Friday, November 19, 2004

சவம்

உயிரெழுத்து கவிதை குழுமத்தில் இட்ட நண்பர் கிரிதரின் கவிதையிது.

தவறிவிட்டவரைப் பற்றிய
இந்த கவிதையை
தவற விட்டவர்களுக்காக இங்கே.

சவம்
***

தண்ணீர்ப் பஞ்சத்திலும் தாராளக் குளியலிட்டு
பொங்கலுக்கே கிட்டாத புதுத்துணி போர்த்து
காலமும் கண்டிராத சந்தனம் சவ்வாது தீற்றி
படையலுக்கு மட்டுமே பூசிவந்த திருநீரும் அணிந்து
அடுத்தவீடு தாராளமாய் தந்த ஊதுவத்தி மனம் கமழ
அடகுக்கு பயந்து பரணேறிய பித்தளை விளக்கு ஓளிர
திட்டின வாய்களின் அதிசய அழுகைகள் மத்தியில்
போர்வையில் சேதம் மறைத்த நாற்காலியில்
கம்பீரமாய்
புகையுமுன் புகைப்படத்திற்கு காத்திருக்கிறது
சவம்!!

கிரிதரன்

2 comments:

அன்பு said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Really wonderful kavithai, anbu
enRenRum anbudan
BALA