Tuesday, September 21, 2004

கலாச்சார சீரழிவு

நண்பர் அருண் தனது அகரதூரிகையில் சென்னையில் நடந்த, பெண்ணைக் கேலிசெய்து அவருடைய சாவுக்கே காரணமான கோரநிகழ்வு பற்றி
எழுதியிருந்தார். அந்தப்பதிவுக்கு என்னுடைய பின்னூட்டம் இது:

சம்பவத்தில் இடம்பெற்ற பெண் ஒரு ஆங்கிலோ இந்தியன். அவர்களின் கலாச்சாரம் அதுவாக இருக்கலாம். அவருடன் இன்னொரு பெண்ணும்/பையனும் வந்ததாகவும் அவர்களையும் போலிசார் தேடிவருவதாகவும் படித்தேன். அதனால் அந்தப்பெண்ணைக் குறை சொல்லி பயனில்லை.

கல்தோன்றி மண்தோன்றா... கலாசாரத்தில் வந்த நம் தமிழர்களே இப்படி கலாசாரம் சீரழியும்படி நடந்துகொள்கிறார்களே என்பதை நினைத்தால்தான் மனசு வெம்புகிறது. இங்கு சிங்கப்பூரிலியே நல்ல நிலைமையில்லை - பல பப்/டிஸ்கோத்தேக்களில் இது போன்ற வன்முறை/கொலை நடக்கிறது. அதனால், இதை சட்டம் செய்யும் என்று காத்திராமல், நமக்கு என்ன தேவையென்று ஒவ்வொரு இளையர்களும், அவர்தம் பெற்றோரும் முடிவு செய்யவேண்டும். மேற்கத்தியக் கலாசாரத்தை நாம் கண்ணைமூடிக்கொண்டு பின்பற்ற முடியாது. ஒருகாலத்தில் உடன்படிக்கும் ஆண்,பெண் தங்களுக்குள் பேச இயலாத நிலையிலிருந்து தீடீரென்று - டேட்டிங்க், பப், டிஸ்கோ, அவுட்டிங், கெர்ள்ஃரிண்ட்,
பாய்ஃப்ரண்ட், சும்மா சேந்திருந்தோம் என்பதெல்லாம் வந்ததால் வரும் விளைவுதான் இது.

இது போன்ற நடவடிக்கைக்களுக்கு துணைகிடைத்தால் அவர்களுக்கு மட்டும் நட்டம். அதுபோன்ற வாய்ப்புக் கிடைக்காதவர்களால், இதுபோல் எல்லோருக்கும் நட்டம்.

முன்னொருமுறை இந்தியாடுடேயில்- பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியரின் செக்ஸ் லீலைகள் பற்றி சிறப்பிதழ் வந்தது. சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் கல்லூரி மாணவிகள், நடுத்தரவயது பெண்களே "அழைத்தால்வரும்" தொழில் புரிபவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது.

இதெயெல்லாம் அறியவரும்போது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது.
இதுபோன்றவை நடக்காமல் இருக்க பெற்றோர்கள்தான் அதிகம் செய்யமுடியும் என்று தோன்றுகிறது. "...அவன் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே..." என்று வரும். இதில் அம்மாவை மட்டும் பழிசொல்லாமல், பெற்றோர், குடும்பம், சுற்றம் அதிகம் செய்யலாம். நல்லகுடும்பம், சூழ்நிலை வாழ்வை நல்வழிப்படுத்தும்.

இதுபோன்ற இளையர்கள் வருவது - நடுத்தர, தீடீர் பணக்கார வர்க்கங்களில் இருந்துதான்.

அவர்களுடைய பெற்றோர், பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் - அவர்கள் தனது தொழிலிலோ, தனது சுயசந்தோசத்திலோ மூழ்குவதால் வரும் விளைவுதான் இது.

இன்றும், பெற்றோர்/சுற்றம் கண்முன் மனைவியுடைய கையைப்பிடிப்பது, தொடுவதே - ஒரு கலாசார மாற்றமாக நமக்குத்தோணுகிறது. அதேநேரம், இங்கு பேருந்து, ரயில், பொதுவிடம், ரோடு என்று எங்குபார்த்தாலும் - நாய் போன்று நடந்துகொள்வது அவர்களுடைய கலாசாரம். நாம் அதைநோக்கி போய்க்கொண்டிருக்கிறோம். இடையில் இதுபோன்ற பலநிகழ்வுகள் நடக்கும்!

நமது கலாச்சாரம் என்னதான் மாறினாலும் சமுதாயபயம் இருக்கவேண்டும். அது
அழியும்போது நாம் அழிந்து, நமது சந்ததியியனர் உதவாக்கரையாகிவிடும் அபாயமுண்டு.

(பி.கு: மன்னிக்கவும், HaloScan நாலுவரிக்குமேல் எழுத அனுமதிக்காகதால் நான் இங்கே பதிக்கவேண்டியிருக்கிறது. நண்பர்களே... ஏன் Haloscanஐத் தூக்கிவிட்டு பிளாக்ஸ்பாட்டுடைய கமெண்ட் பெட்டி பயன்படுத்தலாமே!?)

No comments: