Thursday, September 09, 2004

அரச திருமணம்

புரூணை மன்னர் சுல்தான் போல்கியாவின் மகன் இளவரசர் அல்முட்டாடி பில்லா
போலிகியா (30), திருமணம் ஒருவாராத்துக்கு மேலாக ஒரு விழாவாகவே
கொண்டாடப்பட்டு வருகிறது. 17வயதுப் பெண் ஒருவர் அரசகுலத்துக்குச் செல்கிறார்.
இங்கு சிங்கையிலிருந்து பிரதமர், மூத்த அமைச்சர் (முன்னாள் பிரதமர்), மதியுரை
அமைச்சர் (சிங்கப்பூரின் & இன்றைய பிரதமரின் தந்தையும், முதல் பிரதமரும்) ஆகிய
மூவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளச் சென்றுள்ளனர். அங்கு மூன்று நாட்கள் திருமண
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். இதிலிருந்தே சிங்கப்பூர், புருணே சொந்தம் புரியும்.

இந்தோனிசியா பிரதமர் மேகாவதி, பிலிப்பைன்ஸின்
அரோயோ, மலேசியாவின் படாவி ஆகியோரும் சென்று சேர்ந்து விட்டதாக செய்தி.
உலகின் மற்ற பல நாடுகளில் இருந்தும் தலைவர்கள் வந்தவண்ணம் உள்ளனர். Bruneians revel in wedding festivities

இந்த நேரத்தில் இன்னொரு தகவல்: சிங்கையின் பண மதிப்பும், புருணேயின் பண
மதிப்பும் ஒன்றுதான். இங்கு சகஜமாக புருணே காசும் எந்தக் கடையிலும் கொடுப்பார்கள்,
வாங்கிக்கொள்வார்கள். ஆனால் நான் இதுவரை பார்த்ததெல்லாம் $1 வெள்ளி
நோட்டுதான்.
எங்கள் சிங்கையின் சார்பில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட $10,000 நாணயமதிப்புகுரிய
4 நாணயம் வெளியிடப்பட்டு பரிசளிக்கப்படுகிறதாம். ஹீம்... இதெல்லாம் நம்ப
சுல்தானுக்கு ஒரு இதுவா... திருமணம் நடைபெறும் அரண்மனையில் 1,788 அறைகள்
இருக்கிறதாம்.
சுல்தானைப்பற்றி முன்னர் கேள்விப்பட்ட செய்திகள்:
1) வளர்ப்பு மகன் திருமணத்துக்கு லெக்சஸ் கார் கொடுத்தது ஒரு விஷயமா என்ன? நம்ப
சுல்தான் தனது மகள் பிறந்த நாளுக்கு ஒரு விமானம் வாங்கிக்கொடுத்ததாகவும். அதை
மகளுக்குப் பிடித்த வண்ணம் மாற்றி அடிக்கவே பல ஆயிரம் வெள்ளிகள் செலவழித்ததாகவும்
கேள்வி.
2) அவருடைய பிறந்தநாள் புருணேயின் அரசு விடுமுறை. அவருடைய ஒரு பிறந்த
நாளுக்கு - மைக்கல் ஜாக்ஷனின் கச்சேரி நடந்தது.
3) உலக அழகி போட்டி நடைபெறும் அரங்கின் முதல் சில இருக்கைககள் இவருக்காகவே
ஒதுக்கப்படும்.
சரிங்க அதெல்லாம் இருக்கட்டும்... இந்த மன்னர்களெல்லாம் எப்படி உருவானார்கள்?
இன்னும் எப்படி இப்போதும் தொடர்கிறார்கள் என்று தெரியவில்லை. நம்ப இங்கிலாந்து
ராணி, அதான் கையில ஒரு பைய மாட்டிட்டு அவ்வப்போது காட்சி தருவார்களே!?
இதுபோல், மலேசியாவிலும் மன்னர் இருக்கிறார், தாய்லாந்து மன்னர் எல்லாம்
அவ்வப்போது அரசு மாறும்போது செய்தியில் தோன்றுவார்கள்.
இந்த மன்னர்களைப் பற்றி, எனக்கெதாவது சொல்லுங்களேன். அல்லது இது தொடர்பான
எதாவது சுட்டி இருந்தாலும் சொல்லுங்க...

No comments: