Thursday, September 30, 2004

முத்து நெடுமாறன்

தமிழ் வளர்க்கும் அறிஞர்கள் என்ற வரிசையில், 'முரசு' முத்து நெடுமாறனின் நேர்காணல் நிலாச்சாரலில் வந்துள்ளது. சில வாரங்களுக்கு முன் சிங்கையில் நடந்த அனைத்துலக அரங்கில் தமிழ் மாநாட்டில், உலகில் முதன்முதலாக தமிழில் குறுந்தகவல் சேவையை AnjalMobile மூலம் அறிமுகப்படுத்தினார். தமிழின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முத்து, காசி, சுரதா போன்றவர்கள் செய்யும் சேவை அளப்பறியாதது. வாழ்த்துக்கள்.

Wednesday, September 29, 2004

ஓவியா - கோபி

ஆம் அது ஓவியா - என்று எழுதநினைத்தத்தான் டைப்பினேன்(உள்ளிட்டேன்). ஓவியர் கோபியை, எனக்குப்பிடித்த பெயரான ஓவியா என்றுதானே கூப்பிடவேண்டும்? நண்பர் கோபியின் கற்பனை இல்லம் என்ற தனது சுயமான முதல் ஓவியத்துக்கு நான் எழுதிய பின்னூட்டம்.

என்ன கோபி நான் எதாவது சொல்லுவேன்னு அதுக்கு முன்னாடியே ஒரு லிஸ்ட்லாம் வந்திருக்கு?

உண்மையில் நம்பமுடியவில்லை... பார்த்துவரைவதற்கும், பார்க்காமல் வரைவதற்கும் இவ்வளவு வித்தியாசமிருக்குமா என்று. இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால்... மற்ற எல்லா பாகங்களைவிடவும் - கஷ்டமான முகம் மிக அழகாக வந்திருக்கிறது. அதிலும், அந்தப்பெண் முகம் அமர்க்களம். (தங்கம் சொல்வது சரிதானோ!?:)

இது சுயமென்றால்... உங்களுக்குள்ளே ஒரு களத்தை நினைத்து, உருவங்களை உள்ளத்தில் உள்வாங்கி ஓவியத்தில் படைத்ததா?

அல்லது

ஓவியத்தைப் பார்க்காமல், மற்ற புகைப்படங்களை மாதிரியாக வைத்து வரைந்ததா?

இது முதல்வகை என்றால் - இரண்டாவவது வகைமூலம் சிறிது முயற்சி செய்துவிட்டு, முதல்வகையை முயலலாமே!?

இங்கு இந்த நிமிடம், இந்தப் பின்னூட்டத்தை எழுதும்போதுதான் உணர்கிறேன், ஓவியம் எவ்வளவு உன்னதம் என்று. பத்து பொருளை சில நிமிடம் காட்டி பிறகு மறைத்துவிட்டு, எது எங்கிருந்தது என்று கேட்டாலே ரெண்டுக்குமேல் காட்ட சிரமப்படும் எனக்கும் - நீங்களே கற்பனைசெய்து (கதா)பாத்திரங்கள் & உண்மையான பாத்திரங்கள் (கூஜா, ஊஞ்சல் இன்ன பிற...) என்று முடிவுசெய்து - அதை ஓவியமாக்குவதென்பது எவ்வளவு பெரிய திறமை? இதை யோசிக்கும்போது இன்னும் கல்சிற்பம்? எதுவும்குறையென்றால் அழித்து/அடித்து செதுக்க முடியுமா என்ன?

எது எப்படியோ கோபி - இந்த 34 வருட வாழ்க்கையில் ஒங்களோட ஒரு ஓவியத்தின் மூலம் - ஓவியத்தின் மீதும், சிற்பங்களின் மீதும் - அதை படைக்கும் உங்களைப்போன்ற ஓவிய, சிற்பக்கலைஞர்களின் மீதே பெரிய மதிப்புக் கொண்டுவந்துவிட்டீர்கள் - என் மனதில்.

மிக மிக நன்றி. தொடர்ந்து வரையுங்கள், வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

Friday, September 24, 2004

குடைக்குள் மழை

ராஜாவின் குடைக்குள் மழை பற்றிய விமர்சனத்துக்கு எழில் அவர்களின் பின்னூட்டம் இது:

ராஜா,

ரஸல் க்ரோ நடித்து வெளிவந்த ஆங்கிலப்படமான " A beautiful Mind " - பார்த்திருந்தீர்களேயானால் குடைக்குள் மழை அதன் பாதிப்பிலமைந்த கதை என்று எளிதாகப் புரிந்திருக்கும். சில்வியா நாஸர் எனும் பெண் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் அமைந்திருந்தது. இப்புத்தகம் நோபெல் பரிசு பெற்ற ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறாகும். ஜான் நாஷ் எனும் கணித மேதை - அவருக்கு இந்த மன நோய் இருந்தது. அதைக் குணமாக்கி நோபெல் பரிசு பெறும் அளவுக்கு அவர் உயர்ந்ததை விளக்கும் புத்தகம் இது. திரைப்படத்தில் சில மசாலாக் காட்சிகள் இருப்பினும் ஓரளவு இயல்பாக அமைந்த திரைப்படம். ரஸல் க்ரொ-விற்கு சிறந்த நடிகர் - ஆஸ்கர் விருது வாங்கித்தந்த படம்.

Posted by: எழில் at September 23, 2004 10:41 PM

நண்பர் எழிலுக்கு என்னுடைய பதில் இது:
(அதை அங்குசென்று படிக்காதவர்களுக்காக 'குடைக்குள் மழை'க்கு நாங்கள் செய்யும் பங்காக இங்கு ஒரு மறுபதிப்பு:)

அன்புக்குரிய எழில்,

குடைக்குள் மழை போல், ரஸல் க்ரோ நடித்திருக்கட்டும் அல்லது யாரோ நடித்திருக்கட்டும். கமலின் சுவாதி முக்தயம்(தானே!?) வந்து ஏழுவருடங்கள் கழித்துத்தான் Forest Gump வந்ததாக அண்மையில் கம்ல் கூறக் கேள்விப்பட்டேன். சண்டியரின் வித்தியாசமான கதைசொல்லும் பாணி ...'ஏதோ' ஆங்கிலப்படைத்தைப் பார்த்ததின் பாதிப்புதானே என்றதற்கு, இராமாயணம்/மகாபாரதம் காலத்துலேயே இதுபோன்ற கதைசொல்லும்பாணி இருக்குது என்றார். வித்தியாசமான, நல்ல படம் வரும்போதெல்லாம் பாராட்டுவதைவிட்டுவிட்டு இது போலதான் போனவருஷமே ஹாலிவுட்டில வந்துச்சே, அங்க வந்துச்சே, இங்க வந்துச்சேன்னு சொல்றத முதலில் விடுங்கப்பா. நீங்கள் சொல்லும் படத்தை சத்தியமாக நான் பார்க்கவோ, கேள்விப்படவோ இல்லை. அதனால், நான் கு.மழை பார்க்கும்போது வித்தியாசமாகத்தெரியப்போகிறது - ராஜாவைப் போல. நாலு பேருக்கு இது போய்சேரும்போது, இதுமாதிரி நாலு நல்லபடம் வர வாய்ப்பிருக்கிறது. தயவுசெய்து அதைக்கெடுக்க வேண்டாமே...

ராஜா சொல்வதுபோல் இது பாமரர்களுக்கான படமல்ல, உங்களைப்போன்ற புத்திசாலிகள் 'நான் இதை ஏற்கனவே' பாத்திருக்கிறனே என்பீர்கள். அதனால்தான், கமல்,பார்த்திபன்,மணி போன்ற வித்தியாசம்பண்ண நினைப்பவர்களும் - நீங்கள் கொடுக்கும்தோல்வியால் நாலு பாட்டு/நாலு பைட்டு ஃபார்முலாவுக்குப் போய்விடுகின்றனர். வேண்டாமே... பிளீஸ்!

நீங்கள் சொல்வதை தகவலாக சொல்லியிருந்தால் நன்றியோடு முடித்திருப்பேன். இதுமாதிரி ஏற்கனவே வந்திருக்கேன்னு, கால்மேலக் கால போட்டுக்கூறும் வெறும் விமர்சனமாக இருந்ததால்தான் இந்தப்பின்னூட்டம். மன்னிக்கவும், பிழையிருந்தால்! (என்ன பண்ண... எங்க பொண்ணு 'எழில்' தவறுசெய்தாலும் இதே கவனிப்புதான் :)

Posted by: அன்பு at September 24, 2004 04:07 AM

Thursday, September 23, 2004

இரக்கமற்ற அரக்கமனம்...

நான் தினமலர் தினமும் படிப்பதில்லை. சற்றுமுன் அலுவலக நண்பரொருவர் இன்றைய தினமலரில் படித்த செய்தியை அதிர்ச்சிமாறாமல் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அதை உங்களுக்கும் இங்கே... உண்மையா? கணிணி விளையாட்டா என்று தெரியவில்லை. கணினி விளையாட்டாகவே இருக்கக் கடவது.

Tuesday, September 21, 2004

கலாச்சார சீரழிவு

நண்பர் அருண் தனது அகரதூரிகையில் சென்னையில் நடந்த, பெண்ணைக் கேலிசெய்து அவருடைய சாவுக்கே காரணமான கோரநிகழ்வு பற்றி
எழுதியிருந்தார். அந்தப்பதிவுக்கு என்னுடைய பின்னூட்டம் இது:

சம்பவத்தில் இடம்பெற்ற பெண் ஒரு ஆங்கிலோ இந்தியன். அவர்களின் கலாச்சாரம் அதுவாக இருக்கலாம். அவருடன் இன்னொரு பெண்ணும்/பையனும் வந்ததாகவும் அவர்களையும் போலிசார் தேடிவருவதாகவும் படித்தேன். அதனால் அந்தப்பெண்ணைக் குறை சொல்லி பயனில்லை.

கல்தோன்றி மண்தோன்றா... கலாசாரத்தில் வந்த நம் தமிழர்களே இப்படி கலாசாரம் சீரழியும்படி நடந்துகொள்கிறார்களே என்பதை நினைத்தால்தான் மனசு வெம்புகிறது. இங்கு சிங்கப்பூரிலியே நல்ல நிலைமையில்லை - பல பப்/டிஸ்கோத்தேக்களில் இது போன்ற வன்முறை/கொலை நடக்கிறது. அதனால், இதை சட்டம் செய்யும் என்று காத்திராமல், நமக்கு என்ன தேவையென்று ஒவ்வொரு இளையர்களும், அவர்தம் பெற்றோரும் முடிவு செய்யவேண்டும். மேற்கத்தியக் கலாசாரத்தை நாம் கண்ணைமூடிக்கொண்டு பின்பற்ற முடியாது. ஒருகாலத்தில் உடன்படிக்கும் ஆண்,பெண் தங்களுக்குள் பேச இயலாத நிலையிலிருந்து தீடீரென்று - டேட்டிங்க், பப், டிஸ்கோ, அவுட்டிங், கெர்ள்ஃரிண்ட்,
பாய்ஃப்ரண்ட், சும்மா சேந்திருந்தோம் என்பதெல்லாம் வந்ததால் வரும் விளைவுதான் இது.

இது போன்ற நடவடிக்கைக்களுக்கு துணைகிடைத்தால் அவர்களுக்கு மட்டும் நட்டம். அதுபோன்ற வாய்ப்புக் கிடைக்காதவர்களால், இதுபோல் எல்லோருக்கும் நட்டம்.

முன்னொருமுறை இந்தியாடுடேயில்- பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியரின் செக்ஸ் லீலைகள் பற்றி சிறப்பிதழ் வந்தது. சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் கல்லூரி மாணவிகள், நடுத்தரவயது பெண்களே "அழைத்தால்வரும்" தொழில் புரிபவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது.

இதெயெல்லாம் அறியவரும்போது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதுபோன்றவை நடக்காமல் இருக்க பெற்றோர்கள்தான் அதிகம் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. "...அவன் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே..." என்று வரும். இதில் அம்மாவை மட்டும் பழிசொல்லாமல், பெற்றோர், குடும்பம், சுற்றம் அதிகம் செய்யலாம். நல்லகுடும்பம், சூழ்நிலை வாழ்வை நல்வழிப்படுத்தும்.

இதுபோன்ற இளையர்கள் வருவது - நடுத்தர, தீடீர் பணக்கார வர்க்கங்களில் இருந்துதான்.

அவர்களுடைய பெற்றோர், பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் - அவர்கள் தனது தொழிலிலோ, தனது சுயசந்தோசத்திலோ மூழ்குவதால் வரும் விளைவுதான் இது.

இன்றும், பெற்றோர்/சுற்றம் கண்முன் மனைவியுடைய கையைப்பிடிப்பது, தொடுவதே - ஒரு கலாசார மாற்றமாக நமக்குத்தோணுகிறது. அதேநேரம், இங்கு பேருந்து, ரயில், பொதுவிடம், ரோடு என்று எங்குபார்த்தாலும் - நாய் போன்று நடந்துகொள்வது அவர்களுடைய கலாசாரம். நாம் அதைநோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இடையில் இதுபோன்ற பலநிகழ்வுகள் நடக்கும்!

நமது கலாச்சாரம் என்னதான் மாறினாலும் சமுதாயபயம் இருக்கவேண்டும். அது
அழியும்போது நாம் அழிந்து, நமது சந்ததியியனர் உதவாக்கரையாகிவிடும் அபாயமுண்டு.

(பி.கு: மன்னிக்கவும், HaloScan நாலுவரிக்குமேல் எழுத அனுமதிக்காகதால் நான் இங்கே பதிக்கவேண்டியிருக்கிறது. நண்பர்களே... ஏன் Haloscanஐத் தூக்கிவிட்டு பிளாக்ஸ்பாட்டுடைய கமெண்ட் பெட்டி பயன்படுத்தலாமே!?)

Monday, September 20, 2004

சிகரங்களை நோக்கி - வைரமுத்து

மனிதா!

உனக்கு முன்னால் இருந்து மறைந்த எல்லா மனிதர்களையும் இந்த நூற்றாண்டில் வென்றுவிட்டாய்.

வாழ்த்துக்கள்.

உன் அறிவாலும் அறிவியலாலும் தூரத்தையும் நேரத்தையும் சுருக்கிவிட்டாய்.

நன்றி.

இனி அடுத்த நூற்றாண்டில் ஒவ்வொரு மனிதனின் தலைக்கு மேலும் ஒரு செயற்கைக்கோள் பறக்க விடுவாய்.

மகிழ்ச்சி.

மனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்துவிடுவாய்.

அற்புதம்.

ஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய்.

அபாரம்.

ஒன்றை மட்டும் மறந்துவிடாதே.

மனிதநேசம் இருக்கட்டும்; இந்த மண்மண்டலம் இருக்கட்டும்.

நமக்கு முன்னே வாழ்ந்தவர்களின் சுவாசமெல்லாம் இந்தக் காற்றுமண்டலத்தில் இன்னும் இருக்கிறது.

இருக்கட்டும்.

* * * * * * * * *

கவிப்பேரரசு வைரமுத்துவின் "சிகரங்களை நோக்கி" (கவிதை/கதை/கட்டுரை) நூலின் அடிவாரத்தில் கவிஞரின் வரிகளவை. இந்த நூலின் முதல்பதிப்பு 1992-ல் வெளியானது. அன்று முதல், எனக்குப்பிடித்த கவிஞரின் புத்தகங்களில் தலையாயதாக இன்று வரை இருந்து வருகிறது. இதுவரை படிக்காத, ஆர்வமுள்ள நண்பர்கள் இருந்தால் - தேடிப் படியுங்கள், கண்டிப்பாக ரசிப்பீர்கள்.

Thursday, September 16, 2004

தொழில்நுட்பம் - இணைய தகவல்தளம்

அன்பர்களே இந்த வளைத்தளத்திற்கு சென்றிருக்கின்றீர்களா? தற்செயலாக ஏதோ தேடிக்கொண்டிருந்தபோது சிக்கியது. தனிக்குறியில் வடிவமைக்கப்பட்ட, தொழில்நுட்பத்தை தமிழில் கொடுக்கும்முகத்தான் அமைக்கப்பெற்றது. நேரம் கிடைக்கும்போது சென்றுபார்த்து அவர்களுக்கு ஒருவரி எழுதிப்போடுங்கள், ஊக்குவிப்பாக...தொழில்நுட்பம்

நண்பர் நவன் 'லினக்ஸ் உலகம்' ஆரம்பித்திருக்கிறார். இவைபோல நிறையவரவேண்டும். என்னைச்சுற்றியிருக்கும் சீன, ஜப்பானியர்கள் கணிணி/இணைய/புத்தகம் அனைத்தையும் அவர்கள் மொழியில் பாவிப்பதுபோல் நம்மவர்களும் பயன்படுத்தவேண்டும். அந்தமுயற்சியில் இறங்கும் இதுபோன்றவர்களை வரவேற்போம்.

Friday, September 10, 2004

புரூணை சுல்தான்

நேற்று என்னுடைய 'அரச திருமணம்' பற்றிய பதிவில் நான் கேள்விப்பட்டாதாக சில விஷயங்கள் எழுதியிருந்தேன். அது தொடர்பாக: New Internationalist magazine, May 2000

அந்தக்கட்டுரையின் ஒரு பகுதி இங்கே:
....
Well, a sizeable chunk of it went on the Sultan's palace, monstrosity that boasts 1,788 rooms and is larger than the Vatican-in a tiny country with just 300,000 inhabitants. When the Sultan's daughter turned 18 he bought her an Airbus. For himself he prefers his own jumbo jet, originally designed to carry over 400 people.
Great skill in extravagance has also been acquired by his brother, Prince Jefri. Having heard of Disneyland, he decided to build the Jerudong Park Playground in the capital, Bandar-Seri Begawan, at a cost of $1 billion.
Between them, the brothers Bolkiah own London's Dorchester Hotel, the New York Palace and the Plaza Athenee in Paris. After the Sultanate's independence from Britain in 1984 they bought 2,000 luxury limousines and became the world's biggest customers for Rolls Royce motor cars.

மேலும் சில தொடர்புகள்:

Brunei Sultan's Automotive Empire

Brunei starts to face up limit of natural wealth

Brunei, a nation-state of emergency, luxury and fantasy

TROUBLED KINGDOM

His Majesty The Sultan s Flight Brunei Royal Flight

Thursday, September 09, 2004

குரங்கு குல்லாய்க்காரன் கதை (புதிய பதிப்பு)

விகடனில் வந்த இந்தக்கேலிச் சித்திரத்தை இட்லி வடையில் வெளியிட்டு இருந்தார்கள்.


கார்ட்டூன் பற்றிய என்னுடைய பின்னூட்டம்:
(Haloscan என்னுடைய நீளக் கமெண்டை ஏற்றுக்கொள்ளாததால் (!?) இங்கே.)

சில தினங்களுக்கு முன்னர் இந்த குரங்கு/குல்லாய் கதையின் தொடர்ச்சி/மேம்படுத்தப்பட்ட பதிப்பு மின்னஞ்சலில் வந்தது, நீங்களும் படித்திருக்கலாம்.

"... அந்த குல்லாய்க்கார இளைஞனும் தான் அணிந்திருந்த குல்லாயைக் கழட்டி வீசினானாம். அதையடுத்து (தாத்தா சொன்னமாதிரி) குரங்குகளும் வீசியெறியும் என்று எதிர்பார்த்திருந்தான்.

அப்போது (கதையின் எதிர்பாரா திருப்பமாக) ஒரு குரங்கு மேலிருந்து ஓடி வந்து கனநேரத்தில் அவன்வீசிய குல்லாவையும் எடுத்துக்கொண்டு மேலே சென்றதாம். பின்னர் அங்கிருந்து கொண்டு சொல்லியதாம்:
'மடையா... ஒனக்கு மட்டும்தான் தாத்தா இருப்பாரா?' என்று".

அதனால, வெங்கையா உமாபாரதி மீண்டும் பதவி ஏற்கமாட்டார்னு - அறிக்கைகொடுத்துண்டிருக்கும்போதே, காங்கிரஸ் வேறுயாராவது பதவியேற்க ஏற்பாடு பண்ணிவிடப்போகிறது.

மதன் சார் இந்தப்புதுக்கதையப் படித்தாரா எனத் தெரியவில்லை. இந்தவார இறுதியில் அவர் சிங்கை வரும்போது, முடிந்தால் கேட்கவேண்டும். ஆம், கமலுடன் மதனும் கலந்து கொள்கிறார் அனைத்துலக அரங்கில் தமிழ் கருத்தரங்கில்.

மங்கலம், குழுஊக்குகறி, இடக்கரடக்கல் - நாஞ்சில் நாடன்

இருந்தாலும் இதெல்லாம் அதிகமில்லையா...?
அல்லது இப்படியெல்லாம் எழுதினால்தான், உயிர்மை-யில் பதிப்பிப்பார்களா?
எதைப்பற்றியா? மேலிடத்துச் சமாச்சாரம்...- Sify.com

40 வயதுக்குட்பட்ட கோடீஸ்வரர்கள்

நாற்பது வயதுக்குட்பட்ட கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் DELL-ன் மைக்கல் டெல்-லுக்குத்தான். முதல் பத்து இடங்களில் பெரும்பாலோனோர் தகவல்தொழில்நுட்பம், இணையம் தொடர்பான இ-பே, கூகிள், யாஹூ போன்றவைகள் சார்ந்தவர்கள்தான். Dell is richest American under 40

அரச திருமணம்

புரூணை மன்னர் சுல்தான் போல்கியாவின் மகன் இளவரசர் அல்முட்டாடி பில்லா
போலிகியா (30), திருமணம் ஒருவாராத்துக்கு மேலாக ஒரு விழாவாகவே
கொண்டாடப்பட்டு வருகிறது. 17வயதுப் பெண் ஒருவர் அரசகுலத்துக்குச் செல்கிறார்.
இங்கு சிங்கையிலிருந்து பிரதமர், மூத்த அமைச்சர் (முன்னாள் பிரதமர்), மதியுரை
அமைச்சர் (சிங்கப்பூரின் & இன்றைய பிரதமரின் தந்தையும், முதல் பிரதமரும்) ஆகிய
மூவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளச் சென்றுள்ளனர். அங்கு மூன்று நாட்கள் திருமண
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். இதிலிருந்தே சிங்கப்பூர், புருணே சொந்தம் புரியும்.

இந்தோனிசியா பிரதமர் மேகாவதி, பிலிப்பைன்ஸின்
அரோயோ, மலேசியாவின் படாவி ஆகியோரும் சென்று சேர்ந்து விட்டதாக செய்தி.
உலகின் மற்ற பல நாடுகளில் இருந்தும் தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர். Bruneians revel in wedding festivities

இந்த நேரத்தில் இன்னொரு தகவல்: சிங்கையின் பண மதிப்பும், புருணேயின் பண
மதிப்பும் ஒன்றுதான். இங்கு சகஜமாக புருணே காசும் எந்தக் கடையிலும் கொடுப்பார்கள்,
வாங்கிக்கொள்வார்கள். ஆனால் நான் இதுவரை பார்த்ததெல்லாம் $1 வெள்ளி
நோட்டுதான்.
எங்கள் சிங்கையின் சார்பில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட $10,000 நாணயமதிப்புகுரிய
4 நாணயம் வெளியிடப்பட்டு பரிசளிக்கப்படுகிறதாம். ஹீம்... இதெல்லாம் நம்ப
சுல்தானுக்கு ஒரு இதுவா... திருமணம் நடைபெறும் அரண்மனையில் 1,788 அறைகள்
இருக்கிறதாம்.
சுல்தானைப்பற்றி முன்னர் கேள்விப்பட்ட செய்திகள்:
1) வளர்ப்பு மகன் திருமணத்துக்கு லெக்சஸ் கார் கொடுத்தது ஒரு விஷயமா என்ன? நம்ப
சுல்தான் தனது மகள் பிறந்த நாளுக்கு ஒரு விமானம் வாங்கிக்கொடுத்ததாகவும். அதை
மகளுக்குப் பிடித்த வண்ணம் மாற்றி அடிக்கவே பல ஆயிரம் வெள்ளிகள் செலவழித்ததாகவும்
கேள்வி.
2) அவருடைய பிறந்தநாள் புருணேயின் அரசு விடுமுறை. அவருடைய ஒரு பிறந்த
நாளுக்கு - மைக்கல் ஜாக்ஷனின் கச்சேரி நடந்தது.
3) உலக அழகி போட்டி நடைபெறும் அரங்கின் முதல் சில இருக்கைககள் இவருக்காகவே
ஒதுக்கப்படும்.
சரிங்க அதெல்லாம் இருக்கட்டும்... இந்த மன்னர்களெல்லாம் எப்படி உருவானார்கள்?
இன்னும் எப்படி இப்போதும் தொடர்கிறார்கள் என்று தெரியவில்லை. நம்ப இங்கிலாந்து
ராணி, அதான் கையில ஒரு பைய மாட்டிட்டு அவ்வப்போது காட்சி தருவார்களே!?
இதுபோல், மலேசியாவிலும் மன்னர் இருக்கிறார், தாய்லாந்து மன்னர் எல்லாம்
அவ்வப்போது அரசு மாறும்போது செய்தியில் தோன்றுவார்கள்.
இந்த மன்னர்களைப் பற்றி, எனக்கெதாவது சொல்லுங்களேன். அல்லது இது தொடர்பான
எதாவது சுட்டி இருந்தாலும் சொல்லுங்க...

அரசதிருமண புகைப்படங்கள்

என்னுடைய முந்தையபதிவில் சில தொடுப்புகள் இங்கு சிங்கையின் Straits Times-ல் இருந்து கொடுத்திருந்தேன். ஒருவேளை அங்கு சென்று பார்க்காதவர்களுக்காக...

மணமகனுக்கு அவர் தாயார் மருதாணி பூசும் சடங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்


மணமகளுக்கு மாமனார் மன்னர் சுல்தான் மருதாணி பூசும் வைபவத்தின் போது..


சிங்கை அரசின் திருமணப்பரிசு

மலிவுவிலை விமானசேவை

இந்த மலிவுவிலை விமானசேவையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
கடந்த சில மாதங்களாக சிங்கை, மலேசியாவில் சூடு பறக்கிறது.முதலில் புகையைக்கிளப்பியது ஏர் ஏசியாதான். சிங்கை ->
கோலாலம்பூர் விமானக்கட்டணம் சில நூறு சிங்கப்பூர் வெள்ளிகள் என்ற நிலையில்,
தீடீரென்று இந்த ஏர் ஏசியா கட்டணம் $9 மட்டும்தான் (அதாங்க ஒன்பது வெள்ளி
மட்டும்தான்) என்று அறிவித்தது. ஆனால், விமானம் மலேசியாவின் ஜொகூரிலிருந்து
கிளம்பும் - அதே நேரத்தில் சிங்கை முதல் ஜொகூர் வரை இலவச பேருந்து சேவையும்
உண்டு என்றெல்லாம் அறிவித்தது. மேலும், ஏர் ஏசியா சிங்கப்பூரின் சாங்கி விமான
நிலையத்தை பயன்படுத்த அனுமதிகேட்டும், கட்டணத்தைக் குறைக்கவேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டது. முதலில் இதில் அதிகக் கவனம் செலுத்தாத சிங்கை அரசு, மலேசியா
தவிர்த்து - ஏர் ஏசியா பாங்காக், ஆஸ்திரேலியாவின் காண்டாஸும் இதுபோன்ற சேவை
வழங்கப்போவது அறிந்து - உடன் விழித்துக்கொண்டு, மலிவுவிலை விமானச்
சேவைக்கென்றே ஒரு விமான முனையம் கட்டப்படும் என்றும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
முதலீட்டுடன் வேல்யுஏர் ஆரம்பிப்பதாக அறிவித்தது.
உடனே சிங்கப்பூரிலிருந்தே டைகர் ஏர்வேஸ் தொடங்கும் அறிவிப்பு. அப்புறம், சாங்கியிலிருந்தே பாங்காக்
செல்லும் 'தாய்-ஏர் ஏசியா' அறிவிப்பு. அதே மாதிரி விலையிலும் ஒருத்தர் $9 என்று
அறிவித்தால் இன்னொருவர் $1 என்று அறிவித்தார்கள். (அந்த விலைகளுக்குப்பின்னால்
வழக்கம்போல * ** # @ ! 1 ... எல்லாம் இருப்பது வேறு விஷயம்) இன்று
இன்னும் கேவலமாக சிங்கப்பூர் -> தாய்லாந்தின் பாங்காக்கு $0.49 காசுகள் (இங்கு
பேருந்தில்கூட குறைந்தபட்சக் கட்டணம் $0.60 காசு).
இதுபோல் இந்தியாவிலும் நம்ப மல்லையா 'கிங்ஃபிஷரை'ப் பறக்கவிட இருப்பதாகப்
படித்தேன், இங்கும் பதிந்தது நினைவிருக்கலாம். நேற்றைய செய்த்தித்தாளில் டெக்கான்
ஏர்லைன்ஸ் ரூபாய் 500-க்கு சென்னையிலிருந்து - டெல்லிக்கு அழைத்துச் செல்வதாக
கேள்வி.
எது எப்படியிருந்தாலும் சிங்கப்பூர் -> சென்னை மட்டும் $850 முதல் $1200-தான்
இன்னும். பாங்காக் அல்லது கொழும்பு அல்லது கொச்சின் வழியாக போவதாக இருந்தால்
$650ல் முயற்சி செய்யலாம். ஆனால், அதே பயணநேரம் கொண்ட ஹாங்காங்-க்கு $
300-க்கெல்லாம் சீட்டு கிடைக்கிறது - இதற்கு எப்போ விமோசனம் கிடைக்குமோ!?
அதெல்லாம் சரிப்பா... இதெல்லாம் எப்படி சாத்தியம் என்பதை இந்த மரமண்டைக்கு
கொஞ்சம் சொல்லுங்கப்பா ... பிளீஸ்!