Saturday, April 30, 2005

வானம் வசப்படுமே...

சிங்கையின் தமிழ் வானொலி ஒலி 96.8 FMல் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி வானம் வசப்படுமே...

முயன்றால் வானம் வசப்படும்,
உழைத்தால் வானம் வசப்படும்,
துணிந்தால் வானம் வசப்படும்,
அன்பால் வானம் வசப்படும்,
கருணையால் வானம் வசப்படும்,
திறமையால் வானம் வசப்படும்,
உயரிய சிந்தனையால் வானம் வசப்படும்
என்ற உண்மைகளை வாழ்ந்து காட்டியவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்யும் முயற்சிதான் இந்த - வானம் வசப்படுமே...

வானம் வசப்படுமே... ஒலி-யின் தலைவர் திரு. அழகிய பாண்டியன் அவர்களால் படைக்கப்பட்டு வருகிறது. திரு. பாண்டியன் தனது கம்பீரமும் அதேயளவு சாந்தமும் கலந்த இனிய குரலில் படைக்கும் அறிவிப்புக்களைக் கேட்கும்போதே கேட்பவருக்கு ஒரு ஈடுபாடு வரும். அவருடைய குரலை தேர்ந்தெடுத்த அறிவிப்புகள்/நிகழ்ச்சிகளிலேயே கேட்பதால் தொடர்ந்து (என்னைபோன்ற) ஒலியுடன் குடியிருப்பவர்களுக்கும்கூட இன்னும் ஆர்வம் கூடும்.

திங்கள் முதல் வெள்ளி வரையிலாக கடந்த சில வாரங்களாக ஒலி பரப்பாகிவந்த இந்த நிகழ்ச்சி நேற்று 50-வது நிகழ்ச்சியாக ஒலி பரப்பானது. நேற்றைய அறிவிப்பின் படிஅடுத்த நான்கு வார இடைவெளிக்குப்பின் அடுத்த பகுதி மீண்டும் தொடரும்.

இதுவரை ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகளும் ஒலியின் தளத்தில் இணயமேற்றப்பட்டிருக்கிறது. இதுவரை இடம்பெற்ற வரலாற்று மாந்தர்கள் யாரென்று தெரிந்து கொள்ள, நிகழ்ச்சியைக்கேட்க...

இப்போது ஒலி, நேயர்களிடம் வைத்திருக்கும் வேண்டுகோள்:
இதுவரை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறாத வரலாற்று மாந்தர்களை, கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் இடம்பெற வேண்டியவர் என்று நீங்கள் நினைப்பவர்களை - ஏன் இடம்பெறவேண்டும் என்ற காரணத்துடன் குறுந்தகவல் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இங்கு சக வலைப்பதிவாளர்களிடமும், வலைப்பதிவு வாசகர்களிடமும் நிறைய கருத்துக்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு இட்டிருக்கிறேன். அதனால் நீங்கள் ஒலிக்கோ, திரு. பாண்டியன் அவர்களுக்கோ மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்துகொண்டாலும் - ஒலிக்கு அனுப்பி வைக்கிறேன்.

மக்களுக்கு ஊட்டம்கொடுக்கும் நிகழ்ச்சிக்கு நாமும் ஊட்டம் கொடுப்போம்.

2 comments:

பாலு மணிமாறன் said...

It is a Nice Pathivu - Anbu ! Pandian is doing a great job with his "VAANAM VASAPPADUM"...

we do need more and more programs like that!

Unknown said...

How to download?