Tuesday, December 07, 2004

7-வது அனைத்துலகத் தமிழ் இணைய மாநாடு

இந்த வார இறுதியில் 7-வது அனைத்துலகத் தமிழ் இணைய மாநாடு இங்கு சிங்கையில் நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு(க்காக சிங்கை) வருகைதரும் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன்(றோம்).

நமது வலைப்பதிவு குழுமத்தில் இருந்து மாநாட்டில் கட்டுரை படைக்கும் நண்பர்கள்:

- அருள் குமரன் (நாளைய உலகின் தொழில்நுட்பங்களில் தமிழ்)
- பத்ரி (தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்-வணிகத் தளம்)
- வெங்கடேஷ் (பன்மொழி செய்தித் திரட்டுதலை நோக்கி)
- சுபாஷிணி (கல்வி கற்றல்-கற்பித்தலில் Artificial Intelligence)
- முனைவர். கண்ணன் (இலக்க சேமிப்பு: இடர்கள், இலக்குகள், இணைப்புகள்)
- மாலன் (வலைப்பூக்கள் : வளர்ந்து வரும் மாற்று ஊடகங்கள்)

மற்றும் மின்-மஞ்சரியில் கட்டுரை எழுதிய காசி, ஏற்பாட்டுக் குழுவின் ரமா சங்கரன் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

மாநாடு மாபெரும் வெற்றிபெற...
உங்களில் பலரைப்போல் வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன்.

நன்றி.

என்றென்றும் அன்புடன்,
அன்பு
lsanbu@gmail.com

பி.கு:
நான் முன்னொருமுறை வலைப்பூவில் எழுதியபடி 'முதுகலை' என்பதை தவறாகப் புரிந்துகொண்டு தற்போது மேலும் படித்துவரும்(M.Tech) தேர்வு அடுத்தவாரம் இருப்பதாலும், வாரயிறுதியில் வகுப்பு இருப்பதாலும் மாநாட்டில் கலந்துகொள்ள இயலாது என்று கண்டுகொள்ளாமல் இருந்துவந்தேன், இதுவரை. இன்றுதான் முடிந்தால் போகலாமே என்று, உத்தமம் பக்கம் போனால் பதிவு 4-ந்தேதியே முடிவடைந்து விட்டது போலிருக்கிறது. இருந்தபோதும் மாநாடு நடைபெறும் திரு. அருள்மகிழ்நன் அவர்களின் 'கொள்கை ஆய்வுக்கழகம்' எனது பள்ளியின் (ISS) அருகிலேயே இருப்பதால், இடைவேளையிலோ(எனக்கோ/உங்களுக்கோ) அல்லது பின்னேரம் சந்திக்க இயலும். அதனால் உங்கள் நேரம் அனுமதித்தால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.

No comments: