Tuesday, August 17, 2004

புதுசல்ல கண்ணா புதுசல்ல...

இன்னிக்கு சன் செய்தியில், கலைஞர் திருமணமண்டபத்தில் - மறைந்த திரு முரசொலி மாறனின் அஞ்சல் தலை, கவரை திருமதி சோனியா வெளியிட திருமதி மாறன், கலைஞர், முரசொலி மாறன் பெற்றுக்கொண்டனர். தயாநிதி மாறன் பரிசுகளை எடுத்துகொடுத்து உதவிசெய்தார். வழக்கம்போல் கலைஞரின் நிழல் சண்முகசுந்தரம் பின்னாடி உட்காந்திருந்தார். (சபாநாயகர்) சோம்நாத் சட்டர்ஜி, (ஹிந்து) என். ராம் மேடையில் இருந்தனர். மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், ரகுபதி இன்னும் ஏனைய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களெல்லாம் விழாவை கீழே அமர்ந்து கண்டு களித்தனராம்.

திருமதி. சோனியா பேசும்போது - கலைஞரிடம் தனிப்பட்ட முறையில் சொல்லவேண்டிய, 'பொடா சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும், சென்னைக்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் வந்தாச்சு, செம்மொழி சட்டம் விரைவில் வரும்' என்றார்கள்.

கூட்டத்துலேயே சோனியா மேடம் பேசிட்டதால, கலைஞரும் அவர்பங்குக்கு அம்மா தலைமையில் கூட்டணிஆட்சி தொடரவேண்டும், அதுக்கு கம்யூனிஸ்டும் ஒத்துழைக்க வேண்டுமென்றார்.

எனக்கு ஒண்ணு மட்டும் புரியல்ல... இந்த அஞசல் தலை-லாம் அரசுதான வெளியிடும். மாநிலக்கட்சிகள் வெளியிடமுடியுமா....?

எண்ணன்ணே சொல்றிங்க... ஆங்..... என்ன... ஓ...
நடந்தது அரசு விழாதான்றீங்களா? அதனாலதான் அந்த போஸ்ட்மாஸ்டர் ஜெனரலையும் ஒரு சேர்ர போட்டு ஒக்கார வச்சுருந்தாங்களா?

அப்போ சரிண்ணே... நமக்கென்ன வந்துச்சு....


2 comments:

அன்பு said...

Oh I missed out 2 important ppls on the stage - Mr. Kalanithi Maran and Mu. Ka. Stalin (he gave the welcome speech!)

Unknown said...

நான் ஏதோ கலைஞர் குடும்பத்தினர் நடத்தும் விழாவுக்கு சேனியாஜி வந்ததாகல்லவா நினைச்சேன். அப்போ அது அரசாங்க விழாவா? கொடுமைடா சாமியோவ்