Friday, September 24, 2004

குடைக்குள் மழை

ராஜாவின் குடைக்குள் மழை பற்றிய விமர்சனத்துக்கு எழில் அவர்களின் பின்னூட்டம் இது:

ராஜா,

ரஸல் க்ரோ நடித்து வெளிவந்த ஆங்கிலப்படமான " A beautiful Mind " - பார்த்திருந்தீர்களேயானால் குடைக்குள் மழை அதன் பாதிப்பிலமைந்த கதை என்று எளிதாகப் புரிந்திருக்கும். சில்வியா நாஸர் எனும் பெண் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் அமைந்திருந்தது. இப்புத்தகம் நோபெல் பரிசு பெற்ற ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறாகும். ஜான் நாஷ் எனும் கணித மேதை - அவருக்கு இந்த மன நோய் இருந்தது. அதைக் குணமாக்கி நோபெல் பரிசு பெறும் அளவுக்கு அவர் உயர்ந்ததை விளக்கும் புத்தகம் இது. திரைப்படத்தில் சில மசாலாக் காட்சிகள் இருப்பினும் ஓரளவு இயல்பாக அமைந்த திரைப்படம். ரஸல் க்ரொ-விற்கு சிறந்த நடிகர் - ஆஸ்கர் விருது வாங்கித்தந்த படம்.

Posted by: எழில் at September 23, 2004 10:41 PM

நண்பர் எழிலுக்கு என்னுடைய பதில் இது:
(அதை அங்குசென்று படிக்காதவர்களுக்காக 'குடைக்குள் மழை'க்கு நாங்கள் செய்யும் பங்காக இங்கு ஒரு மறுபதிப்பு:)

அன்புக்குரிய எழில்,

குடைக்குள் மழை போல், ரஸல் க்ரோ நடித்திருக்கட்டும் அல்லது யாரோ நடித்திருக்கட்டும். கமலின் சுவாதி முக்தயம்(தானே!?) வந்து ஏழுவருடங்கள் கழித்துத்தான் Forest Gump வந்ததாக அண்மையில் கம்ல் கூறக் கேள்விப்பட்டேன். சண்டியரின் வித்தியாசமான கதைசொல்லும் பாணி ...'ஏதோ' ஆங்கிலப்படைத்தைப் பார்த்ததின் பாதிப்புதானே என்றதற்கு, இராமாயணம்/மகாபாரதம் காலத்துலேயே இதுபோன்ற கதைசொல்லும்பாணி இருக்குது என்றார். வித்தியாசமான, நல்ல படம் வரும்போதெல்லாம் பாராட்டுவதைவிட்டுவிட்டு இது போலதான் போனவருஷமே ஹாலிவுட்டில வந்துச்சே, அங்க வந்துச்சே, இங்க வந்துச்சேன்னு சொல்றத முதலில் விடுங்கப்பா. நீங்கள் சொல்லும் படத்தை சத்தியமாக நான் பார்க்கவோ, கேள்விப்படவோ இல்லை. அதனால், நான் கு.மழை பார்க்கும்போது வித்தியாசமாகத்தெரியப்போகிறது - ராஜாவைப் போல. நாலு பேருக்கு இது போய்சேரும்போது, இதுமாதிரி நாலு நல்லபடம் வர வாய்ப்பிருக்கிறது. தயவுசெய்து அதைக்கெடுக்க வேண்டாமே...

ராஜா சொல்வதுபோல் இது பாமரர்களுக்கான படமல்ல, உங்களைப்போன்ற புத்திசாலிகள் 'நான் இதை ஏற்கனவே' பாத்திருக்கிறனே என்பீர்கள். அதனால்தான், கமல்,பார்த்திபன்,மணி போன்ற வித்தியாசம்பண்ண நினைப்பவர்களும் - நீங்கள் கொடுக்கும்தோல்வியால் நாலு பாட்டு/நாலு பைட்டு ஃபார்முலாவுக்குப் போய்விடுகின்றனர். வேண்டாமே... பிளீஸ்!

நீங்கள் சொல்வதை தகவலாக சொல்லியிருந்தால் நன்றியோடு முடித்திருப்பேன். இதுமாதிரி ஏற்கனவே வந்திருக்கேன்னு, கால்மேலக் கால போட்டுக்கூறும் வெறும் விமர்சனமாக இருந்ததால்தான் இந்தப்பின்னூட்டம். மன்னிக்கவும், பிழையிருந்தால்! (என்ன பண்ண... எங்க பொண்ணு 'எழில்' தவறுசெய்தாலும் இதே கவனிப்புதான் :)

Posted by: அன்பு at September 24, 2004 04:07 AM

5 comments:

Unknown said...

Sariyaa chonneenga anbu. Ezhil solra padathai naan parthirukken. Adhoda kadhai pOkkey vera. appidiyey andha padathoda inspiration-la eduthirundhaalum enna thappunnu enakku theriyala! Naan 'kudaikkul mazhai'yey paakkanumnu aavala irukken. Masala pada Parthiban-ai vida evvalo mEl.

எழில் said...

அன்பு,

கால் மேல் கால் போட்டுக்கொண்டு விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை. இந்த வார்த்தைகள் புண்படுத்துகின்றன.

எழில் said...

அன்பு,

கால் மேல் கால் போட்டுக்கொண்டு விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை. இந்த வார்த்தைகள் புண்படுத்துகின்றன.

அன்பு said...

அன்பு எழில்,

உங்களுடைய கருத்து எனமனதில் அப்படிப்பட்டதால்தான் எழுதினேன் - அதுஒருவேளை 'டாப் 10'ன் பாதிப்பாக இருக்கலாம். என்வார்த்தை உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

anbu,

ungaLukku oru mail anuppi irukken. kidaichchathaa?

illainnaa

mathygrps at gmail dot com ku oru mail pOdureengaLLA?

thanks