Friday, June 18, 2004

அப்பன் பெயர் தெரியாத குழந்தை

வழக்கமாக சாக்கடை ஓரத்தில் கண்டெடுக்கப்படும், சேரியில் வளரும், ஐந்து வயதில் பீடி பிடிக்கும்,... மொத்தத்தில் புதிய பாதை பார்த்திபனைப் போல இருக்கும். இதுதான் காலம் காலமாக நமக்குத் தெரிந்தது. ஏனென்றால் இந்த சமூகத்தில் அப்பன் பெயர் தெரியவேண்டியது மிகவும் அவசியம்.

இனி...

இரண்டு அம்மாக்கள் சேர்ந்து ஒரு குழந்தையை உருவாக்க முடியும். ஆண்களே தேவையில்லை இந்த உலகில்? ஆச்சரியமாக இருக்கிறதா? சமீபத்தில் இது எலிகளில் சாத்தியமாகியிருக்கிறது.

கவனிக்கவும். இதற்குத் தேவை இரண்டு அம்மாக்கள். எனவே இது நகலாக்கம் இல்லை. நகலாக்கத்தில் ஒரு உயிரி தன்னைத்தானே நகலெடுத்துக் கொள்கிறது. ஆனால் இந்த முறையில் ஆணும் பெண்ணும் இணைந்து உருவாவதைப் போலவே "இரண்டு வேறு" உயிரினங்கள் இணைந்து குழந்தையைப் பெற்றெடுத்திருக்கின்றன
அப்பன் பெயர் தெரியாத குழந்தை

No comments: