Saturday, July 03, 2004

கந்துவட்டித் தடைச் சட்டம்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னால் ஜெயலலிதா அரசு எக்கச்சக்கமாக கந்துவட்டிக்குக் கடன் கொடுக்கும் கூட்டத்தை வழிக்குக் கொண்டுவரும் வரையில் ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியிருந்தார். [Tamil Nadu Prohibition of Charging Exorbitant Interest Ordinance, 2003]. இது பின்னர் சட்டசபையில் சட்டமாக மாற்றப்பட்டது.

அப்பொழுது எல்லோரும் இதை வரவேற்றனர். தெருவெங்கும் 'கந்துவட்டியைத் தடை செய்த புண்ணியவதியே வாழ்க!' என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் எந்த செய்தித்தாளும், இதழும் இதன் விவரங்களைக் குறிப்பிடவில்லை. அவ்வளவு முட்டாள்தனமாக இயற்றப்பட்டுள்ளது இந்த சட்டம் என்று இப்பொழுதுதான் புரிகிறது.

இன்றைய தி பிசினஸ் லைன் செய்தியில் சென்னை உயர்நீதி மன்றம் மேற்படி சட்டத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. இந்த சட்டம் என்ன சொல்கிறது?கந்துவட்டித் தடைச் சட்டம்

No comments: