Tuesday, July 20, 2004

கும்பகோணத் துயரச் சம்பவம்

இந்த துயரச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குண்டாக்கியது உண்மை. அதிலிருந்து விடுபட்டு, இது ஏன் நடந்தது, திருவரங்கம், கும்பகோணம் என்று தொடராமல் இருக்கச்செய்வது எப்படி? அதற்கும் பலரும் பல வகையிலும் உதவி வருகிறார்கள், பாராட்டப்படவேண்டிய விஷயம். இதைவிடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக பல செய்திகள் வெளிவருகிறது...

1) துன்பியல் நடந்த கட்டிடத்தில் 3 பள்ளி நடந்து வந்தது. தமிழ், ஆங்கில வழி சிறுவர் பள்ளி மற்றும் பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளி. சத்துணவு திட்டம் மூலம் அதிக ஆதாயமடைய, (அரசு அனுமதிக்காத) ஆங்கில வழிபடிக்கும் குழந்தைகளையும் சேர்த்து கணக்கு காட்டி பள்ளிநிர்வாகம் அரசுப்பணம் பெற்று வந்ததாகவும் - அன்றையதினம், கண்காணிப்பாளர் வருவதாக இருந்ததால் கீழ்தளங்களில் இருந்த ஆங்கிலவழி பயிலும் பாலகர்களையும் - அவர்கள் அணிந்திருக்கும் ஷீ, டை முதலியவற்றை கழட்டிவீட்டு மேல்தளத்தில் உள்ள தமிழ்வழி வகுப்பில் அடைத்தாக ஒரு தகவல். இதை தான் மேல்தளத்துக்கு செல்வதற்கு முன்னர் தீ பிடித்து விட்டதால் உயிர் தப்பிய ஒரு சிறுவன் உறுதிப்படுத்தியிருக்கிறான்.

2) ஆசிரிய/ஆசிரியைகள் குடும்பத்தோடு தலைமறைவு - இதுதான் இதுவரை அறிந்த செய்தி. இப்போது படித்த செய்தியொன்று சொல்கிறது: "யாரும் தலைமறைவாகவில்லை - அனைவரும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கேட்டுக்கொண்டபடி தெரியாத இடத்தில் உள்ளனர்."
"ஒரு ஆசிரியை நடந்த களேபர அதிர்ச்சியில் அரசியல்வாதிவலி(நெஞ்சு) வந்து மருத்துவமனையில் அனுமதி"
"காப்பாற்றப்போன கர்ப்பிணி ஆசிரியரை கூட்டத்தினர் யாரோ அடிவயிற்றில் இடித்து விட கர்ப்பம் கலைந்து இரத்தவெள்ளத்தில் மயக்கம்"

3) காப்பாற்ற சென்ற பொதுஜனம் ஒருவர் மரணம்

4) தொலைக்காட்சியில் இந்த செய்தி பார்த்து 'அய்யோ...'வென்று கதறிய மாணவி மரணம்.

இதெல்லாம் ஏன். ஏன் நாம் திருந்தக்கூடாது, தப்பு செய்பவனைத் திருத்தக்கூடாது?
திருந்துவோம், திருத்துவோம்.

No comments: