரிவிப்பது எழுதுபவருக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும் - அதை வாழ்த்தியிருந்தாலும், திட்டியிருந்தாலும் - எதுவும் எழுதாமல் செல்வதைவிட. குறைந்தபட்சம் நல்லாருக்கு, இல்லை என்று சொல்லலாம் அதற்கு தமிழ்மணத்தின் புதிய மதிப்பிட்டு முயற்சி பெரிதும் உதவும். ஆனால் அதையும் கூட பலரும் பயன்படுத்துவதில்லை.

தமிழ்மணத்தை மேம்படுத்த காசி போடும் முயற்சிக்கு, ஓரளவுக்கு கூட வலைப்பதிபவர்கள் ஒத்துழைப்பது இல்லை. அவர் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியவுடன் - தன்னுடைய வலைப்பதிவில் அதை இணைத்துக்கொள்ள முற்படுபவர்கள் தங்களது எழுத்தின் தரத்தை, வலைப்பதிவின் தரத்தை உயத்திக்கொள்ள மெனுக்கடுவதில்லை. அதே போல் இங்கு வலைப்பதிவை படிப்பவர்கள் பெரும்பாலும் கணிணி மென்பொருள் துறையில் இருப்பவர்கள். அதனால், இந்த தொழில்நுட்பம் அறிந்தவர்கள் தமிழ்மணத்தில் காசிக்கு பக்கபலாமாய் இருக்க முன்வரவேண்டும். அதுதான் நீண்ட நாள் வளர்ச்சிக்கு உதவியாய் இருக்கும்.

வலைப்பதிவு ஒரு நாட்குறிப்பு என்றாலும் கூட, அது பொதுவில் வைப்பதால் ஒரு திறந்த புத்தகம். அதிலும் தமிழ்மணத்தில் இணைக்கும்போது பலரும் படிக்கிறார்கள், அதனால் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு சமூக அக்கறை வேண்டும். அதனால், நான் நினைத்ததை எழுதுவேன் என்ற ஒரு தாந்தோன்றித்தனம் கூடாது.

ஒவ்வொருவரும் தான் எதற்கு வலைப்பதிகிறோம், தன்னுடைய வலைப்பதிவை அல்லது மொத்தத்தில் தமிழ் வலைப்பதிவுகளை வருங்காலத்தில் எதை நோக்கி எடுத்துச்செல்லப் போகிறோம்... என்ற உணர்வுடன் செயல்படவேண்டும்.

நா. கண்ணன்: ஒரு காலத்துல வலைப்பதிவு ஆரம்பகாலத்துல காசிக்கு சில ஆலோசனைகள், ஊக்கம் கொடுத்திருக்கேன். ஆனால் திடீர்னு அவரே தொழில்நுட்பத்தையும் கத்துக்கிட்டு எங்கேயோ போய்ட்டார். தமிழ்மணம் என்பது தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஒரு மைல்கள். ஆனால், அதை சும்மா நானும் பிளாக் வைச்சுருக்கேன்னு எழுதாமல் பயனுள்ள வகையில் செய்ய ஆக்ககரமாக ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.

நா. கண்ணன்: முன்னொருமுறை - வலைப்பதிவு காலத்துக்கு முன்னர் eBook என்றொரு விஷயம் கொண்டு வந்து அதில் நமது கலை, கலாச்சாரம், பாரம்பரியம், மதம்... போன்றவற்றின் அடிப்படைக் கேள்விகளுக்கு பதிலளித்து அதை உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் இன்றைய தலைமுறை குழந்தைகள் பங்கு கொண்டு அதைப் படித்து மேலும் அவர்களுக்கு எழும்பும் கேள்விகளை அங்கேயே இட்டு (விநாயகருக்கு ஏன் ஆனைத்தலை இருக்கு? பொட்டு ஏன் வைக்கணும்?) அதற்கு உலகெங்கும் உள்ள விஷய்ம் தெரிந்தவர்கள் பதில் கூறும் படி செய்யவேண்டும். அப்படி செய்தால் அதுதான் உண்மையான eBook ஆக இருக்க முடியும். Organic விஷயமாய் இருப்பதால் அது அப்படியே மேலும் மேலும் வளரும். அதை நமது குழந்தைகள், வருங்கால சந்ததியினர் பலன் பெறுவர். அது போன்ற முயற்சிக்கு வலைப்பதிவுகள், இப்போதுள்ள இணையம், தொழில்நுட்பம் செய்ய முடியும். அதை வழிநடத்த, தொழில்நுட்பத்தில் உதவிசெய்ய விரும்பும் ஆர்வளர்கள் என்னைத்தொடர்பு கொண்டால் மேலும் விரிவாகப் பேசலாம். மேலும் Tamil.Net போன்ற வலை, மடலாடற்குழுவிலும் ஏகப்பட்டம் தகவல்கள், ஆராய்ச்சி விஷயங்கள் உண்டு அதையும் யுனிக்கோடு தமிழ் கொண்டு ஒருங்கிணைக்கவேண்டும். தமிழர்கள் நமக்கே உரிய குணம், ஏதாவது இதுமாதிரி பேசினால் - அபாராம், சபாஷ் என்பார்கள் அப்புறம் போய்ண்டே இருப்பாங்க. சீரியஸ் விஷயங்களுக்கெல்லாம் ஈடுபடுவதில்லை. நான் மடலாடற்குழுவிலிருந்தும், வலைப்பதிவிலிருந்தும் அவ்வப்போது சிறிது ஒதுங்குவது இதுபோன்ற விஷயங்களால்தான். என்னைப்பொருத்தவரை - என்ன செய்யப்போகிறோம் என்ற குறிக்கோளுடன் செயல்படவேண்டும். இதுமாதிரி அவ்வப்போது இனிமையாக எச்சரித்து:) சந்திப்பை உருப்படியாக்கினார்கள். அதுபோக அங்கோர்வாட் ஆலய சுற்றுப்பயணம் முடிந்து கொரியா திரும்பும் வழியில் எங்களுடைய சந்திப்பு கேள்விப்பட்டு வந்ததால், பயண அனுபவத்தையும் அங்கு வரலாற்று சின்னம் சிதிலமடைந்திருப்பதையும், சோழமன்னர் தொடர்பிருப்பதையும், அங்கு சந்தித்த லண்டணில் வசிக்கும் இந்தியப்பூர்விக குடும்பத்தின் ஆணிவேர் தேடலையும் எடுத்துகூறினார்கள். மனிதர் சுத்த சைவம், எப்படிதான் கொரியா, கம்போடியான்னு சமாளிக்கிறாரோ!? (கேட்டால் சர்வசாதரணாமாய் சொல்கிறார், பெரும்பாலும் சமைத்துவிடுவேன். அடிக்கடி இட்லி செய்வேன் (அதைச்சாப்பிட்ட நண்பர் யாரோதான் இட்லிக்கடை வச்சிருக்கிறதா சொன்னாங்களோ!?)

நான்

திருமதி. ஜெயந்தி சங்கரின் கதைகள் பலவும், நான் என்றே தன்மையில் பேசி பலவேளைகளில் கதைபடித்துக்கொண்டிருக்கும்போதே இது ஜெயந்தி-க்கு நடந்ததோ என்ற பயம் ஏற்பட்டதாக பலரும் கூறினோம். அதற்கு ...

ஜெயந்தி:
அப்படி ஒரு பயம் ஏற்பட்டால் நான் எதிர்பார்த்ததை அடைந்துவிட்டேன். அதாவது, நான் ஒரு விஷயத்தை கேள்விப்படும்போது அதை அப்படியே உள்வாங்கி மனதுள் நினைத்து நினைத்து அசை போடுகிறேன். அது சில காலம், சில வருடம் கழித்து வரும்போது - விஷய்ம் நடந்தவர்களை முன்னிறுத்தி எழுதுவதை விட, எனக்கே நடந்ததாய் நினைந்து எழுதும்போது இன்னும் ஈடுபாட்டுடன், உள்ளுணர்வுடன் எழுத முடிகிறது.

சித்ரா ரமேஷ்:
அதெப்படி முடியும் ஜெயந்தி? நீங்க ஒரு வேலைக்காரியைப் பற்றி எழுதும்போது அது என்னதான், வேலைக்காரியாய் மாறி நான் என்று எழுதினாலும்... நீங்க ஓரளவு நல்ல நிலையிலிள்ள பெண். அந்த நடுத்தரவர்க்க பெண்ணாகவே... நான் திருடியது தவறு என்பதுபோல் உங்கள் கதை செல்கிறது. ஆனால் அந்த வறுமையில் உழலும் வேலைக்காரி, ஒருவேளை "நாம் தேவைக்காக திருடிவிட்டோம். இதிலிருந்து எப்படி தப்பிப்பது, எப்படி மறைப்பது" போன்ற சிந்தனைகள் வரலாம் அல்லவா?

அருள்:
இதுமாதிரி என்னோட அறிவியல் புனைகதையொன்றில் எழுதியிருந்தேன். ஒருவனுக்கு பெண்ணுடைய உணர்வுகளை கொடுத்து, பின்னர் எடுத்துவிட்டால் அவன் என்னவாய் இருப்பான்!?

நா. கண்ணன்:
இந்த தலைப்பு நீண்ட விவதாத்துக்குரியது. ஆண்டாள் பெண்ணாய் மாறி எவ்வளவுதான் உருகினாலும் அந்த ஆண் உள்ளே இருப்பான் தானே... அப்படியானால் எவ்வளவு சதவீதாம் ஆண்/பெண்ணாய் மாறி எழுதமுடியும்...!? அதனால் நான் - என்பது பற்றிய நிறைய விவரணைகள் தேவை...
(அன்பு: இதுமாதிரி பொருட்பட கூறினார்கள், ஏதோ சொதப்பிருக்கேன்னு தெரியுது, எங்கேன்னு தெர்ல, அது தெரிஞ்சா ஏன் சொதப்பல்:)

அப்புறம் நம்ப அருள்குமரன். அவர் அடிப்படையில் ஒரு ரசாயணப்பொறியாளர். ஒரு காலத்தில் பெயிண்ட் கலக்கிட்டு இருந்தவரு:) இப்போதும் பல்லூடகத்தொழில்நுட்பத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவர் கணிணித்துறையில் இப்போது முழுநேரப்பணி புரிந்துவந்தாலும் தனது முழுஆர்வத்தில், உழைப்பில் தனியாக ஏதும் கணிணிதுறைசார்ந்த படிப்பேதுமில்லாமல் முன்னேறி கலக்கி வருகிறார். அருள் ஃபிரெஞ் ஆயில் போல Flash சர்வத்துக்கும் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்து வருகிறார். அது சும்மா படம் காட்டுவதற்கு மட்டுமல்லாமல் சுனாமி கலந்துரையாடல் போன்ற தமிழ் கலந்துரையாடலும் சாத்தியப்படுத்தியிருக்கிறார். இதில் உள்ள சிறப்பு மற்றவை போல் ஏதும் நமது கண்ணியில் இறக்காமல், எழுத்துறு பற்றிய கவலையில்லாமல் எந்தக் கணிணியிலும் செயல்படும் வகையில் அமைத்திருக்கிறார். தொழில்நுட்பம், பல்லூடகம் பற்றியே சிந்திப்பதால் அறிவியல் புனைக்கதைகளும் எழுதி வருகிறார் இப்போது. இதுபோன்ற பல நுட்பங்கள் அவர்கைவசம்... ஆனால் அது அவர்கையிலேயே இருப்பது அவருக்கும் பயனில்லை, அடுத்தவருக்கும் பயனில்லை. அதனால் அவரிடம் உள்ள பல toolsகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும். அதுபற்றி சுட்டிகளுடன், விரைவில் அருள் எழுதுவார் என்று நம்புவோம்.

என்னைப்பொருத்தவரையில் ஆரம்பத்திலிருந்தே கணிணித்துறையில் கற்று/இருந்து வருபவர்களை விட(என்னைப்போன்று:), மற்ற துறையிலிருந்து மென்பொருள்துறைக்கு மாறுபவர்கள் அதிகவேகத்துடன், ஈடுபாட்டுடன் அதைக்கற்று, புதியன அறிந்து கலக்கி எடுக்கிறார்கள். அதற்கு உதாரணம் தமிழ்மணம் காசி மற்றும் இந்த அருள்குமரன் அவர்கள்.

மற்றொரு அதிசயத்தையும் நேற்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அவர்தான் தம்பி ஈழநாதன். அவரைப்பற்றிதான் அவருடைய எழுத்து/பதிவுகள் பேசுகிறதே நான் என்ன சொல்வது? அவர் தமிழ்துறையில்தான் ஈடுபடவேண்டும் ஆர்வமிருந்ததாயும் ஆனால் பெற்றொர் கட்டாயத்தால் பொறியியல்துறைக்கு வந்துவிட்டதாயும் ஆனால் இப்போது முடிந்தவரை தமிழ்துறையில் ஈடுபட்டுவருவதாயும் கூறினார். அவர் பெற்றோருக்கு மனதுள் நன்றி சொன்னேன். இல்லாவிடில் தமிழில் பட்டம் வாங்கிவிட்டு ஏதோ ஒரு இடத்தில் ஆசிரியப்பணி செய்திடாமல் - அதைவிட சிறப்பான உலகம் பயனுறும் தமிழ் சேவைகள் செய்துவருகிறார் இப்போது இவர் இருபத்திமூன்று இளையர் என்பது அவரிடம் பேசும்போது, அவரைப்படிக்கும்போது மறந்துவிடுகிறது. அவருடைய நோக்கம் பல தமிழ் நூட்கள், கட்டுரைகள், இதழ்கள் இருக்கிறது, வருகிறது -அதை நம் உலகத்தமிழ் மக்கள் அறியச்செய்ய வேண்டும். அதற்கு ஈழத்தமிழ் இலக்கியம் அதிகம் பரிச்சயமென்பதால் படிப்பகம் மூலம் எழுதிவருகிறேன். அதுபோல் நீங்களும் மற்ற தமிழ் நூல்கள் பற்றி எழுதுங்கள், வாருங்கள் இணைந்து செய்வோம் என்கிறார். மதியின் புத்தகவாசமும் மிகுந்த பலனளிக்க இயலும் என்று நம்புகிறார்.

இதுபோக நான் சந்தித்த இன்னொரு நபர் திருமதி சித்ரா-வின் கணவர் திரு. ரமேஷ். அவரும் பொறியியல்துறையில் இருந்தாலும் பரந்த வாசிப்பனுபவம். இணையத்தின் அனைத்து மடலாடற்கு குழுக்களுக்கும், இணைய இதழுக்கும் சென்று வாசிப்பது அவர் பேச்சில் தெரிந்தது. இதுபோன்று தமிழார்வம் உடைய இணை இணையக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். அதனால்தான் சித்ரா, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளார் கழகம், பட்டி மன்றம், கவிமாலை, இணைய உலகம் என்று கிளைபரப்ப இயல்கிறது. அவர்கள் திண்ணை, மரத்தடியோடு - இங்கு வலைப்பதிவொன்றும் தொடங்கி கலக்க வரவேற்கிறேன்:)

அப்புறம் திருமதி. ஜெயந்தி சங்கர். அவர்கள் முதன்முதலில் அறிமுகமானது/பேசியது அவள்விகடன்/தமிழ்முரசு பிரச்னையின்போதுதான். அப்போது அந்தக் கலக்கதில்தான் மிக மெதுவாக பேசுகிறார் என்று நினைத்தேன். ஆனால் நேற்று சந்திப்பின் போதுதான் தெரிந்தது, அவருடைய சாந்தம், அமைதி, தன்னடக்கம், வெட்கம்... அவர் தன்னுடைய அவள் விகடன் கட்டுரையை குறள் சொல்லி ஆரம்பித்தற்குப் பதில் தமிழ்முரசு லதாவின் தீவெளி கவிதை நூலில் உள்ள என்னாலா மைக்? கவிதை சொல்லி ஆரம்பித்திருந்தால் தப்பியிருப்பார். பிள்ளைகள் நேரம்கொடுக்கும்போதெல்லாம் எழுத்தே தவமாய் நிறைய எழுதுகிறார்.

சரி இதுவரை போதும்... எழுத இருக்கு இன்னும் பல விஷயம், ஆனால் வீடு வா வாங்குது:) அதனால் மீதியை மற்ற மக்கள் கவனிச்சுக்கோங்கப்பா.

சிங்கை வலையுலக சந்திப்பு

நண்பர் மூர்த்தி நேற்று சிங்கையில் நடந்த சந்திப்பு பற்றி சிங்கை இலக்கிய சந்திப்பு என்ற தலைப்பில் மிக விரிவாக எழுதியிருந்தார்கள். இருந்தபோதிலும் அவர் கவனிக்க/பதிய தவறிய சில விஷயங்களை இடையிடையே இங்கு சேர்த்து பதிவை முழுமையாக்க முயற்சித்திருக்கிறேன்:)

அவருடைய முழுப்பதிவையும் அவரது அனுமதியில்லாமல் இங்கு காப்பி செய்திருந்தாலும், என்னை மூர்த்தியோ, வேறெந்த வழிப்போக்கனோ(ரோ) கேள்விகேட்க முடியாது. அப்படி கேட்க நினைப்பவர்களுக்கு இப்போதே சொல்லிவிடுகிறேன்:
"பல தமிழ் வலைப்பதிவுகள் இதைச் செய்கின்றன."

இனி மூர்த்தியின் பதிவும் ஆங்காங்கே விடுபட்ட விஷயம் சிவப்பு வண்ணத்திலும்....

நேற்று மாலை 4.30க்கு ஆரம்பித்த இந்த சதுர மேஜை மாநாட்டில் மூர்த்தி, எம்கேகுமார், அன்பு, ஈழநாதன், விஜய், ஜெயந்திசங்கர், நா.கண்ணன், அருள்குமரன், மா.கோ அவர்கள், தாமரைக் கண்ணன், செந்தில்நாதன், கவிஞர் பாலு.மணிமாறன், சித்ராரமேஷ்,
ரமேஷ், ராம்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நான்*: தண்ணி (வெறும் பச்சைத்தண்ணிதேன்:)

இலக்கியம் தவிர மற்ற எல்லாம் பேசும் இலக்கிய(!) கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இந்தக்கூட்டத்தில் அனைவரும் ஆக்கபூர்வமாகவே பேசினார்கள். முதலில் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட கவிஞர்.பாலு.மணிமாறன் தனது கவிப்பயணத்தை தொடங்கிய காலம் முதல் மலேசியாவின் இதழ் நடத்தியது பின்னர் சிங்கை இலக்கிய வட்டத்தில் தம்மை ஐக்கியமாக்கியது பற்றியும் பேசினார். அவர்தம் பேச்சினில் கடற்கரைச்சோலை கவிமாலை பற்றியும் பிச்சினிக்காடு இளங்கோ பற்றியும் பெரியவர் க.து.மு.இக்பால் பற்றியும் நினைவு கூர்ந்தார்.

நான்*: குளோப் ஜாமூன் (இந்தக் குளோப் கொஞ்சம் சிறியதுதான். நல்ல மெதுவா, அளவான இனிப்போடு, நன்றாக பாகில் ஊறி பக்குவமாக இருந்தது. நன்றிங்க ஜெயந்தி:)

நிறையப் பேசுவார் என நான் எதிர்பார்த்த அன்பு அவர்கள் தன்னடக்கமாக தன்னைப் பற்றிச் சொன்னார்கள். இதழோரம் புன்னகை எப்போதும் சிந்தியபடியே பேசினார். தனது வலைப்பதிவு குப்பை மட்டுமல்ல...கிளறினால் நிச்சயம் ஏதாவது கிடைக்கும் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

நான்*: சமோசா (கூச்சமே படாம எனக்குப்பிடித்த புதினா சட்னி, அப்புறம் ஏதோ சாஸ் தொட்டுண்டேன். வளையல் செஞ்சு போட்ற அளவு இல்லேன்னாலும், வழக்கம்போல சமோசோவுக்குரிய டெஸ்ட்டோடு இருந்துச்சு:).

அடுத்ததாகப் பேச எழுத கண்ணன் அவர்கள் சாதிகள் வாரியாக பேச்சுமொழி மாறுபடும் என்றார்கள். நான் அவரிடத்தில் இருக்காது... இல்லவே இல்லை என பழைய பல்லவியைப் பாட "இப்படித்தான் என் பதிவிலும் யாரோ பின்னூட்டமிட்டார்!" என்றார். நான் சொன்னேன் அவரிடத்தில்,"ஆமாம்...உங்களைப் போன்றே இன்னொருவர் என்மடல் என்ற வலைப்பதிவில் தென்கொரியாவில் இருந்து கண்ணன் என்று ஒருவர் எழுதினார். அவருக்கு நான் மறுப்பு மொழியிட்டேன்" என்றேன். ஒருவரை ஒருவர் யாரென்று தெரிந்துகொள்ளாமலே பேசப்போக மற்றவர்கள் நகைத்தனர். பின்னர் புரிந்துகொண்டோம். பின்னர் பேச்சு வட்டார வழக்கு பற்றித் திரும்பியது. பிராமண பாஷை பற்றியும் பேசினோம். பல வட்டாரங்களில் பேசப்படும் தமிழ் மொழியைப் பற்றி அலசினோம். அதன்பின்னர் கண்ணன் அவர்கள் தமது ஆரம்பகாலம்(தமிழ்.நெட்) முதலான தமிழ்ப்பணியைப் பற்றி விவரித்தார்கள். தமிழ் இணைய மாநாடு பற்றியும் தமிழ் எழுத்துரு கண்டுபிடித்த தமது முன்னாளைய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். சிதிலமடைந்து கிடக்கும் அங்கோர்வாட் கோயிலைப்பற்றிய தனது வேதனையை எங்களோடு பகிர்ந்து கொண்டார்கள். வரலாற்றுக் கட்டுரைகளை இன்னும் தமிழ்.நெட்டில் இணைக்கும் தமது முயற்சிகளைப்பற்றியும் சொன்னார்கள்.

நான்*: குட்டி வளைய முறுக்கு, மிக்ஸர் (கண்ணன் சார் பேச்சு சுவாராசியத்தில் ரொம்ப நல்லாருந்துச்சுது, ஹால்டிராம் மிக்ஸர் கூட. தோசா கார்னர் முறுக்கு அருமை, நமக்குப்பிடிச்ச ஐட்டம்னுதானே அத வாங்கினேன்:)

அதன்பின் தோழர் செந்தில்நாதன் பேசினார். இலக்கியத்தில் தமக்கு நல்ல ஈடுபாடு உண்டு என்பதை ஒப்புக்கொண்ட அவர் தாம் நல்ல ஒரு பார்வையாளர் மட்டுமே என்றார். அன்றாடம் தாம் வலைப்பதிவுகள், மரத்தடி, ராயர் போன்ற குழுமங்களுக்கு வருவதாகவும் ஆனால் கருத்துக்கள் எதுவும் எழுதுவதில்லை என்றும் சொன்னார். அவரை வலைப்பதிவு ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து எழுதுமாறு எல்லோரும் அன்போடு கேட்டுக் கொண்டோம்.

நான்*: சீடை சைஸ்ல ஆனா சதுரவடிவில கிடைக்கும் கிடைக்கும் ஒரு இனிப்பு வஸ்து, பிஸ்கட்னு கூட சொல்லலாம் (அதுவும் தோசா கார்னரில் கிடைக்கும் என்னோட ஃபேவரிட்...:)

அடுத்து பேச எழுந்த அல்வாசிட்டி விஜய் தான் அமெரிக்காவில் பணிபுரிந்தபோது நண்பர்களோடு சேர்ந்து அல்வாசிட்டி ஆரம்பித்ததாகச் சொன்னார். தற்போதைய வலைப்பதிவிலும் அவர்கள் எழுதுவதாகவும் ஆனால் தாமே நிறைய எழுதுவதாக சொன்னார். அல்வா யாருக்குக் கொடுத்தீங்க என்று சித்ரா கேட்க, "இப்போது அவரின் பேச்சே அல்வாதான்" என்று கண்ணன் அவர்கள் சிரிக்க அனைவரும் சிரித்தோம்.

நான்*: எனக்குப்பிடித்த மசால் கடலையை யாராவது பிரிப்பாங்களான்னு சீரியஸா பார்த்துட்டிருந்தேன். (அப்படி அப்பப்போ சீரியஸ் போஸெல்லாம் கொடுத்துட்டு இருந்தேன்... சுத்தி சுத்தி போட்டோ எடுக்கும்போது மட்டும்தேன் சிரிச்சு/வழிஞ்சுட்டிருந்தேன்.... அதெ பெர்சா மூர்த்தி 'இதழோரப் புன்னகை' ன்னு கவிதை மாதிரி எழுதியிறுக்கிறார், எனக்கு தற்பெருமை பிடிக்காதென்ற உண்மை தெரிந்தும்:)

ஏதாவது கிராதகமாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட மூர்த்தி எழுந்து "தான் ஒரு கணினி வன்பொருள் பொறியாளன் என அறிமுகம் செய்துகொண்டு 'எழுத்தைத் தவிர மற்றெல்லாம் எழுதிக் கொண்டிருப்பதாக'ச் சொன்னார்! மற்றவர்களுக்கு வியப்பு. தாம் நல்ல படைப்புகளாகத் தருவதில்லை என்று ஒப்புக்கொண்ட அவர் அன்புவைபோன்ற நல்ல பதிவுகள் எழுதுவது மிகச் சிலரே என்றார். அவர்தம் பேச்சில் பின்னூட்டம் எப்படி ஒரு எழுத்தாளருக்கு ஊக்கசக்தியாக விளங்குகிறது என காரசாரமாகப் பேசினார். பின்னூட்டம் என்பது ஒரு எழுத்தாளருக்கு மிகவும் அவசியம் என ஒருமனதாக எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது! இடையில் குறுக்கிட்ட சித்ரா ரமேஷ் அவர்கள்,"வழிப்போக்கன்" பற்றிய பழைய நினைவுகளைக் கிளறினார். அதற்கு கமல்மேல் தனக்கு வெறுப்பு இல்லை என்றும் கமலுக்குபின் அரவிந்தசாமி, மாதவன் என்றதாலேயே விட்டுக் கொடுக்காமல் வாதிட்டதாகச் சொன்னார். அதன்பின் தமது முத்தமிழ்மன்றம் பற்றியும் சொன்னார்.

நான்*: மசால் கடைலை போலவேதான், எனக்குபிடித்த அந்தக் காராச்சேவும். கடைசிவரக்கி பிரிச்சே தொலைக்கல... (வருத்தந்தாண்ணே.... நாமளே எல்லாத்தையும் பிரிக்க முடியுமா!?). இதுல்ல இன்னும் உச்சம்... குமார் இருந்த எல்லா கவரையும் (வேணும்ணே)
தூக்கிப்போட்டுட்டு - கடைசியா பிரிக்காத சேவையும், கடலையையும், நீங்களே எடுத்துட்டுப்போய்டிரீங்களா அன்புன்னு ஒரு கடைமைக்கு கேட்டார். நானும், பராவல்ல நீங்க ரூம்லதான இருக்கிறீங்க நீங்க எடுத்துட்டுபோங்கன்னு சொன்னேன் (பெரிய தானப்பிரபுவாட்டம்). ஒண்ணும் பிரிச்னையில்லேயேன்னு பேச்சுக்கு ஒரு கேள்வி கேட்டுட்டு (என்னோட பதிலுக்கூட காத்திருக்காம) பேக் பண்ணிட்டார். (குமாரு ... நல்லா சாப்பிட்டு நல்லா இருங்கோ.... இது வாழ்த்துப்பா, வயித்தெல்லாம் ஒண்ணுஞ்செய்யாது, டோண்ட் ஒரி:)

அடுத்ததாகப் பேசிய ரமேஷ் அவர்கள் தனது வாசிப்பு அனுபவத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டார். இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு கொண்டவர். அவர்தம் பேச்சில் சாருவும், ஜெயமோகனும் அடிக்கடி வந்துபோனார்கள். சிங்கையில் நடக்கும் அனைத்து இலக்கியக் கூட்டங்களிலும் இவரை நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டது இதுதான் முதல்முறை.

நான்*: பிரிக்காத மசால் கடலையயும், காராச் சேவையும் பார்த்துண்டே - மீண்டும் ரிங்க்முறுக்-ஸ்

சித்ரா ரமேஷ்! இவரைத் தெரியாத சிங்கப்பூர் தமிழர் இருக்கமுடியாது. ஞாயிறு தமிழ்முரசைத் திறந்தால் இவரின் படைப்பு ஏதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். கவிதை, கதை, கட்டுரை என எப்போதும் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். திண்ணையில் பல கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தோழியர் பதிவில் இவரின் பின்னூட்டங்களை நிறைய பார்க்கலாம். கூச்சமின்றி அனைவரோடும் நன்கு கலகலவெனப் பேசினார். இவரை வலைப்பூ உலகத்துக்கு வருக வருக என வரவேற்கும் அன்பு உள்ளங்களில் நானும் ஒருவன்.

நான்*: ஆறிப்போன டீ (சாரி... பேச்சு முறுக்கில்(இது வேற முறுக்குண்ணே) நான் ஆறவைத்த டீ:)

தன்னடக்கமாகப் பேசினார் மூத்த சகோதரி ஜெயந்தி. தனது கதைகள் பற்றி சொன்னார். தமது கதைகளில் நான் என்று ஆரம்பித்து எழுதினால் அது உண்மையில் நான் அல்ல என்றும் தாம் அந்த கதாபாத்திரமாகவே மாறி தம்மை அந்த இடத்தில் வைத்துப் பார்த்து கதை எழுதுவதால் அக்கதைகளில் உயிரோட்டம் இருப்பதாகக் கூறினார். அதன்பின்னர் சிங்கப்பூர் இளையர்பற்றிய தமது கட்டுரையின் சிதைவு பற்றியும் விகடன் ஆசியர்குழுமம் பற்றியும் தனது கசப்பு அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார். எப்போதும் ஏதாவது எழுதிக்கொண்டே இருக்கிறார். நல்ல சிந்தனைவாதி. அற்புதமான பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர்!

நான்*: அந்த குட்டி பிஸ்கட்

ஈழநாதன் தனது எழுத்து அனுபவங்களை வரிசைப்படுத்துமுன் தாம் இலக்கிய உலகில் சின்னவர் என்று நகைப்பூட்டினார்.
அதன்பின்னர் தனது கவிதைகள், படிப்பகம், சலனச்சுருள் பற்றிச் சொன்னார். அவர்தம் பேச்சில் பத்மநாப அய்யர் பற்றியும் நிறையச் சொன்னார். அய்யர் என்பதைப் பலர் தவறாகப் பேசியதாகச் சொன்னார். தச்சு வேலை செய்பவர் தச்சர் என்பதுபோல புரோகிதம் செய்பவர் அய்யர். எனவே அது தவறில்லை என்றார். உடன் குறுக்கிட்ட கண்ணன் அவர்கள் கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்ற தனது அனுபவத்தை விளக்கினார். கமல் போன்றே பார்ப்பணீயத்தில் அதிக ஈடுபாடு இல்லாதவர் அய்யர் என்றார். ஈழத்து இலக்கியங்களைப்பற்றியும் இலக்கிய வாதிகளைப் பற்றியும் நிறையப் பேசினார்.

நான்*: ஹால்டிராம் மிக்ஸர்

வெள்ளை மனதோடு முத்துப்பல் காட்டி அடிக்கடி சிரிக்கும் எம்கேகுமார் அவர்கள் தாம் வெண்ணிலாப் பிரியன் என்ற பெயரில் எழுதிய கவிதைகள் பற்றிச் சொன்னார். தனது வலைப்பூ பற்றியும் தமிழோவியத்தில் தாம் எழுதும் "மஜூலா சிங்கப்பூரா" தொடர் பற்றியும் சொன்னார். சிங்கப்பூரைப்பற்றி இதற்கு முன் எழுதிய தோழி ஜெயந்திசங்கர் அவர்களே பாராட்டினார். இது நல்ல தொடர் என்று நாங்கள் அனைவரும் பாராட்டினோம். தோழி ஜெயந்தியின் கட்டுரையையும் குமாரின் கட்டுரையையும் கண்ணன் அவர்கள் தமது வலையில் ஏற்றி பத்திரப்படுத்த அனுமதி வேண்டினார்கள். தோழி அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். குமார் அவர்களின் கட்டுரை இன்னும் முழுமை பெறவில்லை. பெற்றதும் ஒப்புக்கொள்வார்.

நான்*: அதே முறுக்கை எப்படித்தின்றதுன்னு... அதைக்கொஞ்சம் எனக்குப்பிடித்த புதினா சட்னில டிப் பண்ணி கொஞ்சம்....

தான் கணினி படிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே ஆரம்பித்த அருள்குமரன் தனக்கும் கணினிக்கும் உண்டான தொடர்பு பற்றி ஆரம்பம் முதல் விளக்கினார். தாம் செய்த அசைபடங்கள், மேக்ரோமீடியா ப்ளாஷ் படங்கள் பற்றி நிறைய சொன்னார். சென்ற தமிழ் இணைய மாநாட்டில் தமக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றியும் விளக்கினார். தாம் செய்த, செய்து கொண்டிருக்கும் மென்பொருள் முயற்சிகளை அச்செடுத்து கொண்டு வந்திருந்தார். தாம் கண்டுபிடித்த வித்தியாசமான தூதுவர் முயற்சிகளையும் தமிழ்மென்பொருள் உள்ளீடு இல்லாமலேயே தூதுவரில் தமிழில் எழுத முடியும் என்பது பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். ஆச்சர்யத்தில் வாய்பிளந்தேன். முழு ஈ தங்குதடையின்றி உட்சென்று வந்தது. இதுபற்றி தனியாக பட்டறை ஒன்றை நடத்துவது என்று தீர்மானித்தோம். நா.கண்ணன் அவர்கள் ஊக்கமளித்தார்.

நான்*: திடீர்னு சித்ரா ரமேஷ், ஜெயந்தி எதோ தாங்களுக்குள்ளே பேசிண்டே எழுந்து நடக்க ஆரம்பிக்க, கண்ணன் சாரும் கொஞ்சம் புரிஞ்சா மாதிரி புது எடம், எங்கிருக்கோன்னு பின்னாடியே போனார். அருள் பேசிண்டிருக்கும்போது கூட்டம் கலைஞ்சதால கொஞ்சம் மிரண்டார், ரமேஷ் பயோ-பிரேக்னு ஏதோ சொன்னதால அப்படியே சிரிச்சுண்டு எல்லாரும் எழுந்து காலார அந்தப்பக்கம் நகண்டார்கள். அப்பக்கூட நான் எழுந்திருக்கிலையே..... கடைமையே கண்ணாய், விட்டகுறை தொட்டகுறையைத் கவனித்தேன்:)

அடுத்து பேச எழுந்த தாமரைக்கண்ணன் அவர்கள் ஏழாவது அறிவு பற்றியும் எட்டாவது அறிவு பற்றியும் பேசினார். அதற்கு கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களையும் துணைக்கு அழைத்தார். "எங்கே போய்விடப்போகிறீர்கள். அகத்தியர்தானே..நான் அங்கேயும் இருக்கிறேன்..விரைவில் வருகிறேன்" என விஜய் காதிற்குள் மூர்த்தி மெல்ல கிசுகிசுத்தார்! எக்ஸ்ட்ரா பவர் பற்றி உங்களுக்கு எப்படித்தெரியும் என சித்ரா அவர்கள் கிடுக்கிப்பிடி போட தமக்கு கற்பனையில் தெரியும் என்றார்! அகத்தியரில் தாம் எழுதிவரும் கட்டுரைகள் பற்றி விளக்கினார். தமது பேச்சினூடே தனக்கு வேலை கிடைக்க காரணமாக இருந்த மா.கோ அவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

நான்*: என்ன செய்றது ... மீண்டும் பச்சத்தண்ணி.

சிங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மா.கோ அவர்கள் அடுத்து பேசினார். முரசு அஞ்சல் கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் தமது குளோபல் தமிழ் இணையம் பற்றியும் சொன்னார். தமது பேச்சில் தமிழ் உலகம் பழனி அண்ணாவை நினைவு கூர்ந்தார். ராணுவத்தில் காப்டனாக இருந்து மேஜர் ஆனது பற்றியும் சிங்கையின் இலக்கியப் பயணம் பற்றியும் விளக்கினார். அவர் தனது பேச்சில் நியூமராலஜி பற்றிச் சொன்னார். ஒருவரின் பெயர் கொண்டே அவரின் குணநலன்களைச் சொல்லிவிடமுடியும் எனவும் பிறந்த தேதி கொண்டும் தன்னால் எல்லாம் கூறமுடியும் என்றும் சொன்னார். ஒன்றுமே இல்லாமல் ஒருவரோடு பேசிப்பார்த்தும் தன்னால் அவர்களின் பண்புகளைக் கூறமுடியும் என்றும் ஆணித்தரமாகச் சொன்னார். தமிழ் இலக்கிய உலகில் தமக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார். என்ன செய்ய? வேதனையாகத்தான் இருந்தது.

நான்*: மூர்த்தி காலையில் வேலைக்குபோகணும், கிளம்புறேன் என்றார். அப்புறம் நாங்கெல்லாம் எங்கோ போறோம்னு நினைச்சேன்:) அப்புறம் பார்த்தா தலிவரு இப்போ மலேசியா/ஸ்குடாய் ஜொகூரில் இருக்காராம். வாரயிறுதியில் மட்டும்தான் இங்கு சிங்கப்பூர் விஜயமாம்.

இப்போதுதான் எனக்குப்பிடித்த ஒரு மிக மிக சந்தோசமான ஒரு அறிவிப்பை சித்ரா ரமேஷ் வெளியிட்டார். இருங்க... அப்படியே எல்லாரும் சரவண பவன் போய் டிஃபன் சாப்பிடலாம்.... ஆஹா... இன்பத்தேனாய் பாய்ந்தது.

மொத்தத்தில் இந்த இலக்கிய சந்திப்பு பயன்மிக்கதாய் அமைந்தது எனலாம். நிச்சயம் வருவார் என நம்பியை நம்பினோம். அவரும் மானசாஜென் என்றழைக்கப்படும் ரமேஷ்சுப்ரமண்யம் அவர்களும் நட்டு என்றழைக்கப்படும் பனசை நடராஜன் அவர்களும் தோழி ரமாசங்கரன் அவர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது வருத்தத்தைத் தந்தது. அவர்களுக்கு திடீரென ஏற்பட்ட வேலைப்பளுவால் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்த சந்திப்பில் நிச்சயம் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

நான்*: இதுவரை உட்கார்ந்து எடுத்தது போதாதுன்னு நின்னுண்டு புகைப்படம் எடுத்துட்டு இருந்தாங்க. இருந்தாலும் நம்ம கண்ணு அந்த பிரிக்காத மசால கடலை மற்றும் காராச்சேவு மேல்தான். அப்போ எனக்கும் குமாருக்கும் நடந்த டயலாக்கையும் இறுதியில் (அவரே) செய்துகொண்ட ஒப்பந்தத்தையும்தான் மேலே படிச்சிட்டீங்களே:)

சிற்றுண்டி தயார் செய்த சித்ராரமேஷ் அவர்களுக்கும் இடம் தந்து உதவிய அவரின் தம்பி ராம்ஜி அவர்களுக்கும் மிகுந்த நன்றி கூறி அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். நேரமாகிவிட்ட காரணத்தால் நானும், மாகோ அவர்களும் தாமரைக் கண்ணன் அவர்களும் வெளியேறினோம். மற்றவர்கள் அனைவரும் இரவு உணவில் கலந்துகொண்டார்கள். சிங்கை நண்பர்கள் சந்திப்பு மட்டுமே என நினைத்திருந்த இந்த கூட்டம் உலகக் கூட்டமாகிவிட்டது. நான் மலேசியாவில் இருந்து சென்றிருந்தேன். கண்ணன் அவர்கள் தென்கொரியாவில் இருந்து வந்திருந்தார்கள். இரவு 8.30 மணிக்கு கூட்டம் இனிதே நிறைவுற்றது. நான்கு மணி நேரமும் எனது கேமராவை மறந்து(!) அமர்ந்திருந்த என்னால் புகைப்படம் இணைக்க முடியவில்லை. தோழர் எம்கேகுமார் இணைப்பார்.

நான்*: மூர்த்தி, ஜெயந்தி, மாகோ, தாமைரக்கண்ணன், பாலு அல்லாம் கிளம்பிட்டாங்க. அப்படியே பொடிநடையா சரவண
பவனுக்கு நடையைக்கட்டினோம். அங்கு ஸ்வாக பண்ணியது: மசால் தோசை சொல்லி இல்லாததால் கிடைத்த 'நெய் ரோஸ்ட்', டிக்ரீ காஃபி, வெங்காய பஜ்ஜி. அப்புறம் எதிர உட்கார்ந்து எனக்குப்பிடித்த நாணையும், மட்டர் பன்னீரையும் அருள் ஒருகை பார்த்துக்கொண்டிருந்தார். அதையும் பார்த்துக்கொண்டே எனக்குக் கொடுத்த பணியை இனிதே நிறைவு செய்தேன்.

இப்போ சொல்லுங்க நீங்களே... என்னோட இத்தனை வேளைக்கிடையே, நான் பேசலைன்னு மூர்த்தியோ மற்றவரோ வருத்தப்பட்டால் நான் என்ன செய்யமுடியும். அவர்களுக்கு இந்த வலைப்பதிவு(லகம்) தக்க பதில் சொல்லும் என்று கூறிவிட்டு கடமையா அடுத்த சந்திப்ப எதிர்நோக்கி காத்திருக்க வேண்டியதுதான்.

எனிவே... மூர்த்தி, சித்ரா, குமாரு, ஜெயந்தி மற்றும் அனைவருக்கு ரொம்போ தேங்க்ஸ். இதுமாதிரி அடிக்கடி மீட் பண்ணுங்க, நமக்கு சும்மா ஒரு மெயில் தட்டினா ஓடியாந்து நிப்பேன்:)

இதுதவிரவும் மக்கள் சீரியஸா பேசிண்டிருந்த பல விஷயங்கள் காதில்ல விழுந்துச்சு அதை இன்னொரு பதிவில்.

பி.கு:
* நான் -

நான், இலக்கணத்தில் ஒருமை, நடைமுறையில் பன்மை. நான் எனப்படுவது இந்த சமூகம் பங்களித்து நிரப்பிய பாத்திரம் - கவியரசு வைரமுத்து.

என்னுடைய கதையில் வரும் 'நான்' எல்லாம் நானில்லை. அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி அந்தப்பாத்திரமாக மாறி நானாகவே பேசும்போது, அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளை இன்னும் சிறப்பாக கொண்டு வர இயல்கிறது - சிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர்.

இதுல்ல வர நான்- லாம் நாந்தாங்க. அந்த கடைசி நாண் தவிர:)