Wednesday, August 25, 2004

தேசியதினப் பேரணி உரை

சிங்கப்பூர் புதிய பிரதமர் லீ சியன் லூங் அவர்கள் கடந்த ஞாயிறு (22/ஆகஸ்ட்) தேசியதினப் பேரணி உரை நிகழ்த்தினார்கள்.

சிங்கப்பூரின் தேசியதினம் (சுதந்திரதினம்) ஆகஸ்ட் 9 என்றாலும் அன்றிரவு தேசியவிளையாட்டரங்கில் மரியாதை அணிவகுப்பு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், வாணவேடிக்கை என்று முடிந்துவிடும் - யாரும் உரையாற்றுவதில்லை. அதற்குப் பதில் தொடரும் 2-வது ஞாயிறன்று (இந்தமுறை 22/ஆகஸ்ட்) எதாவது உள்ளரங்கில் கடந்தசில வருடங்களாக தேசியப்பல்கலைக்கழக கலாச்சார மைய அரங்கில் நடப்பது வழக்கம். (இங்குதான் அனைத்துலக அரங்கில் தமிழ் நடக்க இருக்கிறது).

துணைப்பிரதமர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடித்தளத் தலைவர்கள் (Grassroot Leaders), தொழிலதபர்கள், நிறுவனத்தலைவர்கள், ஊடகப்பிரதிநிதிகள், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என்று அழைக்கப்பட்ட (அது அழைத்துவரப்பட்ட... இது வேற...) பிரதிநிதிகள் ஏறக்குறைய 2000 பேர் கலந்துகொண்டனர். வானொலி, தொலைக்காட்சி, வலை-யில் நேரடி ஒலி/ஒளிபரப்பானது. நமக்கு வழக்கம்போல் 'வசந்தம் சென்ட்ரல்'தான் (தமிழ் சேவை - நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் பிரதமரின் உரை உடனுக்குடன் ஒலிபரப்பப் படும்). இரவு 8.15 மணிக்கு ஆரம்பித்து 11.20 வரை சளைக்காமல், வந்திருந்தவர்களுக்கும் இனிமையாக மலாய், மாண்டரின்(சீனம்), ஆங்கிலத்தில் 3 மணி நேரம் தன்னுடைய முதல் தேசியதினப் பேரணி உரை நிகழ்த்தினார்.

முன்வரிசையில் முதல் பிரதமரும் (25 வருடம்) பின்னர் மூத்த அமைச்சரும் (14 வருடம்) இப்போது மதியுரை அமைச்சருமான (Minister-Mentor) பிரதமரின் தந்தை லீ குவான் இயூ மற்றும் முந்தைய பிரதமரும் (14 வருடம்), தற்போதைய மூத்த அமைச்சர் (Senior Minister) கோ சோ டொங் அவர்களும், நிரந்தரத் துணைப்பிரதமர் டாக்டர் டோனி டான், புதிய து.பி பேராசிரியர் ஜெயக்குமார், மற்ற அமைச்சர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

பல முக்கியக் கொள்கை மாறுதல்கள் (இளையர்களை அரசியலில் பங்கேற்க அழைப்பு, உள்ளரங்கு/பேச்சாளர் சதுக்கத்தில் கூட்டம் நடத்த காவல்துறை முன்அனுமதி தேவையில்லை, கேசினோ தொடங்க அனுமதியளிக்கப்படலாம்..., பயன்படுத்தும் அளவுக்கு மட்டும் மின்கட்டணம் இன்னும் பல...)

மற்றும் சில சலுகைகளாக - திருமணமாகாதவர்கள், குழைந்தை பெற்றுக்கொள்ள் நேரமில்லாதவர்களுக்காக, (முன்மாதிரியாக அரசு ஊழியர்களுக்கு) வாரத்தில் 5 நாள் வேலை,

12 வயதுக்குள்ள குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வைத்திருக்கும் வேலையால் தீர்வை (இப்போது $350) குறைப்பு,

வருமானவரி தள்ளுபடி ஒரு குழந்தை மட்டும் உள்ளவருக்கும் நீட்டிப்பு... என்று சில சலுகைகள் அறிவித்தார்.

ஒரே சீனக் கொள்கை மறு உறுதி செய்யப்பட்டது. தைவானுக்கு சிங்கப்பூர் ஆதரவு கிடையாது...

எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவரும் எதிர்பார்த்தபடி இல்லாமல் சிரித்தமுகத்துடன், நகைக்சுவை இழையோட, எந்தவித அலுப்புமில்லாமல் 3 மணி நேரம் நின்று கொண்டே உரையாற்றியது மிகச்சிறப்பு.

பிரதமரின் முழு உரைக்கு...

No comments: