Friday, July 16, 2004

சினிமா பாட்டு...

நண்பர் கவிஞர் சேவியர்
தீடிரென்று (ஒருவேளை யுகபாரதி ஆத்மநண்பராகி வருவதாலோ!)
சினிமா பாட்டு எழுத முயற்சித்து
உயிரெழுத்துவில் இட்டிருந்தார்...
அது இங்கே:
 
 
0
காதலை யாரடி காதலாய்ப் பார்த்தது -
உயிர்க் காதலை யாரடி உயிராய்ப் பார்த்தது.
காதல் யாரைத் தீண்ட மறுத்தது -
அடி காதலை ஏன்ஊர் தீண்ட மறுக்குது ?
****
எண்ணை இல்லா விளக்கும் வீணடி
காதல் இல்லா வாழ்க்கை ஏனடி
எரியும் சுடரில் இருட்டு ஏதடி -
உயிர் காதல் சுடரை அணைப்பதேனடி ?
காதல் தானே துளியாய் விழுந்து முத்தாய் மாறும் அதிசயம் -
அந்த முத்தைச் சுமக்கும் சிப்பியை உலகம் நித்தம் வையும் நிச்சயம்
எதிர்நீச்சல் போடுவதென்றால் கால்கள் வலிக்கும் கவலை விடு.
உயிர்க்காதல் வாடுவதென்றால் வலிகளைக் கூட வாழ விடு.
****
உச்சிக் கிளையில் ஒற்றைப் பறவை சோகம் சொல்லி அழுகிறது -
அந்த அழுகைக் துளிகள் வீழும் நிலத்தில் கண்ணீர் அருவி எழுகிறது.
புல்லாங் குழலில் நுழைந்த காற்றும் இசையைச் சொல்ல மறுக்கிறது -
வெறும் மூச்சுக் காற்றை வெளியே தள்ளி உலகை அதுவும் வெறுக்கிறது.
 நேசக் கூடு எரிகிறதென்றால் தண்ணீர் ஊற்றி அணைத்து விடு
எரியும் கூட்டில் இருக்கும் உயிரை உயிருக்குள்ளே பிணைத்து விடு.
 
0
 
இந்தப்பாடலை படித்து விட்டி கவிதாயினி புதியமாதவி எழுதியது:
 
என்ன சேவியர் நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?
கண்ணதாசன் காலத்திலா?
சினிமாப் பாடல் என்றால் நடு நடுவில்
சம்மந்தா சம்மந்தமில்லாமல் ஏதாவது
"டணக்கு டணக்கு டணக்கு தான்..
உனக்கும் எனக்கும் காதல்தான்.."
என்றெல்லாம் வந்தாக வேண்டும்.
 "ஒட்டகத்தைக் கட்டிக்கோ.."னு
எதையாவது கட்டிப்பிடிக்க முடியாததை எல்லாம் சொல்லனும்.
அப்புறம் வெள்ளூடை தரித்த தேவதைகள் லாலா போடறமாதிரி
ஒரு மெட்டு போட்டாகனும்.
 
ஏதோ சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்னு..
 
நாம்ப நண்பருக்கு நம்பலால முடிஞ்சத
சொல்லணும்ல... அதான நாயம்...

ஆமாம், சேவியர்
இதெல்லாம் கண்டிப்பாக இல்லாவிட்டால்
ஹோட்டல் அறையில் அடைத்துவைத்து
"டணக்கு டணக்கு டணக்கு தான்..
உனக்கும் எனக்கும் காதல்தான்.."
வரும்வரை இயக்குநரும், இசையமப்பாளரும், தயாரிப்பாளரும்
விடமாட்டார்கள்.

ஒருமுறை சிங்கையில் வைரமுத்து பேசும்போது சொன்னார்கள்,
முதல்வனில் உச்சக்கட்டத்தில் வரும்
"உப்புக்கருவாடு ஊறவச்ச சோறு..."
பாடல் தோன்றிய பிண்ணனியை.
சிரிக்கச் சிரிக்க சொன்னார்கள்.

அந்தக் கதை சூழ்நிலைக்கு ஒரு இனிமையான பாடலொன்று
(வரிகள் மறந்துவிட்டது - something like
ஓலைக்குடிசை
நிலவொளி... இத்யாதி இத்யாதி).
என்று முதலி எழுதியிருந்தாராம்,
ரேஹ்மானும் இனிமையான் இசை கூட்டியிருந்தாராம்.
எல்லோரும் முதலில் கூடிப் பாராட்டினார்களாம்.
ரொம்ப அருமை என்று.

அப்புறம் வீட்டுக்கு வந்த பிறகு
நள்ளிரவு 1.30க்கு சங்கர் தொலைபேசி எழுப்பினராம்...

வைமுத்து: என்ன சங்கர் இந்த நேரத்துல்ல...
சங்கர்        : இல்ல சார் இன்னிக்கு எழுதுன பாட்டு ரொம்ப நல்லாருக்கு,
                      இனிமையா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க சார்...
வைமுத்து: ரொம்ப சந்தோசம்ப்பா, அதைச் சொல்லவா இந்நேரம் கூப்பிட்டீங்க...
சங்கர்        :இல்ல சார், எல்லாரும் இனிமையாருக்குங்கிறது - எனக்கு
                      கொஞம் பயமாருக்கு சார்.
வைமுத்து: ஏன் சங்கர்?
சங்கர்        : இல்ல சார் அந்தப் பாட்டு climax scenela வருது,
                      அப்பப்போய் இவ்ளோ சுலோவா பாட்டுப் போட்டா எடுபடாது சார்ர்ர்ர்...
வைமுத்து: இப்ப என்னப்பா பண்ணச்சொல்ற...?
சங்கர்        : எதாவது fast beataa மாத்தலாம் சார்..
வைமுத்து: ஹ்ம்ம்.... என்னப்பா மாத்தரது... கதாநாயகன்
நகரவாழ்க்கையவிட்டு விலகி கிராமத்து வாழ்க்கையைக் காட்டணும்
அங்க என்ன இருக்கும்..... குடிசை, பழைய கஞ்சி, குடிசையத்தவிர...
அப்படின்னுட்டு. இப்படி வச்சுக்கோன்னு கோபமா...

(இதை கவிஞரோட... குரல்ல படிங்க...)

உப்புக் கருவாடு.
ஊரவச்ச சோறு.
ஊட்டிவிட வேணுமடி எனக்கு....
முத்தமிட்டு நெத்தியில
மார்புக்கு மத்தியில
செத்துவிட தோணுதடி எனக்கு...

அப்படின்னு ரொம்ப கோபத்துல்ல போன்ல பல்லவியைச் சொன்னாராம்.
அதை அந்த நேரத்துலயே ரெஹ்மாண்ட போன்ல சொல்லி ட்யூன் போட்டார்களாம்.

அதேபோல அன்று வந்திருந்த இயக்குநர் K.S. ரவிக்குமார் சொல்லியது.
"இதை சென்னையில இருக்கும்போது சொல்லமுடியாது,
இப்போது சொல்றேன் - வைரமுத்து கோஞ்சம் costly கவிஞர்.
அதனாலதான் அவர என்னோட எல்லாப் படத்துலயும் use பண்ணிக்க முடியல.
சரி போங்கண்ணு எதாவது ஒரு பாட்டு மட்டும் கேட்டாலும்
அப்படியெழுத மாட்டாரு, ரொம்ப முரண்டு பிடிப்பாரு..."

(இதற்கு கவிஞர் பேசும்போது சொன்னது:
நண்பர் ரவிக்குமார் என்னைக் காஸ்ட்லி கவிஞர்னு சொன்னார்...
இப்போ அவருக்கு சொல்லிக்கிறேன்.
அவர் எந்தப்படத்துக்கு அவரோட சம்பளத்தை குறைத்துக்கொள்வாரோ
அந்தப்படத்துக்கு நான் என்னோட சம்பளத்தை குறைச்சுக்கிறேன்...

ரவிக்குமார் சிரிச்சுட்டு கீழ குனிஞ்சுண்டார்...)

அப்புறம் ரவிக்குமார் பேசும்போது
ரஜினி-நான்-வைரமுத்து-ரெஹ்மான் சேந்தாலே சில்வர் ஜுப்ளிதான்.
முத்து, படையப்பா அந்த வரிசல கண்டிப்ப ஜக்குபாயும் வரும் என்றார்.

மேலும் ரேஹ்மான் பத்தி பேசும்போது... (அன்போட...)
"அவன் ரேஹ்மான் கொஞம் வித்தியாசமான ஆளு
நைட்லதான் work பண்ணுவான்.
அது போக, அவன் அடிக்கடி மந்திரம் ஓதுறதால
மசூதில்ல ஒருமாதிரி பாடற மாதிரியே ஒரு sound உடுவான்.
அப்படித்தான் 'முத்து' படத்துக்கு பாடலுக்கு இசையமைக்கும்போது...

உல்லல்லிலே...உல்லல்லிலே...
உளுவாளிலே..உளுவாளிலே..

அப்படிங்கிற மாதிரி எதோ சவுண்ட் உட்டுட்டு
இதான் பல்லவின்னு, கவிஞர சரணம் எழுதச்சொன்னான்.

அப்புறம் நான் கவிஞரை பாத்து சிரிச்சுட்டே
ஒகே.. உளுவாளி-ன்னு ஒரு போர்டவச்சு அது ஒரு ஊர்பேருன்னு வச்சுட்டு
உளுவாளிலே...
 முத்து வந்தல்லோன்னு...
 எதாவது எழுதுங்கன்னு சொன்னாராம்...

அதனால... அண்ணே செவியர்
நெரயா அதுமாதிரி
டண்டணக்கா...டணக்குணக்கால்லாம்...
போட்டு பழகுகங்க..

ஹ..ஹா..சும்மா சொன்னேன்...
 
உண்மையிலேயே பாடல் அருமையாக இருக்குது.
வித்யாசேகரிடமோ, பரத்வாஜிடமோ
கொடுத்தால் அருமையாக வரும்.
வாழ்த்துக்கள்
கூடிய சீக்கிரம்
சினிமாவில் வலம் வருவீர்கள்
ஒரு யுகபாரதி, பா.விஜய், அறிவுமதி மாதிரி...

வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு
 

No comments: