Monday, August 23, 2004

அனைத்துலக அரங்கில் தமிழ்

அனைவருக்கும் வணக்கம்.

இந்தவார இறுதியில் அனைத்துலக அரங்கில் தமிழ் என்றொரு இருநாள் நிகழ்வை சிங்கை தேசியப்பல்கலைக்கழக - கலைகள் மன்றம் நடத்துகிறது. தமிழும்,தமிழரும் பற்றி கவிஞர் மு. மேத்தா, நடிகர் கமல், சுதா ரகுநாதன், நம்ப முரசு நெடுமாறன், சிங்கையின் உண(ர்)வோடியைந்த NTUC FairPrice-ன் சந்திரதாஸ், எஸ்.பொ ஆகியோர் உரையாற்றுகிறார்கள். சிறப்பாக இருக்கும்... (எனக்கு வாரயிறுதி வகுப்பு இருந்தால் கூட முத்து பேசும்போது போய்விட்டு வரவேண்டும்.)

சிலவருடங்களாகவே இந்த நல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த வருடம், திரு ப.சிதம்பரம், திருமதி. பத்மா சுப்ரமணியம், இயக்குநர் பாலச்சந்தர் & சிலர் கலந்து கொண்டதாக நினைவு.

சிங்கையில் இருப்பவர்கள் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், மற்றவர்களுக்கு முடிந்தால் எழுதுகிறேன்.

No comments: