Friday, July 22, 2005

சிங்கப்பூரின் புதிய சுற்றுலா தளம்...

வணக்கம்.

இன்று சிங்கப்பூரில் புதியதொரு சுற்றுலா தளம் திறப்புவிழா காணுகிறது. இது மற்ற சுற்றுலா தளங்கள் போலல்லாமல், பெரும்பாலும் சிங்கப்பூரில் உள்ள மக்களுக்கானது - சுற்றுலாப் பயணிகளும் இங்கு செல்ல தடையேதுமில்லை. இந்த புதிய இடம், இதுபோன்ற பழைய இடத்தை விட பல மடங்கு பெரியது. இது ஒரு கண்ணாடி மாளிகை. 16 தளங்களுண்டு, இடையிடையே கண்ணுக்கும், மனதுக்கும் ஆறுதலளிக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் மூலிகைகள். 16-வது தளத்தில் இருந்து சிங்கப்பூரை கண்களில் கொள்ளை கொள்ள வசதி. எல்லாவற்றுக்கும் மேலாக இங்கு செல்ல அனுமதி இலவசம்



இன்று திறப்புவிழாகாணும்
புதிய தேசிய நூலகத்துக்கு
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...

புதிய மேம்படுத்தப்பட்ட இணையத்தளம்...

புதிய நூலகம் பல வசதிகளைக்கொண்டுள்ளது. தேசிய கலைகள் மன்றத்தின் நாடக அரங்கும் இங்கு ஒருங்கமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. மற்ற சிறப்புக்களை இங்கு பட்டியலிடுவதை விட, வாருங்கள் அங்கு சென்று கண்டு கேட்டு படித்து உண்டு வருவோம்...



மேலும் விபரங்களுக்கு...

தமிழ்த் தொகுப்பு பற்றிய விபரங்கள் நூலகத்தின் இணையத்தளத்தில் இருந்து....
( நன்றி: தேசிய நூலக வாரியம்)

லீ கொங் சியன் மேற்கோள் நூலகத்தின் தமிழ்ப் பிரிவில் புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகள் அடங்கியத் தொகுப்புகளைக் காணலாம். தமிழ்ப்பிரிவில் அனைத்து நூல்பிரிவுகளிலும் புத் தகங்கள், தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு, மெய்யியல், சமயம், சமூகவியல், மொழியியல், அறிவியல், கலைகள், இலக்கியம், புவி யியல், வரலாறு என்று எல்லாப்பிரிவுகளிலும் புத்தகங்களைக் காணலாம். உயர்நிலை, தொடக்கக் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று பலருக்கும் ஏற்றவாறு புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

19 ஆம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களான பாரதியார், பாரதிதாசனார், கல்கி, அறிஞர் அண்ணா, அக லன் இன்னும் பலரின் சிறந்த படைப்புக்களும், தற்போதைய எழுத்தாளர்களின் படைப்புக்களும் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் துறையின் சிறப்பம்சம்

இத்துறையின் சிறப்பம்சமாக சமயம், மொழியியல், கலை, இலக்கியம் ஆகிய நான்குப் பிரிவுகளைக் கூறலாம்.

சமயம்
குறிப்பாக, சைவ, வைணவத் திருத்தலங்கள் பற்றிய புத்தகங்கள், இந்துக்கலாச்சாரம், குலதெய்வ வழிபாடு கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், யோகம், போதனைகள், இராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம், தி ருவிளையாடற்புராணம் இஸ்லாமியப் புத்தகங்கள் மற்றும் பல சைவ வைணவ நூல்கள் அடங்கும்.

மொழியியல்
தமிழ் மொழி வரலாறு, சுவடி மொழிபெயர்ப்புகள், இலக்கண நூல்கள், அகராதிகள் போன்றவை அடங்கும்.

கலை
நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்துகள், நாடக வரலாறு, மேடை நாடகம், கர்னாடக இசை வரலாறு, கீர்த்தனைகள், திரைப்பட வரலாறு, திரைப்படத்துரையினரின் நினைவுகள், திரையிசை க் கலைஞர்களின் வரலாறு என்று பல தகவல்கள் அடங்கிய அரிய புத்தகங்கள் உள்ளன.

இலக்கியம்
தமிழ்த் துறையின் முக்கிய அம்சமாக இப்பகுதி விளங்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் அக்கால இல க்கியத்திலிருந்து இக்காலம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் சேகரிக்கப்ப்ட்டுள்ளன. சங்க கால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங் கள், இலக்கிய வரலாறுகள், இலக்கிய ஆராய்ச்சி மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள், சைவ வைணவ இலக்கி யங்கள், பாரதியார், பாரதிதாசனார், அரிஞர் அண்ணா மற்றும் பலரின் இலக்கியப்படைப்புகள், மலேசி ய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புகள், பிறமொழிக்கதைகள், என்று பரந்த அளவில் படைப்புகள் சேக ரிக்கப்பட்டுள்ளன. நிச்சயம் இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கும் ஒரு சிறந் த கருவூலமாக விளங்கும்.

சஞ்சிகைகள்
மொத்தம் 45 சஞ்சிகைகள் இந்தியா, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து தருவிக்கப்படுகின்ற து. இயல், இசை, சினிமா, அரசியல், சமூகம், இலக்கியம், சமயம், சிறுவர் மலர், வர்த்தகம், கணினி, மருத்து வம் என்று அனைத்துப் பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான பத்திரிகைகள் வாங்கப்படுகின்றன.

9 comments:

பாலு மணிமாறன் said...

NICE POSTING MR.ANBU.... KEEP POSTING SUCH INFORMATIVE "PATHIVUGAL"

கருப்பு said...

டிவியில் முன்பு சொன்னார்கள். நானும் பார்த்தேன்.

Ramya Nageswaran said...

சில வாரங்களுக்கு முன்பு இந்த கட்டிடத்தை தாண்டி போகும் பொழுது ஏதோ புதிய ஐந்து நட்சத்திர ஓட்டல் என்று நினைத்தேன். என்னமா கட்டியிருக்காங்க!! பாராட்ட வேண்டிய விஷயம் தான்.

Anonymous said...

மிக நல்ல பதிவு.
தகவலுக்கு நன்றி.

மயிலாடுதுறை சிவா said...

அன்பு,
நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி!!!
மயிலாடுதுறை சிவா...

பத்மா அர்விந்த் said...

அன்பு
உங்கள் பதிவுகள் எழுத்துரு சரியாக தெரிவதில்லை. உதவ முடியுமா?

NambikkaiRAMA said...

சிங்கை வரும்முன் உங்கள் பதிவை பார்வையிட்டுவிட்டுத்தான் வரவேண்டும். நல்ல பல தகவல்களை சொல்லியுள்ளீர்கள்.

Anonymous said...

hi, my name is tulipana. i saw your blog. it is awesome. well, it's nice to see people writing in tamil but i don't know how to post my comments in tamil. nothing special. want to introduce my self to the world. bye.

NambikkaiRAMA said...

அன்பு நலமா? புதுசா ஒன்றும் பதியலியா?